ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
விமலின் முக்கிய சகாக்கள் சுதந்திரக்கட்சியில் இணைவு விமல் வீரவன்சவின் முக்கிய சகாக்களான மூவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொ…
-
- 1 reply
- 805 views
-
-
ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான இறுதிப் போராட்டமாக அமைய வேண்டும் - அனைவருக்கும் ஹிருணிகா அழைப்பு (எம்.மனோசித்ரா) ராஜபக்ஷாக்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி போராட்டமாக 09 ஆம் திகதி போராட்டம் அமைய வேண்டும். புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். புதனன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததைப் போன்று , மீண்டுமொரு முறை நுழைந்து பலவந்தமாகவேனும் உட்பிரவேசித்து ஜனாதிபதியை சந்தித்து பதவி விலகுமாறு கோருவதற்கு அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவ…
-
- 0 replies
- 175 views
-
-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் கூட்டாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. குழுவினருக்கும் பெ.சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் குழுவினருக்கும் இடையே திங்கட்கிழமை நுவரெலியாவில் நடந்த 2 ஆம் சுற்றுப் பேச்சுகளில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. கொழும்பில் சனவரி 26 ஆம் நாளன்று முதல் சுற்றுப் பேச்சுகள் நடந்தன. "மலையகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ள என்று பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். இ.தொ.க. குழுவில் சச்சித…
-
- 0 replies
- 915 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடையை நீக்க வேண்டுமா? ஆம் எனில், செப். 21ம் தேதி இந்திய உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்யும் நீதிபதியிடம் சொல்லுங்கள் இந்தியாவில் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலையைப் பற்றி இந்திய உள்துறை அலுவலகம் இன்று (27.08.2010) மாலை 3.30 மணியளவில், டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள பொது விசாரணையை, டெல்லி உயர்நீதி மன்றம் எண் : 2ல் நடைபெற்றது. விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட இன்று செல்லவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்திலிருந்து பி.ஜே.பியை சார்ந்த ஒருவர் …
-
- 2 replies
- 1.1k views
-
-
பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்காவிற்கு ? பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க அல்லது மத்தள விமான நிலையத்தின் ஊடாக செல்லவில்லை என எமது விசாரணையின் போது குடிவரவு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ஏ.எஸ் கனுகல தெரிவித்தார். இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=163389
-
- 3 replies
- 372 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் 2014ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணப்புக்குழுக் கூட்டம் கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் இன்று காலை கடும் வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சருக்கு இணைத்தலைவர் பதவியில்லை. அவரை எவ்வாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் தமக்கருகில் அமர வைத்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து பெரும் குழப்பம் ஒன்று ஏற்பட்டது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை மாவட்ட செயலகத்தில் நடத்தாது கொக்கட்டிச்சோலையில் நடத்துவது தொடர்பிலும் ஒழுங்குப்பிரச்சினை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தை மாவட்ட செயலகத்தில்தான் நடத்த வேண்டுமென்பது சட்டம…
-
- 0 replies
- 396 views
-
-
.! எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் அஞ்சலி! எம்.ஜி. ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறையிலுள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் சிலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/57292.html
-
- 0 replies
- 209 views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 11, 2010 தமிழீழ தேசிய தலைவரின் அன்னை அவர்களை காண வருபவர்களின் தொகை அதிகரித்து வருவதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அன்னை பார்வதி அவர்களுக்கு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என கூற முடியாது என கூறுகின்றார் சிவாஜி சிலவேளைகளில் நீராகாரத்தையும் மாத்திரம் உட்கொள்ளக் கூடியதாகவும், சிலவேளைகளில் திண்ம ஆகாரத்தையும் உட்கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும், சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் சிவாஜி குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் பனாகொட தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் கடுமையான நிலைமை ஏற்பட்ட…
-
- 1 reply
- 969 views
-
-
