ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை விவாதிக்க இந்தியா எதிர்ப்பு ஐ.நா./கொழும்பு, புதன், 27 ஏப்ரல் 2011( 13:59 IST ) எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையில…
-
- 3 replies
- 1.4k views
-
-
[Tuesday, 2011-10-11 22:23:54] பாலியல் முறை கேடுகளில் பலாலி ஆசிரியகலாசாலை யாழ் மாவட்டத்தில் முன்னனியில் திகழ்வதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை திட்டித் தீர்த்துள்ளார் பலாலி ஆசிரியர் கலாசலை அதிபர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திக்கு வழங்கி…
-
- 5 replies
- 1.4k views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மதத்தலைவர்கள் பங்களிக்க வேண்டும் நாட்டில் யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் நாடு இன்னும் சமாதான சகவாழ்வை உருவாக்கிக்கொள்வதில் பாரிய சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான நாட்டில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதும் இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இன்னும் பாரிய சவாலான விடயமாகவே காணப்படுகிறது. 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளையும் தேசிய ஒற்றுமையையும் முன்னெடுப்பதற்கு குறிப்பிடத்தக்களவு நடவடிக்கை…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கை தோ்வாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு. [Tuesday, 2011-04-05 05:10:13] உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதியாட்டத்துக்கான அணித் தெரிவின் போது இலங்கை கிரிக்கட் சபையின் தோ்வாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன் வைக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரபலமான வர்த்தகர் ஒருவரே இலங்கை கிரிக்கட் அணித் தோ்வாளர்களுக்கு பெருந்தொகை இலஞ்சப் பணம் கொடுத்து, இறுதியாட்டத்துக்கான அணியில் நான்கு பேரை மாற்றச் செய்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஸ்தாப வர்த்தகர் கிரிக்கட்டில் பெரும் ஆர்வம் கொண்டிருப்பவர் என்பதுடன், அண்மையில் நடைபெற்ற இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப்போ…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கக் கோரிநாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக இன்று நடந்தது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவரது உரை தொடங்குவதற்கு முன்பு திமுக உறுப்பினர்கள் எழுந்து இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். மேலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
இரணைமடு ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது ஜெட் விமான தாக்குதல் நடத்தப்பட்டது: விமானப்படை பேச்சாளர். இலங்கை விமானப் படையினர் ஜெட் விமானத்தை பயன்படுத்தி இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த பகுதிகளின் மீது நேற்று முன்தினம் இரவு விமான தாக்குதல்களை மேற்கொண்டனர் என்று விமானப்படை பேச்சாளர் குரூப்கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; இரணைமடு விமான ஓடு தளத்தை அண்மித்த வடகிழக்கு பகுதிகளில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வாகன நடமாட்டங்கள் அதிகரித…
-
- 4 replies
- 1.4k views
-
-
25 ஜூன் 2013 யாழ் கந்தரோடைப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய அம்மிக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனோடு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, பானைகளின் ஓட்டுத் துண்டுகள் மற்றும் கல் மணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொக்குவிலில் அமைந்துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்சியாளர்களைக் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது இவற்றைக் கண்டு பிடித்தனர். கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் அம்மியின் புகைப்படத்தையும் அம்மியின் ஒரு பகுதியையும் சில ஓட்டுத் துண்டுகளையும் எக்…
-
- 2 replies
- 1.4k views
-
-
விசுவமடுவில் இருந்து விடுமுறையல் சென்றவன் 30 இலட்சம் ரூபா பெறுமதியரன நகையுடன் சிக்கினானாம்: http://www.bbc.co.uk/sinhala/news/story/20...army_gold.shtml
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
[size=4]இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது ஐ.நா. உள்அறிக்கையில் அம்பலத்தபடுத்தப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் தனக்கு ஆலோசனை வழங்கிட குழு ஒன்றினை அமைத்துள்ளார். [/size] [size=4]இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வின் உள் அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைமெத்தனமாக செயல்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், கூறுகையில், இலங்கையில் நடந்த போரின் போது 40 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாயினர். இதனை தடுக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தவறியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரங்களில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த [/size] விவகாரத்தில…
-
- 2 replies
- 1.4k views
-
-
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில் அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும் கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது! kumudam04112009001 நாடாளுமன்றக் குழு இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகரமான திருநெல்வேலி தாக்குதல் (video in) Saturday, July 23, 2011, 0:22கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு) சுவிற்சர்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடையே உள்ள பதினைத்துக்கும் அதிகமான பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர். சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் குலம் தலைமையில் இன்று 01.05.2008 காலை 10.30 அளவில் சூரிச் நகரில் பெரிய தபால் நிலையம் முன்பிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணியில் சிங்களப்பேரினவாதிகளில் கோர முகத்தை சித்தரிக்கும் உருவம் தாங்கிய ஊர்தி பலரையும் கவர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவரின் உருவப்படங்களுடன் தமிழீ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒட்டிசுட்டான், முத்தயன்கட்டுகுளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை இன்று காலை 7:45 மணிக்கு தமது விமானப்டையின் ஜெட் விமானங்கள் வெற்றிகரமாக தாக்கியழித்ததாக விமானப் படை குரூப் கப்டன் தெரிவித்துள்ளதாக இங்கு ஊடகங்கள் ஓலமிடுகின்றன. மேலதிக விபரங்கள் ஏதாவது???? ஜானா
