Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. [size=4]ஆகஸ்ட் 6, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ’பியர்ல் ஹார்பர்’ (Pearl Harbor) தாக்குதல் மூலம் தன் நாட்டை சிதைத்த ஜப்பானை பழிக்குப்பழி வாங்க அமெரிக்கா தொடை தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்க விமானப்படை முதன்முதலாக அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசியது. நொடிப்பொழுதில் பேரழிவு. புழுதி அடங்கியதும் பார்த்தபோது ஒரு லட்சத்து நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்திருந்தார்கள்.[/size] [size=4]சடாகோ சஸாகிக்கு அப்போது வயது இரண்டு. குண்டு வீசப்பட்ட இடத்துக்கு ஒரு மைல் தூரத்தில்தான் அவளது வீடு இருந்தது. அணுகுண்டின் வீரியத்தால் பூகம்பம் வந்ததுபோல அவளது வீடு அதிர்ந்தது. சஸாகி ஜன்னல் வழியாக தூக்கியெறியப் பட்டாள். அவளது அம்மா…

    • 2 replies
    • 2.4k views
  2. நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்த செயல் நோக்கின் சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கை இது என்றேன்! -கங்கையில் விடுத்த ஓலை வணக்கம், இது மனித வாழ்க்கையிண்ட மறுபகுதி. பலர் சிந்திக்க விரும்பாத, அறிஞ்சுகொள்ள விரும்பாத பகுதி. மரணத்தின் பின்னர் இடுகாட்டுக்கு போவதுவரை என்ன நடக்கிது எண்டு கீழ் உள்ள விபரணச்சித்திரம் சொல்லிது. ஏழு பகுதிகள் இதில இருக்கிது. மொத்தமாக சுமார் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் நீளமான கதை இது. நேரம் கிடைக்கும்போது இவற்றை முழுமையாக பார்ப்பது எங்கட குடும்பங்களில, உறவினர்கள், நண்பர்களிற்கு... அகாலமான காலம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள, சரியான முறையில செயற்பட்டு இறுதிக்க…

  3. சத்தியவானுக்கு ஒரு சாவித்திரி இந்த சத்திய பாமாவிற்கோ தினம் சாவே ராத்திரி விரைவில் யாழ் இணையத்திற்காய் .. . . . ஈழத்துக் கருவாச்சி நேற்று கருவறையில் நாளை கல்லறையில் இன்றைய வாழ்க்கையை இனிதே வாழ்ந்திடு என்ற வாசகத்தை பொய்யாக்கி கருவறை தொடக்கம் கல்லறை வரை கந்தையாய் கசங்கியவளின் உண்மைக்கதை. . . விரைவில் . . . . அன்று காதலுடன் எங்கிருந்தாய் மண்ணில் பிறக்கையிலே என்று வந்தேன்.. . . இன்று ஈழத்துக் கருவாச்சியுடன் வருகின்றேன். . . . கரவையில் தோன்றி நீர்வேலியில் மறைந்த கருவாச்சிதான் இவள். . .ஆம் ஈழத்துக் கருவாச்சி. . . இழப்புகளையே எருவாக்கி விருட்சமாக எழ நினைத்தவள். . . வேரறுந்த போது விசமருந்தி மாண்டு விட்டாள்.. . .

  4. பாகீரதி... பாகீரதி... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: அரஸ் 'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. 'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்…

    • 1 reply
    • 2.4k views
  5. ஜெர்மன் விசா - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம் ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சையில் சித்தியடையாதது, காதல் தோல்வி, அம்மா ஏசியது, அப்பா அடித்தது, கடன் தொல்லை, விரோதிகளின் சதி... இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். நான் வீட்டைவிட்டு ஓடியதற்குக் காரணம் ஓர் ஆடு. வீட்டைவிட்டு மட்டும் அல்ல; நான் நாட்டைவிட்டே ஓடினேன். அதைச் சொன்னால் ஒருவருமே நம்புவது இல்லை. ஆகவே, அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? வருடம் 1979. எனக்கு வயது 15. நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் முதலாவதாக வராவிட்டாலும், ‘நீ சுயமாகச் சிந்திக்கிறாய்’ என்று வாத்தியார் என்னைப் பாராட்டியி…

