ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வரலாறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக ச…
-
- 12 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற 76 வயது முதியவர் கடத்தல் 12th May, 2011 பிரித்தானியாவில் இருந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் பிரித்தானிய கடவுச்சீட்டில் இலங்கைக்கு சென்ற 76 வயது உடைய தமிழ் முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் இலங்கை சர்வதேச விமான நிலையாத்தை குவைத் நாட்டு விமானத்தில் சென்றடையந்த தமிழ் முதியவர் இன்றுவரை விமான நிலையத்திற்கு வெளியே வரவில்லை என தெரிய வருகிறது. இவரை கூட்டிவருவதற்கு சென்ற குடும்பம் ஏமாற்றத்துடன் இலங்கையில் வீடு திரும்பி உள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக இலங்கை குடிவரவு திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த முதியவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகாரிகளின் பரிசோதகைன முடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
"பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ச அரசின் இந்த படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியம…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார் ஈபிடிபியின் செயலரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. ‘ஏசியன் ரிபியூன்‘ இணையத்தளத்தின ஆசிரியருக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் சிறிலங்காவினதும், அதன் படைவீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் பான் கீ மூனால் ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘. இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் மூலம் பான் கீ மூன் ஐ.நாவின் வளங்களையும…
-
- 0 replies
- 1.2k views
-
-
பலாலி படைத்தளம் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல். விடுதலைப்புலிகளின் பீரங்கிபடையணியிரால் பலாலி இராணுவ முகாம் மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளம் என்பவற்றின் மீது கடுமையான எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. புலிகளின் அச்செட்டான எறிகணைவீச்சில் படையினர் தரப்பில் பாரிய உயிர்சேதம் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இத் தாக்குதலை அடுத்து பலாலி கொழும்பிற்கு இடையிலான விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது நன்றி பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் வியூகத்தைத் தகர்த்தெறிந்த வான்புலிகள் [புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [க.நித்தியா] தமிழீழ வான் புலிகளின் பறப்பைக் கட்டுப்படுத்தவும் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கவும் சிறிலங்கா அரசாங்கப் படைகள் செயற்படுத்தி வந்த திட்டங்களை வான்புலிகள் முற்றாக முறியடித்துள்ளனர். வான்புலிகள் மீண்டுமொரு தாக்குதல் நடத்தினால் சிங்களப் படைகளினதும், சிங்கள மக்களினதும் மனோநிலை மாற்றமடைந்து விடும் என்ற காரணத்தினாலும், அனைத்துலக மட்டத்தில் விடுதலைப் புலிகளிற்கான பலமான பிரச்சாரமாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலும், வான்புலிகளின் வானூர்திகள், அவற்றின் தளங்களிலிருந்து இரவு நேரங்களில் பறப்புக்களை மேற்கொள்ள விடாது பல முற்காப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அண்மையில் வாகன விபத்தில் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீபதி சூரியாராச்சியின் நண்பர்களை சிறிலங்கா காவல்துறையினர் அடையாளம் கண்டு பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
வகுப்பறையில் இருக்க வேண்டிய சிறார் பேக்கரி முன் காத்து நிற்கும் அவலம் -கண்ணீருடன் விபரித்தார் சிவநேசன் எம்.பி. இந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால், யாழ். குடாநாட்டிலுள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக காலையில் கடைகளுக்கு முன்பாகவும் பேக்கரிகளுக்கு முன்பாகவும் வரிசையில் நிற்கும் மிகப் பெரும் அவலத்தையே இன்றைய யுத்த சூழல் தோற்றுவித்துள்ளது என்று கூறியவாறு தன்னையே மறந்து கண்ணீர் விட்டழுதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன். வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்.. வெள்ளிக்கிழமை, 25 பிப்ரவரி 2011 14:38 பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கப்டன் பிரபாகரன் மன்னிக்க கப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை. பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்… இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா.. ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள். இந்த மூன்று பேரும் பார்வதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான தயா ரத்நாயக்க கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியாளர்களுடன் நாட்டை முன்னேற்றுவது என்பது கஷ்டமான காரியம் என்பதால், முழு நாட்டையும் விற்பனை செய்து விடுவது நல்லது எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.tamilwin.com/politics/01/267611?ref=home-latest
