ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கிளைமோர் தாக்குதலில் முக்கிய கருணா துணைப்படை உறுப்பினர் படுகாயம் ஞாயிறு மதியம் 2.30 மணியளவில் நாவலடி ஓட்டுமாவடி காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளை சிற்றூர்தி கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு சிக்கியுள்ளது. இதன்போது இவ் வெள்ளை சிற்றூர்தியில் சென்ற ஏழு கருணாகுழு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் கருணாகுழு முக்கிய உறுப்பினரான சின்னத்தம்பி என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வாழைச் சேனை காவல்துறையினரின் தகவலின்படி வாழைச்சேனை பகுதியில் இருந்து வெலிக்கந்த நோக்கி பயணித்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த அனைவரையும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக உயர்சபையை அமைப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளன. இந்த தகவலை புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள தமிழரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில், தமிழரக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் ரொலோவின் சார்பில் சிவசக்த…
-
- 23 replies
- 1.4k views
-
-
தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் - தொல். திருமாவளவன்: தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய 'தமிழீழ அங்கீகார மாநாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய திருமாவளவன் 'தனி தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை என கூறியுள்ளார். இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு பிரிட்டி…
-
- 3 replies
- 1.4k views
-
-
அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??” எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி என பெயர் தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தொன்று தொட்டு மிக கண்ணியமாக வாழும் நாம் அண்மைக்காலமாக எமது மார்க்கம் மற்றும் கலாசார ரீதியான பல அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நச்சுக்கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆசீர்வாதம் வழங்கி வருகின்றது. கடந்த ஜெனீவா பிரேரனையின் போது எமது முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் நாடுகளிடம் க…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
திருகோணமலையில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்துக்கான அடிக்கல் இன்று நடப்படவுள்ளது. படையினரால் மீட்கப்பட்ட சம்பூர் பிர தேசத்தில் இந்த அனல் மின்நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது. ஆயினும்இ அந்தப் பிரதேசத்தில் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைய டுத்து மின் நிலையத்தை நகரில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் கப்பல்துறை என்னும் இடத்தில் அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இந்திய அதிகாரியான எஸ்.சங்கரலிங் கம்இ மின்சக்தி அமைச்சர் டபிள்யூ. ஜே. செனவிரத்தின ஆகியோர் இணைந்து இன்று முற்பகல் 10 மணிக்கு மின் நிலை யத்துக்கான அடிக்கல்லை அங்கு நடவுள் ளனர். நன்றி உதயன்
-
- 1 reply
- 1.4k views
-
-
கடந்த சனிக்கிழமை லண்டன் சர்வதேச மன்னிப்புசபை மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தேன். இந்நிகழ்வு சில ஒட்டுக்குழுக்களின் ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பினும், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் சிலர் அங்கு சென்றிருந்தோம். அங்கு பல ஒட்டுக்குழுக்களில் இருந்து கடந்த காலங்களில் கொலைகள், கற்பளிப்புகள், கொள்ளைகள் செய்த பலரைக் காணக்கூடியதாக இருந்தது. ஒட்டுகுழுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர் அங்கு பி.பி.சி செய்தியாளரர் நிமலராஜனை படுகொலை செய்து, கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை பெற்றபோது தப்பியோடி லண்டன் வந்ததாக கூறப்படும் , இன்ரப்போலினால் தேடப்படும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு உறுப்பினரான "நெப்போலியனும்"அங்கு வந்திருப…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
அம்பலன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்த ளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க... மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா? தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் எவரும் காணாமல் போகவில்லை என்று இலங்கை இராணுவ உள்ளக விசாரணை அறிக்கை கூறியிருப்பது குறித்து அமெரிக்கா மிகுந்த விசனம் அடைந்திருப்பதாக இலங்கை வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினர் தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் கடந்த வருடம் ஐநா மனித உரிமை பேரவையின் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய அமெரிக்க தூதுக்குழுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திருக்கிறார்கள். அது குறித்துக் கூறுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறை…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில…
-
- 9 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முன்னேறியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது இலங்கையில் யாழ் குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு தங்களது படைகள் முன்னேறியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனது படையினர் முன்னேறி விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண் நிலைகளை கைப்பற்றி இருப்பதாகவும் அது கூறியுள்ளது. அதேவேளை முகமாலை பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடந்த சில தினங்களாகத் தொடரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் 148 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பி…
-
- 0 replies
- 1.4k views
-
-
அர்ஜூன ரணதுங்க ஐ.தே.கட்சியில் இணைகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்க ஐ.தே. கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிய வருகிறது. அவருக்கு கோட்டை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்கா ஆகியோர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம் : http://www.tamilstar.org
-
- 6 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/files/110517_colombo_reporter.mp3
-
- 0 replies
- 1.4k views
-
-
