ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அலுகோசு பதவிக்குத் தயாராகும் 71 வயது மூதாட்டி அண்மையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தான் அப்பதவிக்கு வரத் தயாராக இருப்பதாக 71 வயதுடைய மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார். கலாவத்தை, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய எல்.பி. கருணாவதி என்ற மூதாட்டியே அலுகோசு பதவிக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாட்டில் போதைவஸ்தை இல்லாதொழிக்க வேண்டும். அத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். நாட்டில் மரண தண்டனை வழங்குவதற்குரிய அலுகோசு பதவி வெற…
-
- 0 replies
- 488 views
-
-
அலுகோசுக்கான பயிற்சி ஆரம்பம் சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013 10:43 புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு அலுகோசுக்கான (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) பயிற்சி வெலிக்கடை மற்றும் போகம்பறை ஆகிய சிறைச்சாலைகளில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கான முதல் 14 நாட்கள் பயிற்சி வெலிக்கடை சிறையிலுள்ள ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஆரம்பமாகும். அவர்கள் இருவருக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்த வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் இவ்விருவம் நீர்கொழும்பு மற்றும் பிட்டிபன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிரு…
-
- 2 replies
- 506 views
-
-
அலுகோசுக்கு பயப்படமாட்டேன் – சரத் பொன்சேகா May 27, 2011 அலுகோசு என்பவர் தூக்கில் போடும் ஒருவரை காலில் பிடித்து இழுத்து உயிரைப் போக்கும் ஒருவர் என்றும், தூக்குமரத்தால் உடலை இறக்கியதும் குதிக்கால் நரம்பை அறுத்து, உயிர் தங்கியிருந்தால் அது வெளியேற வழிசெய்யும் ஒரு கொலைக்கள ஊழியர் என்றும் குறிப்பிடுவர். இத்தகைய அலுகோசு வந்தால் தான் பயப்படமாட்டேன் என்றுள்ளார் சரத் : இதே அலுகோசுகளே முள்ளி வாய்க்காலுக்கு ஆயுதங்களுடன் வந்தது போல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் இச் செய்தி முக்கியம் பெற்றுள்ளது. சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்ற…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
அலுகோசுப் பதவிக்கு வெளிநாட்டவர் நியமனம்? | மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்படி அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும் கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இந்நிலையில் வெளிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவ…
-
- 1 reply
- 300 views
-
-
அலுவலக முற்றத்தை கூட்டினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் - கிராம அலுவலர் அலுவலகத்தின் முற்றத்தை கூட்டினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி திருநகர் தெற்கு கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்காக கிராம அலுவலரிடம் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு பிடித்துக்கொணடு குழந்தையுடன் சென்றுள்ளார். கடமையில் இருந்த கிராம அலுவலா் குறித்த பெண்னிடம் தனது அலுவலக முற்றத்தை கூட்டுமாறும் அ…
-
- 2 replies
- 833 views
-
-
அலுவலகத்தில் கடமையிலிருந்த ஊழியரைத் தாக்கிய பெண் கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய சம்வபமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இராணுவத்திற்கும் இடையில் தகவல்களை பரிமாறுவதாக பதவேற்றி, அதில் இந்த பெண் இராணுவ முகாம் ஒன்றின் வாயிலில் நிற்கும் படத்தினை பதிவேற்றியது தொடர்பில் ஆத்திரமடைந்த பெண்ணே, குறித்த ஊழியரை தாக்கியுள்ளதாக தெரி…
-
- 0 replies
- 121 views
-
-
அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் எனவும் ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும் எனவும்; அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை உணர்ந்தே வடமாகாணசபை சுதந்திரமாக இயங்க விடப்பட்டது எனவும் இவ்வாறு விட்டமையானது நிர்வாகிகளான தமக்குக் கிடைத்த பரிசு எனவும் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் இந்த விருதுகளைப் பெறமுடிந்தது என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று …
-
- 0 replies
- 167 views
-
-
அலெக்ஸ் கைது : ஆவாக் குழுவை முன் வைத்து நகரும் அரசியலின் பின்புலம்? 11/08/2016 இனியொரு... ஆவா குழு என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகக் கருதப்படும் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை அரச பாதுகாப்புப் படை அலெக்ஸ் அரவிந் என்பவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் செய்திகள் பலத்த சந்தேகங்களை இலங்கை அரசியல் மட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பதாகையின் கீழ் வட மாகாணத்தில் செயற்படும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் அலுவலகத்தில் பணியாற்றும் அலெக்சின் கைது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில் இக் கைது அரசியல் நோக்கமுள்ளது என்ற வகையில் கூறியுள…
-
- 4 replies
- 519 views
-
-
அலெக்ஸ்சான்டாராக மாறினார் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான சிங்கப்பூரில் தலைமறைவாக உள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்ஸ்சான்டனர் என்று மாற்றியுள்ளதாக இன்ரர்போல் (சர்வதேச பொலிஸ்) தெரிவித்துள்ளது. இதனை நிரந்தர மேல் நீதிமன்றில் இன்று (16) சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். https://newuthayan.com/அலெக்ஸ்சான்டாராக-மாறினா/
-
- 5 replies
- 669 views
-
-
மனதில் கலைந்த போக முடியாத அலைகளாக கண்ணீர் நின்று நிரம்பி மோதும் நிமிடங்களுடன் நாங்கள் நித்தம் நித்தம் முட்டி மோதியே வாழ்க்கையின் இறிதிப்பாகத்தில் மன நோயின் பக்கத்தில் குடி கொண்ட பின்னும் முல்லைத்தீவில் நேற்றிரவு கடல்நீர் பெருக்கெடுத்து ஊர்மனைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் இருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு திபு திபுவென கடல் நீர் திடீரென உட்புகத்தொடங்கியது. இதனால் ‘சுனாமி வந்துவிட்டது’ என மக்கள் அலறியடித்துக் கொண்டு கையில் அகப்பட்ட பொருள்களோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் இதன்போது உள்ளிழுத்து வரப்பட்டன. ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான க…
-
- 0 replies
- 509 views
-
-
காலம் கடந்தாலும் கண்ணீர் கன்னத்தை விட்டுப் போகதா ஆண்டு 2004 ஆம் ஆண்டு மார்கழி 26ல் தமிழகம் மட்டுமல்லாது தமிழீழம் தொட்டு தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்த சுனாமியின் இன்று ஆண்டுகடக்கும் நினைவு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்தில் பல இடங்களில் கொன்றுகுவித்ததை நினைக்கும் போது அந்த இடங்கள் பெயர் சொன்னாலே வலிகள் துளிர் விட்டு கொல்கின்றது. தமிழகத்தில் பல இடங்களை காண்பிக்க ஊர்கள் பல அழிந்து அலை திரண்டது போன்று ஒவ்வொரு உதடில் தட்டுப்பட்டு நினைவுகளாய் மண்ணில் சிந்திக்கொய்கின்றது கதறலாயும் கண்ணீர்கள் இடம் பெயர்கின்றது. இவை அத்தனையும் மறுவாழ்வுப்பணிகளால் இன்றளவும் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். …
-
- 0 replies
- 610 views
-
-
அலைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி படுகாயம்! தண்டவாளத்தில் நடந்துகொண்டு அலைபேசியில் உரையாடிச்சென்ற இளைஞன் மீது ரயில் மோதிய சம்பவமொன்று சாவகச்சேரி ஐயா கடையடியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தடியை சேர்ந்த துரைசிங்கம் ஜங்கரன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியொன்றில் கடமையாற்றும் மேற்படி இளைஞன், தனது நண்பர்களுடன் ஐயா கடையடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தவேளை உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோதே ரயில் இவரை மோதியுள்ளது. …
