ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர் நாற்றம் காரணமாக சபை நடவடிக்கைகள் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்தாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பாராளுமன்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதேவ
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்திய மீனவர்கள் 51 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது! இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்து 51 இந்திய மீனவர்கள் மன்னார் மற்றும் பருத்தித்துறைக் கடற்பரப்புகளில் வைத்து நேற்று புதன்கிழமை இரவு சிங்களக் கடற்டையினரால் கைதுசெய்யப்பட்டனர். மன்னார் கடற்பரப்பில் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களின் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டன. பருத்தித்துறைக் கடற்பரப்பில் 21 மீனவர்கள் 72 அடி நீளமான பெரிய படகொன்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். இவர்களைக் கடற்படையினர் இன்று விடிகாலை கரைக்குக் கொண்டுவந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இன்று அந்தந்த மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவர். அதன…
-
- 3 replies
- 523 views
-
-
தாயகம் நோக்கி எம்.வி.அகத் கப்பலில் வந்துகொண்டிருந்தவேளை 16.01.1993 அன்று வங்கக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையினர் முற்றுகையிட்டு கைது செய்ய முற்பட்டவேளை கப்பலுடன் தம்மை அழித்துக்கொண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட 10 வீரவேங்ககைளினதும் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.1k views
-
-
வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளினால் வடக்கு மக்களே பாதிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இதனால் மக்களே பாதிக்கப்படுவர். நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணசபை வித்தியாசமான நிலையில் காணப்படுகின்றது. நாட்டில் துரித கதியில் நகர அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020ம் ஆண்டளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 50 வீதமான மக்கள் நகரங்களில் வாழ்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/33914/57//d,arti…
-
- 0 replies
- 405 views
-
-
8 பிள்ளைகளின் தந்தை சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்பு மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 26 திகதி முதல் காணாமல்போன 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் நேற்று புதன் கிழமை மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரனைகளை மேற்கொண்ட போதே குறித்த சடலம் மன்னார் தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து காணாமல் போன 8 பிள்ள…
-
- 0 replies
- 648 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை- ரணில் : வன்னியில் இடம்பெறும் மீள்குடியேற்றங்கள் வெற்றியளிக்கவில்லை எனவும் கிளிநொச்சியில் நாளாந்தம் 4 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண சம்பவங்கள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் முன்னர் அமைதியான நிலைமை காணப்பட்டது. அப்போது, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி சீர்குலைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் போல், கொழும்பு அல்லது கண்டியில் இடம்பெற்றிருந்தால், ஊடகங…
-
- 0 replies
- 281 views
-
-
ஊவா தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கு ஐதேக வேட்பாளர் ஹரீன் பெர்னான்டோவுக்கு! [sunday 2014-09-21 17:00] ஊவா மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னான்டோ பெற்றுள்ளார். இவர் 173,993 வாக்குகளைப் பெற்றுள்ளார், மேலும், வேலாயுதன் ருத்திரதீபன் 30,457 வாக்குகளையும், ஜயந்த கன்னங்கர 28,290 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில், அனுர விதானகமகே- 59,316, சம்பத் திஸாநாயக்க- 34,337, செந்தில் தொண்டமான்- 31,858 வாக்குகளைப் பெற்றுள்ளனர். seithy.com
-
- 0 replies
- 484 views
-
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்! கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வர்த்தகரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாக பொரளை பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர். நபரொருவருக்கு பல கோடி ரூபா கடன் தொகையொன்றை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வ…
-
-
- 124 replies
- 11.5k views
- 2 followers
-
-
மட்டக்களப்பு,அம்பாறையில் மீண்டும் அடை மழை! [ பிரசுரித்த திகதி : 2011-01-26 06:24:24 PM GMT ] அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் மீண்டும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதனால் அங்கு வெள்ள அபாய நிலை தோன்றியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் குடியிருப்புக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் சில நாள்களுக்கு முன்னரே தமது குடியிருப்புகளுக்கு திரும்பியிருந்தனர். இந்நிலையில், மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலைமை உருவாகியுள்ளது. கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட ஏனைய சில பாடசாலை வகுப்பறைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் இன்…
-
- 2 replies
- 576 views
-
-
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர். அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பார…
-
- 0 replies
- 743 views
-
-
மகிந்த ராஜபக்சேவுக்கு புற்று நோய்? [ பிரசுரித்த திகதி : 2011-01-31 11:24:30 AM GMT ] இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை புற்று நோய் தாக்கியிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து எந்த மறுப்பும் உறுதிப்படுத்தலும் இல்லை. ராஜபக்சே கடந்த சில மாதங்களாவே சுகவீனமுற்றிருப்பதாகவும், கல்லீரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
16 எம்.பி.க்களில் சிலர் மட்டுமே பங்கேற்பு சு.க.வின் மேடையில் ஏறிய வரதராஜப்பெருமாள் (ஆர்.யசி) பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவும் ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் பங்கேற்றிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் பங்கேற்பதாக வாக்குறுதியளித்தும் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இருந்தபோதிலும் ரணில் எதிர்ப்பு குழுவின் முக்கியஸ்தர் எஸ்.பி. திசாநாயக்க இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று …
