ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார். மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மசாஜ் நிலைய போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை (படங்கள்) திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி ஒன்று பிரதேச மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதில் அந்நிலையத்தின் முகாமையாளர் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிசாரால் அங்கிருந்த இரண்டு யுவதிகள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் போது அங்கு மயங்கிய நிலையில் இருந்த மற்றொரு யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உப்புவெளி பொலிசார் இவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக இப்பிரதேசத்தில் புதிதாக பல வீடுகள் விடுதிகளாக மாற்றப…
-
- 0 replies
- 720 views
-
-
முப்படையினருக்கு ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் முப்படையினருக்கும் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. இந்த உரையாற்றும் போது முப்படைகளின் தளபதிகளும் பலாலி இராணுவ முகாமில் பிரசன்னமாகியிருப்பர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/archives/12116
-
- 0 replies
- 147 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேவேளையில் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து 6 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவரும் பெண்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் தமிழ் உணர்வாளர்களிடையே ஒருவித அச்சம், பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறும் கட்சியின் உயர்ப்பீடக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு கிடைக்காமையை ஆட்சேபித்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரஜாப்டீன் குறிப்பிட்டார். முஸ்லிகளுக்கெதிராக அண்மைக்காலகமாக பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்கடிகளுக்கெதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்ற பாரிய குற்றச்சாட்டு அந்தக் கட்சியி…
-
- 1 reply
- 579 views
-
-
போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கையில் அல்-கைடா, தலிபான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாக காட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகை வவளைத்து போடவே தேசிய ஐக்கிய முன்னணி பொதுசெயலாளரும், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் இணை தலைவருமான நண்பர் அசாத் சாலி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என இன்று கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜூனியர் விகடன் சஞ்சிகையில் அசாத் சாலியின் நேர்முகம் 24ம் திகதி வெளிவந்தது. அதில் இடம்பெற்றதாக சொல்லப்படும் கருத்து பிழையை திருத்தி அவர் ஜூனியர் விகடனுக்கு அனுப்பி வைத்து…
-
- 2 replies
- 346 views
-
-
பருத்தித்துறை சாரையடியில் விபத்து சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த லொறி ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் டயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,இதன்போது யாழ்_பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த லொறி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை,மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லொறி வாகன சாரதி கைதுசெய்யப…
-
- 0 replies
- 284 views
-
-
கடலில் சென்ற தமிழர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் Posted by Renu on Monday, April 27, 2009, 9:42 | 215 Views | This item was posted in இலங்கை and has 0 கருத்துக்கள் so far. சிறீலங்காப் படையினரின் அகோர தாக்குதல்களால் பாதுகாப்புத் தேடி கடலில் சென்ற பொதுமக்களை சிறீலங்காக் கடற்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இன்று அதிகாலை சிறீலங்காப் படையினரால் முப்படைகளையும் பயன்படுத்தியவாறு மேற்கொள்ளப்பட்ட இறுதிப் போர் படை நடவடிக்கையினால் 10 படகுகளில் கடலில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் மீது சிறீலங்காக் கடற்படையினர் தாக்குதலை நடத்தி படகுகளையும் மூழ்கடித்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதல்களில் 100 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுக…
-
- 0 replies
- 763 views
-
-
யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது 13ஆம் திருத்தச்சட்டத்தையும் அதிகார பரவலாக்கல் பற்றியும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே பிரிவினை வாதத்தை மீண்டும் தோற்றுவிக்காத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 13ஆம் திருத்…
-
- 0 replies
- 524 views
-
-
தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் – பிரதமர் தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது என என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன, மத, கலாசார பேதங்களைத் தாண்டிய அமைதியான, சுதந்திரம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தைத்திருநாள், கலாசார, சமய பல்வகைமையை மதித்து, மனித சமூகத்தின் மத்தியிலும், சுற்றுச் சூழலுட…
-
- 0 replies
- 202 views
-
-
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவிக்காக இணக்கப்பட்டுக்கு வருவது மாத்திமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியம். அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன். இலங்கை மத்திய வங்கி திறைசேரி பத்திரங்களை ஏலமிடுவதன் மூலம் கடந்த 10 ஆம் திகதி 40 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்தது. எனினும் 13 பில்லியன் மாத்திரமே கிடைத்தது. அது எதிர்பார்த்த தொகையில் 40 வீதமாகும். வட்டி வீதம் அதிகரிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. இதன…
-
- 0 replies
- 284 views
-
-
