Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய் 14-08-2007 10:29 மணி தமிழீழம் [சிறீதரன்] இன்று அதிகாலை 1 மணியளவில் மன்னார் - மதவாச்சி காட்டுப்பாதை வழியே அமைந்திருந்த சிறீலங்கா காவல்துறை காவலரண்கள் ஐந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் ஐந்து சிறீலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி : பதிவு

    • 0 replies
    • 1.2k views
  2. [size=5]தனித்து தான் போட்டி: முடிவை மாற்றியது முஸ்லிம் காங்கிரஸ்![/size] இலங்கையில் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. [size=3]ஏற்கனவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் அறிவித்திருந்தனர்.[/size] [size=3][size=4]இந்த நிலையில், மீண்டும் இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]தனித்துப் போட்டியிடுவதா, அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் [/size][/size] [size=3][size=4]கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்வதா என்ற முடிவுகளை எடுக்கமுடியாமல் ஸ்ரீலங்கா முஸ…

  3. இலங்கையின் பிரபல பாப் இசை பாடகர் சிலோன் மனோகர் காலமானார் இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் நேற்று (22.01.2018) அவர் காலமானார். இலங்கையின் பாப் மாஸ்ட்ரோ என அவர் அழைக்கப்பட்டார். இலங்கையில் பாரம்பரிய இசையான 'பெய்லா' (Baila) எனப்படும் இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதுவித இசை படைத்து பிரபலமானார். சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் அவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை அவர் இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். கொங்கனி மொழியில் பாடப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்…

  4. கிழக்கில் வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் மீதான படை நடவடிக்கைகளை நிறுத்தியதன் விளைவே முகமாலை மற்றும் ஹபரண பகுதிகளில் படையினருக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான விவாத்தில் பேசும்போதே அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; எமது நாடு பாரிய வளமிக்க நாடு. எம்மைச் சுற்றி எண்ணெய் வளம், சமுத்திர வளம், பசளை வளம் என பல உள்ளன. கடந்த காலங்களில் நிபுணர்கள் சுட்டிக்காட்டியது போல வளமில்லாத வறிய நாடல்ல. பல அழிவுகளுக்கு மத்தியிலும் இன்னும் வளங்கள் எஞ்சியிருக்கும் வளமிக்க நாட…

  5. ஊமை மகனைப் பேசவைக்க மன்னர் எத்தனையோ முயற்சிகள் எடுத்தார். அதற்கான பலன் ஒருநாள் வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். மன்னனுடன் பேசாமல் இருந்த அவரின் விதவை அக்காவும் பகையை மறந்து வந்திருந்தார். கூட்டத்தைப் பார்த்தான் மகன். அம்மாவை, அப்பாவை, அத்தையைப் பார்த்தவன் வாய் திறந்தான், ''அம்மா, எப்ப அத்தை மாதிரி ஆகும்?'' மன்னனுக்கு மட்டுமல்ல, மொத்தக் கூட்டத்துக்கும் அதிர்ச்சி! எப்போது பேசுவான் என்ற ஆதங்கத்தில் இருந்தவர்கள், இதற்கு இவன் பேசாமலே இருந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். இலங்கை விவகாரத்தில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கின்றன. விடுதலைப் புலிகளை அழிக்கும் போர்வையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு போடுவதை இந்தியா தடுக்க வேண்டும் எ…

  6. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 7 கப்பல்கள் தென்கிழக்காசிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது. எனினும் அக்கப்பல்கள் தொடர்பான இரகசியங்களை வெளியிட முடியாதென அரசாங்கத்தின் பிரதான கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கப்பல் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் குறித்து ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=51781&category=TamilNews&language=tamil

  7. இரா.சம்பந்தன் எங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பார் October 31, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தங்களுடைய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பாரெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 54 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென தாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்…

    • 11 replies
    • 1.2k views
  8. மானஸ் தீவில் உள்ள ஈழ அகதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட ஈழ, ஈராக் உள்ளிட்ட நாடுகளின் அகதிகளில் இதில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கக்கான அகதி அந்தஸ்த்தை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், தங்களின் விண்ணப்பங்களை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையை பரிசீலிக்க அனுமதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/36968/57//d,article_full.aspx

