ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர் ; ரில்வின் சில்வா பழைய கள்ளர்களை விரட்டிவிட்டு புதிய கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். முன்னைய ஆட்சியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தனர். இப்போதும் அதையே மேற்கொண்டு வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தேசிய ஒற்றுமையை வளர்ப…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்கின்றது – ஜாதிக ஹெல உறுமய 11 அக்டோபர் 2013 இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளின் மூலம் இலங்கையில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதனை பாரதூரமான நிலைமையாகக் கருதப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. வட மாகாணசபை முதலமைச்சரை சந்தித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இது சரியானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. முதலமைச்சர…
-
- 1 reply
- 360 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் ஒரு பிரதி இலங்கைத் தூதுவரகத்திற்கும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. அவ்வறிக்கையில் மோதலில் ஈடுபட்ட இரண…
-
- 1 reply
- 844 views
-
-
நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரியாக பூஜையில் கலந்து கொண்ட குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் October 24, 2021 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினம் காலை குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார். …
-
- 4 replies
- 668 views
-
-
காணிகளை பெறுவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சிறுவயது திருமணங்கள் நடைபெறுவதாக 'ராவண சக்தி' இயக்கம் நேற்று திங்கட்கிழமை கூறியது. றம்புக்கன் ஓயா திட்டத்தின் கீழ் காணி வழங்குதலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த திருமணங்கள் இடம்பெறுவதாகவும் அந்த இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 'றம்புக்கன் ஒயா திட்டத்தில் விவசாய நோக்கத்திற்காக அரை ஏக்கர் காணிமட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்டது' என ராவண சக்தியின் செயலாளர் இத்தகந்த சத்ததிஸ்ஸ கூறினார். இப்பிரச்சினை தொடர்பாக ஒரு மகஜரை கையளிப்பதற்காக சத்ததிஸ்ஸ நீர்ப்பாசன அமைச்சுக்கு பல கிராம வாசிகளையும் அழைத்துக்கொண்டு நேற்று திங்கட்கிழமை வந்திருந்தார். நிலப்பற்றாக்குறை காரணமாக மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 1100 …
-
- 0 replies
- 221 views
-
-
இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று கூறி…
-
- 5 replies
- 797 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக கனத்த மழை – குளங்களின் நீர் மட்டம் உயர்வு! கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம் ஆகியன வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழைகாரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்தது. இந்த நிலயைில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வன்னுரிக்குளம் இன்று (செவ்வாய்க்கிழமை) வான்பாய ஆரம்பித்துள்ளது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த நிலையில் குளங்களிற்கு நீர்வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட…
-
- 1 reply
- 133 views
-
-
கொழும்பில் இந்திய மியாட் மருத்துவமனை வீரகேசரி இணையம் 11/19/2009 10:10:00 AM - தமிழ்நாடு மியாட் மருத்துவமனையின் கிளை ஒன்று கொழும்பில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி கொழும்பு சினமன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மியாட் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் பிரக்தீவ் மோகன் தாஸ் தலைமையில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இந்தியப் பத்திரிகையாளர் மணவை அசோகன் மற்றும் மியாட் மருத்துவமனையின் அலுவலக பொறுப்பாளர் ரொபின் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். E-mail to a friend
-
- 0 replies
- 647 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 200 கோடி முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வை ''உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி''எனக்கூறி கேவலப்படுத்திய ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களை மிரட்டப்பார்க்கின்றீர்களா? என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(16), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே தனியார் சட்டங்களை சில விடயங்கள் முஸ்லிம்களின் இனம…
-
- 2 replies
- 316 views
-