-
- 0 replies
- 379 views
-
-
அலைபேசியே சின்னம்? திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014 06:07 பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 'ம' பிரிவுக்கு பதிலாகவே பதிவு செய்யப்படவிருக்கின்றது. இதேவேளை, பொது எதிரணியின் சின்னமாக அலைபேசியை எதிரணியில் இருக்கின்ற பலர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134556-2014-11-23-15-40-30.html
-
- 1 reply
- 370 views
-
-
(எம்.மனோசித்ரா) அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை (Analog Terrestrial System) இயக்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது இயங்கிவரும் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்காக தற்போது 16 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி 5 அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 24 அலைவரிசைகள் நாட்டில் தற்போது காணப்படுகின்றன. தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் வர்ண ஒளிர்மை அதிர்வெண் இயலளவை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இயக்கப்படுவதுடன், 46 வருடங்கள் பழமையான அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமைக்குப் பதிலாக நவீன தொழிநுட்பத…
-
- 0 replies
- 109 views
-
-
1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற பேரலை எழுந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வாறே தென்னிலங்கையில் ஜே.ஆர். அலையெழுந்து தென்னிலங்கையில் மாபெரும் தேர்தல் வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கு அந்தப் பெரும்பான்மையை அடைய வழிவகுத்தது. தானுண்டு தன் தொழிலுண்டு என வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்த இரா.சம்பந்தனை காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் சட்டத்தரணிகள் கட்சி என்ற மரபின் அடிப்படையில் திருமலை தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நிறுத்தினார். தனி நாட்டுக் கோரிக்கை அலை சம்பந்தனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கியத…
-
- 0 replies
- 763 views
-
-
அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம் adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமிய…
-
- 2 replies
- 171 views
- 1 follower
-
-
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு சனல் 4 வெளியிட்டதும் அதே நேரம் ஜேர்மனி நாட்டினை தளமாக கொண்டியங்கும் ஜனனாயகத்திற்கான ஊடக அமைப்பு எனும் நிறுவனத்தினால் வழங்கப்பட்டதுமான தமிழ் இளைஞர்களை சிங்கள ஆயுதப்படையினர் கண்மூடிதனமாக நிர்வாணப்படுத்தி சுடும் காட்சியினை பரிசோதனை செய்ய முற்பட்டுள்ளது. சிங்கள அரசு இந்த காட்சியினை பொய் என கட்டவிழ்த்து விட்ட பொய் ஆதாரங்களை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற பிரபல சாட்சியங்களை ஆய்வு செய்யும் தொழில் நுட்ப நிறுவனத்திடம் இந்த வீடியோ நாடாவினை கொடுத்து பரீட்சித்து வருகின்றது. இந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அதனை உத்தியோக பூர்வமாக தாம் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்…
-
- 4 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=T2x4smxfGcM&feature=related http://www.youtube.com/watch?v=JAfAig5I46I&feature=player_embedded#at=37 நன்றி தமிழீழ ஆதவாளர்கள் கூட்டமைப்பு - மதுரை குறிப்பு : பிரித்தானிய உறவுகள் முதலாவது காணொளியை பார்க்க முடியாமைக்கு வருந்துகிறேன். Proxy மூலம் முயற்சி செய்து பாருங்கள்.
