Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணவாசிகள் ஐவர் வாகன விபத்தில் காயம்! சனி, 15 ஜனவரி 2011 21:07 யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி ஐந்து பேருடன் புறப்பட்டு வந்த வான் ஒன்று சிலாபம் பிரதேசத்தில் வைத்து விபத்தில் இன்று காலை சிக்கியது. வானில் பயணித்து இருந்த அனைவரும் காயம் அடைந்து உள்ளனர். ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சாரதி திடீர் தூக்கம் அடைந்தமையே விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். tamilcnn.com

  2. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தமது இரண்டு அம்சக் கோரிக்கையை முன்வைத்து காலவரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதென முடிவெடுத்துள்ளார்கள். இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடிய கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக வந்து பல்கலைக்கழகத்தின் பிரதான அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் முன்னர் ஒன்று கூடியதுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்கள். இதன்போது தமது கோரிக்கைகளான சிறப்பு பிரிவில் கற்பதற்க்கு எற்கனவே அறிவித்ததைப் போன்று குறிப்பிட்ட பாடத்தில் மூன்று புள்ளிகளைப் பெற்றவர்களை சிறப்புப் பட்டம் பெற அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அரசியல் விஞ்ஞானம…

  3. ஆண்டு தோறும் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் , சமய விழாக்கள், நிகழ்வுகள், பொது அறிவு, தகவற் துளி போன்ற பல விடயங்களைத் தாங்கியவாறு தமிழ்த்தாய் நாட்காட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நாட்காட்டியினை மேலும் சிறப்பாகவும், மக்கள் அறிய விரும்பும் விடயங்களையும் உள்ளடக்கியவாறும் என்றும் இல்லாத புதிய வடிவமைப்புடன் தமிழர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய முறையில் உங்களின் கைகளில் தர விரும்புகிறோம்.விசேடமாக இம்முறை ஒவ்வொரு நாளுக்கும் தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . அவ்வகையில் எதிர்காலத்தில் எமது தமிழ்த்தாய் நாட்காட்டியை மேலும் சிறப்பாகவும், எமது மக்களுக்கு தேவையான அனைத்து அதிகளவான தகவல்களையும் உள்ளடக்கவும் மக்களாகிய உங்களது கருத்துக்களையும் , …

  4. வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள் வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள் இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, …

  5. சூடுபிடிக்கின்றது பொதுவேட்பாளர் விவகாரம்: அரசின் பிரபல அமைச்சர் ஒருவரை களமிறக்க அமெரிக்கா ஆலோசனை 2015ஆம் ஆண்டு பாரிய மக்கள் புரட்சியுடன் அமைக்கப்பட்ட தேசிய அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்துள்ள அரசாக நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே காய்நகர்த்தல்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசை பிரதிநிதித்துவம் செய்யும் பிரபல அமைச்சரொருவரை பொதுவேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் அமெரிக்க இரா…

  6. சஜித் பிரேமதாசவால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு! By DIGITAL DESK 2 22 DEC, 2022 | 03:34 PM திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொடர் பயணத்தின் 55ஆவது நிகழ்வில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை (டிச. 22) சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்துக்கு சென்…

  7. சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 18 ஆம் நாளில் அவரின் 56 வயதுடன் நிறைவுபெறுகின்றது. எனினும் மேலும் ஒருவருடம் பதவிநீடிப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கோத்தபாய ராஜபக்ச முலம் சிபார்சுக்கடிதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதவி நீடிப்புக்காக மகிந்தவின் அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை. இதற்கு இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் இருந்து பதவி நீடிப்பு வழங்குவதை எதிர்த்து மகிந்தவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முகமாலை சமரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை அண்மையில் சரத் பொன்சேகா ஏற்றிருந்தார். இந்தச்சமரில் நூற்றுக்கும் மேற்…

  8. தமிழக மீனவர்களை படுகொலை செய்துவரும் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பு.இ.மு தோழர்கள் கைது தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் அன்றாடம் படுகொலை செய்யப்படுவதைகண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர தொழிலாளர் முன்னணி. சார்பாக தோழர் மார்க்ஸ், தலைமையில் சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு 28/01/2011 காலை 11.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலைசெய்யப்படுகிறார்கள். இந்திய விரிவாதிக்க நலனுக்காக தமிழன் இருந்தாலென்ன?செத்தாலென்ன? என்ற இந்திய அரசின் நிலையை கண்டித்தும் தமிழக அரசிடம்இந்திய நுகத்தடியை துக்கியேறி, தமிழக…

