Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழுவின் பன்னாட்டு ஆலோசகர்கள் பங்கேற்ற கூட்டத்தொடர் (ஒக்ரோபர் 3, 4ஆம் திகதிகளில்) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. இக்கூட்டத் தொடருக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்; ஒஸ்லோ வருகை தந்திருந்த வேளையில் தமிழ் மக்களுக்காக சிறப்பு விளக்கக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் வள ஆலோசனை மைய றொம்மன் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெற்ற நாடு கடந்த அரசு தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா நடராஜா இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சட்ட அறிஞரும் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் செயற்குழு…

    • 0 replies
    • 1.4k views
  2. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரி ஒருவரின் பெயரில் மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையொன்று நிர்மாணிப்பதற்காகவும், அந்தக் காணியை கொள்வனவு செய்வதற்காகவும் அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தையும், வளங்களையும் வழங்கியமை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர், 50 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இந்தக் காணிக்குச் செல்லும் வீதியை அமைப்பதற்காக மாத்திரம் 95 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…

  3. ராஜபக்சே ஆட்சிக்கு அஞ்சி தப்பியோட்டம் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் ராஜாங்கம் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியதில், அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளும் செய்தியாளர்களும் நாட்டை விட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி 28 Nov 2019 இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் ராஜாங்கம் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியதில், அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளும் செய்தியாளர்களும் நாட்டை விட்டு ஓடுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்…

  4. இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக…

    • 18 replies
    • 1.4k views
  5. பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் [வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006 இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோ…

  6. அநாமதேயிகளின் அட்டகாசமே இது என்கிறது இளைஞர் அணி!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்து, வாசகங்கள் எழுதப்பட்ட உருவப்பொம்மைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு இளைஞர்கள் பலர் இந்த உருவப்பொம்மைகளை வீதிகளிலும், தமிழரசுக்கட்சி அலுவலகப் பகுதிகளிலும் கட்டிவைத்துள்ளனர். அந்த உருவப்பொம்மைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்களுக்கு கீழே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி என்று உரிமை கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பணம் வந்து திரும்பிய நிலையில், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகர் பகுதியென பரவலாக இந்த உருவப்பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் ச…

  7. நம் ஈழ மக்களின் துன்பங்களை, சொந்த மண்ணிலேயே அகதிகளாகி அவர்கள் படும் அவலங்களை வார்த்தைகளில் வரித்துவிடும் வல்லமை எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மனந்திறந்த வரிகளோடு முயற்சிக்கின்றேன்... மனம் நிறைந்த வலிகளுடன். கொலைவெறிச் சிங்களத்தின் கொடூரக் கரங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றது ஈழதேசம். வளம் நிறைந்த நம் மண் இன்று குண்டுமழையில் குளித்து நம் உறவுகளின் குருதியில் சிவந்துபோய்க் கிடக்கின்றது. நம் வாழ்விடங்கள் எல்லாம் பாழாக்கப்பட்டு அங்கு பாம்பும் பகையும்தான் குடியிருக்கின்றன. வாரிக்கொடுத்த கைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு அநாதரவாய் தெருவில் சிதறிக் கிடக்கின்றன. ஓடியுழைத்த கால்களெல்லாம் ஒடிக்கப்பட்டு ஊனமாகி திராணியற்று நிற்கின்…

  8. டிசம்பர் 26: இன்று 9வது சுனாமி நினைவு தினம். 9 ஆண்டுகளுக்கு முன்பு... இதே தினத்தில், ஈழத்தின் வடக்கு, கிழக்கிலும், தமிழகத்திலும்... பல்லாயிரம் தமிழ்மக்கள் உயிரை... கண்ணிமைக்கும் நேரத்தில் பலிகொண்ட ஆழிப்பேரலை வந்த நாள். விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் போர் மும்முரமாக நடந்த நேரத்தில் இயற்கையும் தனது கோரத் தாண்டவத்தை தமிழ்மக்கள் மேல்... நிகழ்த்தியிருந்தது. இதில்.... பலியான அனைத்து தமிழ்மக்களுக்கும் நினைவு அஞ்சலிகள்.