-
- 0 replies
- 725 views
-
-
சில தமிழர்கள் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும் என்று அறிவுடையோர் போல் பேசுகிறார்கள். ஆனால், ஏன் புலிகள் தீவிரவாதிகள் என்ற பெயரைக் களைய வேண்டும்? அவர்கள் தீவிரவாதிகள் அல்லவே. அவர்கள் சுதந்திரப் போராளிகள். உலகில் எந்த மூலையிலாவது சுதந்திரம் கேட்டு போராடுபவர்களை, இவர்கள் சுந்திர தியாகிகள் என்று எந்த அடக்குமுறை அரசாவது அங்கீகரித்திருக்கிறதா? புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழராக இருந்துகொண்டே நீங்கள் சொன்னால் உண்மையில் தமிழரின் நலனுக்காகத் தான் இப்படி சொல்கிறீர்களா என்ற சந்தேகம் வராதா? அமெரிக்கா சுதந்திரம் கேட்டு யுத்தம் செய்யும்போது பிரித்தானியர்கள் அவர்களை தீவிரவாதிகள் என்றார்கள். ஏன் மகாத்மா காந்தி போராடும்போது தியாகி என்று பிரித்தானிய…
-
- 3 replies
- 2k views
-
-
அலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற இராஜாங்க அமைச்சர் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நேற்று மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொட சமர்ப்பித்த பி அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை இராஜாங்க அமைச்சர் தனது தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூன்று கட்டங்களா…
-
- 0 replies
- 401 views
-
-
அலோசியஸ் தொடர்பு கொண்ட 41 உறுப்பினர்களையும் அழைத்து பகிரங்கமாக விசாரணை செய்யுங்கள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் கோரிக்கை ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் 41பேரில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆகவே அனைவரினதும் பெயர் விபரங்களை வெளியிட்டு ஊழல்மோசடி ஆணைக்குழு பகிரங்க விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் தயாசிறி ஜயசேகர சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, நீதி, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்…
-
- 0 replies
- 186 views
-
-
அல் - குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்களை ஒழித்தல் (திருத்தம்) மீதான சமவாயம் என்னும் சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தடை செய்துள்ள பயங்கரவாத நிறுவனங்களுடன் தொடர்புறும் நிதி நிறுவனங்களை தடை செய்யும் ஐ.நா கடப்பாட்டை அங்கீகரிப்பதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். ஐ.நா இனங்கண்…
-
- 3 replies
- 598 views
-
-
அல் கைதா மற்றும் தலிபான் உட்பட பயங்கரவாத அமைப்புக்கள் நாட்டில் தலைதூக்கிவிடக்கூடாது என்பதற்காகவே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். யார் கோரினாலும் விசாரணை நிறைவடையும் வரை அசாத் சாலியை விடுதலை செய்ய முடியாது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று இலங்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உள்நாட்டவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமையினாலேயே புலிகள் பாரிய பயங்கரவாத அமைப்பாக விஸ்வருபமெடுத்தனர். இவ்வாறான பயங்கரவாத சூழலை மீண்டும் நாட்டில் ஏற்படுத்த இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையல் யாரேனும் செயல்பட்டாலோ, வெளிநாடுகள…
-
- 2 replies
- 321 views
-
-
அல் குவைதாவுக்கும் புலிகளுக்குத் தொடர் உண்டாம் - ஆஸிக்கான சிறீலங்காத் தூதுவர் சொல்கின்றார் திகதி: 18.07.2010 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகள் உள்ளன என்று இலங்கை நேற்றுத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வலகம்பாய அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அப் பேட்டியில் முக்கியமாகத் தெரி வித்துள்ளவை வருமாறு, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற் குப் பயங்கரவாத அமைப்புக்கள் பலவற்று டனும் தொடர்புகள் உள்ளன. குறிப்பாக அல் கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புக்க ளுடனும் அல் கொய்தாவுடனும் புலிகளுக்குத் தொடர்புகள் உ…
-
- 2 replies
- 770 views
-
-
அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்யுமாறு அரச ஊடகம் கோரிக்கை 25 ஜூன் 2014 அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்யுமாறு அரச ஊடகமொன்றின் செய்தி ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க ஊடகமான டெய்லி நியூஸ் ஊடகத்தின் செய்தி ஆசிரியர் ராஜ்பால் அபேயநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இலங்கையில் இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் செய்தி அறிக்கையிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். அல் ஜசீரா ஊடகத்தின் கொழும்பு செய்தியாளராக தினுக்கொலம்கே என்பவர் கடமையாற்றி வருகின்றார்.பிழையான செய்தி அறிக்கையிடல்களில் கொலம்பே ஈடுபட்டுள்ளதாகவும் அவரை கைது செய்து தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் ஊடாக இந்தக் குற்றச்சாட்டை ராஜ்பால் அபேயநாயக்க தெரிவித்துள்ளார். உயிரிழப்பு த…
-
- 0 replies
- 442 views
-