Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - வாசன். 03 ஜூன் 2011 ஏன் இந்த பழிவாங்குதல்? - சீமான் எதிர்காலம் என்ன? சீமான் பழிவாங்கப்படுகிறாரா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -வாசன். சீமானின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அவர் மீது திருமணமோசடி, பாலியல் மோசடி, பெண் வதை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகளை சென்னை போலீஸ் பதிவு செய்திருக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் போலீசார் செய்திகளை ஊடகங்களுக்கு கசிய விடும் அதே நேரத்தில் அவர் எங்கும் தலைமறைவாகவில்லை. நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோர முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. நேற்றைய முன் தினம் விஜயலெட்சுமி என்னும் நடிகை சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீமான் தன்னை காதலித்து ஏமாற்…

  2. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ´ரத்னா லங்கா´ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுத களஞ்சியம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த களஞ்சிய அறையில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் அனுமதி இன்றி ஆயுதம் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சிய அறையில் இருந்து பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/37124/57//d,article_full.aspx

    • 2 replies
    • 1.2k views
  3. நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர். தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=21553

  4. திருகோணமலையில் தமது தளமொன்றை நிறுவுவதற்காக யுத்தத்தை நீடிக்கவும் தீவிரப்படுத்துவதற்குமான அமெரிக்காவின் முயற்சிப்பது குறித்து இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்திருந்ததாக மின் சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கூறியுள்ளார். பிலியந்தலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 23.03.1986 ஆம் திகதி இந்தியாவின் த வீக் சஞ்சிகையில் வெளியான பிரபாகரனின் செவ்வியின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். "அமெரிக்காவின் நோக்கமானது இனப்பிரச்சினையை நிலைத்திருக்கவும் தீவிரப்படுத்தவும் செய்வதாகவும். இதன் மூலம் அது இத்தீவில் கால்பதிக்கவும் தனது தளம…

  5. தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 29/06/2010 அன்பான தமிழ் பேசும் மக்களே! இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்ற அதேவேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது. எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர். சர்வதேச ரீதியாக எழுந…

  6. தற்கொலை குண்டுதாரியின் படத்தை காண்பித்து தேடுதல் நடத்திய காவல்துறையினர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெள்ளவத்தை பகுதியில் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கும் பெண்ணொருவரின் படத்தை காண்பித்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி எனக்கூறப்படும் பெண்ணின் படத்தை காண்பித்தே வெள்ளவத்தை காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடத்தியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தையில் உள்ள வீடுகள், தொடர்மாடிகள் ஆகியவற்றிற்கு சென்ற காவல்துறையினர் மக்களிடம் குறித்த பெண்ணின் படத்தை மாத்திரம் காண்பித்து இவரை தெரியுமா எனக்கேட்டுள்ளனர். கறுப்பு- வெள்ளை படம…

    • 1 reply
    • 1.2k views
  7. இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் தமது முன்னரங்க நிலைகளை நோக்கி அதிகளவான படையினரையும் கவச வாகனங்களையும் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாண கரையோர பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டமும் நீடிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. யாழ்ப்பாண நகருக்கு மாத்திரம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலதிக துருப்பினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில், பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வு நிறுவனங்களின் வாகனங்களும் பாதைகளில் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வாகனங்கள் பாதைகளில் செல்லும்போது ஏனைய வாகனங…

    • 0 replies
    • 1.2k views
  8. புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா? - ஈழநாடு கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்! இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி அவலங்கள் உச்சக்கட்டத்தை எட்டிய பொழுது புலம்பெயர் தேசங்களில் உறக்கம் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் போர்க் குரல் எழுப்பியவாறு புலிக் கொடிகளோடு வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். உலகம் வியக்கும் வகையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் ‘நாங்கள் புலிகள்’ என்று அறிக்கையிட்டார்கள். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பை உலகுக்கு அம்பலப்படுத்தி…

  9. இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கூறியிருப்பதை அந்த நாட்டின் அரசாங்கமும், அகதிகளுக்காக குரல்கொடுப்பவர்களும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். [size=3]இலங்கை அகதிகள் ஆஸ்திரேலிய சட்ட முறைமைக்குள் வருவதற்கு முன்னதாகவே, அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஏதுவாக, இலங்கை அரசாங்கத்துடன் ஆஸ்திரேலியா ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி கூட்டமைப்பு கூறியுள்ளது.[/size] [size=3]பல இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்கள், பொருளாதார நோக்கில் குடியேறுபவர்கள்தான், அவர்கள் அகதிகள் அல்ல என்று எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஜூலி பிசப் கூறியுள்ளார்.…

    • 5 replies
    • 1.2k views
  10. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் “கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்” அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு” ஆதரவு திரட்டும் மற்றொரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்த…

    • 19 replies
    • 1.2k views
  11. புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண ! Feb 20, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண , விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையும், அதன் உப அமைப்பும், நாடு கடந்த அரசும் மற்றும், மக்களவையும் இணைந்து பாரிய பரப்புரைகளை இலங்கைக்கு எதிராக ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே , தேசிய தல…

    • 21 replies
    • 1.2k views
  12. நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள் முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்து சமய அலுவல்கள் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்…

    • 6 replies
    • 1.2k views
  13. சிறிலங்காவின் வடக்கு - கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் - அமெரிக்கா அறிவிப்பு [ புதன்கிழமை, 21 ஏப்ரல் 2010, 10:08 GMT புதினப்பலககை] [ கி.வேணி ] சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID]. சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செ…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.swissmurasam.net/srilanka/14961...7-14-40-00.html