  9. இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைகான சுற்றுலாக்கள் மற்றும் தங்கியிருத்தலை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அதன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பயங்கர தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் பெரும்பான்மையான கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வது ஆபத்தானதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட மாகாணம், அனுராதபுரம், மதவாச்சிய, ஹொரவபொத்தான, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்கள் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு நேரட…

    • 3 replies
    • 1.4k views
  10. செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவான நிர்மாணக்கப்பட்ட நினைவுத் தூபி, பல்வேறு தடைகளுக்கு மத்தியில், இன்று (14) திறக்கப்பட்டது. குறித்த நினைவுத் தூபியில், படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களைப் பொறிக்கவும் அவர்களுடைய பெயர்களை எழுதவும் தடைவிதித்திருந்த பொலிஸார், நினைவுத் தூபியை மட்டும் நிர்மாணிக்க அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில், இன்று (14) குறித்த நினைவுத் தூபியில், நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களை பதிக்க முடியாவிட்டாலும், தற்காலிகமாக மாணவர்களுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்டும் “செஞ்சோலை வளாக வீதி” என எழுதப்பட்ட நிலையிலும், குறித்த நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது, நடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ச…

    • 6 replies
    • 1.4k views
  11. Lawyers working for Tamil activists are attempting to obtain a war crimes arrest warrant against Sri Lanka's president and senior member of his entourage who have arrived in Britain. Mahinda Rajapaksa, whose government defeated the separatist Tamil Tigers last year amid humanitarian protests about the treatment of civilians trapped in the war zone, is due to speak at the Oxford Union on Thursday. The visit comes as Tamil supporters claim to have acquired a video showing a former Tamil Tiger colonel being interrogated by Sri Lankan forces. His family allege he was killed after surrendering. Rajapaksa is also expected to meet the defence secretary, Liam Fox. …

  12. தமிழ் சினிமா தயாரிப்பதில் ராஜபட்ச ஆர்வம்? First Published : 17 Feb 2011 05:58:10 PM IST கொழும்பு, பிப்.17: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தமிழ் சினிமா தயாரிக்க முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக இந்திய இசை அமைப்பாளர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக் கட்டப் போருக்குப் பின் இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டுவதே படத்தின் குறிக்கோளாக இருக்கும் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்க ராஜபட்ச தயாராக இருப்பதாகவும், இதற்காக இந்திய இசையமைப்பாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அவர் சம்…

  13. யாழ் குப்பிளான் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிசய நிகழ்வு. - பண்டார வன்னியன் - Sunday, 02 April 2006 23:03 யாழ் குப்பிளான் என்ற இடத்தில் வெள்ளாடு ஒன்று மனித முகத்தை ஒத்த முகஅமைப்புடன் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இன்று நண்பகல் 12.30மணியளவில் இந்த மனிதமுக அமைப்பைக்கொண்ட அபூர்வ ஆட்டுக்குட்டியை தாயாடு ஈன்றெடுத்திருக்கின்றது. (படங்கள் உள்ளே). அபூர்வமுக அமைப்பு உடல் அமைப்புடன் காணப்படும் இந்த ஆட்டுக்குட்டியைப்பற்றி கேள்வியுற்ற பெருந்தொகையான மக்கள் அக்குட்டியை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். குப்பிளான் தெற்கு ஞானவைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடோன்றில் வசித்து வரும் அரியமுத்து பாலச்சந்திரன் என்பவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்றே இவ் அபூர்வ ஆ…

    • 0 replies
    • 1.4k views
  14. குடும்பிமலைக் குண்டு வீச்சு புலனாய்வாளர்களின் சதித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இராணுவப் புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் ஆகும். விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்ற…

    • 1 reply
    • 1.4k views
  15. இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக் சீ செடர் அரசாங்கத்திடம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஸ்யா பூரண ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் குரல் ஓங்குவதற்கு ரஸ்யா ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்

  16. இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு புறம்பான வகையில் இராணுவ முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது. சிவிலியன் இலக்குகள் மற்றும் சிவில் காரியாலங்களை இலக்கு வைத்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் காரியாலங்கள் மீது அரச படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தலைமையகம் மற்றும் அரசியல் பணிமனை ஆகியவற்றின் மீது விமானப்படையினர் அண்மையில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். வன்;னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன் நலன்புரி ச…

  17. இலங்கைத் தீவில் பல திசை வாழ் தமிழ் இன மக்கள் மூன்று தசாப்தங்களாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து பல துயரங்களை அனுபவித்து ஈராண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அத்துன்ப துயரங்களில் இருந்து மீட்சி பெற்று தற்போது சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக் கிடைத்திருப்பதையிட்டு முதலில் கடவுளுக்கும் அடுத்து ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளாக இருள் சூழ்ந்த யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீட்சி பெற்று நாம் தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளோம். எமக்கு உதயமாகியுள்ள ஒளிமயமான தீபாவளித் திருநாளாம் இந்நாள் இந்துக்களாகிய எமக்கு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கொண்டாடுவதற்கு கிடைத்திருப்பது நாம் பெற்ற விமோசனமாகும…

