ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 04:16 PM ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை, பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எச்சரிக்கைவிடுத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான ஏப்ரல் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுனர், தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றபோதும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மந்தமா…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
விளக்கில் ஊற்றப்பட்டுள்ள மண்ணெய்யின் அளவு குறைவடையும்போது மெதுமெதுவாக மங்கிக்கொண்டு செல்லும் சுவாலையானது இறுதியில் எவ்வாறு முற்றாக அணைந்து விடுகின்றதோ அதேபோன்றே, போதியளவு பலமோ வல்லமையையோ இல்லாத நிலையில் படைகளை பாரியளவிற்கு நீட்டி அகட்டியிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளும் பாரிய தோல்வியினை இறுதியில் சந்திப்பார்கள் - போரியல் மேதை கால் வொன் குளோஸ்விச் அண்மைக்காலங்களாக விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிரியைத் திகைக்க வைக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். அத்துடன் இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரின் ஆயுதத் தளபாடங்களையும் ஏனைய நவீன போரியல் உபகரணங…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழில் கடல் நீரை நன்னீராருக்கும் திட்டத்துக்கு எதிராக ஆர்பாட்டம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மேள்கொள்ளப்படவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டிருக்கின்றது. அந்தப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசடைந்து செல்வதுடன், அங்கு நிலத்தடி நீர்வளம் குறைந்திருப்பதனால் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச கடற்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை ம…
-
- 1 reply
- 510 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இளைஞர், யுவதிகளை நவீன யுகத்தினுள் உள்ளீர்கும் முகமாக உருவாக்கப்பட்ட 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம், இன்று (7) காலை 10 மணிக்கு, மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், அதன் மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.மஜித் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிராம ரீதியாக உள்ள இளைஞர்களை 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உள்வாங்கி, எதிர்கால தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, தேசிய இளைஞர் சேவைகள…
-
- 0 replies
- 394 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் கருத்துக்களில் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 642 views
-
-
குடிநீர்ப் போத்தலில் கரப்பான்! தகவலை மூடி மறைக்க ஐந்து இலட்சம் பேரம்! கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாருக்கு அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட Nature Green நிறுவன தயாரிப்பான 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய குடிநீர்ப் போத்தலை சுன்னாகம் நகரிலுள்ள மருந்தகமொன்றில் நேற்று கொள்வனவு செய்திருந்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட குடிநீர்ப் போத்தலிற்குள் இறந்த கரப்பான் பூச்சி காணப்பட்டமை அதிர்ச்சியையும், கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவரான 33 வயதான இளைஞன் தனது முகநூலில் நேற்றுப் பதிவு செய்துள்ள நிலையில் அநாமதேய தொலைபே…
-
- 0 replies
- 573 views
-
-
திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையைச் சேர்ந்த தேவதாசன் கைது கொழும்பில் இடம் பெற்ற தாக்க்குதல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற பேரில் இவர் கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை பொதுச் சந்தையில் கடை ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்தே இவர் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் எனவும் defence.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆதாரம் வீரகேசரி இணையத்தளம் Major LTTE operative arrested in Colombo Police have arrested an LTTE operative who posed himself as a film director, and assisted numerous terrorist activities in Colombo. A special police team arrested this person hailing from Kilinochchi, based on information extracted from another LTTE activist arrested …
-
- 0 replies
- 656 views
-
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வடமாகாண சுகாதார அமைச்சின் மகளிர் விவகார பிரிவினரின் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், நாளை பிற்பகல் 2 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 'நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' எனும் தலைப்பில் கோகிலா மகேந்திரனும் 'பெண்கள்' என்ற தலைப்பில் பி.எஸ்.அஜிதாவும் சிறப்புரையாற்றவுள்ளனர். அத்துடன், மகளிர் விவகாரக் குழுவினரால் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வெற்றியீட்டிய குறுடம்படங்கள் திரையிடப்படுவதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ம…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:02 AM யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார். இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
[size=4] இந்திய சென்னையில் நடைபெறும் டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசாஸ்தலத்திற்கு முன்னால் தேசிய இயக்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியேரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. (படங்கள்: குஸான் பத்திராஜ) http://www.tamilmirr...2-09-43-00.html[/size]
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாட்டின் தேசிய மலராக அல்லிப்பூ பிரகடனம் நாட்டின் தேசிய மலராக அல்லிப்பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மலர் தொடர்பில் விசேட குழுவினரால் ஆராயப்பட்ட பின்னரே புதிய மலர் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும்,இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேசிய உயிர் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய மலரான நீலோற்பவம் தொடர்பில் இணையத்தில் தவறான நிழற்படங்களும் விமர்சனங்களும் எழுந்தது.இந்நிலையில் இதுகுறித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொ…
-
- 0 replies
- 542 views
-
-
வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்! பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 …
-
- 0 replies
- 151 views
-
-
கடந்த காலங்களில் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அநீதி இழைக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல் இந்த குழுவினரால் சேகரிக்கப்பட்டு நியாயம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அநீதி இழைக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் தமது தொழில்சார் அடையாளத்துடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக உறுத்திப்படுத்தப்பட்ட தகவலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கமுடியும். குறித்த தகவல்கள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முன்னார் எஸ்.ரி..கொடிக்கார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்…
