Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by ஆரதி,

    ஓட்ஸ் - ஒரு கப் கடலைப்பருப்பு - கால் கப் துவரம் பருப்பு - கால் கப் உளுத்தம் பருப்பு - கால் கப் பெரிய வெங்காயம் - 2 காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 6 பற்கள் இஞ்சி - ஒரு சிறு துண்டு சோம்பு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - ஒரு சிறிய கட்டு உப்பு - தேவையான அளவு பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 முறை கழுவிவிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளுடன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்க…

  2. Started by ஆரதி,

    1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம் 1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர் 1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண் குவித்து ஒரு தேக்கரண்டி சீனி பெரிய பாதித் தேங்காய் 1 தே.க. உப்புத்தூள் 1/3 தே.க. அப்பச்சோடா பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்…

  3. இஞ்சி சமையல் முறைகள் சுவைக்காக உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் இஞ்சி, ஓர் மருத்துவ மூலிகையாகும். உடலுக்கு தேவையான ரசாயனங்கள், தாதுக்கள் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது, 100 கிராம் இஞ்சி 80 கலோரி ஆற்றலை தருகிறது. சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. அதனால் தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுவலி போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது `ஆன்டி ஆக்சிடென்ட்' ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் இஞ்சியில் இருக்கிறது. இஞ்சி டீ ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள்,…

  4. Started by ஆரதி,

    தேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் முட்டை – 5 ஏலக்காய்த்தூள் – அரைதேக்கரண்டி கஜூ – 30 கிராம் பிளம்ஸ் – 30 கிராம் ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்) மாஜரின் – ஒரு தேக்கரண்டி செய்முறை: தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும். எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவு…

  5. Started by ஆரதி,

    http://www.foodlikeammausedtomakeit.info/2011/08/how-to-make-soft-roti.html#.U--iZLxdUwI மேற்குறிப்பிட்ட இணைப்பில் அளவுகள், செய்முறைகள் உள்ளன.!

  6. விடுமுறை நாட்களில், அதிலும் மழைக்காலத்தில் நன்கு காரமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் அசைவ உணவுகளை நன்கு மூக்குமுட்ட சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி சிக்கனை காரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், சிக்கன் பெப்பர் ப்ரையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். சரி, இப்போது அந்த சிக்கன் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளகு - 10 மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - 2 (1 பொடியாக நறுக்கியது, மற்றொன்று அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன் எண…

  7. பெருநாள் என்றாலே எல்லார் வீட்டிலும் இனிப்பு நிச்சயம் இருக்கும். அதுவும் வட்லாப்பம் தான் பெரும்பாலான வீடுகளில் ஸ்பெஷல். அதன் எளிமையான வித்தியாசமான செய்முறை தேவையான பொருட்கள் முட்டை - 8 காய்ச்சிய பசும் பால் – 1 ½ லிட்டர் சீனி – 2 ரைஸ் குக்கர் கப் வன்னிலா எசன்ஸ் – சில சொட்டுக்கள் முந்திரி 10 ஏலக்காய் 6 நெய் 20 மில்லி செய்முறை பாலை காய்ச்சி ஆறவைத்து வன்னிலா எசன்ஸ் சேர்க்கவும். முட்டையையும் சீனியையும் நுரை வரும் அளவுக்கு மிக்ஸ்யில் அடித்து வைக்கவும். முந்திரி மற்றும் தோல் நீக்கப்பட்ட ஏலக்காய் (விதை மட்டும்) மிக்சியில் இட்டு ஒரு கல் உப்பிட்டு மிக சற்று தண்ணீர் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடித்து வைத்த முட்டையையும் சீனியையும் சேர்த்து வடித்து ஆறிய பா…

  8. பாலாகொட்டை துவையல் செய்வது எப்படி என்று சொல்வீர்களா உறவுகளே?

  9. அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசா…

    • 3 replies
    • 749 views
  10. தேவையான பொருட்கள்: 1. பாஸ்மதி அரிசி - 2 கப் 2. முட்டை - 5 3. வெங்காயம் - 25 கிராம் 4. தக்காளி - 100 கிராம் 5. பச்சைமிளகாய் - 4 எண்ணம் 6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 8. கரம் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி 9. பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை- தாளிக்க 10. புதினா, கொத்துமல்லி - கைப்பிடியளவு 11. எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு முன் குறிப்புகள் 1.பாஸ்மதி அரிசியைக் கழுவி,அரைமணி நேரம் ஊற வைக்கவும். 2. முட்டையைக் கெட்டியாக வேகவைத்து உரித்து வைக்கவும். செய்முறை: 1. குக்கர் பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். 2. வெங்காயம் வறுபட்…