  18. Started by akootha,

    இலங்கையின் வியூகம் எதுவோ? வன்னிப் போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுப் பதில் எத்தகைய முன்னேற்றம் உண்டாகியுள்ளது. அதன் பொருட்டு இந்தியா வழங்கிய நிதியுதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சென்றடைந்ததா? அவர்களது வாழ்வில் விடிவு பிறப்பதற்கான அறிகுறிகள் சிறு கீற்றாகவேனும் தென் படுகின்றதா? இவற்றுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு விஷேட தூதுவர் ஒருவரை இந்திய மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமார் 2 மாதங் களுக்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தியத் தரப்பின் விருப்பம், ஏற்பாடு, …

    • 3 replies
    • 1.4k views
  19. பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் அதிக வரட்சியுடனான வானிலை காரணமாக, பராக்கிரம சமுத்திரம் நீரின்றி வற்றியுள்ளது. இந்நிலையில், குறித்த சமுத்திரத்தை அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு விளங்கும் பராக்கிரம சமுத்திரம், தற்போது நீரின்றி வற்றிக் காணப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின்னர் பராக்கிரம சமுத்திரம் இவ்வாறு வரட்சியால் வற்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பராக்கிரம சமுத்திரத்தை நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயச் செய்கையை மேற்கொள்ள பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளர். http://www.tamilmirror.lk/செ…

    • 6 replies
    • 1.4k views
  20. தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும், தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் றிச்சர்ட் டிக்சன் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் இலங்கை இனப்படுகொலை குறித்தும், அதனை தடுக்க உலக நாடுகள் தவறிவிட்டன குறித்தும் கட்டுரை …

    • 4 replies
    • 1.4k views
  21. யுத்தத்தில் வெளிநாட்டு உதவிகளை இலங்கை ஒருபோதும் பெறவில்லை: ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு ஆலோசனைகளை நாடவோ வெளிநாட்டு துருப்புகளை ஈடுபடுத்தவோ இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறியுள்ளார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வெளிநாட்டு ஆலோசனைகள் அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் வெளிநாட்டு தலையீடுகளோ அல்லது அவர்களின் அறிவுறுத்தல்களோ இந்நாட்டிற்கு அவசியமில்லை என அவர் கூறினார். எமது வீரம்மிக்க படையினரால் மாத்திரம் உள்நாட்டில் வகுக்கப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களின்படி இந்த யுத்தத்தில் போரிட்டு…

    • 14 replies
    • 1.4k views
  22. மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு புரட்சிகரச் சிந்தனைகளோடு மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. நாம் தமிழர் கட்சி ஆவணம் – ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால் 2009ல் கொடூரமான முறையில் ஈழப் போராட்டம் ராணுவ ரீதியில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான அக்கறை தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் குறித்தான அக்கறையும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசியம் தொடர்பான முன்னெடுப்புகளும், அது தொடர்பான அறிவுசார் வட்டங்களில் இருந்து (எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கூட) ஆரோக்கியமான முன்னெடுப்புகளையும் காணக்கூடியதாக இருப்பது என்னைப் போன்ற புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது. ஈழப்போராட்டம் தொ…

  24. கடற்பாதுகாப்பு பொறிமுறையால் ஆபத்தாகும் தென்னாசிய பகுதி -அருஸ் (வேல்ஸ்)- உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார தளம்பல்கள் பல முக்கிய நாடுகளை திண்டாட வைத்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை ஆசியா, மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சந்தித்த மிகப்பெரும் சரிவுகள் வியாழக்கிழமையே ஓரளவு சீரான நிலையை அடைய ஆரம்பித்துள்ளன. இருந்த போதும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் மிக மிக அதிகம். இந்த இழப்புக்களை ஈடுகட்டுவதற்கு தமது செலவீனங்களைக் குறைத்து, மக்கள் மீதான வரிப்பணத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எண்ணியுள்ளன. உலகின் செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் அதன் தயவில் தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவே செய்யும். இலங்கையைப் …

    • 3 replies
    • 1.4k views
  25. விடுதலைப் புலிகளின் தளபதி ரமேஸ் பற்றிய காணொலி போலி "சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் வியாழக்கிழமை, 09 டிசம்பர் 2010 05:26 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது col.rameshவிடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்புத் தளபதி கேணல் ரமேஸ் சிறிலங்காப் படையினரால் சித்திரவதை செய்யப்படுவதாக வெளியான காணொலிப் பதிவு போலியானது என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல தகவல் வெளியிடுகையில், “இந்தக் காணொலிப் பதிவு போலியானது. புலிகள் ஆதரவு இணையத்தளங்கள் சில, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான காணொலிப் பதிவுகளைத் தயாரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்த முனைகின்றன. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது போன்று விட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.