செஞ்சி:”"காங்., கட்சியை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்,” என, செஞ்சியில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார்.ஆரணி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியை ஆதரித்து செஞ்சியில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: கருணாநிதி, போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை சண்டையை பத்திரிகைகளில் செய்தி போடக்கூடாது என்று சர்வாதிகாரியை போல் மிரட்டுகிறார். ராஜபக்ஷே இலங்கையில், யுத்த செய்திகளைப் போடக்கூடாது என்று தடை செய்து விட்டார். கருணாநிதி ராஜபக்ஷேவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டாரா? 16ம் தேதி எல்லாம் தலைகீழாக மாறப்போகிறது.இலங்கை தீவில் 35 ஆயிரம் தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து வெளியே வந்து விட்டதாக பத்திரிகைகளில் வந்த செய்தியில் எந்த உண்மையும் கிட…
-
- 1 reply
- 916 views
-
-
13ஆவது திருத்தச் சட்டம் குறித்து எல்லோரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது போகும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், http://tamilworldtoday.com/?p=11981
-
- 0 replies
- 591 views
-
-
கொவிட்-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் காணும்போது ஏமாற்றமடைகிறது என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்ப…
-
- 1 reply
- 364 views
-
-
மட்டக்களப்பில் 4 இளைஞர்களை காணவில்லையென தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மூலம்: வீரகேசரி மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் நண்பர்களான 4 இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரே சமயத்தில் இந்நால்வரும் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. தாண்டவன்வெளி எல்லை வீதியைச் சேர்ந்த யோகேந்திரன் யோசான்(வயது 20) சேற்றுக்குடாவைச் சேர்ந்த மகேசன் பேர்னாட்(வயது22), ஜயந்திபுரத்தைச் சேர்ந்த தவராசா ஹரிமுகுந்தன் (வயது 20) மற்றும் மாமாங்கத்தைச் சேர்ந்த பெர்ணான்டோ பிரசாந்த (வயது20) ஆகியோரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்…
-
- 1 reply
- 631 views
-
-
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் சில நாடுகள் மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் ஆகியோரின் கூட்டுச் சதி தொடர்பில் அதிகரித்த ஆதாரங்கள் உள்ளன. எனவே இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை விரிவாக ஆராயவேண்டும். புலம்பெயர் மக்களின் சில பிரிவினர் மேற்கு நாடுகளின் அரச பிரதிநிதிகளாகவே 22ஆவது மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையானது உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எவ்விதமான நன்மையயையும் அளிக்காமல் இலங்கை மக்கள் மத்தியில் சர்வதேச சமூகம் தொடர்பான சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளை இந்த பிரேரணை பாதகமாக பாத…
-
- 0 replies
- 573 views
-
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது (ப.பன்னீர்செல்வம், எம்.எம். மின்ஹாஜ்) யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். இது பெரும் கவலையை ஏற் படுத்துகிறது என சபையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறானதோர் நிலையிலும் மறைந்த எம்.எச்.மொஹமட் இலங்கையராக வாழ்ந்ததோடு பிரிவினையை எதிர்த்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமாக பதவி வகித்த எம்.எச். மொஹமட் தொடர்பான அனுதாபப் பிரேரணை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்த…
-
- 27 replies
- 1.2k views
-
-
மண் அகழ்வுகள் காரணமாக விவசாயம் பாதிப்பு – மட்டு . விவசாயிகள் கவலை 21 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர். சட்ட விரோதமான முறையில் அதிகளவான மண் அகழப்படுவதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள். மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ…
-
- 0 replies
- 212 views
-
-
ராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அரசாங்கம் கூறுகின்ற விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தாயாமாஸ்ரருக்கு விரைவில் நாடாளுமன்றப் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க உயர் மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பேரியல் அஸ்ரப்பின் தேசிய முன்னணி நுவாக் கட்சியின் பிரதி அமைச்சர் சேகு இஸிதீனைப் பதவி விலகுமாறும் அவருக்கு வெளிநாடொன்றின் உயர் ஸ்தானிகர் பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு சேகு இஸிதீன் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாயாமாஸ்ரருக்கு நாடாளுமன்றப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. www.globaltamilnews.net
-
- 0 replies
- 655 views
-
-
ஜனாஸாக்கள் நல்லடக்கம் – பாதுப்பு ஏதும் வந்தால் பொறுப்பேற்கத் தயார் -கல்முனை மாநகர முதல்வர் 17 Views கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும் தயாராக உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் ஜனாசா விடயம் தொடர்பாக புதன்கிழமை இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, “20ஆவது அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில் ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு…
-
- 1 reply
- 449 views
-
-
தமிழ் ஈழம் பற்றிய தெளிவான கூற்றையொட்டி மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவித்துக்கொள்வதாக அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். …
-
- 0 replies
- 365 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்துவிட்டதாகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கும் பின்னணியில் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் கே.ஆர்.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இரவு கொழும்பு சென்றடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 531 views
-
-
மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் வழங்குவதில்லை என்பதை இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திற்கு பல தடவைகள் அறிவித்த போதும், இந்திய அரசாங்கம் இதுவரை அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், தனது இந்த தீர்மானத்தை இந்திய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, தெரியப்படுத்தியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கடந்த காலங்களில் புதுடெல்லி சென்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இதனை அறிவித்திருந்தனர் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93153/…
-
- 1 reply
- 664 views
-