Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அங்கொட லொக்காவுடன் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு உறுப்பினருக்கு தொடர்பு!! சென்னையில் கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சத்குணம் என்கிற சபேசன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சபேசன் கைது செய்யப்பட்டிருந்தார். கோவையில் மாறுவேடத்தில் இருந்த அங்கொட லொக்காவின் மரணம் மற்றும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் சபேசன் உள்ளிட்ட மூவரை கைது …

  2. யாழில் மக்களை ஏமாற்றியதற்காக தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - மக்கள் சூழுரை யாழ் குடா நாட்டுக்கான மகிந்தவின் பயணத்தை ஒட்டி நடாத்தப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கு மக்களை திரட்டும் முகமாக பல பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் மகிந்தவின் வரவை ஒட்டி அரசியல் லாபம் தேடும் ஒரு சில தமிழ் ஒட்டுக்குழுக்கள் மக்களை ஒன்று திரட்டி மகிந்தவின் மனதை குளிர்விக்க எண்ணிய போதும் அவர்கள் எண்ணியவாறு மக்களை திரட்ட முடியவில்லை. இதையடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என சிறீலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மகிந்த மீண்டும் அவர்களின் பிரதேசங்களுக்கு அழைத்து செல்வார் எனவும் அதற்கான தயார்ப்படுத்தல்க…

    • 3 replies
    • 1.3k views
  3. குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானம் குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.newswire.lk/wp-content/uploads/2022/01/download-53.jpeg விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அல்-ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குவைத் ஏயார்வேஸ் கடந்த செப்டம்பரில் இலங்கைக்கான தனது நடவடிக்கைகளை உ…

  4. தாய்லாந்து பாங்கொக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த யூ.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூ…

  5. -யு.நாதன் மாதகல் சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் 25 அடி உயரமான சிவபெருமான் சிலையொன்று நிரமாணிக்கப்பட்டு வருகின்றது. அந்த ஊர் மக்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தச் சிலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதுடன், அதற்கான வர்ணம் பூசும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விரைவில் இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/--main/93986-25-.html

  6. வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இரண்டு தமிழ் இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இடப்பக்க கைகளில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தமிழ் இராணுவத்தினரும் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வெட்டுச் சம்பவம் ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் மேலதிக தகவல் எவையும் இன்னமும் கிடைக்கப்பெற்றவில்லை எனவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?_fromLogin=1

  7. தன்னால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் ஆர்.விஜயலக்ஸ்மிக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை விசாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, சிறிலங்கா காவற்துறையிடம் கோரியதையடுத்து ஆளுநருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளது. "சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழிக்கும் நோக்குடன் முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதி ஒருவரைத் தனது தரகராக நியமித்துள்ளது" என முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 அன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போதும் பின்னர் டிசம்பர் 21 அன்று சர்வோதயப் பணியாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போத…

  8. கச்சதீவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம் – மகேசன் கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா தொடர்பில் ஊடகவியாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பக்கட்ட கூட்டத்திலேயே சுகாதார நிலைமை…

    • 2 replies
    • 322 views
  9. வன்னியில் இயங்கும் சிறுவர் இல்லங்களின் சிறுவர்களுக்கான புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று புதன்கிழமை (01.01.14) நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். இவற்றில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், விருந்தினர்களாக நீடோ நிறுவனத் தலைவர் செல்வராசா பத்மநாதன் (கே.பி. - குமரன் பத்மநாதன்), முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ம.கணேசராஜா, ஒட்டுசுட்டான் பிரதேச சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் எஸ்.இந்திரகுமார், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.குமரன், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர்…

  10. இந்தியாவின் புத்தகயா உள்ளிட்டவற்றுக்கு தல யாத்திரை செல்வோர் மூலம் கோயில்களில் மத வழிபாட்டு தலங்களில் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமார் 20 தொன் இலங்கை நாணயக் குற்றிகளை இலங்கைக்கு திரும்பவும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான அடியார்கள் தல யாத்திரை சென்று புத்தகயா மற்றும் அறுபடை வீடு, மற்றும் ஏனைய மாநிலங்களிலுள்ள திருத்தலங்களுக்கும் சென்று வழிபடுவதுடன் காணிக்கையாக இலங்கை நாணயக் குற்றிகளையும் இடுகின்றனர். இவை சுமார் 10 முதல் 20 தொன் வரையில் இருக்கலாம் என மத்திய வங்கி கணிப்பீடு செய்துள்ளது. இந்த இலங்கை நாணயக் குற்றிகளை இலங்கைக்கு திரும்பவும் கொண்டு வந்து புழக்கத்தில் விடுவதற்கு…

  11. யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா.? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இறுதி யுத்தகாலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் இராணுவத்திடம் இல்லை எனில் யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா? பன்னாட்டு இராணுவம் நாட்டில் இருந்தால் காணாமல் போனவர்களின் பட்டியலை அவர்களிடம் ஒப்படைத்து தேடி பார்க்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். அத்துடன் இராணுவ தளபதிகள் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள நிலையில் இராணுவம் ஒரு குற்றமும் இழைக்கவில்லை என்றால் இராணுவ தளபதிகள் தாங்க…