    • 0 replies
    • 1.2k views
  9. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை -அ. அகரன் ‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல் என்பது அமைந்திருக்க வேண்டும். அரசியல் என்பது, வெறுமனே மனித செயற்பாடோ அல்லது மனித மனங்களால் பின்னப்பட்ட சித்தார்ந்தமோ அல்ல. அது உன்னதமான கலை. அந்தக் கலையைச் செவ்வனே கற்காத, செயற்படுத்த முடியாதவர்கள் அந்தக் கலைக்குள் தம்மை நிலை நிறுத்திக்கொள்வதென்பது ஏற்புடையதல்ல. இது அரசியல் என்ற கலைக்கு மாத்திரமின்றி, அனைத்துக் கலைகளுமே இந்த வகைக்குள் வரையறுக்கப்…

  10. வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமது அரசாங்கம் தப்பிப்பிழைத்த போதும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  11. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம். சர்வதேச மன்னிப்புச் சபையையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் எதிர்த்து ஜே.வி.பி.யினர் வியாழக்கிழமை காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி. யின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச மன்னிப்புச் சபையை விரட்டவேண்டும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை தோற்கடிக்கவேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய…

  12. படம்: தமிழ்நெற் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளில் பிரம்மாண்டமாக இயங்கும் விடுதலைப் புலிகள்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி தகவல் [திங்கட்கிழமை, 1 மே 2006, 20:04 ஈழம்] [ச.விமலராஜா] தமிழீழ விடுதலைப் புலிகள் கடல்சார் வர்த்த நடவடிக்கையில் செயற்படுவதற்கான பிரம்மாண்ட கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியும் ஆய்வு மையம் ஒன்றைச் சேர்ந்தவருமான விஜய் சகுஜா தெரிவித்துள்ளார். "செயலூக்கம் உள்ள விடுதலைப் புலிகளின் கடல் வர்த்தக கட்டமைப்பு" என்ற தலைப்பில் 14 பக்க ஆய்வு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் வடக்கு கிழக்கில் பெருமளவிலான பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்துள்ள…

    • 1 reply
    • 1.2k views
  13. ஜனாதிபதியின் புகைப்படத்தை விகாரப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நுகேகொடை பிரதேசத்தில் இந்த அச்சகம் அமைந்துள்ளதாகவும், அச்சகத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சுவரொட்டிகள் வெளி மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுவரொட்டிகளை விநியோகம் செய்த நபர்களை கண்டு பிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் புகைப்படத்தை விகாரப்படுத்தி அச்சிடப்பட்ட 15 அச்சுப் பிரதிகளின் ஊடாக குறித்த அச்சகம் சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மகிந்தாவின் ஒரு சில வீடியோ நகைச்சுவைகள் பாருங்கள்

  14. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கு தழுவிய முழு கதவடைப்புக்கு தமிழ்த் தேசியத் தரப்பு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வடக்கு - கிழக்கு சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக குறித்த அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இ…

    • 8 replies
    • 1.2k views
  15. சனல்-4 மீண்டும் ஒரு அதிர்ச்சிக் காணொளியை வெளியிட்டது: - மகிந்தராசபக்ச மற்றும் மருத்துவர் ஒருவரது சாட்சியம் ஆகியன உள்ளடக்கம் [Thursday, 2014-03-27 08:38:27] இறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலையங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம் காலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியரின் வாக்குமூலங்களும் இக்காணொளியில் காண்பிக்கப்படுகின்றது. இலங்கை அதிபர் மகிந்தவின் விளக்கங்களும் வைத்திய அதிகாரி முன்னர் இராணுவ ஊடக மையத்தில் தெரிவித்த கருத்துக்களின் உண்மை தன்மைகள் தொடர்பிலும் விளக்கமாக விபரிக்கப்படுகின்றது. இலங்கை அரசால் நடாத்த…

  16. அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்வதற்கு மன்னிப்புக் கிடையாது என்று அரச பயங்கரவாதத்தினால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்துள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  17. கிளாலி மற்றும் கிளிநொச்சி களமுனைகளில் கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பலமுனை நகர்வுகளுக்கு எதிரான தாக்குதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்குழல் வெடிகணை செலுத்திகளை பயன்படுத்தியுள்ளனர் என சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  18. கோப்பாயில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 படையினர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 18:36 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] யாழ். கோப்பாயில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 2 சிறிலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளனர். கோப்பாயில் யாழ். - பருத்தித்துறை வீதியில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் சார் அலுவலகம் அருகே சுற்றுக்காவல் பணியில் நின்று கொண்டிருந்த படையினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 2 படையினர் படுகாயமடைந்தனர். இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக யாழ…