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 521 படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50 வீடுகள் மற்றும் 22 காணிகள் இன்று சனிக்கிழமை 09.11.13) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டன. 521ஆவது படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பாதுகாப்பு படைப்பிரிவின் 7ஆவது படைப்பிரிவினால் இன்று காலை இந்த கையளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வீடுகள் மற்றும் காணிகள் கையளிப்பதற்கான அத்தாட்சி ஆவணத்தினை, 521ஆவது படைப்பிரிவின் கேணல் டி.எம்.ரி.பி திசாநாயக்க பருத்தித்துறை பிரதேச செயலர் ஆர்.ரி.ஜெயசீலனிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்த வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன. இந்த வீதிகளின் ஊடாக கையளிக்கப்பட்ட வீடுகளை மக்கள…
-
- 0 replies
- 476 views
-
-
OMP சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் (OMP) சட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கைச்சாத்திட்டதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டத்தின், இன்று நான் கைச்சாத்திட்டேன். நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்துக்கான இலங்கையின் பாதையில், இது இன்னொரு படியைக் குறிப்பிடுகிறது" என்று தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/OMP-சட்டத்தில்-ஜனாதிபதி-கைச்சாத்து/150-201056
-
- 1 reply
- 431 views
-
-
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்.. ஜக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பிலான நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொதுபல சேனா அமைப்பினால் இன்று ஆர்பட்டம் மேற்கொள்ளப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நடாத்தப்பட்டது. இதன்போதே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசித்து நிகழ்வை குழப்ப முயற்சித்தார் எனவும் இதனால் அங்கு நின்ற ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்…
-
- 0 replies
- 339 views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்க்கட்சிகளின் சார்ப்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அதனையடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பதவியேற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்களில் தமிழ் மக்கள் தொடர்பிலான உ…
-
- 0 replies
- 819 views
-
-
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வளமான அரச காணிகள் வனப்பிரதேசமாக வர்த்தகமானியில் மத்திய அரசினால் தன்னிச்சையாக பிரகடனப்படுத்தப் படுத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மாகாண சபைக்குரிய காணிகளை பறித்தெடுக்கும் செயல் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றஞ்சாட்டுகிறார். குறிப்பாக, மத்திய அரசின் வனத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலொன்றில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிரான், வவுணதீவு, ஆகிய பிரதேசங்களில் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஏக்கர் அரச காணிகள் வனப் பிரதேசமாக பிரகடனப்படுத் தப்படவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். குறித்த …
-
- 0 replies
- 366 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 31-07-2017
-
- 0 replies
- 133 views
-
-
ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியின் கூட்டம் அலரிமாளிக்கையில் நடைபெறுகின்றது. அதனை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கின்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஆளம-கடச-கடடததல-சலசலபப/175-287272
-
- 0 replies
- 209 views
-
-
ஆயுதங்களை ஏற்றியபடி தாய்லாந்தில் பிடிபட்ட வானூர்தி சிறிலங்காவுக்குத்தான் சென்றது என்று அதன் வானோடிகள் ஐவரும் உறுதிப்படுத்தி உள்ளதாக அவர்களின் சட்டவாளர் இன்று தெரிவித்தார். வடகொரியாவில் ஏற்றப்பட்ட ஆயுதங்களுடன் அந்த வானூர்தி ஈரானுக்குச் சென்று கொண்டிருந்ததாக தாய்லாந்து புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இடையில் எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரையிறங்கிய அந்த வானூர்தி ஈரான் சென்று சேர்வதற்கு முன்னதாக சிறிலங்கா, அசர்பைஜான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இடங்களில் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தது என்று ஆயுதக் கடத்தல் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்தத் தகவல்களை வானோடிகள் ஐவரினதும் சட்டவாளர் சொம்சாக் …
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் முருகண்டி ஆலயத்தினை வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுப்பு யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அமைந்திருக்கும் முருகண்டி ஆலயத்தினை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் இந்துக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த ஆலயத்தில் வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக குடாநாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஏ9 வீதியூடான போக்குவரத்து தற்போது திறந்து விடப்பட்டுள்ள போதிலும் வாகனத் தொடரணியாகவே படையினர் வாகனங்களை வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள முருகண்டி ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். …
-
- 7 replies
- 1.5k views