கொபி அனானுக்கு வீசா வழங்குவது குறித்து அரசாங்கத்துக்குள் முரண்பாடு! [saturday, 2014-05-31 18:37:51] ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் இலங்கைக்கு வருவதற்கு வீசா வழங்குவது தொடர்பாக, அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அமைக்கவுள்ள விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொபி அனானுக்கு இலங்கைக்குள் வர கட்டாயம் வீசா வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைக்குள் வந்து அவ்வாறான விசாரணைகளை நடத்த எவருக்கும் வீசா வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கொள்கையை கொபி அனானுக்கும் கடைப்ப…
-
- 0 replies
- 456 views
-
-
கூட்டமைப்புப் பிரச்சினைகளை பூதாகரமாக்கிக் காட்டுகின்றனர் -சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்புப் பிரச்சினைகளை பூதாகரமாக்கிக் காட்டுகின்றனர் -சித்தார்த்தன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அதை வெளியே பெரிதாக்கிக் காட்டுகின்றனர். எமக்குள் கொள்ளை ரீதியாகப் பிளவுகள் ஏதும் இல்லை. குழப்பங்களும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள…
-
- 0 replies
- 697 views
-
-
“கோட்டா கோ கம” போராட்ட தளத்தில் இருந்து... இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுவதாக அறிவிப்பு. கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜூலை 21 ஆம் திகதி முதல் அங்குகிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர் . இதேவேளை பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்து நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1292130
-
- 1 reply
- 269 views
-
-
மட்டக்களப்பில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செலகப்பிரிவில் அமைந்திருக்கும் புலையாவெளி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 90 குடும்பங்கள் சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சாரம் மற்றும் நிரந்தர வீடுகள் போன்ற அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவருகின்றன. இதேபோல் கரடியானறுப் பகுதியில் அமைந்துள்ள பண்ணைத்திடல், தூண்டில்தளவாய், தேக்கஞ்சேனை போன்ற பகுதி மக்களும் அடிப்படைவதிகள இன்றி வாழந்துவருகின்றனர். பின்தங்கிய பகுதிகாளக இருக்கும் இப்பிரதேசங்களில் சீரான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ள பாதைகள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. அத்தோடு, சுத்தமான குடிநீரும் பிரச்சனையாக காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலப்பகு…
-
- 0 replies
- 400 views
-
-
-எஸ்.சசிக்குமார் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து கடந்த 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ள 162 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வள்ளிக்கேணியில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்களது பூர்வீகக் கிராமமான சம்பூரை விடுத்து, வள்ளிக்ணேயில் குடியேற அம்மக்கள் விருப்பம் தெரிவித்ததாக மூதூர் பிரதேச செயலாளர் நடராசா பிரதீபன் தெரிவித்தார். சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த 825 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ளனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதி, அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடம்பெயர்ந்தவர்களை பல சந்தர்ப்பங்களில் மீளக்குடியமரத்த முனைந்த போதும் அம்முயற்சி …
-
- 0 replies
- 373 views
-
-
மு.கா.கனவு காணும் கட்சியல்ல மக்கள் கனவை நனவாக்கும் கட்சி : ரவூப் ஹக்கீம் பொத்துவில் பிரதேசத்திலிருந்து எம்மை விரட்டலாம் என்ற நோக்கில் சிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும் கட்சி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை இன்று திறந்துவைத்த பின்னர், உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீல…
-
- 0 replies
- 202 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 24ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் பள்ளிவாசல் தலைவர்களுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வேண்டுகோளினை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும். இக்குற்றத்தைப் புரியும் ஒர…
-
- 0 replies
- 828 views
-
-
ஐரோப்பியசெய்தியாளர் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த செவ்வாய்க் கிழமை (10.06.14) கென்வ்(f) நகரில் ஆற்றிய தன் இறுதி உரையில், ஐரோப்பிய அரசியல் வாதங்களை மிகவும் பரிகாசத்திற்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்பும், எதிர்ப்பும் மிக ஆபத்தான விளைவைக் கொணருமென அந்த உரை எச்சரித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது வரை காலமும் தென் சூடான், சிரியா, பாலஸ்தீனம், சிறீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இடம் பெற்ற மனிதவுரிமை மீறல்களை மிகவும் ஆர்வத்துடன் ஆக்கபூர்வமாக எதிர்த்து வந்த நவநீதம்பிள்ளை, ஐரோப்பாவில் இடம் பெறும் மனிதவுரிமை மீறல்களையும் தற்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடப்பட்டு…
-
- 0 replies
- 512 views
-
-