  6. சந்தியா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் - புவனா ஸ்ரீதர் விமானம் ஒரு மணி நேரம் தாமதம். அதுவரை மொபைல்தான் துணை. ஃபேஸ்புக்கில் சந்தியா புகைப்படத்துக்கு லைக் போட்ட படி, ‘எப்படி இருக்க வேண்டியவ... அடையாளம் தெரியாத அளவு மாறிட்டா...’ என நினைத்துக் கொண்டேன்.. சந்தியாவைப் பார்க்கத்தான் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நானும் என் எட்டு வயது மகளும் பயணப்படுகிறோம். அப்படியே சந்தியாவின் நினைவில் மூழ்கினேன்... இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு. சந்தியாவுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்ட் கிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனிக்குத் தேர்வானோம். சந்தியா, வசதியான குடும்பத்தில் ஒரே பெண். என் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவேண்…

  7. யாழ்ப்பாண சமையல்: பல வருடங்களின் பின் இம்முறை தான் அம்மாவின் சமையலை சாப்பிட்டது போலிருந்தது……... பொதுவாக எல்லா உணவுகளுமே ருசியாகத்தான் இருந்தது……..காலையில் உப்புகஞ்சி, அவல், பயறு, களி, கடலை, பால்பிட்டு, இடியப்பம்…….சிலநேரம் ரோஸ்ட்பாணுக்கு Anchor பட்டர் பூசி சாப்பிடுவேன் நன்றாக இருக்கும் ... சிறுவயதில் காலை சாப்பாடு எப்பவுமே பாண்தான் அதற்கு Australian பட்டர் பூசி, அதன் மேல் சீனி தூவி அம்மா தருவது வழக்கம், அதை பால்டீயுடன் சாப்பிட்டால் அப்படியே பட்டருடன் சீனியும் கடிபட…...அந்த ருசி இன்னமும் என்நாக்கில் இருக்கிறது. எனக்கு…..பட்டர் என்றால் கெலி அதுமட்டுமல்ல Nespray யும் கூட…….கள்ளத்தனமாக கைவிரலால் கிள்ளி சாப்பிடுவேன்,…….மேலும் மத்தியானம்….குத்தரிசி, சம்பா அரிசி சோறு…..…

    • 2 replies
    • 2.4k views
  8. பாம்பு - சிறுகதை சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம் வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’ அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம். உ…

  9. பைக்குகளின் மேல் எனக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சகலகலா வல்லவன் படத்தில் தலைவரின் "இளமை இதோ இதோ"வில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். சென்னையில் வசிக்கும் இளைஞர்களை பலநேரங்களில் காக்கும் கடவுள் அவர்களது பைக்குகள் தான். சொன்னால் நம்பமாட்டீர்கள் என் பைக் நான் சொல்லும் பேச்சை கேட்கும். என்னுடனும் திரும்ப பேசும். "மச்சி இன்னைக்கு பவுர்ணமி. மகாபலிபுரம் போகணும். அப் அண்டு டவுன் 100 கி.மீ. பத்திரமா போயிட்டு வந்துரலாமா" என்று கேட்டால் "பட்டையக் கிளப்பிடலாம் மாமு" என்று பதில் சொல்லும். அஃறிணைகளோடு பேசும் பழக்கம் எனக்கு எப்போது வந்தது என்று நினைவில்லை. தினமும் வீட்டுக்குள் நுழையும்போது கழட்டி விடும் என் செருப்புக்கோ அல்லது ஷூவுக்கோ மனதுக…

  10. மான்டேஜ் மனசு 17: மௌன ராகம் - காதலின் பேசாமொழி! அலுவலகத்தில் வழக்கமான பணி நிமித்தங்களுக்கிடையே நண்பர் சராவுடன் பேசிக்கொண்டிருந்ததில் சினிமா பற்றிய பேச்சு வளர்ந்தது. டாபிக்கல் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் மிஷ்கின், செல்வராகவன், மணிரத்னம் பற்றிப் பேசாமல் சினிமா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை. 'மௌன ராகம்' வெளியாகி 30 வருடங்கள் ஆனதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனக்குப் பிடித்த டாபிக் பற்றிப் பேசும்போது நீங்கள் சராவை உற்று கவனிக்கும் தேவை இருக்காது. ரொம்ப சாதாரணமாக ஒரு வித அலாதி ஆர்வத்துடன், எக்ஸைட்மென்ட்டுடன் சரா பேசுவது பிடித்தமானதாக இருக்கும். சமயங்களில் அவர் சுட்டிக்காட்டும்…

  11. Started by ukkarikalan,

    பா. இராகவன் எழுதிய கொசு என்னும் தொடரை வாசிக்க கிடைத்தது. அதனை உங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். *************** அத்தியாயம் ஒன்று கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன. "பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்ச…

