கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
பாதை தெரியாத சுவடுகள். ............ புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்ய சாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த ...ஒரு கால் இழந்த ....சிறுவர்கள் சிறு விளையாடு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள். பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள். கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன். வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் ...சென்று இருந்தனர்.. .பாக்கியம் என்னை ஏன் …
-
- 9 replies
- 1.4k views
-
-
சயனைட்டைச் சாப்பிட்டிட்டான். Visit My Website இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான். இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள். என்ன தம்ப…
-
- 8 replies
- 3k views
-
-
கலியாண ஆசை எனக்கு கலியாண ஆசை வந்துவிட்டது. என்ன செய்வது? யாரிடம் போய் இதைச் சொல்வது? எப்படி பெண் தேடுவது என்று யோசிச்சுக் கொண்டிருந்த பொழுதுகளில், ஒருமுறை ஈஸ்ட்ஹாம் தமிழ் கடையில் சாமான் வாங்க சென்றிருந்த சமயம் ஒரு பெரியவர் கேட்டார். தம்பி நீர் உந்த பெற்றேல் ஷட் ல் வேலை செய்யிற ரூபன் தானே எண்டார். ஓம் ஓம் என்றேன். ஆளே சுத்தமா மாறிப் போயிட்டிர் சக்கை பிளாக்காய் கணக்குக்கு உடம்பை வளர்த்து விட்டிருக்கு என்று சொன்னவர் இப்படிப்போனா எங்கே எப்ப கலியாணம் நடக்கிறது என்றபடியே நகர்ந்தார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் மீது கோபம் கோபமாய் வந்தது. Punching bag ல் என் ஆத்திரம் தீருமட்டும அடிக்கனும் போல இருந்தது. சும்மா சொல…
-
- 37 replies
- 4.8k views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது: "மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய…
-
- 4 replies
- 3.1k views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்து எள்ளி நகைத்த வேதாளம் பேசத்தொடங்கியது: "மன்னா! எல்லோரும் அமைதியாக உறங்கும் இந்த நள்ளிரவில், தமிழ் ஈழத்தின் இந்த சுடுகாட்டில் நீ எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய் என்று தெரியவில்லை. தளர்வில்லாத முயற்சி சமயங்களில் பின்னடைவை சந்தித்தாலும் அதை செய்பவர்களின் மன உறுதியினால் வேண்டிய பலனை கொடுத்தே தீரும். அதற்கு இந்த தமிழ் ஈழ தேசத்தின் வரலாறே சாட்சி. இந்த தேசத்தின் கதையை கூறுகிறேன் கேள். இந்த சுடுகாட்டின் அருகில் அமைந்துள்ள நகரமானது ஒரு காலத்தில் இந்திர லோகத்தைப்போல் பொலி…
-
- 3 replies
- 14.2k views
-
-
. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும். டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........ தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வா…
-
- 8 replies
- 4.1k views
-
-
சிறுகுறிப்பு: அதென்ன இதுக்குமட்டும் தலைப்பில ஒட்டகம் இல்லாமலுக்கு நம்ம தலையின்ரை பெயரை இப்படியா இருட்டடிப்புச் செய்கிறது என்று ஒட்டகத்தார் ரசிகர் வட்டத்தில பலரும் அன்பாய் கடிந்துகொண்டதில் பெயரைமட்டும் மாற்றியிருக்கிறன் மற்றும்படி மத்தியஸ்தம் நடந்தது நடந்தபடி அப்படியேதான் இருக்கு. ... படிக்காதவை தொடர்ந்து படியுங்கோ. படிச்சவை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. ஒட்டகத்தைத் தேடிய காவல்துறை............உடன் ஒரு சில நாட்களில் சந்திக்கிறன். நாசமாப்போன நாணல் கயிறுவிடுறான் என்று திட்டுறது காதில விழுகிறது. இனியும் கதைச்சுக்கொண்டு நின்றால் வம்பாய்ப் போய்விடும். பிறகு சந்திப்பம்.............. பயத்தில் ஓட்டமுடன் நாணல் எனக்கும் ஒட்டகத்திற்கும் இடையில்.. …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒட்டகத்தைத் தேடி நேரம் 15.20 பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. 