Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அந்தரச் செடி - சிறுகதை விஷால் ராஜா - ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகம் முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, எதிர்வீட்டு வாசலில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதைக் கவனித்தேன். அந்த இடத்தில் இரைச்சலோடுகூடிய பதற்றமான அசைவுகள் தெரிந்தன. எனக்கு முதலில் அக்கறைகாட்டத் தோன்றவில்லை. கூட்டத்தை விலக்கிச் சென்ற ஒருவர், கடப்பாரையால் கதவை உடைத்துத் திறக்க முயல்வதைக் கண்டதும்தான் எனக்கும் தீவிரம் உறைத்தது. பைக்கை நிறுத்திவிட்டு அங்கே சென்றேன். வாசல் தூணையொட்டி பிரமைதட்ட நின்றிருந்தார் வீட்டுக்காரர். குழப்பத்திலும் பயத்திலும் எதையோ பற்றிக்கொள்ளத் தேடுவதுபோல் அவர் கண்கள் அகல விரிந்திருந்தன. அத்தனை பெரிய ஆகிருதி கையறுநிலையில் நிற்பதைப் பார்க்கவே கூசியது. நிர்க்கதி மிகுந்து பரித…

  2. நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள். ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். "நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா…

  3. Started by கிருபன்,

    சனல் – 4 – வெற்றிச்செ்ல்வி (”காணாமல் போனவனின் மனைவி” சிறுகதை தொகுப்பு, சோழன் படைப்பகம், 2012, இந்தியா) சனல்-4 கானொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகுந்தாவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அவள், அறியாத, காணாத, கேள்விப்படாத மரணங்களா அதில் புதிதாக இருந்துவிடப் போகின்றன? யுத்தம் முடிந்ததாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டாலும்; அவள் கண்ட பிணங்களின் கோலங்கள் மட்டும் நினைவில் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. அழிக்க முடியாத பதிவுகளாய் மூளையில் பதிந்துவிட்ட அவை மரணம் தாண்டியும் அந்த ஆத்மாவை அமைதியாக வாழ விடுமா தெரியவில்லை; மறந்துவிட வேண்டும். கொஞ்ச நாட்களுக்காகவாவது மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். முடிகிறதா? இதோ நிமலன் தொலைப…

  4. மனவலி யாத்திரை.....! - சுதந்திரா - அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் என்னை அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிக…

  5. Started by Kavallur Kanmani,

    மலரே மௌனமா? வசந்தகால ஆரம்பத்தின் இதமான குளிர்காற்று உடம்பைத் தழுவ புரண்டு படுத்த பிரியாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. இதுவரை தூங்கியது கூட கோழித் தூக்கம்தான். மனதில் விவரிக்க முடியாத விநோதமான உணர்வுகளின் சங்கமம். இன்று தன் மனதுக்கினியவனுக்கு இன்ரவியூ நடக்க இருக்கிறது. அதனால்தான் அவள் மனதுக்குள் பயம் கலந்த மகிழ்ச்சி. காரணம் தன் பெற்றவருக்தும் உடன் பிறப்புகளுக்கும் தெரியாமலே தன் மனம் கவர்ந்த பிரசாந்தை பொன்சர் செய்திருந்தாள்;. இச் செய்தி வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று மிகக் கவனமாகவே செயற்பட்டாள்;. தனது வீட்டிலிருந்து போன் எடுக்காமல் தன் நண்பியின்; வீட்டிலிருந்துதான் பிரசாந்திற்கு போன் எடுப்பது கடிதத் தொடர்புகூட நண்பியின் வீட்டிற்கு வரு…

  6. Started by சுபேஸ்,

    ஈரம். வவுனியா முகாமிலிருந்து விடுதலையான லட்ச்சுமி அத்தையையும் மகள் கவிதாவையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார் முருகனின் அம்மா. பிடிவாதமாக யாழ்ப்பாணத்திற்கு வரமறுத்து பாலியாத்திற்க்குப் பக்கத்தில் இருந்த அவர்கள் வீட்டிற்க்குப்போக இருந்தவர்களை முருகனின் அம்மாதான் மிகுந்த வாக்குவாதத்தின் பின்னர் மனதை மாற்றிக் கூட்டிவந்திருந்தார். முருகனின் அம்மாவின் ஆக்கினையால்தான் லட்ச்சுமி அத்தை அந்த ஊரிற்க்கே வருவதில்லை என்ற தனது கொள்கையை விட்டுக் கொடுக்கவேண்டியிருந்தது. எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்தும் நம்பிக்கையை இழ…

