ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஈரான் அரசு சிறிலங்காவிற்கு ரூபா ஆறாயிரம் மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது. தென் பகுதியில் மின்சார துறையினை விருத்தி செய்யவே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. குரு நாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த தொகை செலவிடப்படுமென சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. Eelanatham
-
- 2 replies
- 670 views
-
-
திலீபனின் சடலத்தை தேடி வேட்டை வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 02:49 இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென…
-
- 7 replies
- 938 views
-
-
நான்குமுனை சமரை எதிர்கொள்ளும் ஜெனிவா (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடை பெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு முனை பிரசாரப் பணிகள் முன் னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசாங்கத் தரப்பு பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு மற்றும் சர்வதேச தரப்பு தென்னிலங்கை தரப்பு ஆகியன கடும் பிரசாரப் பணிகளில் ஈடுபடவுள்ளன. மார்ச் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதேபோன்று மார்ச் 21ஆம் திகதி ஜெனிவாப் பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்…
-
- 0 replies
- 168 views
-
-
வசந்த முதலிகே, உள்ளிட்ட.... மூவரை, 90 நாட்களுக்கு தடுத்து வைத்து... விசாரணைகளை மேற் கொள்வதற்கு அனுமதி. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரிடம் போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன…
-
- 8 replies
- 939 views
- 1 follower
-
-
2011ம் ஆண்டில் இலங்கையர் ஒவ்வொருவரும் 250,000 ரூபா கடனாளியாகமாறுவர் யுத்தம் நடைபெற்ற காலத்தை விட தற்போது நாட்டு நிலைமை மோசமாகவுள்ளதாக ஜே.வி.பி. தொரிவிக்கின்றது. ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் இப்படி தொரிவித்துள்ளார் . அவர் மேலும் தொரிவிக்கையில், இந்த வருடம் ஆகஸ்ட் வரையில் அரசு செலுத்தவேண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கடன் தொகை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 405 கோடி ரூபாவாகும். இதனால், 2011ம் ஆண்டளவில் இந்நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் கடனாளியாக மர்றுவார்கள். யுத்தத்தை காரணம் காட்டி பொருட்களின் விலையை அதிகாரித்தார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்று முடிந்து 17 மாதங்களாகியும் விலையேற்றம் தொடர்கின்றது. அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள அதிகாரிப்ப…
-
- 0 replies
- 613 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் – அரசாங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதிகளை கொண்டிருக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அரசு கருவூலத்தில் இருந்து பெரும் தொகையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கான நடவடிக்கை மெதுவாக நடைபெறுவதாக விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 315 views
-
-
”தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம்” எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்க ஒழுக்கம், பயிற்சி, அறிவு ஆகியன அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்கனவே இந்த விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் பல்கலைக்கழக வர்ணம் வழங்க…
-
- 3 replies
- 564 views
-
-
ஜேர்மனியின் தேசிய மட்ட சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி! ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. “talent in the country” என்கிற அங்கீகாரத்தை இவ்வருடம் அங்கு பெற்றிருக்கும் 50 மாணவர்களில் இவரும் ஒருவர். சராசரி மாணவர்களை விட அதி கூடிய திறமை உடையவர்கள் என்று இவர்கள் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் Robert Bosch and Baden-Württemberg Foundation என்கிற சர்வதேச புகழ் வாய்ந்த உயர்கல்வி ஸ்தாபனத்தால்தான் இப்பெருமையும், அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. துர்க்கா இந்நிறுவனத்தின் புலமைப் பரிசிலுடன் உயர்க…
-
- 17 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மீண்டும் பதவி நீடிப்புச் செய்யப்பட்டுள்ள வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பத்ரமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஆளுனரது கொழும்பு அலுவலகத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கடந்த காலங்களில் எமது மக்களுக்கான தங்களது சேவை எவ்வாறு சிறப்பாக இடம்பெற்றிருந்ததோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடரவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் வகையில் என்னோடு இணைந்து பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள். அதற்காக எமது மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன…
-
- 2 replies
