ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தண்டனை பெற்ற 16 கைதிகளுக்கு இலங்கை அரசாங்கம் மன்னிப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும், கடுமையான சட்டத்தை இரத்து செய்வதற்கான அவசரத் தேவையை இலங்கை அரசாங்கம் நிவர்த்தி செய்யவில்லை என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நீண்டகாலமாக சித்திரவதை மூலம் பெறப்பட்ட தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் இது முதன்மையாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரின் உறுப்பினர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஒரு ப…
-
- 0 replies
- 374 views
-
-
சீனக் கட்சியின் நினைவு விழா – நாணயம் வெளியிடும் இலங்கை 19 Views சீன பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலங்கை அரசு சிறப்பு நாணயம் ஒன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விடயங்களை மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதுள்ளார் ஆனால் மேலதிக தகவல்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார். வெளிநாடுகளின் நினைவுதினம் தொடர்பில் இலங்கை அரசு நாணயங்களை வெளியிடும் போதும், வெளிநாட்டு அரசியல் கட்சியின் விழாவுக்காக நாயணத்தை இலங்கை அரசு வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். சீனாவின் மத்திய வங்கியும் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த …
-
- 7 replies
- 698 views
-
-
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் ! யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவினால் அமைக்கட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு நேற்று (27.06.2021) மாலை சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது யாழ் இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், இராஜாங்க அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/108331
-
- 13 replies
- 810 views
-
-
குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு June 17, 2021 சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நா…
-
- 64 replies
- 4.6k views
-
-
சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு! சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1225567
-
- 0 replies
- 402 views
-
-
ஜேர்மனி... போன்ற, மேற்கத்திய நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி சேதனப் பசளை பயன்பாட்டுக்கு ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) மாலை அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார். அந்த நாடுகளில் நடத்தப்படும் சேதனப் பசளை பயன்படுத்தியதான விவசாயத்தின் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதனால் இந்த நாடுகள் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக கூறினார். நாட்டில் தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் சில அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் இந்த பருவத்திற்கான உரங்களின் பற்றாக்குறை குறித்து பிரச்சினையில் தலையிட்டு தீர்வை காணவேண்டும் என ஜனாதிபதி அம…
-
- 0 replies
- 358 views
-
-
அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ! குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். மார்ச் 09 ஆம் திகதி ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, மார்ச் மாதம் 16 ஆம் திகதி அசாத் சாலி கைது செய்யப்பட்டமை குற…
-
- 0 replies
- 274 views
-
-
“தாயகம் நோக்கிய பயணம்“ புத்தகத்தை மொழிபெயர்த்த முன்னாள் போராளி அருளாளன் இயற்கை எய்தினார் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் (அருளாளன், குழல்) இன்று காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று அவர் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர். போர்க்காலத்தில் 82 நூல்களை மொழிபெயர்ப்புச் செய்த பெருமைக்குரியவராக யோசெப் விளங்கியுள்ளார். போர்க்காலத்தில் வன்னியில் வெளிவந்திருந்த ஈழநாடு, ஈழநாதம் பத்திரிகைகளிலும் ஆதாரம், வெளிச்சம் சஞ்சிசைகளிலும் புலம்பெயர் இணையத்தளங்களிலும் அவருடைய…
-
- 8 replies
- 1.1k views
-
-
விடுதலையான 16 பேரில் ஒருவர் கூட கிழக்கில் இல்லை !பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக விலக்கப்பட வேண்டும்! SayanolipavanJune 28, 2021 (வி.ரி.சகாதேவராஜா)1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.அச்சட்டத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) வேண்டுகோள்விடுத்துள்ளார்.கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக இலங்கை தமிழர்தரப்பில் பேசுபொருளாகவிருந்துவந்த தமிழ்அரசியல்கைதிகளின் விடுதலை விவகாரம் கடந்தவாரம் ஒரு முக்கிய கட்டத்தையடைந்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனா சமகால நிலைவர…
-
- 1 reply
- 388 views
-
-
கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும்: இந்தியத் தூதுவரிடம் டக்ளஸ் தேவானந்தா.! பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேர்ள் கப்பல் விபத்து, மற்றும் கொரோனா முடக்கம் போன்றவற்றினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செய்பாடுகளும் கடற்றொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரினால் இந்தியத் தூதுவரிற்கு எடுத்துக் கூற…
-
- 2 replies
- 341 views
-
-
மனித உரிமை விவகாரம் – சீனாவுக்கு ஆதரவாக இலங்கை June 27, 2021 சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. சீனாவின் நிராகரிப்புக்கு இலங்கை ஆதரவு அளித்துள்ளது. தற்போது இடம்பெறும் 47 ஆவது கூட்டத்தொடரிலேயே இந்த கோரிக்கை பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, யப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 40 இற்கு மேற்பட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சீனா அதனை நிராகரித்துள்ளது. சீனாவின் மேற்கு மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கான கல்வி மற்றும் தொழில் பயிற்சி முகாம்களே உள்ளதாக அது தெரிவித்துள்ளது. சீனாவிற்கு ஆதரவாக இலங்க…
-
- 3 replies
- 652 views
-
-
யாழில் 23 கோடி ரூபா செலவில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு யாழ். வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்…
-
- 0 replies
- 364 views
-
-
இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் – ஹிருணிகா வேதனை தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்- மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.நாங்கள் எங்கள் பாதுகாப்பு குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றோம் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர்ஜனாதிபதி எங்களை நரகத்தை நோக்கி அழைத்துச்செல்கின்றார் என தெரிவித்து நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் அவர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 974 views