  9. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று நழுவுகிறது இலங்கை அரசு! [Wednesday 2014-10-01 09:00] தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளை பேணி வருகிறது. எனவே இலங்கை அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் செயற்பாடுகள் குறித்து கவனத்தில் கொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, அம…

  10. அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கி­ய­தா­கவே எந்த முயற்­சியும் அமை­ய­வேண்டும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களில் மீண்டும் தடங்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்கை தமிழ் அர­சியல் தலை­மைகள் மத்­தி­யிலும் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் உரு­வா­கி­யி­ருந்­தது. அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அர­சியல் தீர்வைக் கண்­டு­விட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கட்­சி­ யான தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் நம்­பிக்கை தெர…

  11. யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு- 09 பேர் உயிரிழப்பு! மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) டெங்கு நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளானவர்களாக …

  12. யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்க…

    • 0 replies
    • 754 views
  13. அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திருக்கிறார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது திடீர் அமெரிக்கப் பயணம் மர்மம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பயணம் தொடர்பாக வேறுபட்ட ஊகங்கள் வெளியிடப்படுகின்றபோதும் மஹிந்தவின் திடீர்ப் பயணத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் இரகசியமாகவே உள்ளது. உப்புல்யோசப் பெர்னான்டோவின் கட்டுரையை தமிழாக்கியவர் தி.வண்ணமதி அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திர…

  14. இந்திய அமைதிப்படையின் நினைவுத் தூபிக்கு இந்திய இராணுவப் பிரதானி அஞ்சலி இலங்கை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஏழு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி பிபின் ராவத் இந்திய அமைதிப் படை வீரர்களுக்காக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்ட இராணுவ நினைவு தூபிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். இலங்கை இராணுவ சம்பிரதாய முறைப்படியான மாரியாதையுடன் நினைவு தூபிக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி யுத்தத்தில் தமது உயிர்களை இழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இலங்கையில் உள்ள…

    • 1 reply
    • 398 views
  15. புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிவிட்டனரா? நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி?தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டனரா என்பது தொடர்பாக அறிய தருமாறு இலங்கை அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென தாம் தீர்க்கமாக முடிவுசெய்திருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவ…

    • 1 reply
    • 1.1k views
  16. கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் மிகுந்…

  17. ”சர்வக்கட்சி மாநாட்டை தமுகூ புறக்கணிக்கும்”: மனோ கணேசன் ” தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்.” – என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்தின் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியுடைய செயற்பட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று நேற்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் அக்கரப்பத்தனை லக்ஷ்மி மண்டப…

  18. பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் - இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர் - இந்திய ஊடகங்கள் தகவல் தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழு வைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினரே கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் 112பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், இச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் வன்மையா கக் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. டில்லியிலுள்ள பிரத மர் மன்மோகன் சிங்கின் வாசஸ்தலத் தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதேவேளை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமி…

    • 2 replies
    • 1.4k views
  19. கைநழுவிப் போகும் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பயங்கரவாத தடைச் சட்டத்துடன் முற்றாக செயலிழந்து போகும் போர் நிறுத்த உடன்படிக்கை பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இல்லாது போன அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் தற்போது மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் போர் நிறுத்த உடன்பாடு முற்று முழுதாகவே செயலிழந்து போயுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கி சுமுகமானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்காகவே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுவதற்கு தடைகளாயிருந்த அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் நீக்…

  20. நாய்களை சுட்டுப்போடும் செயற்பாடு தான் ஜனநாயகமா?: செல்வம் February 25, 2011 பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்ற மக்களை மிரட்டி அவர்களை அச்சுறுத்துவதும், அவரது இறுதிச் சடங்கு இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுப் போடுகின்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தான் இந்நாட்டிலுள்ள ஜனநாயகமா? இதற்காகத்தான் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றதா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். அரசாங்கத்தின் அரசியல் இலாபத்துக்கான அவசரகாலச் சட்டமானது சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்கும் தடையாக இருப்பதாகவும் கூறிய அவர், தமிழ் மக்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான்…