    • 1 reply
    • 1.2k views
  15. குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை! இரா. இளையசெல்வன் இலங்கை தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அவருடன் அரசியல் ரீதியாக மல்லுக்கட்டும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது' என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதிபருக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகளும் பகையும் அதிகரித்திருக்கும் சூழலில், இருவரும் ஒரே வித…

    • 2 replies
    • 1.2k views
  16. செவ்வாய் 19-06-2007 15:19 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் கப்பம் கேட்கும் காவல்துறை யாழ்ப்பாண மருத்துவமனையில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் பொது மக்களிடம் கப்பம் கேட்டு துன்புறுத்திவருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவமனையில் வளாகத்தில் ஒரு காவல்துறை நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது குறிப்பிட்ட காவல் நிலையம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படும் திடீர் மரணங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் கூடிய காணம் அடைந்தவர்களின் நலனுக்காக இந்த காவல் துறை நிலையம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் கூட தற்போது யாழ் குடா நாட்டில் இடம் பெறும் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் மற்றும் தற்கொலைகள்…

  17. ------------------------------------------------------------------------------------------------------------------------------------

    • 1 reply
    • 1.2k views
  18. சர்வதேச தலையீடு தேவையென ஆயர் டுட்டு கூறியமைக்கு இலங்கை கவலை ஐ.நா. மனித உரிமைப் பேரவை அங்கத்தவர்களிடம் இலங்கையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டுமென நினைப்பதாக தென்னாபிரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் டெஸ்மண்ட் டுட்டு கூறியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஆழமான விளக்கமும், மிகுந்த ஆராய்வும் தேவையான இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்கள் தலையிட வேண்டுமென நீங்கள் கருதுவது மனவருத்தத்துக்கு உரியதாகும் என ஆயர் டுட்டுவுக்கு எழுதிய கடிதத்தில் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் விடயங்கள் பற்றி நாம் சர்வதேசத்துக்கு விளக்கமளித்து வருகின்றோம். அண்மையில் நாம் தொடங்கிய…

  19. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா, இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் 1942 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் இந்தியா பற்றிய சுதந்திர இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்று டி.எஸ்.சேனநாயக்காவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார். 'விரும்பியோ விரும்பாமலோ (றுடைடல-Nடைடல) இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் இந்தியா பக்கம்தான் அமையமுடியும்" என்பதே. ஆனால், அவர் 1948 இல் சுதந்திரமடைந்த இலங்கையின் முதலாவது பிரதமரான போது இந்தியாவிற்குப் பாதகமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரித்தானிய அரசுடன் செய்து கொண்டார். அதன்படி இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானிய கடற்படைத்தளமும், கட்ட…

    • 3 replies
    • 1.2k views
  20. இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியது பாரிய தவறு - இந்திய எதிர்க்கட்சி இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது காந்தி குடும்பத்தின் பாரிய தவறு என, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி தமது குடும்பத்தவர் எதையாவது சாதிக்க நினைத்தால் அதை அடைந்தே தீருவார்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது இந்திய தேசத்தின் சுதந்திரமாக இருந்தால் என்ன, பாகிஸ்தானை இரண்டாக பிரித்;து விடுவதாக இருந்தால் என்ன, இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்குள் இட்ட…

    • 2 replies
    • 1.2k views
  21. கொழும்பு - யாழ் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பதற்கு சீனா உதவி கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு சீனா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது . யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் சீனா நிதி உதவி வழங்கவுள்ளது. ஏற்கனவே வடக்கின் புகையிரத பாதை நிர்மாணப் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்க…

    • 0 replies
    • 1.2k views
  22. மென்ரோநீக்குரோ பிரகடனமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் களநிலைமைகளில் கடந்த வாரத்தில் இருந்து கடுமையான நெருக்கடிநிலை தோன்றியுள்ளது. வரவு-செலவுத்திட்டம் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அரசின் கூட்டணிக் கட்சியாக விளங்கிய ஜே.வி.பி. அதனை எதிர்த்து வாக்களித்தமை தென்னிலங்கையில் கடுமையான அரசியல் குழப்பங்களை தோற்றுவித்துள்ளது. அரசைக் கவிழ்க்க ஜே.வி.பி. முனைகின்றதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது, எனினும் அரசைக் கவிழ்க்கும் எண்ணம் ஜே.வி.பிக்கு இருந்திருக்குமாக இருந்தால் அது தனது முடிவை வாக்கெடுப்பிற்கு முன்னராக அறிவித்து அதற்கான ஆதரவுகளை திரட்டுவதற்கு முனைந்திருக்கும். எனவே அரசை தக்க வைத்தபடி தனது சுய அரசியல் இ…

  23.  சோமவன்ச அமரசிங்க காலமானார் மக்கள் விடுதலை முன்னணின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, இன்று புதன்கிழமை (15) ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது. - See more at: http://www.tamilmirror.lk/174723/ச-மவன-ச-அமரச-ங-க-க-லம-ன-ர-#sthash.IS4b1Nl6.dpuf

    • 13 replies
    • 1.2k views
  24. உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார். அப்போது சஹ்ரான், தேசிய தௌஹ…

    • 4 replies
    • 1.2k views
  25. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றுகையில் இடையூறு (Video) inShare மட்டக்களப்பு, வாழைச்சேனை, கண்ணகிபுரம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜயானந்த மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். லண்டனில் தமக்கு வாழ்வதற்கான சகல வசதிகளும் உரிமைகளும் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனும் நோக்கிலேயே மீண்டும் நாட்டிற்குத் திரும்பி வந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார். இவரையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவ…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.