15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான். எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால், ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது. குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ் ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப் பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன். நேரம் 15.27 கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன். ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது, இல்லையென்றால் அறுத்தே ஆளைக் கொண்டுபோடும் பாவி. நடை மெல்ல ஓட்டமாக மாறியது. நேரம் 15.33 மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தன் ஆளைக்காணவில்லை. மக்டொனால்ஸ் வாச…
-
- 3 replies
- 1.2k views
-
-
திசைமாறிய காதல் அவளுக்கும் அவனுக்கும் இடையில் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லைத்தான்.. அதுவும் இப்படி ஒரு கோலத்தில் .... பல காரணங்கள் சொல்லி என்னை தூக்கி எறிந்து விட்டு போனாலும் அவள் எண்ணியபடி எங்கோ வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றுதான் அவன் எண்ணியிருந்தான் .அனால் இன்று ..... ஒட்டிய உடலும் காய்ந்த முகமும் ஆளுக்கு படிந்த ஒரு பழைய புடைவையும் ஒழுங்காக வாரப்படாத தலையும் திலகமில்லா நெற்றியும் ....... அவளை அடையாளம் காண்பதே குமாருக்கு கடினமானதாக இருந்தது . மஞ்சள் நிறமும் குழிவிழும் அழகிய கன்னமும் நீண்ட விழிகளும் நேர்த்தியான உடையும் அளவான ஒப்பனையும் ஒருங்கே இணைய ஒரு தேவதைபோல் துள்ளித்திரிந்த கௌரியா இது ..…
-
- 14 replies
- 3k views
-
-
வாசகர்களுக்கு வணக்கங்கள் கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே. மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம் உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( …
-
- 5 replies
- 1.8k views
-
-
ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான். அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான். உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று? அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான். குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.? அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும் குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்? அந்த மனிதர்மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா. குருடன்:ஐயா…
-
- 6 replies
- 2.5k views
-
-
அடேல் அம்மையாரின் சுத ந்திரை வேட்கை நூலை இந்த சுட்டியில் படிக்கலாம் http://noolaham.net/project/19/1809/1809.pdf http://noolaham.org/wiki/index.php/%E0%AE%...%AE%95%E0%AF%88
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும் நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க கிணிங்ங்ங்................................ அழைப்புமணி. சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான். நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார். இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன் உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால் நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான். அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள், இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார். நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் எ…
-
- 0 replies
- 925 views
-
-
ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இரகசியமாக உங்களுக்குமட்டும் பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன். எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன். சில நொடி தாண்டியிருக்காது. அண்ணை! அண்ணை! என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்? எதிர் வீட்டிலிருந்து குரல் வந்தது. அது.... எதோ யோசனையில கவனிக்கேல்லை என்று சமாளிச்சன். பரவாயில்லை. நான் வீட்டிற்குப் புதுத் தொலைபேசி இணைப்பு எடுத்திட்டன் அதுதான் உங்களுக்கும் இலக்கத…
-
- 11 replies
- 2.2k views
-
-
வாங்க ஒரு கதயப் பற்றிக் கதைக்கலாம்....... சத்யமா வீமன்ற ‘கதை‘யப் பற்றியில்லீங்கோ.... நானும் பல முயற்சிகளப் பண்ணிப்பார்த்து...சலித்து.... சல்லியாகி ...... சரி சொந்தமா இப்ப முடியாங்காட்டிலும்.... எங்காச்சும் 'படிச்சு ரசிச்ச' அல்லது 'பதியப் படிச்ச' கதையொன்ற ஒங்களோட பகிர்ந்துக்கலாம்னு... இரவு பகலா தேடித் தேடி அமுக்கிய இந்தக் கதயயும் (முன்னாங்காட்டி எங்காச்சும் மேஞ்சிருப்பினும்....சலிக்காம மீண்டும் ஒரு வாட்டி மேஞ்சுக்கணும்) பெர்ய மனசோ அல்லது தொறந்த மனசோ பண்ணி ஒரு வாட்டிதான் படிச்சுப் பாத்திடுங்களேன். படிச்சுண்டு, 'பேஷாயிருக்கே' இல்ல 'மொக்கையாயிருக்கே'ன்னு ஒங்களுக்குள்ளாறயே பேசிணிண்டு அப்புறம் பேசாமலே போயிடாம.... எதனாச்சும் இங்கிட்டு ஒங்க பங்குக்கு பதிவுகளயும் வ…
-
- 4 replies
- 1.4k views
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்......................... யாரது காலமை ஒன்பது மணிக்கு அருமையான என்ரை தூக்கத்தைக் கெடுக்கிறது என்ற யோசனையோட மெதுவா எழும்பிப்போய் வாசல்கதவைத் திறந்தன். வணக்கம் அண்ணா! நம்பமுடியாமலுக்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
----------------------------------------------- -----------------------------------------------
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம். ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது. உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது. கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது. உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய். கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்க…
-
- 1 reply
- 1k views
-
-
எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை... தமிழ்னா பிறந்தது அவ்வளவு தப்பா>? உலகில் இருக்கும் எல்லா உயிர் இனத்துக்கும் நிம்மதி கிடைத்தாலும் எங்களுக்கு கிடைக்க விட மட்டார்கள் போல.. என விம்மி விம்மி அழுதாள் அமுதா?????? கடவுளுக்கு கூட கண் இல்லை போல... எங்களை மட்டும் மீண்டும் மீண்டும் சோதிக்கிறார்... என்ன பாவம் பண்ணினம்.. இன்றுடன் சாப்பிட்டு எத்தினை நாள் வயதான தாயை பார்த்தாள்..பாவம் வயதான காலத்தில் நிம்மதி கூட இல்லாமல் தெரு தெருவாய் ஒட்டம்... இன்று ஆவாது சாப்பாடு வாங்கி குடுக்க வேணும் என்று நினைத்த படி தன் பழைய நினைவில் நோக்கினாள்.. தனது 20வயதிலையே கல்யாணம் பண்ணிய அமுதா ஒரு வருசம் தன் கணவனுடன் இனியமாக சந்தோசமாக வாழ்ந்தாள்..அவளோட வசந்த காலம் எவ்வளவு இனிமையானது... விட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
--------------------------------------------------இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது ---------------------- ஒரு தரும் விடை தெரிஞ்சு சொல்லுற மாதிரி இல்லை அதனால் இந்த பதிவை தூக்கி விட்டேன்
-
- 22 replies
- 4k views
-
-
