Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுகாதார அமைச்சு கைமாறுகிறது? கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சு, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இருந்து கைமாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார் என அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமை…

    • 12 replies
    • 988 views
  2. யாழ்ப்பாணத்தில்... இராணுவம் வீடு புகுந்து தாக்குதல்! யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீரென நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா கூறியுள்ளதாவது, “நேற்று நள்ளிரவு 11 மணியளவில், இராணுவ இலக்க தகடுகள் (யூஹா) பொருத்திய மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை தரித்தவர்கள், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு நான் சென்றபோது, என்னுடனும் அவர்கள் முர…

    • 5 replies
    • 743 views
  3. யாழ்.வடமராட்சி – கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை இடைநிறுத்தம் யாழ்.வடமராட்சி- கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணியை சுவீகரிப்பதற்கான நடவடிக்கையொன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.இருப்பினும் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நில அளவை மேற்கொள்ளும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.இதேவேளை போராட்ட இடத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஆயதங்களுடனும் சிவில் உடையுடனும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவ…

  4. தீவிர சிகிச்சைப் பிரிவில்... அனுமதிக்கப் பட்டுள்ளார், மங்கள சமரவீர முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது. மேலும் சுவாசக் கோளாறு காரணமாக அவர், வைத்தியசாலையிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2021/1234690

  5. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலும் மாற்றம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதற்கு முன்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1234576

  6. இலங்கையில் திருமண நிகழ்வுகளை... நடத்த, இன்று நள்ளிரவு முதல் தடை! திருமண நிகழ்வுகளை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரும் வரையில், வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமணங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் சில கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஸித் ரோஹன அறிவித்துள்ளார். அதற்கமைய, பதிவுத் திருமணங்களை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளுடன்... எந்தத் தொடர்பும், இல்லை – தலிபான்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக…

    • 6 replies
    • 759 views
  8. ரிஷாத் பதியூதீனின் மைத்துனருக்கு பிணை பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் மனைவியின் சகோதருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர். இந் நிலையில் சந்தேக நபரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை சந்தேக நபருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டையும் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ht…

    • 1 reply
    • 744 views
  9. தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா தொற்றாளர் தொகை திட்டமிட்டுக் குறைப்பு. பின்னணியில் பெரும் புள்ளிகள். அம்பலப்படுத்திய அரச பங்காளி! கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. தொற்றுநோய் பிரிவின் இரு விசேட மருத்துவர்களும், உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவரும் இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர் – என்று அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு அந்தக்கட்சியின் தலைமையகத்தில் நேற்றுமுற்பகல் நடைபெற்றது. அதில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் த…

    • 38 replies
    • 2.1k views
  10. இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வு யாழில் முன்னெடுப்பு இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்’ எனும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாரதத்தின் 75-வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை (15 ஆகஸ்ட் 2021) மிக சிறப்பாக கொண்டாடியது. யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோர் பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்துஇ யாழ் இந…

    • 3 replies
    • 460 views
  11. மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் தலைமையகம் இருந்த காணி தனியாரிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையகங்களில் ஒன்றாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை சோலையகம் காணி உரிமையாளரிடம் கையளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலையகம் படைமுகாமிருந்த சுமார் இரண்டு ஏக்கர் காணியையே இவ்வாறு கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் முன்னெடுத்த நடவடிக்கைகள் பயணாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்து…

  12. பயணத் தடையை... மீறுபவர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில இடங்களில் மாகாண எல்லைகள் வரையில், பேருந்துகளில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பேருந்துகளின் மூலம் சிலர் பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவ்வாறு பயணிக்கும் பேருந்தின் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன் குறித்த பேருந்தும் கையகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 24…

  13. இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில், தங்காலை கால்ட்ன் இல்லத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டபோதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். https://athavannews.com/2021/1234494

  14. கட்டுப்பாடுகளுடன்... பதிவுத் திருமணங்களை, நடத்துவதற்கு அனுமதி இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளித்த பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய, பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்…

  15. நாடளாவிய ரீதியில், இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்! நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்கு வேளையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்விற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும்இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். மேல…

  16. இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை உறுதிப்படுத…

  17. நேற்று 3 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 65 ஆயிரத்து 695 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. அதேபோல சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 2 இலட்சத்து 17 ஆயிரத்து 712 பேருக்கு செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், நேற்று 17 ஆயிரத்து 219 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 493 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது. மேலும் 102 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோ…

    • 0 replies
    • 441 views
  18. ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வைத்திய நிபுணர்கள் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் உடனடியாக ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பான ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர், சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம். நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாடுகளும் போதுமானதாக இல்லை. ஆகவே ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்வதே சிறந்தது என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது நாட்டை 3 …

  19. திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்துவரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை நிறுத்துங்கள்: யஸ்மின் சூக்கா கோரிக்கை (ஆர்.ராம்) திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார். ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்…

  20. இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் (ஆர்.ராம்) இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உன்னிப்பான கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்…

  21. செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் August 14, 2021 செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். குறித்த அஞ்சலிக்கு காவல்துறையினா் ர், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்க…

  22. மடுத்திருத்தலத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம் பெற்றது. August 15, 2021 மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர். மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை கொண்டாடும் வகையில் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் கொடியே…

  23. குழந்தைகளுக்கும் முககவசம் அணியுங்கள் : August 15, 2021 இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் இல்லையென குழந்தைகள் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார். யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளையும் கொரோனா தாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய ரீதியில் கொரோனா கூடிக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் குழந்தைகளை தொற்றும் வீதம் அதிகரித்திருக்கின்றது …

  24. இலங்கை விவகாரம்: மிச்செல் பச்லெட் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன் இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த தினத்தன்று ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வாய்மூலமான அறிக்கையைச் சமர்பிக்கவுள்ளதுடன் இலங்கை விவகாரம் குறித்தும் தனது அவதானிப்புகளை வெளிப்படுத்தவுள்ளார். இந்நிலையிலேயே குறித்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது எம்.ஏ.சுமந்திரன் இவ்வா…

    • 1 reply
    • 406 views
  25. (பி.பி.சி - சிங்கள சேவை) இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால், நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும். அடுத்து வரும் இரு வாரங்களில் கொவிட் தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படகூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஏற்பட கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார். நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்? துரித மற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.