ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
Friday, June 10, 2011, 0:46சிறீலங்கா கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம், தர்மபுரம் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நேற்றிரவு பாரிய தேடுதல் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்ட இந்தப் பிரதேசங்களில் வெளி மாட்டங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் குடியேறியுள்ளனரா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காகவே படையினர் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. குடும்ப விபரங்களை அறிந்து கொண்ட படையினர் புதியவர்கள் எவரையும் வீட்டில் வைத்திருக்க வேண்டாம் என்றும் வீடு வாடகைக்கு கொடுப்பதாயின் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்…
-
- 0 replies
- 487 views
-
-
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி இலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதை கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை என, கூட்டு எதிரணி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில் “முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பூர்விகமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஜானகபுர, கல்யாணபுர என்ற பிரதேசத்தில் உள்ள 450 சிங்கள குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அம்மாவட்ட…
-
- 0 replies
- 621 views
-
-
Posted by இரும்பொறை on 14/06/2011 in செய்தி நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வழிமறித்து அவரது கழுத்தில் இருந்த 4 பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற சம்பவம் உடுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது: கடந்த புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் உடுப்பிட்டி வீரபத்திரர் கோயில் வடக்கு வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கே.ஜெயரட்ணம் என்பவரின் தங்கச்சங்கிலியே இவ்வாறு அறுக்கப்பட்டதாகும். கோயில் வடக்கு வீதி வழியாக தமது வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மறித…
-
- 0 replies
- 519 views
-
-
கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்களை -வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு!! வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அனுமதி இல்லாமல் வாடியமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டவர்களை வெளியேற்றும் உத்தரவை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இவர்களுக்கு எதிராக பிதேச செயலகத்தால் போடப்பட்ட வழக்குகளுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/10/கடலட்டை-தொழிலில்-ஈடுபடுபவர்களை-வெளியேற்ற-நீதிமன்றம்-உத்தரவு.html
-
- 0 replies
- 365 views
-
-
யாழ்ப்பாண பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்: இமெல்டா சுகுமார்! பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 19 ஜூன், 2011 யாழ். மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பிரதான காரணம் இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிவதுதான் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களிடமும் ஒழுக்கம் கிடையாது என அவர் தெரிவித்தார். கடந்த எட்டு வருடங்களாக நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றியிருந்தேன். நான் அங்கு கடமையாற்றிய காலத்தில் இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் காணப்படவில்லை. வன்னியில் காணப்பட்ட ஒழுக்கம் தற்போது யாழ்ப்பாணத்தில…
-
- 8 replies
- 1.7k views
-
-
ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்! [ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:18.25 PM GMT ] லங்காசிறி யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட நெடுந்தீவு பகுதிக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலமையிலான குழு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் மக்கள் வீதிகளில் கும்பங்கள் வைத்து வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தபடி முதலமைச்சர் தலைமையிலான குழுவை வரவேற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டிலேயே இக்குழுவினர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர். வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று…
-
- 5 replies
- 1k views
-
-
''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ன கூறி வருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று (14.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கூறிள்ளதாவது, கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார். நம்பத் தயார் இல்லை தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆ…
-
- 6 replies
- 503 views