- 594 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் பேச்சுவார்த்தையில்..? நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களுக்கான கோரிக்கையை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கும் மாணவர் ஒன்றியங்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இதேவேளை, தத்தமது கட்சிகளுக்கு ஆதரவு…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன் திகதி: 08.11.2010 சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார். இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள். ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள…
-
- 1 reply
- 681 views
-
-
காரைநகர் சிறுமிகள் மீதான சிறிலங்கா படையினரின் பாலியல்வன்முறைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் ! [saturday 2014-07-19 10:00] சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத் தாயகத்தின் யாழ்ப்பாணம் காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு சிறுமிகள் விவகாரம் தொடர்பில் வன்மையான கண்டனத்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது தொடர்பில் ஐ.நா சபை உட்பட அனைத்துலக மையங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது. மானுடத்திற்கு புறம்பான வகையில், சர்வதேச ரீதியில் சிறுவர் நலன் தொடர்பாக வரையப்பட்டிருக்கும் அத்தனை அடிப்படை மனித உரிமைகளையும் சிறிலங்கா கடற்படையினர் மீறியுள்ளனர் என தெரிவித்துள்ள நா…
-
- 0 replies
- 239 views
-
-
சட்டப் புத்தகங்களுக்குள் தூங்கும் தமிழின் நிர்வாக அந்தஸ்து த.மனோகரன் இலங்கையின் இனமுறுகல் இன்று பூதாகரமாகத் திகழ்ந்து பல அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்து, தமிழ்மொழி உரிமைக்கு மறுப்புத் தெரிவித்து தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தமை என்பது வரலாறு. 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள அரச கரும மொழிச்சட்டத்தை எதிர்க்கத் தலைப்பட்ட தமிழினம் இன்று தனிநாடு என்ற கோட்பாடு வரை வந்து விட்டது. இந்நிலை ஏன் ஏற்பட்டது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும். ஓர் இனத்தின் இருப்புக்கு, வாழ்வின் உறுதிக்கு, மொழியுரிமை கட்டாயமானது, அவசியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஓர் இனத்தின் மொழியுரிமை பறிக்கப்படும் போது அவ்வினம் வாழும் நாட்டின் இரண்டாம் தரப்பிரஜைகளாக, நாட்டிற்கு …
-
- 0 replies
- 1.3k views
-
-
கே.கே.எஸ்.வீதி அகலிக்கும் பணிகள் பஸில் இன்று ஆரம்பித்து வைப்பார் [14 நவம்பர் 2010, ஞாயிற்றுக்கிழமை 8:05 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம்,நவ.14 சீன அரசின் உதவியுடன் காங் கேசன்துறை வீதியை அகல மாக்கும் பணியை இன்று முற் பகல் 11 மணிக்கு பொருளா தார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வைபவ ரீதி யாக ஆரம்பித்து வைக்கிறார். தந்தை செல்வா சதுக்கத்துக் குச் சமீபமாக பண்ணை வீதி யும் காங்கேசன் துறை வீதியும் இணையும் சந்தியில் அமைக் கப்பட்டுள்ள நினைவுக்கல்லை பஸில் ராஜபக்ஷ திறந்து வைத்து வீதி அகலிக்கும் பணியை ஆரம் பித்து வைக்க விருக்கிறார். இதேவேளை, ஏ9 பாதையில் புத்தூர் சந்தியில் இருந்து மீசாலை நோக்கிச் செல்லும் வீதியை அக லமாக்கும் பணியையும் பஸில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார். …
-
- 3 replies
- 609 views
-
-
சி.ஐ.டி.யில் ஆஜராவதை தவிர்த்த அர்ஜுன மகேந்திரன் நேற்றுவரை நாடு திரும்பவில்லை (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் போது மோசடி செய்தமை, அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர் பில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட, முன் னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அவர் ஆஜராகவில்லை. சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்திரன் இருப்பதாக நம்பப்படும் நிலையில் அவர் நேற்றுவரை இலங்கைக்கு திரும்பவில்லை என்பதுடன் விசாரணைகளுக்கும் சமூகமளிக்கவில்லை என விசாரணையாளர்கள் தரப்பு தகவல்…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கையில் இழுத்து மூடப்பட்ட பத்தாயிரம் ஹோட்டல்கள்! உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருவதை அடுத்து ஏற்பட்ட நஷ்டத்தால் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர நிலை ஹோட்டல்கள், விலாக்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் இதர சுற்றுலா விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவரும் கேகாலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம அமைப்பாளருமான பிரியந்த திலகரத்ன இதனைத் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்பால் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் உட்பட கிட்டத்தட்ட பத்தாயிரம் சுற்றுலா விடுதிகள் மூடப…
-
- 0 replies
- 300 views
-
-
சற்றுமுன் கொழும்பு கொல்பிட்டியவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. மேலதீக தகவல் தொடரும்..