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted on : 2008-08-15 தமிழ் - சிங்கள தேசியங்கள் சுட்டமண்; இனி அவை ஒட்டுமா? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகக் கூறி யிருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிப திக்கு அடுத்து அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட வருமான கோத்தபாய ராஜபக்ஷ. செயன்முறையில் தமக்குள்ள நேர்மையை சாதித்துள்ள போதிலும், அது பற்றிய பிரசாரத்தில் தாம் துரதிஷ்ட வசமாகத் தோற்றுவிட்டோம் என்கிறார் அவர். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையோ, அதிகாரப் பகிர்வை…
-
- 2 replies
- 1.2k views
-
-
வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தல் - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 13 னுநஉநஅடிநச 2006 14:09 வெளிநாடுகளிலிருந்து அண்மைக் காலத்தில் 293 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அரசியல் தஞ்சம் கோரியவர்கள், போலி விசாக்கள் மூலம் நாடுகளுக்குள் ஊடுருவியவர்கள், சட்டவிரோத மார்க்கங்கள் ஊடாக சென்றவர்கள், குறிப்பிட்ட நாடுகளின் சட்ட திட்டங்களை மீறியவர்கள் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து 57 பேரும் ஜப்பானிலிருந்து 50 பேரும் சிங்கப்பூரிலிருந்து 42 பேரும் ஏனையோர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனி 10-11-2007 20:58 மணி தமிழீழம் [மயூரன்] மண்டேலாவின் பண்புகள் போல் சு.ப.தமிழ்ச்செல்வன் செயற்பட்டார் - அவுஸ்ரேலிய மருத்துவர் நெல்சன் மண்டேலாவின் பண்புகளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொண்டிருந்ததாக அவுஸ்திரேலிய மருத்துவர் புகழாரம் சூட்டியுள்ளார். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலிய மருத்துவர் (John Whitehall) ஜோன் வைற்ஹோல் காழ்ப்புணர்வும், வெறுப்புணர்வும், இன்றி அனைத்து மக்களின் நலன்களிலும் விருப்பத்துடனும், பற்றுறுதியுடனும், நெல்சன் மண்டேலாவைப் போன்ற பண்புகளுடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் செயறப்பட்டதாக கூறியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு வன்னிக்கு பயணம் செய்த மருத்துவர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்? -நம்முள் கவீரன்- நண்பர் ஒருவர் எனக்கு தந்துதவிய எங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற பிரசுரமொன்றில் 1947 தொடக்கம் 1994 வரையிலான காலகட்டத்தில் பதவியேற்ற வெவ்வேறு அமைச்சர் அவைகளில் இடம்பெற்ற மந்திரிமார்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. அவற்றுள் இடம்பெறும் தமிழ் அமைச்சர்களின் விபரங்களை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1947 - 1952 டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சர் அவை (04.02.1948 - 30.03.1952) சி.சிற்றம்பலம் - தபால், தொலைத் தொடர்பு அமைச்சர். சி.சுந்தரலிங்கம் - வணிக, வியாபார அமைச்சர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் - (1948 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் இருந்து) தொழிற்துறை, தொழிற்துறை ஆராய்ச்சி, மீன்…
-
- 2 replies
- 1.2k views
-
-
02/07/2009, 11:19 [செய்தியாளர் கயல்விழி] பசில் ராஜபக்ச சர்சைக்குரிய இந்தோனேசிய ஆச்செ மாநிலத்தில் சிறீலங்கா அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ச இந்தோனேசியாவின் சர்ச்சை மிகுந்த சுயாட்சி கொண்ட ஆச்சே மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆச்சே மாநிலத்தின் அதிகாரப் பகிர்வு, மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் பற்றி கேட்டறியும் நோக்கில் இவரது பயணம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கை போன்று ஆச்சே மாநிலமும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்டு சுனாமி ஆழிப்பேரலையில் பாரிய அழிவைச் சந்தித்திருந்தது. ஆச்சே சென்ற பசில் ராஜபக்ச, அந்த மாநிலத்தின் ஆளுனர் “இர்வாடி யூசுப்பினை” சந்தித்து பேசியதுடன், சுயாட்சித் தீர்வுகள் பற்றி கற்றுக்கொள்ள ஆச்சே சிறந்த இடம் எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் சாதாரண பையை கொண்டு சென்றுள்ளார். பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் மாணவனின் பாடசாலை பை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாணவனிடம், எத்தனை தடவை சொல்வது கண்ணாடி பாக் கொண்டு வர தெரியாதா என பாடசாலை சமூகம் வினவியுள்ளதுடன், மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை கழற்றி வீசியுள்ளனர். மாணவனின் தந்தை நடக்க முடியாதவர் என்பதினால், …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (2) ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்: கொரியா ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