-
- 0 replies
- 333 views
-
-
-
- 0 replies
- 784 views
-
-
மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்! மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆறு ஆளுந…
-
- 3 replies
- 667 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டிருந்த பொலிஸார் மீது விசாரணை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸார் தொடர்பாக பொலிஸ் தலைமையக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை இப்பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியொருவரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையக உயர் பொலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
படையினரை வெளியேற்றும் அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வெளியிட வேண்டும்! - யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை. [sunday 2014-10-12 08:00] தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களிலிருந்து படையினரை உடனடியாக வெளியேற்றி, எதிர்காலத்தில் சிவில் விவகாரங்களில் படையினர் தலையீடு செய்யமாட்டார்கள் என்ற அறிவிப்பை நாளை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி வெளியிட வேண்டும். என யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வரும்போது நாம் எதிர்பார்ப்பது என்ன? போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் இன்னமும் எந்த ஒ…
-
- 0 replies
- 400 views
-
-
சிறிலங்கா அதிபர் ஈரான் செல்வதைத் தடுக்க முனைந்தது யார்? தாம் தெஹ்ரானுக்கு வருவதை ‘அவர்கள்’ தடுக்க முனைந்தார்கள் என்று , சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தம்முடன் ஈரானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர், தெஹ்ரானில் உள்ள விடுதியில் ஓய்வாக இருந்த போதே ஊடகவியலாளர்களிடமே இதனைக் கூறினார். எனினும், தமக்கு அழுத்தம் கொடுத்தது கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திரிகளா, உள்ளூர் அதிகாரிகளா அல்லவலது இருதரப்பினருமா என்பதை அவர் வெளியிடவில்லை. “எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இது தான் முதல் தடவை அல்ல. எமது நாடு இறைமையுள்ள நாடு. நாட்டுக்கு எது நல்…
-
- 2 replies
- 378 views
-
-
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு. யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அம…
-
- 6 replies
- 505 views
-
-
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சிகைளை தற்போது இருக்கும் அரசாங்கம் இழுத்தடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில் :- ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கிய பொதியொன்றினை தயார் செய்து வருகிறது. அப் பொதி மக்கள் மத்தியில் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும். யாழ் மக்களுக்கு மகேஸ்வரன் செய்ய வேண்டும் என எண்ணிய அனைத்தையும் படிப்படியான தற்போது ஐக்கிய தேசிய கட்சி முன…
-
- 0 replies
- 537 views
-
-
“எதையும் உணராதவர்களாக வாளா மடந்தைகளாக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.” வன்னியிலுள்ள வறிய மாணவர்களுக்கான ஈருருளி வண்டிகள் வழங்கல் நிகழ்வு… இன்றைய தினம் ‘அறம் செய் அறக்கட்டளை’ அமைப்பினூடாக புலம்பெயர்வாழ் உறவுகளின் அனுசரணையுடன் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நீண்டதூரம் நடந்துசென்று கல்வி பயிலுகின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கான ஈருருளி வண்டிகள் வழங்குகின்ற இந்த நல்ல வைபவத்தில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் பேருவகை அடைகின்றேன். இந்த நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற கடுமையான யுத்தத்தின் விளைவாக இப் பகுதிகளில் வாழ்ந்துவ…
-
- 1 reply
- 430 views
-
-
யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்துள்ளது. யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் தமிழரசுக் கட்சிக்குள் பலத்த போட்டி JaffnaIllankai Tamil Arasu KachchiMavai SenathirajahS Shritharan in இலங் யாழ் மாநகர சபையில் முதல்வர் தெரிவு யாழ் மாநகர சபையில் ஜனவரி 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று இடம் பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு …
-
- 0 replies
- 984 views
- 1 follower
-
-
கடத்திச் சென்றபோது தப்பிஓடிய இளைஞர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொலை. கல்முனை- பாண்டிருப்பில் இளைஞர் ஒருவர் கருணாகுழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் பாண்டிருப்பு காளிகோவிலடியைச் சேர்ந்த தங்கராஜா காந்தன் (வயது16) என்ற இளைஞனே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இச்சம்பம் நேற்று இரவு 9.00மணியளவில் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது - கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அரசியல் துறை அலுவலகத்திலிருந்து 2மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் நால்வர் வீட்டுக்குள் நுழைந்து ஆயுதமுனையில் குடும்பத்தினரை அச்சுறுத்தி இவரைக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர். பாண்டிருப்பு -எல்லைவீதி வழியாக இவரைக் கடத்திக்கொண்டு சென்றப…
-
- 0 replies
- 1k views
-
-
ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்.. வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:38 பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கப்டன் பிரபாகரன் மன்னிக்க கப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள். இந்த மூன்று பேரும் பார்வதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
நல்லூரில் உள்ள சங்கிலியன் அரண்மனைக்கு உரிமை கோரும் சிங்களவர்! [Wednesday 2014-10-22 07:00] நல்லூரில், அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை தனது பரம்பரைச் சொத்து என்றும் அதனை மீட்டுத் தருமாறு கோரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார். அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான் தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலியன் …
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் இந்த உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகளும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர். இது அமெரிக்க- சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களாகும். இந்தப் பேச்சுக்களில் ஓடுபாதை நடவடிக்கைகள், …
-
- 0 replies
- 171 views
-