ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார். அதன்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நேற்று (26) செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை செலுத்தியுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக விமர்சங்களை முன்வைத்தவர்களினால் அவற்றினை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்று…
-
- 4 replies
- 503 views
-
-
சீனாவுடனான இலங்கையின் உறவு என்பது மற்ற நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். தலைநகர் கொழும்பில். இலங்கை ராணுவம் நடத்திய மூன்றாவது பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கோத்தபாய ராஜபக்ஷ, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்த தவறான புரிதல்கள் காரணமாக மற்ற நாடுகளிடம் இது ஒரு பிரச்சினையாக சில சமயங்களில் மாறிவிட்டது என்று கூறினார். "இலங்கையில் சீனாவின் ஈடுபாடு என்பது ராஜிய ரீதியிலானதும், பொருளாதார ரீதியிலானதுமாகும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். சீனா இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்து வந்திருக்கிறது. அது இலங்க…
-
- 3 replies
- 371 views
-
-
சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொலி ஆபிரிக்க நாடு ஒன்றிலோ அல்லது லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு திரிபுபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
ஞானசாரரைக் கைது செய்யும் முயற்சி தோல்வி பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, குருநாகலில் பதற்றமான சூழ்நிலையொன்று, நேற்று இரவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கான பாதையை, பொலிஸார் மறித்ததாகவும் அந்தப் பகுதிக்கு பொது பல சேனாவின் உறுப்பினர்கள் வந்த போது, ஞானசார தேரரைக் கைது செய்ய முயன்றதாகவும், பொது பல சேனா தெரிவித்தது. ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான முயற்சியை, பொது பல சேனாவும் அதன் ஆதரவாளர்களும் எதிர்த்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் ஞானசார தேரருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதன்போது, பிரதமரைய…
-
- 0 replies
- 182 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த உயர் அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு திடீர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ள சிறிலங்கா அரசு, அதற்காக அவருக்கு இரண்டு வார காலக்கெடுவையும் விதித்திருக்கின்றது. அவரின் 'விசா'வை இரத்துச் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் உடனடியாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத போதிலும், வவுனியா முகாம்களில் உள்ள சிறுவர்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் சீற்றத்தை ஏற்படுத்தியதையடுத்தே இவ்வாறான அதிரடி நடவடிக்கையில் சிறிலங்கா அரசு இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) ஒரு மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டர் என்பரே இரு வார காலத்துக்…
-
- 1 reply
- 532 views
-
-
சுற்றுலாப் பயணிகளுக்கு... 180 நாட்களுக்கு, செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே, அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசா அனுமதி வழங்கும் செயன்முறையின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கைத்தொலைபேசி செயலியை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு…
-
- 0 replies
- 286 views
-
-
பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் ஹஇலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார். இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர்இ இந்தியா வருவதற்கு தடை விதித்ததால்இ அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. நக்கீரன்
-
- 0 replies
- 1.3k views
-
-
நாடு இல்லை என்பதற்காக தமிழர்களை நாதியற்றவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம்: மனோ கணேசன் தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, பிறகு செம்மொழி மாநாட்டை நடத்துவதால் மட்டும் தமிழ் மொழி வாழ்ந்து விடாது என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தமிழகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமானால் தமிழர்கள் வாழ வேண்டும் என குறிப்பிட்டார். சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் சற்று அசந்துவிட்டால், அவர்களை ஆட்கொண்டு விடுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தாய் மொழி, கலாசாரம், இனம், பண்பாட…
-
- 0 replies
- 386 views
-
-