-எஸ்.நிதர்ஷன் வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், சிவரூபனை எவ்வித அடிப்படை காரணங்களுமின்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, அவரை மாலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்து காலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள…
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு இலங்கை வந்தது இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழு இன்று திங்கட்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தது. இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இத்தூதுக்குழுவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். புதுடில்லியிலிருந்து விசேட விமானம் மூலம் புறப்பட்ட இத்தூதுக்குழுவினர் இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்தடைந்தனர். இத் தூதுக்குழுவினரை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் வரவேற்றனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39395-2012-04-16-18-16-37.html
-
- 8 replies
- 1.4k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: கோட்டா ஓடி ஒழியமுடியாது என்கின்றார் சுமந்திரன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை அரசியல் மயப்படுத்தப்பட்டது என கூறி தப்பிக்க முடியாது என்றும் அதற்கு தாங்கள் அனுமதிக்கபோவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்திற்கு நிச்சயம் ஜனாதிபதி பதில் சொல்லியே ஆக வேண்டும் என வலியுறுத்தினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாராக இருந்த போது, யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய முழு பொறுப்பும் அவரையே சாரும். யுத்த …
-
- 3 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவை ஆதரித்து இந்தியா தனது தென் பிராந்தியத்திலும் பாகிஸ்தானைப் போன்று எதிரி நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? அல்லது எதிர்த்து நட்பு நாடொன்றை உருவாக்கிக் கொள்ளப் போகின்றதா? என்பது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வருவதாக ""நல்லதொரு நாளைக்கான'' ஏற்பாட்டாளரும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் எம்.பி. யுமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். எம்மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முன்னோட்டமே ஐ.நா. வில் எமக்கெதிராக முன்வைக்கப்படும் பிரேரணையாகுமென்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர்கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நல்லதொரு நாளைக்கான மக்கள் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அத்துரலிய ரத்ன தேரர் இதனைத் தெ…
-
- 5 replies
- 1.4k views
-
-
பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டுமென்றால் விடுதலைப் புலிகள் அதற்கு முன்னர் தமது ஆயுதங்களை கீழே வைக்கவேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வெளிவரும் டைம்ஸ் தினசரிக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: பயங்கரவாதத்தை அணுகும் விடயத்தில் இருவேறுபட்ட நிலைப்பாட்டினை கொண்டிருக்க முடியாது. நல்ல பயங்கரவாதிகள், கெட்டபயங்கரவாதிகள் என்று இருவகையினர் இருக்கின்றனர் என்ற விடயத்திலும் எனக…
-
- 4 replies
- 1.4k views
-
-
கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே? பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்? இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
விசுவமடு. மக்கள் குடியிருப்புகள் மீது கிபீர் தாக்குதல் - பண்டார வன்னியன் Monday, 12 February 2007 12:02 முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான ஆறு கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் அன்டிய பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்க்கொண்டுள்ளது.இத் தாக்குதலின் போது மக்கள் பாதுகாப்hன இடங்களை நாடியமையால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்ப்படவில்லை. இத் தாக்குதலில் போது கிபீர் விமானங்களுக்கு உருதுனையாக வேவு விமானங்களும் சுற்றிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. http://sankathi.org/news
-
- 4 replies
- 1.4k views
-
-
திருகோணமலையில் சம்பந்தனை தோற்கடிக்க அரசு திட்டம்! . .பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவற்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தமிழ…
-
- 8 replies
- 1.4k views
-
-
மூன்று கால்களை உடைய தெரு நாய்க்கு அடித்திருக்கும் ராஜ யோகம்! ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010 09:51 E-mail அச்சிடுக PDF கொழும்பு வீதிகளில் மிகவும் கேவலமான நிலையில் திரிந்து வந்த மூன்று கால்களை மாத்திரம் உடைய தெரு நாய் ஒன்றுக்கு அடித்திருக்கின்றது ராஜ யோகம். அமெரிக்காவை சேர்ந்த பெண் வர்த்தகர்களில் ஒருவர் Tracy Murphy. மிருகங்கள் மீது மிகுந்த காருண்யம் உடையவர். இவரின் வாழ் நாளில் பெரும்பகுதியை மிருகங்களுக்கு உதவி செய்கின்றமையிலேயே செலவு செய்து வருகின்றார். சில வாரங்களுக்கு முன் வர்த்தக விடயமாக கொழும்பு வந்திருக்கின்றார். அப்போது தெருவில் மூன்று கால்களை உடைய இந்நாயை கண்டு இருக்கின்றார். இதன் வயிறு ஒட்டிப் போய் இருந்தது. மிகவும் கேவலமான நிலையில் காட்ச…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி - எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. …
-
- 11 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கடுமையான ஆட்சேர்ப்பு இடம்பெற்று வருகின்றது. 60 ஆயிரம் பேர் வரையில் முப்படைகளுக்கும் இணைக்கப்பட்டிருப்பதால், தமது நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை 6 வீதமாகக் குறைவடைந்திருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வன்னி களமுனைகளில் சிறீலங்கா படயினர் நாளாந்தம் கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்ற போதிலும், அவை பற்றி செய்திகள் முழுமையாக வெளியாகுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 0 replies
- 1.4k views
-
-
பொன்.சிவகுமாரன் பதியப்படாத உண்மை! அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை. தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெது மெதுவாக ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுத போராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழி அனுப்பும் நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டத்தில் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வுந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தான் வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டது போலவே தன் மரணத்தின்போதும் விடுதலைப் போ…
-
- 2 replies
- 1.4k views
-