    • 9 replies
    • 2.4k views
  12. 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதி ஒரு சனிக்கிழமை காலை நேரம் வேலையில் நிண்டு கொண்டிருந்த எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு "ஹலோ நான் ஜொனிகதைக்கிறன் உங்க university க்கு முன்னால தான் நிக்கிறன்" " நான் u .k la இருந்து விடுமுறைல இங்க வந்திருக்கன் என் நண்பன் ஒருவனை தேடி வந்தன் இப்போது அவனின்ட தொடர்பும் அட்ரஸ் ம் இல்லை எனக்கு தங்குவதற்கு கூட இடம் இல்லை நடுதெருவில நிக்கிறன்" என்ன செய்கிறதெண்டு தெரியல எண்டு அழுவாரை போல சொல்லி கொண்டே போனது மறுமுனை எனக்கோ யோசனை லண்டன்ல இருந்து ஒருத்தன் வாரான் இவ்வளவு தூரம் அட்ரஸ் போன் நம்பர் ஏதும் இல்லாமலா ஒருவரை தேடி வருவான் சரி எதற்கும் வேலை முடிச்சு போய் கதைப்பம் எண்டிட்டு அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு அவனின் சொந்த இடங்களை பற்றி விசாரிச்சன்…

  13. Started by anni lingam,

    அவளைநான் பார்க்கவில்லை.எனக்கு தெரியவும் தெரியாது.நிறம் அதுவும் தெரியாது.ஆனாலும் அவளுக்கு நான் வைத்த பெயர் ஓவியா.பதினாறு வருடங்கள் பின் நோக்கிபார்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------ 1997.எதோ ஒரு மாதத்தின் எதோ ஒருநாள்.விடிகாலை பொழுது.காந்தன் அவளின் வருகை கருதி அழகாய் அமைத்திருந்த தன் வீட்டில் அவளின் கனவுடன்.தொலைபேசி-காதில் வைத்தான். அவளேதான்.அத்தான் நான் உக்ரைன் நாட்டிற்கு வந்திட்டேன்.எனக்கு பிரச்சனை இல்லை.நீங்கள்என்ன செய்கிறிங்கள்.தேன்வந்து பாய்ந்தது காந்தனின் காதிலே .காந்தனுக்கு சிறு வயதில் இருந்தே பேசிவைக்க பட்ட பெண் அவள்.மச்சாள்.சுவிஸ் வந்தநாள் முதல் அவளின் நினைவில்…

    • 25 replies
    • 2.4k views
  14. சயனைடு - சிறுகதை ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம் சயனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை. மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்க…

  15. லால் அங்கிள்.. கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.லாலிற்க்குப் பயந்து லாலின் முன்னால் அவர்…

  16. ஊருக்குப் போனேன்- பாகம் 4 (இறுதிப் பாகம்) -வாசுதேவன் இதுதானா என் வீடு ? இத்தனைவருட காலமாகக் காணக் கனவு கண்டு கொண்டிருந்த என் வீடு இதுதானா ? முற்றத்தில் தென்னைமரமில்லாமல், வேப்பமரமில்லாமல்,வேலியில் பூவரசமரமில்லாமல், கடதாசிப்பூக்கள் இல்லாமல், முருங்கைமரங்கள் இல்லாமல், புல்பூண்டு சூழக் கிடந்த இது என் வீடா ? என் வீட்டிற்கு வடக்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அதையடுத்து இன்னும் பல வீடுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து பனங்கூடல் இருந்ததே ? என் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது . அதைத்தொடர்ந்து இன்னும் பல வீடுகள் இருந்தன. என் வீட்டு வேப்பமர உச்சியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் வீடுகள் இருந்தனவே ? என் வீடு என்பது நாற்திசையும் பரந்திர…

    • 9 replies
    • 2.4k views
  17. Started by நவீனன்,

    பாகுபலி 2 - ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அந்த வீட்டு வாசல் அருகேயிருந்த வேப்ப மரத்தடியில், காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கியவுடன், எனது கிளிப்பச்சை நிற சில்க் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டேன். வேட்டியை இறுக்கிக் கட்டியபடி கார்க் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கால்வாசி வளர்ந்து, பின்னர் தனது வளர்ச்சியை நிறுத்தியிருந்த மீசையை ஒரு முறை தடவி விட்டுக்கொண்டேன் கழுத்தில் மாட்டியிருந்த செயினிலிருந்த புலிநக(?) டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு, புரோக்கரிடம், “எப்படி இருக்கேன்?” என்றேன். “உங்களுக்கு என்னண்ணே... அப்படியே ‘வின்னர்’ வடிவேலு மாதிரியே இருக்கீங்க...” என்று கூறிய புரோக்கரை முறைத்தபடி, “இந்தப் பொண்ணுக்காச்சும் என்னைப் பிடிக்குமாய்யா?” …