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரச்சாரத்தால் சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது அராசாங்கத்தை வெட்கப்பட வைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசார நடவடிக்கைக்குத் தாம் ஆதரவு வழங்குவதாக விடுதலைப் புலிகள் அமைப்புக் கூறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் முயற்சி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முறியடிக்கப்பட்டதாம் 23 ஜூன் 2011 திவயின கூறுகிறது http://youtu.be/BuKfXwP0pGk http://youtu.be/qQ7ga6q9Er8 http://youtu.be/TM0gwe6botA வெளிநாட்டு தூதுவர்கள் மத்தியில் செனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோ படத்தை திரையிட்டு, இலங்கை இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டது என உறுதிப்படுத்துவதற்காக மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு என்பனவும் கொலைக்களம் வீடியோ படத்தை தயாரித்த இயக்குனர் கெல்லம் மெக்ரே ஆகிய தரப்பினர் மேற்கொண்ட முயற்சி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முறியடிக்கப்ப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை பரீட்சிக்கும் பலப்பரீட்சையாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என இன்றைய தினம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள், அடக்குமுறைகளை தடுக்க அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உள்…
-
- 0 replies
- 295 views
-
-
ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சியில் பணிபுரிகின்ற பிராந்திய தொலைக்காட்சி ஒள்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள ந்லையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ள்பபட்ட குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்றிருக்கொண்டிருந்த போது திருநகர் சுடலை வீதியில் அரசியல் கட்சி ஒன்றின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் …
-
- 0 replies
- 443 views
-
-
காத்தான்குடி கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (22) மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடம் ஏற்ப்பட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE 1) தகுதியை கொண்ட M.M. கலாவுதீன் நியமிக்கப்பட…
-
- 0 replies
- 180 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் குழு விரைவில் வன்னி செல்லும்! வன்னி மக்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வன்னி செல்லத் திட்டமிட்டுள்ளது. இந்த வாரத்தில் இந்த விஜயத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க இக்குழுவைப் பணித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொள் வர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விஜயத்திற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஜயலத் ஜயவர்த்தன தெ…
-
- 1 reply
- 730 views
-
-
அல்பிரட் துரையப்பா காலம் போல் யாழ், நிலை மீண்டும் ஏற்பட வேண்டுமாம்: தமிழ் மக்களுக்கு இன்று நல்லதொரு காலம் பிறந்துள்ளது என்கிறார் அமைச்சர் சுசில் [sunday, 2011-07-03 19:54:41] 1976 ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி எந்த நிலையில் வட மாகாணத்தில் இருந்ததோ அந்த நிலை மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட வேண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த மறைந்த அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகவும் இருந்தார்.அந்த நிலமை யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஏற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிறேம் ஜயந்த குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்டக்கிளை இன்று பிற்பகல் 4.00 மணியளவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
10 AUG, 2023 | 11:42 AM யாழ்ப்பாணத்தில் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவனின் முக நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு ஆசிரியர் முகத்தில் கைகளால் அறைந்துள்ளார். அதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் மாணவனை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, மாணவனின் முகத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டமை வைத்தியர்களால் கண்டறியப்பட்டு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வைத்தியசாலை ஊடாக …
-
- 4 replies
- 759 views
- 1 follower
-
-
கொழும்பில் நேற்றிரவு கடும் மின்னலால் நான்கு இடங்களில் தீ விபத்துகள் [26 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பில் நேற்று புதன்கிழமை இரவு மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்குதலால் நான்கு இடங்களில் தீ விபத்துச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். வீடுகள் மூன்றிலும் கடையொன்றிலுமே இத்தத் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன் தீயணைப்பு படையினர் உடன் அந்த இடங்களுக்குச் சென்று தீயை கட்டுப்பதுத்தியுள்ளனர். கொழும்பு புஞ்சி பொரளை, கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளிலேயே மின் ஒழுக்கு காரணமாக வீடுகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. பஞ்சிகாவத்தையில் கடையொன்று தீப் பற்றி எரிந்துள்ளது. இந்த நான்கு சம்பவங்களும் மழை பெய்து கொண…