-
-
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வளங்கள் அகழப்படுவதனால் மக்களுடைய இருப்பு பாதிக்கப்படுகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டிமலை,கொடிதூக்கி மலை ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களில் உள்ள மலைகள் சட்டவிரோதமான முறையில் உடைக்கப்பட்டு வளங்கள் அள்ளப்படுவதால் அந்தப் பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அதன்படி இந்த சட்டவிரோத நில அகழ்வால் அருகிலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் கிணறுகளில் வெடிப்புக்கள் ஏற்படுகிறது.இதனால் அப்பகுதியில் மக்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. பிரதேச மக்களின் தகவலையடுத்து அங்கு நேரில் சென்று சம…
-
- 0 replies
- 373 views
-
-
20ஆம் திருத்தம் தொடர்பில் சம்பந்தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவேண்டும் கேட்கிறார் குமரகுருபரன் 20ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும்போது, மாகாண சபைகளின் அதிகாரத்தை கொழும்பு அரசிடம் தாரைவார்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது. அத்துடன் 20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து விட்டால் சபையை நீடிப்பதற்கு மாகாணசபைகள்…
-
- 0 replies
- 133 views
-
-
புத்தாண்டில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன ? - ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள என்கிறார் தயான் (ஆர்.ராம்) புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகத்திற்கான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத்தளபதி ஜெ…
-
- 5 replies
- 503 views
- 1 follower
-
-
அம்பாரை மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் மறைந்த முன் நாள் அமைச்சர் காமினி திஸ்ஸ நாயக்க அவர்களின் மகனுமாகிய மாயாத திஸ்ஸ நாயக்க சரத்பொன்சேகாவை தாம் ஆதரிப்பதாக இன்று கூ|றியுள்ளார். இவர் கருணா மற்றும் கருணாவின் அம்பாரை மாவட்ட அடாவடி பொறுப்பாளர் இனியபாரதி ஆகியோர் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியினை விஸ்தரிக்கும் வேலையினை செய்து வந்தனர். ஆனால் இப்போ மயந்த அவர்கள் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்பது இவர்களுக்கு தலையிடியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. மாயத மஹிந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளராக கடந்த ஒருவருடத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை சிறிலங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்த நவின் திஸ்ஸ நாயக்கவும் சரத்பொன்சேகாவை ஆதரிப்ப…
-
- 1 reply
- 653 views
-
-
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்ரேலியா நுழைவுவிசா நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகம் மறுத்துள்ளது. சிட்னியில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கு, அவுஸ்ரேலியா செல்ல நுழைவிசைவு கோரியிருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் விண்ணப்பம், அவுஸ்ரேலிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அவுஸ்ரேலியத் தூதரக பேச்சாளரிடம் விளக்கம் கோரிய போது, எந்தவொரு நுழைவிசைவு விவகாரம் தொடர்பாகவும், கருத்து வெளியிடுவதற்கு சட்டரீதியான தடை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அவுஸ்ரேலியாவின் இந்த முடிவு தனக்கு கடந்த வியாழக்கிழமை தெரியப்படுத்தப்பட்டதாக, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார். “உலகின்…
-
- 0 replies
- 300 views
-
-
’சீனாவுடன் செய்தது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அல்ல’ சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்ல எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, அது இருதரப்பு ஒப்பந்தம் மாத்திரமே என்று குறிப்பிட்டார். “சீன வெளிவிவகார அமைச்சருடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமானது, கடந்த நல்லாட்சியில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுள் ஒன்றா?“ என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திர நாடு என்ற ரீதியில் இ…
-
- 0 replies
- 255 views
-
-
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் சென்னையில் கைது வீரகேசரி இணையம் 1/11/2010 4:00:26 PM - இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் ஒரு மீன்பிடி படகுடன் சென்னை அருகே கைது செய்யப்பட்டனர். சென்னை அருகே இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்த படகு ஒன்றை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் பிடித்தனர். படகில் உள்ளவர்களை விசாரித்தபோது அவர்கள் இலங்கை மீனவர்கள் என்பது தெரியவந்தது. கடல் காற்று காரணமாக திசைமாறி இந்திய கடற் பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் வந்த படகும், 5 இலங்கை மீனவர்களும் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். இது தொடர்பாகப் பொலிசார் தீவிர விசாரணை …
-
- 0 replies
- 444 views
-