Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் - சுரேன் ராகவன்! By கிருசாயிதன் June 23, 2021 பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழ் அரசியல் கைதிகள் குறித்த விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். "ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான். பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். ” என்றார். http://www.battinews.co…

    • 3 replies
    • 788 views
  2. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் வழங்கப்படாதமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் குற்றம் சுமத்தியதுடன், தமிழ் மொழியை அரச மொழியாக அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொண்டும் இன்றுவரை எமது மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் ஆவேசப்பட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சுமந்திரனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தவறுக்கு மன்னிப்புக்கேட்பதாக அறிவித்ததுடன் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, சிறப்புரிமை பிரச்சினை ஒன்…

    • 3 replies
    • 455 views
  3. முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதே…

  4. சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரக…

  5. (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் விரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார். நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின…

  6. யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்கள் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊ…

  7. ஜெனிவா தீர்மானத்தில் முன்னேற்றம் இல்லை – இலங்கை குறித்த பிரதான நாடுகளின் குழு June 23, 2021 “ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திலுள்ள முக்கியமான விடயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகளின் குழு கவலை தெரிவித்திருக்கின்றது. கனடா, ஜேர்மனி, பிரிட்டன், வட மசிடோனியா, மலாவி, மொன்ரிகுறோ ஆகிய நாடுகளின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும், சிறுபான்மை மதத்தவர்கள் உள்ளிட்டவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதன் 46/1 தீர்மானம் இலங்கையைக் கோரியிருந்தது. மார்ச் மாத …

  8. கனகராசா சரவணன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. இராஜா…

  9. பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. June 23, 2021 செவ்வாய்க்கிழமை (22-06-2021) நாடாளுமன்றில் தமிழர் தரப்பின் குரலாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்ச 22-06-2021 பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையில், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் லாபங்களுக்கு பாவிக்காதீர்கள் எனத் தெரிவித்தார். …

  10. பிள்ளையான் போன்று, அண்மையில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் – சாணக்கியன் பேஸ்புக் பதிவின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், இந்த இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்து பேசிய இரா.சாணக்கியன், பயங்கரவாத தடைச்சட்ட…

  11. (நா.தனுஜா) இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின்போது, பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டிணைவு (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு), இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பு (அயோரா) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த இருதரப்புக் கலந்துரையாடல் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடல் சிறப்பானதாக அமைந்தது. இதன்போது இருதரப்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்தோடு பிம்ஸ்டெக், …

  12. கடலுணவு விற்பனை அமைச்சர் டக்ளஸ் முட்டுக்கட்டை – தம்பட்டி கடற்தொழிலாளர்கள் விசனம்! June 22, 2021 “நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய முடியாதுள்ளது” என தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் சார்பில் சிவநேசபிள்ளை சிவச்செல்வன், சந்திரன் ரவிவர்மன் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது, “நாங்கள் எங்களுடைய சுய விருப்பின் பெயரில் கடலுணவுகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு…

    • 1 reply
    • 314 views
  13. பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள்... நல்லிணக்கத்தை முன்னெடுக்காது – மிச்சேல் பெச்சலட் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து 300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களை தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விசாரணையின்றி, இரண்டு ஆண்டுகள் வரை மக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்க பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் அனுமதிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போதே ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் இதனைத் தெரிவித்தார். மேலும்…

  14. கொரோனா இறப்பு குறித்த குற்றச்சாட்டு: தொற்றுநோயியல் பிரிவு மீது விசாரணை ! கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தொற்றுநோயியல் பிரிவு மீது சுகாதார அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இறப்புக்கள் தொடர்பான குறைபாடுகள் காரணமாக அவற்றை சரிசெய்யும் நோக்கத்துடன் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு அதிகாரியின் தரப்பிலும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார். இந்த பிரச்சினையை அடுத்து முன்னாள் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர அந்த அடிப்படைய…

  15. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்க…

  16. சீன பிரஜையுடன் இணைந்து... போலி கடன் அட்டை மூலம் பண மோசடி செய்த கும்பல் கைது போலி கடன் அட்டையை பயன்படுத்தி பண மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சீன பிரஜையுடன் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்லைனில் பொருட்கள் வழங்கும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர்கள் ஒன்லைன் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை முன்பதிவு செய்ததாகவும் பின்னர் கட்டணம் வசூலிக்கச் சென்றபோது அந்த அட்டைகளில் பணம் இல்லை என தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்ப…

  17. தொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் இருவர் கைது தொண்டமனாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய சந்தேகநபர் இருவர், கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்களிடம் இருந்து 174 கிலோ கிராம், கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1224066

  18. ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன. மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் …

    • 8 replies
    • 784 views
  19. காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கான புதிய நியமனங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் கவலை 39 Views இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடை சட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டு…

  20. யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்…

  21. கடந்த ஒருமாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது. அத்தோடு, மதுபான நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது. எவ்வாறாயினும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக் கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெயில் படாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று உழைப்பாளர் தின பேரணியில் பங்கேற்பது போன்று வரிசையில் சென்று மது…

  22. (எம்.மனோசித்ரா) கொழும்பு, மாதிவெல பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மாதிரியொன்று அசாதாரணமான தன்மையுடையதாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மாதிரி மரபணு பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அசாதாரண தன்மையுடையதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மாதிரியில் டெல்டா வைரஸ் இனங்காணப்படலாம். அல்லது வேறொரு நிலைமாறிய வைரஸ் இனங்காணப்படலாம். எதிர்பாராத விதமாக புதியதொரு வைரஸாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்படும் பகுதிகள் தொடர்பில் மி…

  23. அரசாங்க தகவல் நிலையத்தின் தமிழ் மொழிக் கொலை கண்டிக்கத் தக்கது – விக்னேஸ்வரன் 15 Views அண்மையில், கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம் பெற்றுள்ளதாகவும் இதனை திருத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் தென்னிலங்கையின் தமிழ்பெயர்கள் முழுக்க முழுக்க எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் …

  24. பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து யாழ் நகரில் குவிந்த மக்கள் கூட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்குப்பின் இன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை காணக்கூடியதாகவுள்ளது. இதேவேளை யாழ் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவ…

  25. மீண்டும் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு- கருணாகரம் ஜனா 20 Views மேய்ச்சல் தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். இன்றைய தினம் பாரம்பரிய மேய்ச்சற்தரைப் பிரதேசமாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினை சம்மந்தமான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் முகமாக மேற்கொண்ட பணயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.