-
- 0 replies
- 1.2k views
-
-
[Thursday, 2011-07-07 18:25:14] இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் சீனா முதலிடம் பெற்றுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்தமாக 1,385 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான புதிய கடன்களை இலங்கை பெற்றுள்ளது. இதில் சீனாவிடம் இருந்து மட்டும், 759.8 மில்லியன் ஐ.அ.டொலர் (மொத்த கடனில் 55%) பெறுமதியான கடன் பெற்றுக் கொண்டதாக நிதி திட்டமிடல் அமைச்சு வெளியிட்டள்ள நடு ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேகாலத்தில் 413.4 மில்லியன் ஐ.அ.டொலரை வழங்கிய (30%) ஐப்பான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது தவிர உலக வங்கி ($.105.8m), ஆசிய அபிவிருத்தி வங்கி ($.89.2m), ஐ.நா. நிறுவனங்கள் ($.8.8m), இதர கடன் வழங்கும் முகவர்கள் ($.208.8m)…
-
- 2 replies
- 739 views
-
-
சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம் FEB 17, 2015 | 13:31by கார்வண்ணன்in செய்திகள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பெண் பேச்சாளர், ஹுவா சுன்யிங்கிடம், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவும் இந்தியாவும், சீனாவின் மிக முக்கியமான அயல் நாடுகள். அமைதி மற்றும் செழுமைக்கு மூலோபாய ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு இந்…
-
- 0 replies
- 397 views
-
-
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு ! இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 77 ஆயிரத்து 552 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது பாரிய அதிகரிப்பாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 65 ஆயிரத்து 612 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததுடன் கடந்த மாதத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 39 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர். அத்துடன் பிரித்தானி…
-
- 0 replies
- 296 views
-
-
விமான தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பி.யும் ,ஹெல உறுமயவும் மௌனம் காப்பது ஏன்? நாட்டில் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏன் மௌனமாக இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விடுதலைப்புலிகள் நான்காவது தடவையாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டனர். ஆனால், அரசாங்கத்தினால் எந்தவொரு தாக்குதல்களையும் முறியடிக்க முடியவில்லை. புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதும் அரசாங்கம் அப்பகுதியில் மி…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாகக் கூறப்படுகிறது. http://www.tamil.srilankamirror.com/news/item/1728-2015-02-23-01-02-24
-
- 0 replies
- 333 views
-
-
நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும் – ஐ.தே.க எச்சரிக்கை! எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை. வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் சதித்திட்டம் இருப்பதாகவே எமக்கு தோ…
-
- 0 replies
- 395 views
-
-
லண்டனுக்குச் செல்கிறார் மைத்திரி – மகிந்தவுக்கு கிடைக்காத வரவேற்புக்கு மகாராணி ஏற்பாடு FEB 28, 2015 | 0:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் லண்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் மார்ச் 7ம் நாள் பிரித்தானியா செல்லும் சிறிலங்கா அதிபர், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறும், கொமன்வெல்த் வார கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளார். சிறிலங்கா அதிபரே கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, தனிப்பட்ட பார்வையாளராகச் சந்திக்க பிரித்தானிய மகாராணி இணக்கம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் ஒர…
-
- 11 replies
- 1.1k views
-
-
மஹிந்தவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது – ரணில் திடமான நம்பிக்கை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாயின் அதனை நாடாளுமன்றத்தால் மாத்திரமே செய்ய முடியும். அதுவே 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிபிடப…
-
- 1 reply
- 478 views
-
-
அமெரிக்கா, பிரித்தானியா திடீர் கரிசனை உள்நோக்கம் என்ன? ] வான் புலிகளை எப்படிச் சமாளிப்பதென்பது தெரியாது இலங்கை அரசு தடுமாறுகிறது. இதுவரை வான் புலிகளை எதுவுமே செய்ய முடியாத நிலையில் இனி என்ன செய்வதெனக் குழப்பமடைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெறும் அதேநேரம், வான்புலிகளுக்கெதிராக சர்வதேசத்தின் கவனத்தையும் திருப்ப இலங்கை அரசு முயல்கிறது. வான் புலிகளின் அச்சுறுத்தலால் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இரவு நேரங்களில் இழுத்து மூடப்படுகிறது. இலங்கை வான்பரப்பை பாதுகாக்கும் ஆற்றலை விமானப் படையினர் இழந்துவிட்டதால் வான்புலிகளின் அச்சுறுத்தலுக்கு அரசு அடிபணியும் நிலையேற்பட்டுள்ளது. விமானப் படை விமானங்களால் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீச முடிக…
-
- 8 replies
- 2.9k views
-