    • 2 replies
    • 784 views
  11. சமையல் நுட்பங்கள்! பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்… பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை கப் இருந்தால் போதும். அரிசியை வறுத்தாலும் வறுக்கவில்லை என்றாலும் இதே அளவு தண்ணீர்தான். குக்கரில் வைப்பதாக இருந்தால், மேற்சொன்ன அளவில் தண்ணீர் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயை…

  12. Started by ஆரதி,

    கறி ரொட்டி தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு 1. மைதா மா – 2 கப் 2. ஈஸ்ட் – 1 ரீ ஸ்பூன் 3. உப்பு சிறிதளவு 4. மார்ஜரீன் – 1 டேபிள் ஸ்பூன் கறி தயாரிக்க 1. மீன் துண்டுகள் – 1 கப் 2. வெங்காயம் – 1 3. பூண்டு – 2 4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன் 5. கடுகு – ¼ ரீ ஸ்பூன் 6. மிளகாய்த் தூள் – ரீ ஸ்பூன் 7. மஞ்சள் தூள் – ½ ரீ ஸ்பூன் 8. கறிவேற்பிலை சிறிதளவு 9. உப்பு, புளி தேவையான அளவு 10. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை 1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள…

  13. பருத்தித்துறை வடை . இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் . தேவையான பொருட்கள்: கோதுமை மா 1 கிலோ . *****உளுத்தம்பருப்பு 500 கிறாம் . உப்பு 2 மேசைக்கறண்டி . பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி . மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) . கறிவேப்பமிலை 30 - 35 இலை . எண்ணை ஒரு போத்தில் . பக்குவம் : உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன…

    • 42 replies
    • 5.2k views
  14. "மீன் கட்லட்" செய்முறை தேவை. கன நாட்களின் பின், மீன் கட்லட் சாப்பிட வேண்டும் என்று... ஆசை வந்து விட்டது. ஆனால்... அதன் செய்முறை அரைகுறையாகத் தான் ஞாபகம் உள்ளது. முழுமையான செய்முறையையும், எந்த ரின் மீன் (சார்டினன் / தூண் பிஷ்) போடலாம் என்பதையும் அறியத் தாருங்களேன்.

  15. கடை இடியப்பம் பற்றி, ஒரு அதிர்ச்சி தகவல். இடியப்பம் ஒரு நல்ல உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் . பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் ! இடியப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை. சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா அந்த இடியப்ப மாவில் கலக்கிறார்கள். இதில் 2 விஷயங்கள் உள்ள…

  16. பேர்கர் கிங்' பேர்கரில் பிளேட் - அமெரிக்கர் அதிர்ச்சி! [sunday, 2014-06-15 21:24:36] தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள Flagstaff என்ற நகரில் உள்ள ஒரு கடையில் தனது கணவருக்கு பெண் ஒருவர் வாங்கிய பர்கரில் பிளேடு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த Jennifer Ashley என்ற பெண் Flagstaff நகரில் உள்ள பேர்கர் கிங் என்ற கடையில் பர்கர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு தனது கணவருக்கு ஒரு பேர்கர் பார்சல் வாங்கினார். தான் வாங்கிய பேர்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளேடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பர்கர் கிங் மேனேஜரை அழைத்து தான் சாப்பிடும் பர்கரில் பிளேடு இருந்ததாகவும், இந்த விஷயத்தை தான் சும்மா விடப…

    • 0 replies
    • 540 views
  17. இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும். சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். மலச்சிக்கல் தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும். நீரிழிவு வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்த…

  18. உணவுப் பழக்கத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். -- 1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. - 2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது. - 3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். - 4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல். - 5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல். - 6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல். - 7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல். - 8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது. - 9…

  19. செய்முறை மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும். மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும். ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும். …

    • 1 reply
    • 763 views
  20. குஞ்சு மீன் சொதி. சொதி என்றால்... எல்லோருக்கும் பிடித்தது. இதனை... எந்த உணவுடனும், கலந்து சாப்பிடலாம் என்பது, இதன் சிறப்பு. அதிலும் குஞ்சு மீனில் வைக்கும் சொதியின், ருசியே... வாயில் நீரூற வைக்கும். சரி.... குஞ்சு மீன் சொதியை, எப்படி வைப்பது என்று பார்ப்போமா. தேவையானவை: 500 கிராம் சிறிய மீன்.(Anchovi என்ற மீன், தமிழ்க் கடைகளில் வாங்கலாம்) (இதில் முள்ளை சுலபமாக அகற்ற‌லாம்.) 2 வெங்காயம். 7 பச்சை மிளகாய். 1 கப் தேங்காய்ப்பால் அல்லது 2 கப் பசுப்பால். 3 கப் தண்ணீர். 1 தேக்கரண்டி மஞ்சள். 4 நெட்டு கருவேப்பிலை. உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு, சீரகம், வெந்தயம், மூன்று செத்தல் மிளகாய், எண்ணை. செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து... கழுவி, நீளப் பாட்டாக, மெல்லி…