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில்... ஜனாதிபதி இன்று உரை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமானது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு குறித்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இடம்பெறுகின்றது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில், இலங்கை நாட்டையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் உ…
-
- 0 replies
- 188 views
-
-
வடமாகாணசபைக்கு வந்த சோதனை -நிலாந்தன் அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கைக்குப் பின் வடமாகாணசபைக்கு வந்திருக்கும் சோதனை எனப்படுவது முதலாவதாக தமிழ்த்தேசியத்திற்கு வந்த சோதனைதான். இரண்டாவதாக தமிழ் ஜனநாயகத்திற்கு வந்த சோதனைதான். மூன்றாவதாக அமைச்சர்களுக்கு வந்த ஒரு சோதனை அது. நான்காவதாக விக்கினேஸ்வரனுக்கும் அது சோதனைதான். முதலாவதாக அது எப்படி தமிழ்த்தேசியத்திற்கு ஒரு சோதனையாக வந்திருக்கிறது என்று பார்க்கலாம். ஆட்சி மாற்றத்தின் பின் அம்மாற்றத்திற்குப் பங்காளியாக இருந்த கூட்டமைப்பானது அரசாங்கத்தோடு குறைந்தளவு எதிர்ப்பையும், கூடியளவு இணக்கத்தையும் பேணும் ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. மகிந்தவின் காலத்தில் தன்னைப் புலிநீக்கம் செய்து கொண்ட கூட்டமை…
-
- 8 replies
- 721 views
-
-
லசந்தவின் படுகொலை குறித்து சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் விசாரணை செய்ய தீர்மானம் Published on 2021-09-29 14:13:23 (நா.தனுஜா) சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, அதனூடாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் 3 முன்னணி அமைப்புக்கள் ஒன்றிணைந்து, அப்படுகொலை வழக்குகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும…
-
- 0 replies
- 251 views
-
-
உலகத்தின் இரத்த வேட்கை: தீவிரவாதத்தின் பெயரால் – வெ. தனஞ்செயன் “இறப்பின் வலிமையை விட கொடியது, இழப்பிற்குப் பின் ஆறுதல் கூறுவதற்கு ஆளில்லா தனிமை” அந்தக் கொடுமையை இன்று ஈழத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முள்வேலி சிறைச்சாலையில் அடைப்பட்டு கிடக்கும் போதும், கண்டன அறிக்கைகள் கூட வெளியிடாமல், வெறும் கருத்துகளை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறது உலகம். செஞ்சோலைப் பள்ளியின் மீது குண்டு வீசியது சிங்களம், அறிக்கை வெளியிட்டார்கள். போர் நடத்தப் போகிறோம், சர்வதேச உதவி அமைப்புகளும், ஊடகங்களும் வெளியேற வேண்டும் என்றது சிங்கள அரசு. முனகலைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறினார்கள். …
-
- 0 replies
- 978 views
-
-
5 அக்டோபர், 2013 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மாகாணசபையின் ஏனைய உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. ''ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசின் அடக்குமுறைக்கு எதிராக, அந்த அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு, அரசின் சலுகை, அபிவிருத்தி மாயைகளுக்குள் சிக்கி விடாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம், தமது எதிர்ப்பை மக்கள் காட்டியுள்ளனர். இத்தருணத்தில் வட மாகாண முதலமைச்சராக திரு. சி. வி. விக்கினேஸ்வரன் மகிந்த ர…
-
- 0 replies
- 486 views
-
-
ஆவணங்கள் மாயம் என்று மக்கள்தான் சொன்னார்கள் வடக்கு மாகாண அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள்தான் எனக்குச் சொன்னார்கள். அதைத்தான் நான் உங்களுக்குக் கூறினேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாணசபையில் கடந்த 14ஆம் திகதி நான் தீர்மானத்தை அறிவித்த அன்று இரவு அமைச்சு அலுவலகத்திலிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக மக்கள் எனக்குத் தெரிவித்தார்கள். தகவல் தந்த மக்களை யாரென்று கூறமாட்டேன். அவர்கள் இப்போதும் அது உ…
-
- 0 replies
- 286 views
-
-
இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? ; எதிர்க்கட்சி கேள்வி (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தேசிய ரீதியில் எந்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காது 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வாக்குறுதியளித்துள்ளதா? இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? என பிரதான எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. எனினும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை சபையில் ஆளுந்தரப்பினர் முன்வைக்கவில்லை. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஒ…
-
- 1 reply
- 269 views
-
-