எனக்கும் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களின் பதிவுகள்: பழ.நெடுமாறன் [காணொளி] பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயாநகர் தியாகராயார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கும் சகோதரர் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய தங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்புரையினை முனைவர் த.செயராமன் நிகழ்த்த வரவேற்புரையினை செ.ப.முத்தமிழ் மணி நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமையுரையினை உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் நிகழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை சென்றிருக்கும் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிங்டன் குழுவினர் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கின்றனர். ஹிலாரி கிளிங்டனுடன் ஈழத்தமிழர் விடயம், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் முதல்வர் பேசுவார் என அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன. இதே வேளை ஹிலாரி கிளிங்டனை இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்ற வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்க வேண்டாம் எனவும் அது பிரிவினை வாதத்துடன் தொடர்பு பட்டது என்றும் இலங்கையில் நல்லிணக்கத்தினை பாதிக்கும் எனவும் சிவசங்கர் மேனன் குழுவினர் கூறியதாக டில்லி ஊடகவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இன்றைய சந்திப்பு பற்றி ஊடக தணிப்பு இடம்பெறலாம் எனவும் கூறப்படுகின்றது. Bookmark/Search this post wit…
-
- 11 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த இளம் முஸ்லீம் பெண் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர் 25 அகவையுடைய ஆப்தீன் ஹில்மியா எனத் தெரியவருகிறது. இவரது கணவர் மீன்வியாபார நிமித்தம் கொழும்பு சென்றபோதே இனம்தெரியாதவர்கள் இப்படுகொலையை மேற்கொண்டதாக தெரியவருகிறது. -Pathivu.
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதற்காக உயிராபத்து ஏற்படப்போவதில்லை என அந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேசமயம், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப ஒரு உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது. இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமிடத்து ஓஷன்லேடி, எம்.வி. சன்சீ ஆகிய கப்பல்களில் வந்தோருக்கு இது பாதகமாக அமையும். ஆனால் இந்தப் புதிய வழிகா…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிராயச்சித்தம் செய்யுமா பிரிட்டன்? இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளுக்கு இடையே சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத் துடன் பிரிட்டனில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் உயர்நிலை முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் உத் தேச மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக் கிடைக்க முன்னரே இந்த மாநாடு குறித்து பேச்சுகள் அடிபடும் ஆரம்ப நிலையிலேயே இத்தகைய முடிவை முந்திக் கொண்டு கொழும்பு விடுக்கும் என்று எண்ணப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதற்கென தனக்கென தனியான இராணுவத் தீர்வை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சி நிரல் ஒன்றை வகுத்து, அதன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பின் கைதுகள் தமிழர்களை வெளியேற்றவே -வேலவன்- கொழும்பில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் பெரும்மெடுப்பில் ஆரம்பமாகிவிட்டன. கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்களை விரட்டி அடிப்பதான ராஜபக்ச சகோதரர்களின் திட்டத்தின் மற்றுமொரு வழிமுறை இப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது. கொழும்பில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்வது சிங்கள இனவாதிகளுக்கு என்றுமே பிடித்த மானதாக இருந்ததில்லை. அதிலும் இலங்கையிலிருந்தே தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட முயற்சி எடுத்து வருகையில் சிறிலங்காவின் தலைநகரில் தமிழ் மக்களின் செறிவு அதிகரிப்பதை அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ளமுடியும்?. ஆனால் கொழும்பில் தமிழ் மக்களின் செறிவைக் கட்டுப்படுத்த எடுக்கும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அடுத்தகட்டமாக இந்தியாவின் மாநில முதல்வர்களை வசப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவின் மாநில முதல்வர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். http://www.puthinapp...?20120508106151
-
- 1 reply
- 1.2k views
-