Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை, முற்றுகையிட்டு... போராட்டம்! பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மே 9 கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கோ கோட்டா ஜெய்ல்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை களைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1286308

    • 5 replies
    • 434 views
  2. மாதிரி திட்டம் முன்வைக்கப்படாது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமில்லை – விஜித ஹேரத் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் முதலில் மாதிரி யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் எனவும், அதன் பிறகே ஏனைய அரசியல் கட்சிகளுடன்ஆலோசனை நடத்த வேண்டுமென ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விரும்பினால், எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் ஆளும் கட்சியே முதலில் தெரிவிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் மாதிh யோசனைத் திட்டமொன்றை பிரேரித்தால் அதனை அடிப…

  3. சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும் தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளா­கிய நாங்­கள் தமிழ் பேசு­கின்­ற­வர்­க­ளாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட சிறு­பான்மை இனங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்­கான பொது­வான பிரச்­சி­னை­க­ளைத் தட்­டிக்­கேட்­கின்ற தைரி­யத்­து­டன் முன் செல்­ல­வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்­தார் வவு­னியா மாவட்ட இலங்­கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யின் தலை­வ­ரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம். வவு­னியா மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே சிறப்புச் சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­ கொண்டு கருத்­துத் த…

  4. (எம்.மனோசித்ரா) இந்திய சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டு பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இன்று (14) செவ்வாய்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அடுத்த வருடத்தில் 8 இலட்சம் சுற்றுலாத்துறையினரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு எதிர்பார்ப்பதோடு , அதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெறக் கூடும் மதிப்பிடப்பட்டுள்ளதாக இதன் போது தெரிவித்தது. எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை…

  5. அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் - ராஜித சேனாரத்ன ! kugenJune 19, 2022 அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய நிலையில் தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே தற்போது உள்ள ஒரே தீர்வு எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது, அவர்களின் தொழிற்துறைக்கு ஏற்படுத்தப்படும் இழுக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்…

  6. லண்டனில் இருந்து 400 கிலோமீற்றர்களுக்கு மேற்பட்ட தூரம் நடந்து பரிஸ் நகரைச் சென்றடைந்துள்ள சிவந்தன், இன்று 11வது நாளில் லாக்கூர்னோவ், ஒபவில்லியே, பரிஸ் நகரசபைகள் ஊடாக தனது நடை பயணத்தை தொடருகின்றார். நேற்று செவ்றோனைச் சென்றடைந்திருந்த சிவந்தன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்காக நகரசபையால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அக வணக்கம் செலுத்தியதுடன், அங்கு நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்துகொண்டிருந்தார். இன்று காலை அதே இடத்தில் இடம்பெற்ற அக வணக்கத்தைத் தொடர்ந்து சிவந்தனும், பொதுமக்களும் லாக்கூர்னோவ் நோக்கி நடந்து செல்வதுடன், பின்னர் அங்கிருந்து ஒபவில்லியே செல்லவுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2:30 மணியளவில் பரிஸ் நகரசபையை அவர் சென்றடைந்தது…

    • 0 replies
    • 633 views
  7. இலங்கையுடன் நியூஸிலாந்து புதிய வான்வெளி ஒப்பந்தம் news நியூஸிலாந்து இலங்கை உட்பட 14 நாடுகளுடன் புதிய வான்வெளி ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளது. இலங்கையை தவிர பின்லாந்து சவூதி எத்தியோப்பியா ஷம்பியா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. இதனையடுத்து நியூஸிலாந்தின் வர்த்தகத்துக்கு பாரிய வழி திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கெரி பிரௌன்லி தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி. எல் பீரிஸுடன் செய்துக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி நியூஸிலாந்தின் நேரடி விமானங்கள் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 08 மே 2014, வியாழன் 10:00 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php…

  8. இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பி…

  9. இலங்கையில் போருக்கு பிந்திய மீழ் கட்டுமானம் தொடர்பில் இந்திய வெளியுறவு செயலர் நிருபாமா கலைஞர் கருணா நிதியை சந்தித்து பேசியுள்ளார் 45 நிமிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வருகின்ர கிழமை நாட்களில் இரு உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பிலேயே பேசியதாக குறப்படுகின்றது. இருவரை அனுப்புவது தொடர்பில் பேசினார்களா? அல்லது அனுப்பிய பின்னர் எப்படி அறிக்கை விடுவோம்? அதிகாரிகள் திரும்பி வந்த பின்னர் எப்படி அறிக்கை விடப்போகின்றோம் என்பது தொடர்பில் பேசினார்களா? Eelanatham.net

  10. மே 18 - ஒரு முகம் தெரியாத நண்பனின் கடிதம்! [Tuesday, 2014-05-13 20:11:49] "தம்பி மகளுக்கு சாமத்தியச் சடங்கு செய்யிறம்! கட்டாயம் வரவேணும்!" என்று மறுமுனையில் இருந்து வந்த மாமியாரின் அழைப்பிற்கு செவிசாய்த்தவனிற்கு மே 18 ஞாயிற்றுக்கிழமைதான் அந்தச் சாமத்தியச்சடங்கு என்ற அவவின் அடுத்த வார்த்தையில் காத்திருந்தது அதிர்ச்சி. "மாமி! மே 18 தானோ? திகதியை வடிவாச்சொல்லுங்கோ?" என்றவனிற்கு "ஓம் தம்பி! மறவாமல் வந்திடு!" என்று வந்தது பதில். "என்ன மாமி சொல்லுறியள்..? ஞாபகம் இல்லையோ.? "என்றவனிற்கு "இல்லைத்தம்பி.! வயசு போகப் போக எல்லாம் மறக்குது" என்று பதில் வந்தது. "மே 18 முள்ளிவாய்க்கால்.." என்று சொல்லி முடிப்பதற்குள் "அப்பிடி எண்டால்..? என்ன தம்பி..?" என்ற மாமியாரின் வார்த்தையில் குண்டு…