-
-
மட்டக்களப்பு – பாலியல் இலஞ்சம் பெற முயற்சிக்கும் அரச அதிகாரிகள் June 27, 2021 தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அரச அதிகாரிகள் சிலர் பெண்கள் மீது பாலியல் சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பெண்னொருவரின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வில்வரெட்னம் கடந்த திங்கட்கிழமை உடனடி இடமாற்றமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பிரத…
-
- 2 replies
- 326 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கால எல்லை தொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும் -கெஃபே அமைப்பு 6 Views உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண் டும் என கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். அண்மையில் மார்ச் 12 இயக்கத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த zoom தொழில் நுட்ப கலந்துரையாடர், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற செயற்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதேபோன்று அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க மற்றும் அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரு…
-
- 0 replies
- 223 views
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். யாழில் விடுதி ஒன்று முற்றுகை! 6 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 22 replies
- 1.2k views
-
-
கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப் பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்தி எனும் தொனிப்பொருள் இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான 23 ஏக்கர் பண்ணையில் பயிர் செய்கைகள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி என்பன இடம்பெறவுள்ள இடத்தினை அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைசர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வைய…
-
- 0 replies
- 217 views
-
-
நீரோடைக்குள் பாய்ந்த இராணுவ வாகனம்! இரு இராணுவத்தினர் பலி – 4 பேர் படுகாயம் மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி நீரோடை ஒன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனம் கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்ற இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். …
-
- 16 replies
- 837 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின்.... முன்னாள் உறுப்பினர்கள் உட்பட, 93 கைதிகள் விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாம…
-
- 47 replies
- 2.3k views
-
-
விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக பசில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் எம்.பி.யாக பதவியேற்ற பின்னர் அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பில். நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பசில் ராஜபக்ஷ ஜூலை 6 ஆம் திகதி எம்.பி.யாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அறியமுடிகின்றது. பசில் ராஜபக்ஷவுக்கு இடமளிப்பதற்காக ரஞ்சித் பண்டாரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/வரவல-பரளமனற-உறபபனரக-பசல/175-274957
-
- 1 reply
- 463 views
-
-
ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு June 26, 2021 “சர்வதேச சூழலிலேயே எமக்கு சார்பான பல விடயங்களுக்காக வல்லரசு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இவ்வேளையில் நாம் ஒருமித்த நிலைப்பாட்டில் அரசியல் விடயங்களை தாயகப் பரப்பில் கையாள்வதன் மூலம் சாதகமான உள்ளக அரசியல் சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்த முடியும்” எனச் சுட்டிக் காட்டியுள்ள ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநான், இது குறித்து நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ள மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளார். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்த் தே…
-
- 0 replies
- 383 views
-
-
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு – நாடாளுமன்றில் குழப்பம்! எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாராத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
-
- 1 reply
- 206 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. எனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில்; நான் வெற்றி பெற்ற பின்னர் என்னிடம் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதற்காகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் மக்களிடம் காண்பிக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாட்டுக்கான எனது கொள்கையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த 69 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டுமென்பதாகவே க…
-
- 5 replies
- 500 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பாராளுமன்றில் விடுத்த சவாலை வெற்றிக் கொண்டுள்ளோம். சவாலில் தோல்வியடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே அதன்படி நடந்துக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படும் சிறை கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்திற்கான தீர்வு, காணி விடுவிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான தீர்வு எதிர்வரும் மாதம் தொடக்கம் சாதகமான முறையில் வழங்கப்படும். ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடற்ற வகையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்வது எமது பிரதான இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தா…
-
- 1 reply
- 236 views
-
-
16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக சுமந்திரன் அவர்கள். தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்படவிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதி இது. இலங்கையின் கடந்த கால செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று ம. உ. ஆணையாளர் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கின்றன. GSP+ வரிச்சலுகை கேள்விக்குள்ளாகி உள்ளது. முன்னதாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தந்தையிடமும் சித்தப்பாவிடமும் நேரடியாகப் பேச முடியாத நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கிறார். அதற்குத் தானே காரணம் என்று அரச தரப்பு சுரேன் ராகவன் உரிமை கோருகிறார். அதனைத் தாங்க முடியாத ச…
-
- 3 replies
- 673 views
-