எஞ்சிக்கிடப்பது ஞாபகங்கள் மட்டுமே... - சாந்தி ரமேஷ் வவுனியன் - நேற்று முதல் ஒரு தொலைபேசியழைப்பு வந்து வந்து துண்டிக்கப்படுகிறது. யாரென்று அறிய முடியாமல் அந்த அழைப்பு மனதைக் கலவரப்படுத்துகிறது. 'please call me' என வந்த அந்த எஸ்எம்எஸ் யாரென்பதை இனங்காண முடியாமல் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அது யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அழைப்பு. 19வருடத்துக்குப் பின்னான தொடர்பாக அழைத்த அந்த அழைப்பு, ஒருபுறம் மகிழ்வும் இன்னொருபுறம் துயருமாக இருந்தது. 21வருடம் முதல் இறந்து போன சித்தப்பாவின் மகன் அவன். உறவுகளிடம் தேடி என்னை அழைத்திருந்தான். இந்திய இராணுவம் கொன்ற எனது சித்தப்பாவும் 5வயதில் நான் கண்ட என் சித்தப்பாவின் மகனும் நினைவில் வந்தார்கள். 1987 மழைக்கால நாளொன்றி…
-
- 15 replies
- 2.8k views
-
-
எனக்கு புரியவில்லை.... ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்; ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?} மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும் வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில்…
-
- 0 replies
- 747 views
-
-
புலி நான்!" பொறுப்புகள் இப்போதுதான் அதிகமாகின்றன! அப்பா இருக்கிறார் அவரெல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் எனத் தெம்பாக ஊர் சுற்றிய காலம் இனி இல்லை! அவருக்கு ஒரு சோதனை எனும் போதுதான் என் பணி இன்னமும் தீவிரமாகிறது! என்ன நிகழ்ந்தாலும் என் பிள்ளைகளுக்கு ஒன்றும் நிகழாது என வலம் வந்த அம்மாவால் இனி சும்மா இருக்க முடியாது! இப்போது இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது என்னுள் வேட்கை! தாய்க்குத் தலைமகனாக, தந்தைக்குச் செல்ல மகளாக இனி நானே தலையெடுக்க வேண்டும்! என் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டும்! அப்பா இப்பவும் எம்மிடையேதான் இருக்கிறார், இப்போதும் எமக்கு அவரே காப்பு என்பதைப் புரியவைக்க வேண்டும்! ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்! துவண்டுவிழக் கூடாது நான் இப்போது! …
-
- 1 reply
- 1.1k views
-
-
திருந்தா உள்ளங்கள் எம் தொப்புள் கொடி உறவுளகின் அவலங்களை இந்த சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் எம்மவர்களின் உரிமைப் போராட்ட நிகழ்வு ஒன்று ஆர்த்தி வாழும்நாட்டிலும் முன்னெடுக்கப் பட்டிருந்த செய்தியை அவள் அறிந்து அதில் தன்னையும் முழு ழூச்சாக அர்ப்பணித்தவள் மற்ரவர்களையும் அதில் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்பற்காகவும் பல இன்னல்கள் மத்தியில் தன் பள்ளிப் படிப்பையும் கவனிக்காது அயராத பணியை செய்ய தொடங்கினாள். இதனால் வீட்டிற்கு வரும் நேரம் தாமதமாகவே அவள் அம்மா அவளை பார்த்து உனக்கு சோதினை வருகுது சும்மா ஊர் உத்தியோகத்தில திரியுறாய் நாளைக்கு உதே உனக்கு சோறு போட போகுது.... சும்மா விட்டிட்டு உன்ர அலுவலை பார் என திட்டினாள். அவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒரு பேப்பரிற்காக சாத்திரி வழைமை போல நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் கதை அவித்துவிடப்போறன் இது எங்கடை ஊர் கோயில் தருமகத்தாவை பற்றினது. ஊரிலை சிலருடைய தனிப்பட்ட கோயில்களை தவிர பொதுவான கோயில்களை நிருவாகம் செய்ய ஒரு சபை இருக்கிறது வழைமை அதுபோலை எங்கடை ஊர்கோயிலையும் நிருவாகிக்க ஒரு தருமகத்தா சபை இருந்தது. அதிலை ஜந்து பேர் அங்கம் வகிப்பினம் ஒருத்தர் தலைவராயிருப்பார். அதுக்கடுத்ததாய் அவைக்கு உதவி சபை எண்டு ஒண்டும் இருக்கும் அதிலை பத்துப்பேர் அங்கத்தவராயிருப்பினம். எங்கடை நாடு சனநாயகத்தை பெரிதாய் மதிக்கிற நாடு எண்டதாலை (சந்தியமாய் நான் மகிந்தாவின்ரை ஆளில்லை) எங்கடை ஊர் கோயில் நிருவாகமும் சனநாயக முறைப்படி இரண்டு வருசத்துக்கொரு தடைவை தேர்தல் வைச்சு எங்கடை ஊர்…
-
- 16 replies
- 2.7k views
-