  18. பதினொரு பேய்கள் அ. முத்துலிங்கம் ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்? யாழ்ப்பாணத்தில் மாத்த…

    • 2 replies
    • 2.4k views
  19. Started by nedukkalapoovan,

    அன்று கடும் வெக்கையாக இருந்ததால் மாலைக் காற்றின் ஈரலிப்பில் களித்திருக்க வீட்டுத்தோட்டத்துக்கு வந்த நந்தினி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கூலா ஒரு கோலா குடிக்க ஆரம்பித்திருந்தாள். அப்போது அவள் அருகே இருந்த செவ்வரத்தையில் இரண்டு சிட்டுக்குருவிகள் அருகருகே இருந்து அலகுகளால் ஒன்றை ஒன்று கோதியபடி காதல் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து வியந்து கொண்டே ஆகாயத்தைப் பார்த்து வெறித்துக் கொண்டாள். அப்போது வீட்டு கேற்றடியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஓ.. சங்கர் வந்திட்டார் போல. அவருக்கும் ஒரு கோலா எடுத்துக் கொண்டு வந்து வைப்பம்.. களைச்சு விழுந்து வந்திருப்பார் என்று எழுந்து நடக்க முயன்றவளுக்கு சங்கரின் அவசரத்துடன் கூடிய அதட்டல் காதில் விழுந்தது. நந்தின…

  20. நித்திரை கொண்டிருப்பதே தெரியாமால் கொண்டிருந்த நித்திரை தானாகவே அவனை குழம்பியது.இருட்டில் இப்ப நேரம் என்ன என்று திண்டாடி சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்த கம்பிகளை அனுமானிக்க கண்ணை கொண்டு எத்தனை சித்து விளையாட்டுகள் செய்தாலும் முடியவில்லை.கொஞ்ச நாளாக இப்படித்தான் கொஞ்ச காலமாக குழப்புகிறது இந்த நேரத்தில் அந்த நேரம் தான் இப்பவாக இருக்க கூடும் என்று நினைத்தவன் . என்ன நேரமாக இருந்தாலும் வழமையாக எண்ணங்களோடு போராடி கொண்டு நித்திரைக்கு முயன்று திருப்ப படுப்பது போல இன்று செய்வதில்லை என்று தீர்மானித்தான்.சோம்பலை கஸ்டப்பட்டு முறித்துக்கொண்டு தூரத்தில் சுவரில் இருந்த சுவிட்சை தடவி தேடி அமிழ்த்தினான் .வெளிச்சமும் அவனைப் போலவே சோம்பலை முறித்து கொண்டு எழும்புவது போல மெது மெத…

  21. இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்..... (இந்தவார ஒருபேப்பரிற்க்காக எழுதியது) பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்க…

  22. அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது. அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வரும் மகனையும், மருமகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, “எம் பையனுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு ஜாதகத்துலே இருக்கு. முதலாவதா நீ வந்திருக்கே, அடுத்தது யாரோ?” என்றாள். இது ஏதோ பெரிய ஜோக் மாதிரி சுற்றியிருந்த உறவு வட்டாரம் சிரிக்க, புதுப்பொண்டாட்டியின் முகம் ஒரு நொடி கடுகடுத்து, அடுத்த நொடியே சம்பிரதாயமாக சிரித்து…

    • 3 replies
    • 2.4k views
  23. சில வருடங்களுக்கு முன்னர் யாழில் தான் நான் முதன் முதலில் கதை எழுத ஆரம்பித்தேன்...இப்பொழுது என்னுடைய சிறுகதைகளில் ஒன்று தாயகபறவைகள் இதழில் வெளியாகி உள்ளது... இந்த கதையும் யாழுக்கே சமர்ப்பணம்... தொடர்ந்து வாசிக்க....: http://thayakaparavaikal.com/stories.php

  24. சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான். “வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?” “ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான். கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!” ”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!” “ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!” பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது. “சாரி சரவணன்.…

    • 4 replies
    • 2.4k views
  25. Started by sathiri,

    த.ஈ.வே.வெ.வெ........ இந்த வார ஒரு பேப்பரிற்காய் எனது அனுபவ தொடரின் ஒரு நினைவு என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு. எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் வழைமையாக பூசை முடிந்ததும் பஞ்சாட்சரம் என்று ஒருவர்தான் சுண்டல் புக்கை மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியபிரசாதங்களை கொடுப்பார் கோயில் பூசை முடிந்து அய்யர் விபூதி சந்தணம் கொடுத்து விட்டு பே…

    • 12 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.