  11. மூன்றில் இரண்டு பெரும்­பான்மை சபை­களை ஐ.தே.க. கைப்­பற்றும் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வரவு, செலவுத்திட்டம் வெற்றி பெற்­றது போல ஐக்­கிய தேசிய கட்சி உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லிலும் நாட்டின் மூன்றில் இரண்டு சபை­க­ளையும் கைப்­பற்­று­வது நிச்­சயம். அதற்கு முக்­கிய கார­ண­மாக மீண்டும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட உள்­ள­தையும் குறிப்­பி­டலாம் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வ­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார். இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்­ணனின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியில் இருந்து…

  12. விட்டுக்கொடுப்பு! சுவிற்சர்லாந்தில் ஜெனீவா நகரில் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிலோ அன்றி ஒஸ்லோவிலோ நடத்தக்கூடாது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத சுவிற்;சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஜே.வி.பி எதிர்க்காது என்பதே ஜெனீவா பேச்சுவார்த்தை குறித்து ஜே.வி.பி.யின் தற்போதைய நிலைப்பாடாகும். வேறொரு விதத்தில் கூறுவதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கம் போட்ட நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துள்ளது போன்றும் அரசாங்கத்திற்கு இவ் வெற்றியானது ஜே.வி.பி அரசாங்கத்தின் மீது போட்ட அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது என்பது போன்றதுமே ஜே.வி.பி.யின் நிலையாகக் கொள்ளத்தக்கது. …

  13. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் வெளியேறினார் –தமிழரசுக்கட்சியில் கடும் அதிர்ப்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்துசெயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். தமிழரசுக்கட்சிக்காக 1965ஆம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றிவந்ததாகவும் இன்று தன்னை அந்த கட்சி புறந்தள்ளிவருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப…

  14. ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு! மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்…

    • 33 replies
    • 4.9k views
  15. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எ திர்கட்சியின் முன்னாள் தலைவியாக இருந்த போது வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இவர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடாளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார். அதே போன்று மலையத்தில் வாழும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய நிதிதிட்டம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/112520-2014-05-30-13…

  16. தமிழ் மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு துரி­த­க­தியில் தீர்­வு­காண முய­ல­வேண்டும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வா­னது தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­திலும் அன்று ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை அறிந்­தி­ருந்தும் கூட அதற்கு தீர்­வு­காண இத­ய­சுத்­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­க­வில்லை. இதனால் யுத்­தத்தில் பெரும் அழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் சுமந்து வாழ­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. …

  17. உகண்டாவில்... எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி. உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , 13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம். இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் ச…

  18. இன்று வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்று இலங்கைக்கு வருகின்றார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே இந்த விஜயமானது ஆக்கப்பூர்வமானதாகவும் இரு தரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமையும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். அதே போன்று பிரதம…

  19. இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்! (newuthayan.com)

    • 13 replies
    • 608 views
  20. இலங்கையில் நடந்த யுத்தக் குற்றம் விசாரிக்க நீதிமன்றம் அவசியம் - அமெரிக்கப் பல்கலைக்கழகம் வலியுறுத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:19:56| யாழ்ப்பாணம்] இலங்கை தொடர்பில் யுத்தக் குற்ற விசாரணை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் வா´ங்க னைத் தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம் கோரிக்கை முன்வைத்துள்ளது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள இனத்தின் ஆதிக்கத்தில் இருக்காமல் தனித்த உரிமைகளுடன் வாழக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சூழல் இலங்கையில் இது வரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இது இலங்கையில் மீண்டும் இன முறுகல்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கொண்டுள்ள தாகப்பல்கலைக்கழகத்தின்அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இ…

  21. வடக்கு முதலமைச்சர் சிறந்தவர்களை அமைச்சர்களாக்கவில்லை – ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்ற கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிய வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சர்களை சிறந்ததாக தேர்வு செய்ய தவறி விட்டார் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கடந்த வருடத்திற்காக எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 9 இலட்சத்து 75 ஆயிரம்…

  22. Oct 4, 2010 / பகுதி: செய்தி / ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் - அமெரிக்கா இலங்கை தொழில் சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால், அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சலுகைத் திட்டத்தை வென்றெடுக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் வெற்றியளித்துள்ளதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பு மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியன கூட்டாக இணைந்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கான சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. இல…

  23. இலங்கை நிலைமை கவலை தருகின்றது; அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் கூறுகின்றன news இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிய, வெறுப்புணர்வுகளைத் தூண்டும் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளன. தென்னிலங்கையில் அளுத்க மவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் யஇக்கி, "மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். அத்துடன், நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை'' என்று வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வன்முறைகள் குறித்துத…

  24. அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் பலர் பகிரங்கமாகச் சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனித உரிமை நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் தொடர் ஒடுக்குமுறைக்காளாகி வாய் திறக்க அஞ்சியுள்ள சூழ்நிலையில், அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கெதிராக எவரும் வாய்திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே இவ்விசாரணையை அரசாங்கம் தொடங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வவுனியாவில் நடைபெற்ற விசாரணையின் போது திருமலை மாவட்டத் தளபதியாக இருந்த எழிலனின் மனைவி துணிந்து சாட்சியமளித்திருந்த…

    • 4 replies
    • 1.3k views
  25. கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன. அருகில…

    • 16 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.