    • 0 replies
    • 1.2k views
  19. புதிய அரசியல் பித்தலாட்டம் ` அரசியல்வாதிகள் என்றால் எதையும் எப்படியும் சொல்லலாம். அவரவர் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்புடையதாகக் கூறலாம். தாம் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்மாறாகக் கருத்துக் கூறலாம். மக்கள் மறந்து விடுவார்கள்; அவர்கள் ஏமாளிகள்; அரசியல் மடையர்கள் என்று கருதியே எண்ணியே அரசியல்வாதிகள் இவ்வாறு நடக்கின்றார்கள். பெரும் சந்தர்ப்பவாதிகளாகத் திகழ்கின்றார்கள். அரசியல் என்பது வெறும் ஏமாற்றும், போக்கிரித்தனம் நிறைந்ததும் என்று அந்தச் சகதிக்குள் கால் வைப்பவர்களில் பலரும் நினைக்கின்றார்கள். தாங்கள் சொல்வதை எல்லாம், கேட்டுக் கேள்வி இல்லாமல், ஆய்வு ஆராய்ச்சி இல்லாமல், தேவாமிர்தம் என நினைத்து மக்கள் விழுங்கி விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை அவர…

  20. குண்டுமழை பொழியட்டும்.. இன்னும் ஏன் தமதம்.. யூ.என்.பீ http://www.kirula.info/news2/article_2009_05_3_5003.html தமிழ் எம்.பீ.மாருக்கு சமர்ப்பனம்......

    • 0 replies
    • 1.2k views
  21. அக்கரைப்பற்று நகரில் 10 கடைகள் எரிந்து நாசம் 2 1/2 கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு 2/11/2008 7:16:15 PM வீரகேசரி இணையம் - அக்கரைப்பற்று நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக 10 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.இத்தீவிபத்தின

  22. [size=3][size=4]இலங்கைப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா.வையும் இலங்கையையும் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே தற்போது வெளியாகியிருக்கும் ஐ.நா. அறிக்கையின் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்தன. ஆனால், சரணடைதல் தொடர்பில் ஐ.நா.வின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது உட்பட நீக்கப்பட்ட பல விடயங்கள் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் சர்வதேச மனிதாபிமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவினர், தங்களது அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளனர். இதற்கிடையில், அந்த அறிக்கையில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதிகளை பான் கீ மூன் பகிரங்கமாக வெளியிட்டு…

  23. தமிழர்குரல் என்ற நாமம் தரித்து செய்கோள் ஊடாக ஐரோப்பிய மத்தியகிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு உங்களுடன் உறவாட நாம் வருகின்றோம். கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் நாம் யுரோபேர்ட் 9 ஒலித்த போதும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று பல தடைகளை தாண்டி ஒருவாறு கொர்ட்பேர்ட் 13 ஊடாக ஒலிக்க வருகின்றோம். தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்புக்களை வழங்கி எமது உரிமைக்குரலை சிற்றலையுடாக தாயகத்துக்கு எடுத்து செல்ல வளம் உள்ள உள்ளங்கள் தங்களின் விளம்பரங்களை தமிழர்களின்குரல் வானொலிக்கு தந்துதவி எமது தேசியக்குரலை சிற்றலையுடாக எடுத்து செல்ல உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றோம். யூன் மாதம் முதலாம் திகதி காலை 9மணிக்கு உங்களை அனைவரையும் சந்திக்கும…

  24. சிறீலங்கா வாக்குறுதிகளை மதிக்காதது கொடுமையானது : பான்கீமூன் ஐநாவின் பாதுகாப்பு செயலர் பான் கீ மூன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் கடந்தமாதம் விடுதலைப்புலிகளை தோற்கடித்துள்ளநிலையில் வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கத் தவறியுள்ளதாகவும் இதுதொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி:-பதிவு http://www.pathivu.com/news/2219/54//d,view.aspx

  25. அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார். இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன…

    • 4 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.