Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (ஆர்.ராம்) ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரபல்யமான எழுச்சியைக் கண்டது போன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் மீள் எழுச்சி அடைய முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வெளியுறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகரும், இராஜதந்திரியுமான கலாநிதி.தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளர். எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான உறுப்பினராக அதன் தலைவர் ரணில் விக்கிரமங்க பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது வருகையால் தற்போது பிரதான எதிர்க்கட்சியான இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடையே குழப்பமான ந…

  2. 1000 ரூபா சம்பள விவகாரம் தோட்டதொழிலாளர்கள் மீண்டும் குற்றச்சாட்டு 13 Views பெருந்தோட்டங்களில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென தொழில் திணைக்களம் அறிவித்துள்ள போதிலும் இதுவரை 700 ரூபா சம்பளமே வழங்கப்படுவதாக அக்கரப்பத்தனையிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டங்களில் கைக்காசுக்கு வேலை செய்பவர்கள் என அழைக்கப்படும் சமயாசமயத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் இதுவரை நேர்த்தியாக வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனையிலுள்ள கிரன்லி கீழ் பிரிவு, ஊட்டுவள்ளி, சின்னத்தோட்டம் உள்ளிட்ட தோட்டங்களில் தொ…

  3. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -மூதூர் பிரதேச சபை 16 Views இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மக்களே அதிகமாக வாழ்வதால் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே ஏனைய மொழிகளை பயன்படுத்த வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.துரைநாயகம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கத்தினால் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களில் அம்மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனினும் ச…

  4. இலங்கை கடல் சூழலில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்கும் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் இலங்கையின் கடல் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னும் 20 வருடங்களுக்கு நீடிக்குமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இச்சேதங்களை டொலர்களிலும் மதிப்பிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ் ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்களின், பெரிய குவியல்களை சேகரித்திருக்கிறோம்.இதில் எத்தனை மில்லியன் த…

    • 0 replies
    • 613 views
  5. நாங்கள் சாகும் வரை ஓலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா?- ஜிம்ரோன் நகர் மக்கள் கேள்வி 18 Views 15 வருடங்களாக குடிசை வீட்டில் வாழ்கின்றோம் நாங்கள் சாகும் வரை ஓலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா என மன்னார் ஜிம்ரோன் நகர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மன்னார் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜிம்ரோன் நகர் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. இளம் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த குடிசை வீட்டில் வசிப்பது பாரிய பிரச்சினையாக இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கும் பொழுது, …

  6. அரசு எமது துறை குறித்து கவனம் செலுத்துவதில்லை’ -அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் 10 Views அரசாங்கமானது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஊழியர்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. அரச வைத்திய கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியலில் தாம் சேர்க்கப்படாமை தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை இன்றைய தினம் வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பணிபுரியும் கால்நடை வைத்தியர்கள், கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் உள்ளடங்கிய பணிக…

  7. மடு மாதா அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை June 12, 2021 மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தர அனுமதி இல்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார். மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், “மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி (02-07-2021) இடம் பெற உள்ளது. இவ்வருடம் எமக்கு சுகாதார அதிகாரிகளினால் …

  8. திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு! June 12, 2021 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இராஜாங்க அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி யோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும், 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, பதவிசிறிபுர …

  9. யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. குறித்த ஆலயம் நேற்று இரவு விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் இன்றைய தினம் காலை ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று அது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்தனர். இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிள்ளையார் கோவில் விஷமிகளால் இடித்தழிப்பு - யாழில் சம்பவம் | Virakesari.lk

  10. வவுனியா பல்கலைக்கழகம்: கல்விச் சமூகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி-சத்தியலிங்கம் 33 Views கல்விச் சமூகத்தின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியே வவுனியா பல்கலைக்கழகம் என முன்னாள் வடக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் நீண்ட வருடங்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவந்த வவுனியா பூவரசங்களம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக வளாகம் ஆணி முதலாம் திகதி முதல் சுயாதீனமான பல்கலைக்கழகமாக இயங்கும் என்று அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது இதில் பல அரசியல்வாதிகள் தங்களால் தான் வவுனியா பல்கலைக்கழக வளாகம் சுயாதீன பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் கர…

  11. வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார். செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்…

    • 23 replies
    • 1.5k views
  12. இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கு நன்றி தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு நன்றி தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இருதரப்பு ம…

  13. இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilmirror Onli…

    • 1 reply
    • 426 views
  14. மெல்போர்னில்... கொரோனா கொத்தணி உருவாக, இலங்கையரிடம் இருந்து பரவிய வைரஸ் காரணம் அல்ல அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் கொரோனா கொத்தணி உருவானமைக்கு இலங்கையரிடம் இருந்து பரவிய கொரோனா வைரஸே காரணம் என கூறமுடியாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அந்தப் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேறொரு நாட்டில் இருந்து இலங்கை ஊடாக மெல்போர்ன் நகருக்குச் சென்ற ஒருவராலேயே குறித்த கொரோனா கொத்தணி உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக மருத்துவர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். http…

