Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணம்! புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின. 2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமைப்போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, கடந…

  2. மஹர சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட தீ பரவல் – 100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, 100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தீயினால் பல்வேறு ஆவணங்களும் நாசமடைந்துள்ளன என்றும் இழப்புக்கணிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 11 பேரில் இரண்டு பேரின் சடலங்கள் இன்னும் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழந்த ஏனைய 9 பேர் கொரோனா நோயாளர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களது சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது தொடர்பான தீர்மானம் இன்னும் …

  3. அரசாங்கத்திடம் செல்வாக்கிழந்த கருணா ! கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து By Battinews நீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது . வெள்ளிக்கிழமையன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தை நிறுத்தும்படி அம்பாறை அரச அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது கடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும…

  4. அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன December 6, 2020 அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிர…

  5. மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ளத்திற்கு காரணம் -அரசாங்க அதிபர் க.மகேசன் 43 Views யாழ். மாவட்ட மக்களின் சமூக அக்கறையின்மையே வெள்ள நிலைமைக்கு காரணம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும், பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை, சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கழிவுப்பொருட்களை வீசுதல், வடிகால்களை மூட…

  6. சிங்களவர்களிற்கு எதிராக உரையாற்றும் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும்- பேட்டியில் சரத் வீரசேகர கருத்து சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க…

  7. அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா? உண்மை நிலவரம் தெரியாத நிலையில் காத்திருக்கும் மஹர சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் சண்டே டைம்ஸ் மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்டவர்களாக கருதப்படுபவர்களின் உடல்களை புதைப்பது குறித்த நீதிமன்ற உத்தரவு அடுத்த வாரமே வெளியாக உள்ளதால் குடும்பத்தவர்கள் மேலதிக தகவல்களிற்காக காத்திருக்கின்றனர். மஹரசிறையில் கொல்லப்பட்டவர்கள் சிலர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்ற போதிலும் அவர்களின் உடல்களை தகனம் செய்யக்கூடாது என சிறைக்கைதிகளிற்கான மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி சேனஹ பெரேரா நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இதனை தொடர்ந்து இது குறித்த விசாரரணைக்காக வெள்ளிக்கிழமை சட்டமா அதிபர் திணை…

    • 1 reply
    • 366 views
  8. பளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு 1 Views கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள ஏல் ஆர் சி காணிகளை சட்டவிரோதமாக சிலர் பிடித்து துப்புரவு செய்து வருகின்றமைக்கு பொது மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். பேராலை எனும் இடத்தில் உள்ள எல் ஆர் சி காணியினை துப்புரவு செய்கின்ற பணிகளை அவதானித்த பொது மக்கள் 50 இற்கு மேற்பட்டோர் நேற்று சனிக்கிழமை ஒன்று சேர்ந்து தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு பொலீஸாரின் கவனத்திற்கும் கொண்டு சென்ற நிலையில் பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து துப்புரவு பணிகளை நிறுத்தியுள்ளனர் பளை பிரதேசத்தில் ப…

  9. இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி இந்து ஆலய சிவாச்சாரியார்களுக்கு தேவையான அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வாழ்வாதார அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்த சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிலஸ்ரீ இராமநாதக்குருக்கள் மற்றும் உப தலைவர் இராமநாத திருச்செந்திநாதக் குருக்கள் ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின் போது, ஆலயப் பணிபுரிகின்ற ஆலய சிவாச்சாரியார்கள் ச…

  10. வடமாகாணத்துக்கு கல்வித்துறை கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் கல்வித்துறை கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதன்போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாசாரத் துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சினைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை துறைசார் உத்தியோகத்தர்கள் ஆளுநரிட…

  11. நீங்கள் உண்மையான பௌத்தர்கள் என்றால்.. – நாடாளுமன்றில் சாணக்கியன் எம்பி ஆவேசப்பேச்சு! நீங்கள் உண்மையான பெளத்தர்கள் என்றால் மனிதத்துவத்துக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கடும் தொனியில் தெரிவித்தார். மேலும், “நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்த நாடாளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். …

  12. 12/02/2020 பாராளுமன்றத்தில்......

    • 0 replies
    • 321 views
  13. உங்களுக்கு மற்றுமொரு பாகிஸ்தான் வேண்டுமா? - இரா. சாணக்கியன்

  14. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கோரிக்கை 38 Views நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துமாறு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மகஜர் ஒன்றை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் நிதி அமைச்சரிடம் கையளித்தனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்…

  15. உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் – எதிர்கட்சியின் கேள்வியால் சபையில் குழப்பநிலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குழப்பநிலை உருவானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் இடம்பெறும் விதம் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா சுட்டிக்காட்டினார். விசாரணைகள் மூடிமறைக்கப்படுவதற்கு அனுமதிக்கவேண்டாம் என கர்தினால் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதை தடுப்பதற்க…

  16. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் மக்கள் – தனிமைப்படுத்தலிற்கு எதிர்ப்பு- பெரும் ஆபத்தின் பிடியில் அட்டளுஹம அட்டளுஹம பகுதி பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டளுஹமவில் பொதுமக்கள் சுகாதார அதிகாரிகளிற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்து வருவதன் காரணமாகவும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்ற வருவதன் காரணமாகவும் பாரிய மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ்கொத்தணியொன்று உருவாகலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பொதுசுகாதார பரிசோதகரை அவமரியாதை செய்த – முகத்தில் துப்பிய சம்பவத்தினை…

  17. சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும் – மாவை பதிலடி விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டிருக்கும் அவர் இவ்வாறு இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கத்தினால் தமிழர்களின் அமைதிவழிப…

  18. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் தயாராகவுள்ளனர்.! – சிறிதரன் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சனையாக உள்ளது.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்திலேயே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள போதும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்கள…

  19. பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகின்றார் மனோ.! சரத் பொன்சேகாவுக்கு இரண்டொரு தினங்களில் உரிய பதிலை வழங்குவேன்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். ‘மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. விடுதலைப்புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது’ என்று சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பில் மனோ கணேசன் தனது முகநூலில் இன்று பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “நா.உ சரத் பொன்சேகா என்னைப் பற்ற…

    • 2 replies
    • 486 views
  20. இறுதி போரில் 5,000 – 6,000 தமிழர்கள் தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் – ஃபொன்சேகா தெரிவிப்பு 69 Views இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா மறுத்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், சுமார் 5,000 – 6,000 பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் என்று சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ந…

  21. (காரைதீவு நிருபர்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு; கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திப் பெற வேண்டும் என்பது நாடளா…

  22. பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைக்க மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றிய நிலையில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு அம்மன் கோவில் வீதியை புனரமைக்கவுள்ளதாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர். இவ் வீதியை புனரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில…

  23. (இராஜதுரை ஹஷான்) கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசாங்கத்தில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வடக்கு , கிழக்கு மாகாண மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கையின் அடிப்படையில் மாகாணங்கள் சுயமாக பொருளாதார மட்டத்தில் முன்னேற்றமடைய வேண்டும். இதற்கான திட்டங்கள் வகுக்கப்ப…

    • 2 replies
    • 428 views
  24. சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-1.jpg சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6வீடுகள் சேதமாகியுள்ளதோடு, 4குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால், வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது …

  25. இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பிரித்தானியா கவலை 46 Views சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் ஐக்கிய இராச்சியம் தனது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்குரிய பணிமனைக்குரிய அமைச்சரான நைஜல் அடம்ஸ் (Nigel Adams) சிறீலங்கா அரசு சிவில் சமூகத்துக்குக் கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் சிவில் சமூகங்களுக்குரிய பணிகளை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தி வரும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமது அரசின் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.