-
- 0 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இப்போது உயிருடன் இல்லை...புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துக்கொண்டிருக்க... இந்தியாவில் புலிகள் இயக்கத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணையால் இந்த தீர்ப்பாயங்கள் களைகட்டியிருக்கின்றன. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது முன்னாள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வழக்குப் போட முடியும் என்று ஏற்கெனவே தீர்பாயம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,தமிழக மக்கள் உரிமைக்கழக வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரத்தினம் சிவநேசன் சார்பில் இந்த மனு தாக்கல் செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ" [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:11 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது…
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜேர்மனி பெர்லினில் அமைந்திருக்கும் பிரித்தானிய தூதரகதுக்கு ஜேர்மன் ஈழத் தமிழர் அவையின் செயற்குழு மனு கொடுப்பதுக்கான ஒழுங்குகள் முன்எடுக்கப்படுகின்றது. யேர்மன் ஈழத் தமிழர் அவையின் அவசர வேண்டுகோள்!!! எம் உயிரினிலும் மேலான புலம் பெயர் தமிழ் ஈழ மக்களே, எம் உரிமைக்கான விடுதலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேலான எம் உடன் பிறவா உறவுகளை ஈன இரக்கமின்றி தடை செய்யப்பட்ட குண்டுகளில் இருந்து எரி குண்டுகள், மூலமாக கொன்றழித்து இன்றும் போர் முடிந்து ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
புலி சந்தேக நபர்களை கடத்துவது தொடர்பாகவே ரணில் பேசுகின்றார் வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மறைந்ததையடுத்து விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரசாரராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயல்படுகின்றார். சில நேரங்களில் ஸ்ரீகொத்தா புலிகளின் காரியாலயமாக மாறினாலும் புதுமையடைவதற்கில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கொழும்பில் குண்டு வெடிப்பதை தடுப்பதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
3000 கோடி ரூபா செலவில் நவீன ரக மிக் விமான கொள்வனவிற்கு அரசு திட்டம் வீரகேசரி நாளேடு வருட இறுதிக்குள் 3000 கோடி ரூபா நவீன ரக மிக் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்துக்கோ கணக்காய்வாளர் நாயகத்துக்கோ இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விமானக்கொள்வனவுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எந்த அரசாங்கத்துடன் கொள்வனவு செயற்பாடு இடம்பெறவுள்ளது? இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? இவற்றின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது? என்பன குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் …
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. வரை செல்லும் அவலம் [20 - June - 2007] * வரலாற்றில் துரதிர்ஷ்டம் என்கிறது ஐ.தே.க. -எம்.ஏ.எம். நிலாம்- இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. சபை வரை செல்லும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் அரசியல் வரலாற்றில் இது பெரும் துரதிர்ஷ்ட சம்பவமெனவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. முன்னொருபோதுமில்லாத விதத்தில் எமது நாட்டில் ஒழுங்கீனமானதொரு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார். அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை தமிழ் அகதி சிறுமிகளை கொண்டு இந்தியாவில் செய்யப்படும் ஆடைகளை பிரித்தானியாவில் விற்று இலாபம் சம்பாதிக்கும் பிறீமார்க். இதுபற்றிய ஒரு விவரணம் நாளை பீ.பீ.சியில் மாலை 8.30 பிரித்தானிய நேரத்திற்கு ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் இதை இணையத்தளத்திலும் பார்க்க முடியும். அகதி சிறுமிகளை சுரண்டி பிழைக்கும் இந்திய தொழில் அதிபர்களையும் அவர்களின் தயாரிப்புகளை விற்கும் பிரித்தானிய ஸ்தாபனங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர உள்ளது. Shocking disclosure - on BBC1 Tomorrow @ 8.30pm UK
-
- 0 replies
- 1.4k views
-
-
நான்கு நாட்களுக்குள் இரண்டு பிரதான ஆயுதக் களஞ்சியங்கள் அழிந்து போனது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவங்கள் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மயிலிட்டி மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள படையினரின் ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் தொடர்பாக படைத்தரப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளது. நான்கு நாட்களுக்குள் இரு பிரதான ஆயுதக் களஞ்சியங்களில் ஏற்பட்ட அழிவுகளினால் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்கள் அழிவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இது விபத்தா அல்லது சதி நடவடிக்கையினால் ஏற்பட்டதா என்ற விசாரணைகளை படைத்தரப்பு தொடங்கியுள்ளது. …
-
- 9 replies
- 1.4k views
-
-
பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்! [Wednesday 2015-05-06 19:00] சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான். உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , …
-
- 9 replies
- 1.4k views
-
-
அடிமைப்பட்டு கிடந்த தமிழினத்தை கேட்கநாதியற்று கிடந்த போது சிங்கள இனவெறி அரசபடைகளும் காடையர்களும் கொன்று குவித்து சொத்துக்களை சூறையாடிய கொலைவெறியாட்டம் போட்டு நிற்கையில் அந்த கொலைவெறிப் பேய்களிடம் இருந்து தமிழினத்தை மீட்டெடுக்கும் உண்ணத நோக்கத்திற்காக போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முகவர் (ஏஜென்ட்) விநோத் என்ற உளவுப்படம் இந்தியில் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வேடமேற்று றோ உளவுத்துறையின் உயரதிகாரியாக இந்தி நடிகர் சயிப் அலி கான் நடித்துள்ளார். கடைசியாக எல்லாப் புலிகளும் செத்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன். நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய்....? எனக் கூறி புலிவீரனாக சித்தரித்துள்ள நபரை இந்திய உளவுத்துறை அதிகாரியாக …
-
- 7 replies
- 1.4k views
-