சரத் பொன்சேகாவுக்கு வழங்கிய தண்டனை போதாது - மேர்வின் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-10-05 07:25:51| யாழ்ப்பாணம்] முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் போதியளவு தண்டனை விதிக்கப்படவில்லை எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.முன்னாள் இராணுவத் தளபதி நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ள தாகவும் வெள்ளைக்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குறைந்தபட்ச தண்டனைகளின் மூலம் நாட்டின் ஒழுக்கம் பாதிக்கப்படக் கூடும். எனவே கடுமையான தண்டனை வழங்கி மக் களை நல்வழிப்படுத்த வேண்டும். பிரபுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே ஊடகங்களும் பெளத்த பிக்குகளும் குரல் கொடுக்கின்றன. ஏனையவர்கள் கைது செய்யப்…
-
- 3 replies
- 714 views
-
-
மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பலசேன அமைப்பின் தலைவருமான வட்டரெக்க விஜித்த தேரர் தாக்கப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய தாக்குதலுக்கு உள்ளான தேரர் நேற்றுக் காலை பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரண பாலத்துக்கு அண்மித்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசியவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேரரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படும் அதேவேளை அவரது அந்தரங்க உறுப்பிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேரர் நிலை தற்போது சாதாரணமாக இருப்பதாக பொலிஸ் ஊட…
-
- 17 replies
- 1.7k views
-
-
நேரம் வரும்போது களமிறக்குவோம் என்கிறார் கெஹெலிய எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அறிவிக்கப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு கூட்டு எதிரணி தயாராகவே இருக்கின்றது. வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மட்டுமேயாகும் என்று உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 295 views
-
-
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின், அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொது பல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது? இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார். அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- “கடந்த 15ஆம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
150 வருடங்களின் பின் பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ஏற்பட்ட மாற்றம்! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்! 150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இதனை வெளியிட்டு வைத்தார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் 150 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் கீதம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள தே…
-
- 2 replies
- 351 views
-
-
இலங்கை இராணுவத்தின் படுகொலை குறித்து மன்னிப்புச் சபை பிரச்சாரம் இலங்கை இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில்…
-
- 1 reply
- 639 views
-
-
இலங்கையில் ரூ.400 மில்லியன் செலவில் செய்மதி தயாரிப்பு வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 02:01 இலங்கையின் தேவை கருதி, உள்நாட்டு விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுவரும் செய்மதியை விண்வெளிக்கு அனுப்புவதற்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இத்தொகைப் பெற்றுத்தருமாறு திறைசேரியிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கோரியுள்ளது. இலங்கையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆதர் சி.கிளார்க் நிறுவனத்தினூடாக உள்ளூர் விஞ்ஞானிகளால் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். சிறியதொரு செய்மதியை விண்வெளிக்கு அனுப்பி, அதன்மூலம் பெற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 405 views
-
-
2 ஆவது தடவை களமிறங்குவது குறித்து இன்னும் தீர்மானமில்லை ஆனாலும் அரசியல் பயணம் தொடரும் என்கிறார் ஜனாதிபதி மனித உரிமை விவகாரத்தில் அவசரம் காண்பிக்க முடியாது என் மீதான ரவியின் விமர்சனம் நியாயமற்றது இரு விசாரணை அறிக்கைகளும் ஒன்றாகவருமென நினைக்கவில்லை 10 வருடங்களில் 10 டிரில்லியன் ரூபா நாட்டுக்கு கடன் ஏற்பட்டுள்ளது கோத்தபாய ராஜபக் ஷ கைது விவகாரத்தில் நடந்தது இதுதான் பொதுப்பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை (நமது நிருபர்) இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு வருவேனா விடு…
-
- 0 replies
- 274 views
-
-
ஓஸ்லோப் பேச்சுக்கள் இன்று தொடக்கம் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றன. இந்தப் பேச்சுக்களில் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் பங்கேற்கின்றனர். ஓஸ்லோ பேச்சுக்களில் விவாதிக்கப்படக் கூடியவை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத் தடையையடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களின் பணி, கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு ஆகியவை …
-
- 7 replies
- 2.6k views
-