தமது உயிர்களுக்குப் பாதுகாப்பளித்து அடைக்கலம் கொடுக்குமாறு இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஒருத்தி அதிகாரிகளிடம் கெஞ்சிய மனதை உருக்கும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 836 views
-
-
யாழுக்கு பிக்குகள் படையெடுப்பு இரத்த தானம் வழங்குவதற்கென, பப்பிலியான பெளத்த விகாரையில் இருந்து 100 பிக்குமார் யாழ். போதான வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கிக்கு இன்று (25) சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள இரத்த வங்கியில், இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்தே, குறித்த பிக்குமார்கள், இன்று இரத்த தானம் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழுக்கு-பிக்குகள்-படையெடுப்பு/175-199280
-
- 3 replies
- 739 views
-
-
தமிழ் உணர்வாளரும், ஆன்மீகவாதியுமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஆன்மீகப் பயணம் ஒன்றை சுவிஸில் மேற்கொண்டுள்ளார். இளம்தலைமுறையினருக்கு தேவாரத்தை பண்ணோடும் பக்தியோடும் போதிக்கும் நோக்கில் தேவாரம் தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்காக இங்கு அவர் விஜயம் செய்துள்ளார். சுவிஸில் உள்ள 23 ஆலயங்களுக்கும் சென்று தேவாரம் குறித்த விளக்கத்தை அவர் வழங்க விருக்கிறார். சுவிஸில் அடுத்தவருடம் மே மாதம் நடைபெறவுள்ள முருக பக்திமாநாட்டின ஆலோசகரான இவர் தாம் செல்லும் ஆலயங்களில் மாநாடு குறித்து விளக்கமும் அளிக்கவிருக்கிறார். ஆலய தரிசிப்பில் செங்காளன் சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துக்கு வருகைதந்தார். இரவு பூசைகளில் அடுத்து அவரை ஆலையப் பரிபாலன சபைத் தலைவர் வே. கணேசகுமார் வரவேற்றார். …
-
- 0 replies
- 532 views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
Print | E-mail : Email this Article திங்கட்கிழமை, 2, நவம்பர் 2009 (12:3 IST) இலங்கை போரில் மனித உரிமை மீறல்;கோத்தபாய ராஜபக்சே மீது விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு இலங்கையில் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது. அதில் அத்துமீறல்கள் குறித்து 170 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்திடம் அமெரிக்க வெளியுறவுத்துறை சமர்ப்பித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் அதிபர் ராஜபச்சேவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபச்சேவுக்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள இலங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் தன்னகப்படுத்துவதை ஏற்க முடியாது – வியாழேந்திரன். மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னக படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக …
-
- 0 replies
- 233 views
-
-
பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம் மையவாடியாக உள்ள நூற்றுகணக்கான ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பெரிய கரிசல் மையவாடி காணி அயல் கிராமமான சின்னக் கரிசல் கிராமத்தை சேர்ந்தவர்களினால் தங்கள் தேவாலயத்திற்கு சொந்தமான கானி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிவானினால் அங்காணி தேவாலையத்திற்கு சொந்தம் என தீர்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற பதிவாளரினால் சுற்றுவேளி அடைக்கப்பட்டு கிரிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரிய கரிசல் வாழ் முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் கொதித்து எழுந்த மக்கள் தங்கள் உறவுகளின் ஜனாஷாக்கள் தோண்டி எடுத்து இக் காணி எங்களுக்கு சொந்தமானது என்றும் நிருபிப்பதற்கு போராட்…
-
- 8 replies
- 1.5k views
-
-
மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தல்! சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவ்வாறு கோரியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”யாழ்.மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்.மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழை யாழ்.மாவட்டத்திலே பெய்துள்ளது. இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதி…
-
- 0 replies
- 147 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர். இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர். கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள…
-
- 5 replies
- 474 views
-
-
The man of the moment General Sarath Fonseka clad in the national constume giving what appears to be his own version of a victory symbol outside his residence yesterday. AFP படம், செய்திமூலம்: தினக்கண்ணாடி http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=69135
-
- 2 replies
- 1.3k views
-