-
- 46 replies
- 7.4k views
-
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் என கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28822
-
- 0 replies
- 586 views
-
-
அம்மான் படையணி உதயம் October 6, 2022 தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் பட…
-
- 31 replies
- 2k views
-
-
யாழ்.கோப்பாய் கரந்தன் சந்தியில் ஊரடங்கு தளர்ந்தப்பட்ட வேளையில் கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் நீர்வேலியை சேர்ந்த சுகுனராசா நிர்மலராசா(அகவை 26)எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதே வேளை தென்மராட்சிப்பகுதியில் ஆசிரியராக கடமையாற்றிய இளைஞர் ஒருவர் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 1 reply
- 815 views
-
-
இன்றர்நெற் தகவல் இணையம் பிரபல்யம் அடைவதற்கு விக்கிலீக்ஸ் என்ற பெயரில் இயங்கும் இணையதளம் அண்மைக்காலமாக முக்கிய பங்களிப்புச் செய்கின்றது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் பணி எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கிய 39 வயதினரான யூலியன் அசன்கே இன்று வேட்டையாடப் படும் மனிதராக மாறிவிட்டார் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகின் பெரும்பாலான அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சுவீடன் நாட்டு அரசு ஒரு படி மேலே போய் அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியதோடு அவரைப் பிடித்துத் தரும்படி மேற்கு ஜரோப்பிய நாடுகளைக் கேட்டுள்ளது. சென்ற ஆகஸ்து மாதம் அவர் சுவீடன் நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சுவீடன் அரசு யூலியன் அச…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது ; ஜெப்ரி பெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார். 5 ஆவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வரவேற்றனர். முக்கியமான தருணத்தில் அவர் இங்கு வந்திருப்பதை தமிழத் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. இந்நிலையில் சந்த…
-
- 2 replies
- 475 views
-
-
யாழ் போதனா மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆனால் மற்ற பல மருந்துகள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் யாழ் போதனா மருத்துவமனையின் பதில் தலைவர் டாக்டர் ரவிராஜ் தெரிவித்தார். நிவாரணப் பொருட்களைக் கொண்டு வரும் கப்பலில், ஆக்சிஜனும் அனுப்பப்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். யாழ் மருத்துவமனையில் ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய அரசாங்க அதிபர் டீசல் கொடுத்து உதவினார் என்று குறிப்பிட்ட ரவிராஜ், பெரும்பாலான மருத்துவர்கள், வைத்தியசாலை வளாகத்திலேயே வசிப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கையில் பெரிய பற்றாக் குறை ஏற்படவில்லை என்றும் தெரிவி்த்தார். ஆனால் தற்போதைய நிலையில் அடிப்படை மருத்ததுவ சேவைகளையும், அவசர சிகிச்சைகளையும் மட்டுமே தமது மருத்…
-
- 0 replies
- 864 views
-
-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தாம் களமிறக்க உள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வுக்கும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அறிவிக்க உள்ளதாகவும் அவ்வாறு இந்த யோசனைக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் தாம் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/08/16/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%A…
-
- 0 replies
- 334 views
-
-
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் முல்லைத்தீவு அளம்பில் பிரதேசத்தில் செய்திச் சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. அளம்பில் பிரதேசத்தில் துயிலும் இல்லங்கள் அமைந்திருக்கும் தனியார் காணியொன்றை கையகப்படுத்தும் முயற்சியில் இராணுவம் ஈடுபடுவதாக வெளியான தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். குறித்த இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளரை தடுத்த இராணுவத்தினர், அவருடைய கமராவை சோதனையிட முயற்சித்துள்ளனர். எனினும் அதற்கு ஊடகவியலாளர் மறுப்பு தெர…
-
- 0 replies
- 248 views
-