  12. இறுதிப்போரின் பின்னர் காணாமல் போன ஒவ்வொருவரும் பற்றி தனித்தனியான விசாரணையினை தேவை, அது மிககடினமாக இருந்தாலும் அவ்வாறான விசாரணைகள் அவசியம் ! போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் சுதந்திரபுரம், புதுமாத்தளன் உள்ளிட்ட சில இடங்களில் சூட்டுத் தவிர்ப்பு வலயங்களை அறிவித் திருந்தது. இவற்றில் பெருமளவான மக்கள் மிக நம்பிக்கையுடன் தஞ்சமடைந்திருந்தார்கள். ஆனா ல் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் கூறும் காரணம் புலிகள் அந்தப் பகுதியில் நின்றார்கள் என்பதே. அத்தகைய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கமே சூட்டுத்தவிர்ப்பு வலயங்களை அறிவித்திருந்தது. எனவே மக்கள் அதற்குள் தஞ்சமடைகையில் புலிகள் அதற்குள் இருந்தார்கள் என்பதற்காக ஒரு சில புலிக…

  13. திருமலையில் நில அதிர்வு தீஷான் அஹமட் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், திங்கட்கிழமை இரவு 8.45 அளவில் சத்தத்துடன் சிறியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த அதிர்வு 3 விநாடிகள் அளவில் உணரப்பட்டது. இந்நிள அதிர்வின் மூலம் சில வீடுகளில் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளன. எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. நிள அதிர்வின் பயத்தினால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளுக்க வந்ததை அவதானிக்க முடிந்தது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருமலையில்-நிள-அதிர்வு/75-203623

  14. 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் : கடும் நிபந்தனையை விதித்த இந்தியா ! இலங்கை அரசாங்கம் கோரிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அறிய முடிகின்றது. அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக் கொண்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்து செய்யப்பட…

    • 5 replies
    • 540 views
  15. பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் 'மே 18 இயக்கம்' ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது. அன்பார்ந்த தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் நாம் நிறைய விடயங்களை மனம் திறந்து பேசியாக வேண்டியுள்ளது. அந்த நோக்கில் நான் உரையாற்றுவது என்பதைவிட ஒரு விரிவான உரையாடலின் தொடக…

  16. புலம்பெயர் இலங்கையர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை - வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (எம்.எம்.சில்வெஸ்டர்) வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. இலங்கையில் முதலீடு செய்வதற்கு எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெறுவதற்காக வருகின்ற தமிழ் பேசும் சமூகத்தினர் இனிவரும் காலங்களில் எந்தவித இடையூறுகளுமின்றி தமிழ் மொழி மூலமான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் கூறினார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக்கொள்வதற்காக பொலிஸ் பயி…

    • 2 replies
    • 345 views
  17. திருகோணமலையில் சம்பந்தனை தோற்கடிக்க அரசு திட்டம்! . .பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் இரா.சம்பந்தனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவற்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தமிழ…

    • 8 replies
    • 1.4k views
  18. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பிலான செயன்முறைகளுக்கு தடையாக அமைந்துள்ளது. ஏனெனில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் குழு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் விபரங்கள் 2031ம் ஆண்டு வரையில் இரகசியமாகப் பேணப்பட உள்ளது. இதனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி தாரூஸ்மான் தலைமையிலான …

  19. கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக ஒரு சிங்களவரே வரவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், மஹ்மூத் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்தெரிவிக்கையில், கிழக்கு மாகாணம் கிழக்கில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இங்கு முதலில் சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தார். இப்பொழுது நசீர் அகமட் எனும் முஸ்லிம் இனத்தவர் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்ததாக ஒரு சிங்களவர் முதலமைச்சராக வரவேண்டுமெனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=79187

  20. ஏழு பேர் கொண்ட இந்திய குழுவொன்று இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த குழுவினர் இன்று காலை 11மணியளவில் இந்திய தூதரக அலுவலகத்தில் இந்திய துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்தை சந்தித்து கலந்துரையாடினர். யாழிற்கு வருகை தந்த குழுவில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா மேத்தா, இந்திய வெளி விவகார அமைச்சின் மேலதிக செயலாளரின் நிதி ஆலோசகர் பினய் குமார், இந்திய வெளிவிவகார அமைச்சின் இயக்குனர் அனுராக் சிறிவஸ்ரவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கீழ் செயலாளர். ஜோன் மாய், இந்திய சிவில் பொறியியல் ஆலோசகர் மன்மோகன் வர்மா,அகமதாபாத் கட்டட ஆலோசகர் சா கீர்த்தி நட்வர்லால் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் மோகன் ஆகியோர் அடங்குகின்றனர். மேலும் இந்த உ…

  21. கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபிலவு இராணுவ முகாம்களிலிருந்து படையினர் தற்போது வௌியேறிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 64 பேருக்கு சொந்தமான காணியே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். முகாம்களிலிருந்து படையினர் முழுமையாக வௌியேறியதன் பின்னர் கேப்பாப்பிலவு பகுதியிலுள்ள காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக…

  22. ஓவியமொன்றுக்காக பல மில்லியனை வாரி இறைத்த அரசியல் வாரிசு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள அதேவேளை, தமது அத்தியாவசியப் பொருள்களுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், இலங்கை அரசியல்வாதியொவரின் மகனால் ஒவியம் ஒன்று, அதி கூடிடிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 மில்லியன் ரூபாய்க்கு குறித்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள இணயைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அரசியல்வாதியின் மகனால், இலங்கையின் பிரபல செல்வந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஓவியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் …

    • 0 replies
    • 519 views
  23. வெளிநாட்டுக் கடற்படையினருக்கு இலங்கைக் கடற்படை திருகோணமலையில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. பாகிஸ்தான், சீனா, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 கடற்படையினர் இந்தப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இந்த விசேட பயிற்சி மூன்று மாதங்களுக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விசேட பயிற்சியில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=102948&category=TamilNews&language=tamil

  24. இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்த…

  25. பிரதமர் மஹிந்த, தொடர்ந்தும்... பதவியில் நீடிப்பார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 49 ஆவது பிரிவிற்கு அமைய, பிரதமர் பதவி விலகவில்லை என்றால் உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கலைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1274649

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.