    • 11 replies
    • 1.7k views
  21. இதமான குளிர்காலம் முடிந்து... வாட்டி வதைக்கும் கோடை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''உணவு முறை, உடை, பழக்கவழக்கங்களை வெயில் காலத்துக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதன் மூலம், அதையும் சுகானுபவ காலமாக கொண்டாடலாம்'' என்று கனிவுடன் கூறும் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், '30 வகை COOL ரெசிபி’களை இங்கே வழங்குகிறார். ''வெயிலின் கடுமையைத் தணிக்க உதவும் இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், கம்பு, சுரைக்காய், வெந்தயம், தேங்காய்ப்பால் போன்றவற்றைக் கொண்டு விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்துள்ளேன். இந்த கூல் ரெசிபிகளை, புன்னகை யுடன் பரிமாறினால்... சாப்பிடுபவரின் உடலும் உள்ளமும் டபுள் கூல்தான்!'' என்று ஆருயிர் தோழியாக, அன்புப் பெருக்குடன் கூறுகிறார் கிருஷ்ணகுமாரி. லிச்சி - கார்…

  22. இறால் சூப் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இது மாதிரியான சூப் வகைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தெரியும். தேவையானவை சிக்கன் (வேகவைத்த) - 1/4 கப் லவங்கம் - சிறிது கேரட்- 1 வெங்காயம் - 1 பூண்டு - சிறிது தக்காளி (வேகவைத்து மசித்தது ) - 1 கப் மிளகு தூள் - சிறிது இறால் - 1/4 கிலோ தண்ணீர் - தேவைக்கேற்ப செய்முறை தண்ணீர் கொதிக்கவைத்து இறாலை அதில் சிறிது நேரம் வேகவைக்கவும்.இறால் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம்,கேரட்,பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.இதனோடு வேகவைத்த சிக்கன்,உப்பு, மிளகு தூள், இறால்,இறால் வேகவைத்த தண்ணீர்,வேகவைத்து மசித்த தக்காளி ஆகியவற்றை …

  23. ஆட்டு மூளைப் பொரியல் ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.......... தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் எண்ணைய் - 3 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். * அடிக்கடி மூளை…

    • 3 replies
    • 958 views
  24. 30 வகை பிரியாணி எவ்வளவுதான் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் சமைத்துப் பரிமாறினாலும்... டேஸ்ட் பார்த்துவிட்டு, பல சமயங்களில் உதட்டைப் பிதுக்கும் பிள்ளைகளும், எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுவிட்டு கைகழுவும் பெரியவர்களும், பிரியாணி செய்துகொடுத் தால்... 'வாவ்!’ என்று வாய்பிளப்பார்கள். அந்த அள வுக்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அள்ளி அள்ளி சுவைக்க வைக்கும் பிரியாணியில் 30 வகைகளை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இளநீர் பிரியாணி, முருங்கைக் காய் பிரியாணி, பைனாப்பிள் பிரியாணி ஆகிய வற்றுடன் உடல்நலத்துக்கு உற்ற துணையாய் கைகொடுக்கும் வேப்பம்பூ பிரியாணி, நார்த்தங்காய் பிரியாணி போன்றவையும் இதில் அடங்கும். ''அப்புறமெ…

  25. Started by colomban,

    தக்காளி வெண்ணெய் வெங்காயம் தேவையான பொருள்கள்: தக்காளி = 5 வெங்காயம் = 1 மிளகுத்தூள் = தேவையான அளவு பூண்டு = 6 பல் வெண்ணெய் = 2 தேக்கரண்டி சோள மாவு = 1 தேக்கரண்டி உப்பு = தேவையான அளவு கொத்தமல்லி இலை = தேவையான அளவு செய்முறை: தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் பூண்டு போட்டு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து இரண்டும் நன்றாக வதங்கியதும் தக்காளி கலந்து நன்றாக மசியும் வரை வதக்கி பிறகு தேவைக்கேற்ப நீர் விட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பிறகு வடிகட்டிய நீரில் சோள மாவை கலந்து சிறிது நீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பின்னர் மிளகுத்தூள், கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.