-
- 0 replies
- 169 views
-
-
31 குண்டு துழைக்காத வாகனங்கள் இறக்குமதி: பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதா? செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் 31 குண்டு துழைக்காத வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த வாகனங்கள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருதிற்கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆயுததாரியும் முதலமைச்சருமான பிள்ளையானுக்கு குண்டு துழைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன கிழக்கு மாகாணசபையின் ம…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் அறிமுகமானது Street View இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும். கூகுள் இன்று இலங்கையில் வெளியிட்டுள்ள இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவணைக்கு உள்ளது. கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம்(Google Maps) தெரிவிக்கிறது. கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நி…
-
- 0 replies
- 512 views
-
-
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தையல் பயிற்சி வழங்கப்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை வேல்ட் விஷன் காரியாலயத்தில் இன்று (11) நடைபெற்றது. கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எட்வின் ரணிலின் வழிகாட்டலில், இவை வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், வேல்ட் விஷன் நிறுவனத்தின் வாழ்வாதார பொறுப்பாளர் அ.கிருஷாந்த், கல்குடா கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த், வேல்ட் விஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, கிண்ணையடி, கண்ணிபுரம், நாசிவந்தீவு, பேத்தாளை, சுங்கன்கேணி, கல்மடு ஆக…
-
- 0 replies
- 433 views
-
-
Published By: VISHNU 29 JUN, 2025 | 08:25 PM உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக்குழுவொன்று 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலில் முன்மொழியப்பட்டுள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்து…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
[size=4]முஸ்லிம்களின் தனித்துவமான தேசியத்தை ஒளித்து மறைத்துப் பேசுகின்ற கபடத்தனத்தினை தமிழ்த் தேசியம் கைவிட வேண்டும் என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான மு.காங்கிரஸின் பிரசாரக் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பாலமுனையில் இடம்பெற்றது. மு.காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட வேண்டுகோளினை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், "[size=5]முஸ்லிம்களின் தேசிய உணர்வு தொடர்பான…
-
- 7 replies
- 988 views
-
-
தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள தீர்வுத் தீட்டம் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதாக மட்டுமே இருப்பதாகவும், இந்த திட்டமானது முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டமாக இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் கருத்தறியும் நிகழ்வு நேற்றுமாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவை மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து வெள…
-
- 0 replies
- 349 views
-
-
அமெரிக்க வரிவிதிப்பு: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் Editorial / 2025 ஜூலை 10 , மு.ப. 11:01 அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அதிகாரிகளுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடலில், வியாழக்கிழமை (10) ஈடுபட்டார். முன்மொழியப்பட்ட அமெரிக்க இறக்குமதி வரிகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது, இது ஆரம்பத்தில் இலங்கை ஏற்றுமதிகளில் 44 சதவீதத்தை பரிந்துரைத்தது, பின்னர் அது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-வரிவிதிப்பு-ஜனாதிபதி-அவசர-கலந்துரையாடல்/175-360822
-
- 0 replies
- 149 views
-
-
ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறை யில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம். அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம். ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந் திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாக னப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவி டாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதி கம், அநேகம். அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுறையும் யாழ். குடாநாட்டு மக்களுக்குப் பெருங் கஷ்டத்தை யும் அசௌகரியத்தையும் ஏற்படுத்து…
-
- 0 replies
- 519 views
-
-
'வெளியேறு வெளியேறு தமிழர்களை கொன்ற சிங்களர்கள் வெளியேறு'-விண்ணை முட்டும் முழக்கத்தோடு உலக புகழ் பெற்ற ஏற்காடு மான்போர்ட் பள்ளியை முற்றுகையிட்டனர் தமிழுணர்வாளர்கள். சேலம் ஏற்காட்டில் உள்ளது மான்போர்ட் பள்ளி. நடிகர் விக்ரம், அன்புமணி ராமதாஸ் போன்றோர் பயின்ற பிரபல பள்ளி. இங்கு சிங்கள கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரப்பட்டது. நம்ம தமிழினத்தையே அழித்த சிங்களவர்களுக்கு இங்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியா என புயலென வெகுண்டேழுந்தனர் தமிழுணர்வாளர்கள். கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலை கழகம்,விடுதலை சிறுத்தைகள்,தமிழக வழக்குரைஞர் மாணவர் கூட்டமைப்பு ,நாம் தமிழர் கட்சி,உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பள்ளி முன் திரண்டனர். 'உள்ளே பயிற்சி நடக்கிறத…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கை அரசின் முடிவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார் ரவிநாத் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபெத் டிச்சி பிஸ்ல்பெர்கரை (Elisabeth Tichy-Fisslberger) சந்தித்த வெளியுறவு செயலாளர், இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து தகவல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர…
-
- 0 replies
- 691 views
-
-
யாழ் – வடமராச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்று மீட்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது . குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர். இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர். மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavann…
-
- 1 reply
- 154 views
- 1 follower
-
-
1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் வீரகேசரி நாளேடு 7/23/2008 9:30:23 AM - எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்…
-
- 0 replies
- 628 views
-