    • 2 replies
    • 898 views
  21. ‘டயஸ்போரா’ யுத்தத்துக்கு தயாராகும் அறிகுறியே புலிகள் மீதான தடைநீக்கம் யுத்தங்களால் பெரிதும் பாதிப்புற்றது பெண்களே; எதிர்கால சந்ததிக்காக நாட்டைப் பாதுகாப்போம் - ஜனாதிபதி புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி சூழலையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்பி வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய யூனியன் தற்போது புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த திருப்பம் தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எமது அரசியல்வாதிகள் சிலர் ஐரோப்பா விற்கான விஜயத்தினை …

  22. முருங்கை மரம் ஏறப் போகும் சிங்கள வேதாளம் சுதந்திர கட்சி + ஐ தே க கூட்டு அரசு வரும்போதே இது இலங்கைக்கு புதுசே எப்படி என்று பலர் யோசித்தார்கள். இருந்தாலும் மகிந்த எனும் பெரும் பூதத்தினை விழுத்த, இந்தியாவும் மேல் நாடுகளும் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகளுடன்... சிறுபான்மையினரின் முழு எதிர்ப்பும் சேர மகிந்த வீடு போக வேண்டியதாகி விட்டது. மைத்திரியை, ஜனாதிபதி என்னும் கனவிலும் நினைத்திராத கிளுகிப்பையினை கொடுத்து, அதை அவர் கிளிக்கி கொண்டு இருந்த போது, ரணில் என்னும் குள்ள நரி... சுதந்திர கட்சியினை குதறி விட்டது என்று, உள்ளூர் ஆட்சி தேர்தலில் புது கட்சி தொடங்கி வென்ற மகிந்த தரப்பு, மைத்திரிக்கு ஓதி விட்டது போல உள்ளது. நேற்று நடந்த நல்லாட்சி அரசினை அமைக்க முன் நின்று…

    • 2 replies
    • 862 views
  23. முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் தாக்குதல் பாலாவின் இறுதி வணக்க நிகழ்வுக்காக திரண்டிருந்த மக்கள் சிதறியோட்டம் [21 - December - 2006] [Font Size - A - A - A] முல்லைத்தீவில் நேற்று புதன்கிழமை காலை கிபிர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே காலை பத்து மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி வணக்க நிகழ்வுகளில் நேற்றுக் காலை பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்த வேளையிலேயே இந்த விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களை அச்சுறுத்தும் விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலால் மக்கள் நாலாபுறமும் தப்பியோடி பாதுகாப்புத் தேடிக் கொண்டனர். இதேநேர…

  24. நேசக்கரத்தை முடக்க தொடர்ந்தும் சதி நேசக்கரமும் வேண்டாம் மக்கள் பணியும் வேண்டாமென்று ஒதுங்கிப்போகும் முடிவை 06.01.2011 அன்று அறிவித்துவிட்டு ஒதுங்கிய எங்களை மீண்டும் வெள்ள அனர்த்தமும் நேசக்கரம் பயனாளர்களின் வேண்டுகைகளும் எல்லாச் சவால்களையும் அரசியல் தலையீடுகளையும் உதைத்துக் கொண்டு எழ வேண்டுமென்ற சக்தியைத் தந்தது. இனி எந்தக் கொம்பனுடனும் நேரில் நின்று போராடுவதென்று முடிவெடுக்க வைத்தது. அதன்படி மீளவும் எழுந்தோம். எந்த அரசியல்வாதியின் தலையீடு எம்மை நிறுத்தியதோ எந்த அரசியல்வாதியின் குடும்பத்தின் அச்சுறுத்தல் எங்களை பின்தள்ள எண்ணியதோ அத்தடைகளாக நின்ற தலைகளின் அறியாமைகளையும் மன்னித்து மெளனமாக மீண்டும் எங்களது பணியை ஆரம்பித்தோம். ஆனால் புதியகாளானாக வன்னிமைந்தன…

    • 25 replies
    • 3.4k views
  25. சுதா­கரை விடு­வித்­து­விட்டு கிளி­நொச்­சிக்கு வாருங்­கள் மைத்­தி­ரி­யி­டம் கூட்­ட­மைப்பு கோரிக்கை தமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் அரச தலை­வ­ரால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­கள் இன்­னும் உரி­ய­வ­கை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை, என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் குற்­றஞ்­சாட்­டி ­னார். ஆகக்­கு­றைந்­தது அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரை­யா­வது எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் விடு­த­லை­செய்­து­விட்டு 18ஆம் திகதி கிளி­நொச்சி வந்­தாலே அரச தலை­வ­ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.