    • 2 replies
    • 491 views
  15. உணவு பொதியை... மிரட்டி பறித்ததாக, யாழில் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு! உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை நேற்று(வியாழக்கிழமை) இரவு சுன்னாகம் பொலிஸார் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலையே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருதனார் மடம் சந்திக்கு அருகில் சீருடையுடன், பொலிஸ் வாகனத்தில் நின்றிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸாரே இந்த உணவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “சாவகச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் உணவு பெற்றுக்கொள்ள தொலைபேசி ஊடாக பதிவு (ஓடர்) செய்துள்ளார். அவருக்கான உணவினை விநியோகம் செய்வதற்காக குறித்த உ…

  16. ஆபத்தான ‘அல்பா கொரோனா’ இலங்கையிலும் பரவல் – ஒன்பது இடங்களில் அடையாளம் 2 Views இந்தியாவில் புதிய திரிபாக மாறிவரும் பி.1.617.2 (டெல்டா) எனும் ‘அல்பா கொரோனா’ தொற்றுக்குள்ளான ஒருவர், தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர, இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட குறித்த கொரோனா தொற்றுக்குள்ளாகி, இலங்கையில் இனங்காணப்பட்ட இரண்டாவது நபர் என்றார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “இலங்கையில் கொர…

  17. கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும் 10 Views ‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார். மேலும், கொழும்பு கடல் …

  18. நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மூன்று மாதங்கள் மட்டுமே கோரியதாகவும், இருப்பினும் 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பின்னர் தனது பதவியை ஞானசார தேரரிடம் ஒப்படைக்க சம்மதித்தார் என்றும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரரின் கட்சி, மொத்தம் 67,758 வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு க…

    • 4 replies
    • 600 views
  19. கொரோனா பயணதடை – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மன்னார் மக்கள் 18 Views கொரோனாவினால் இலங்கையில் ஏற்படுத்தப் பட்டுள்ள நீண்ட பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது பசி பட்டினியை போக்குவதற்கு சேற்று நீரில் மட்டி எடுத்து உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பயண தடை நடுத்தர குடும்பங்களையே அதிகமாக பாதித்துள்ள நிலையில், ஒழுங்கான தொழில் வாய்ப்பும் இல்லாமல் அத்தியாவசி பொருட்களின் விலையேற்றத்தினால் அன்றாட தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பயணத்தடை ஒரு புறம் மக்களின் வாழ்வாதரத்தை நெருக்கி வரும் நிலையில், அதிகரித…

  20. "அஸ்ட்ராசெனகா" தடுப்பூசிகளை வாங்க, அவுஸ்ரேலியாவின் ஆதரவை கோரும் இலங்கை! அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க அவுஸ்ரேலியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. இலங்கை அரசு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து அவுஸ்ரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெய்னுடன் தொலைபேசியில் உரையாடியபோதே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்தார். மேலும் இதன்போது கொரோனா தொற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ரூ. 1,787 மில்லியன் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியமை உள்ளிட்டவற்றிக்கு அவர் நன்றி தெரிவித்தார்…

  21. கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. தினம் தினம் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் அது தொடர்பில் கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஆர். ஞானசேகரம் ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். …

  22. மட்டு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட கஜேந்திரன் எம்பிக்கு அனுமதி மறுப்பு! AdminJune 9, 2021 மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸிற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். கொரோனா வைரஸ் சூழ்நிலையை காரணம் காட்டிஅதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். மே 19 நினைவேந்தலை முன்னெடுத்தமைக்காக பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் யுவதிகள் இங்கே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புகைப்படங்களை பயன்படுத்தியமைக்காக கைதுசெய்யப…

  23. மன்னார் கடல் பகுதியில் கரை ஒதுங்கும் பேர்ல் கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்; அச்சத்தில் மீனவர்கள் கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் குறித்த பகுதிக்கு சுகாதார வைத்திய அதி…

  24. எம்.றொசாந்த் காட்டுக்குள் ஓர் ஒதுக்குப்புறமாக சென்று, காலை கடனை முடித்து விட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர் மீது இராணுவத்தினர், தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் மீது கேபிளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பன்புலவு பகுதியை சேர்ந்த ஒருவர் மீதே நேற்றைய (7) தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானவர் கருத்துரைக்கையில், உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன், வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம். “இது குறித்து பலதடவைகள் அதிகார…

  25. ஐ.நா. தொடர்ந்தும் இலங்கைக்கு உதவியை வழங்கும் – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதி ஐ.நா. தொடர்ந்தும் இலங்கைக்கு உதவியை வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதியளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் இந்த சந்திப்பில் தற்போதையை கொரோனா தொற்று நிலவரம், ரஷ்யா- இலங்கை வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. இதற்கிடையில், கொரோனா தொற்றினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ரஷ்யா அளித்த ஆதரவுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது பாராட்டுகளைத் த…

    • 1 reply
    • 480 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.