    • 6 replies
    • 2.2k views
  7. கடைசி பேட்டி 1 ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான். உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான். வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே…

    • 4 replies
    • 2.2k views
  8. எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில்…

  9. பரந்து விரிந்து கடல்,கரை கழுவிச் செல்லும் அலைகள்,வளைந்து நெளிந்த தென்னைகள்,இருந்த தென்னைகளுல் ஓங்கி நேராய் வழர்ந்த தென்னைகள் அதிகம்.கவிட்டு வைத்த படகுகள்,என்னதான் கடலோடு நீந்தி வந்தாலும் கவிட்ட பின்னே மணல் ஒட்டித்தான் கிடந்தது.தொடை தெரிய மடித்து கட்டிய சாரம்.தோளில் ஒரு தும்புத்துவாய்.ஏதொ மகாறாஜா தோரணையில் நடை. அந்தோனிபிள்ளையார் படகுகளூடு மணலில் கால் புதைய புதைய நடக்கையில் சிப்பியும், ஊரியும் ஈரபாதத்தை உறுத்தினாலும், உரத்துப்போன பாதத்தோலை ஊடறுக்க முடியாது மண்ணுல் புதையுண்டு கொண்டிருந்தன. சின்னையன் இப்பத்தான் கொண்டுவந்தது,ஒரு பொரியல் ஒரு குழம்பு வைச்சால் போதும்.2 முட்டையையும் அவிச்சு விடு.மணி ஆறாகுது,தம்பிமார் வரப்போறங்கள், மினக்கெடாமல் சமையலை முடி என்ன, நிக்கிலசை வ…

    • 9 replies
    • 2.2k views
  10. அண்மையில் உளுறு என்ற மத்திய அவுஸ்திரெலியாவின் நகரமொன்றுக்கு சென்றிருந்தேன். மாலைநேரம் அங்கு தங்கிய விடுதியில் இருந்த நீச்சல் குளமொன்றினைச் சுற்றி அமைந்துள்ள கதிரையொன்றில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். ஒரு 7 வயதுடைய அவுஸ்திரெலியா ஆதிவாசிகளின் இனமான அபோரிஜினல் இனத்தினைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி , ஒரு வெள்ளைக்கார சிறுவனுடன் நீரினில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுவனுக்கும் 7 வயது இருக்கும். அவர்களின் உரையாடலின் மூலம் அச்சிருமியை, வெள்ளைக்காரக் குடும்பம் சொந்தப்பிள்ளையாக வளர்த்து வருவதை அறிந்தேன். சிறுவனும் சிறுமியும் அங்குதான் முதலில் சந்தித்ததை உணர்ந்தேன். அவர்களின் உரையாடல்களில் சில சிறுவன் - அவுஸ்திரெலியா தினத்தினை நீ கொண்டாடுகிறாயா?. சிறுமி --…

  11. ஒளி வளர் விளக்கு - சிறுகதை காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம் அனு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இ…

  12. Started by நவீனன்,

    மறுமணம்! மொட்டை மாடியில் அமர்ந்து, நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த சவிதா, தன் தோளில் கை படவே, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். பால் டம்ளருடன் நின்றிருந்தாள், அம்மா. ''என்னம்மா மாடிக்கே வந்துட்ட... ஏதாவது பேசணுமா...'' என்றாள் அமைதியாக! அம்மா என்ன பேசப் போகிறாள் என்பது அவளுக்குத் தெரியும். ''தனியாக பேச என்ன இருக்கு சவி... இந்த வீட்டுல எப்பவும் நீ தனியா தானே இருக்கே... எல்லார்கிட்ட இருந்தும் உன்னை நீ தனிமைப்படுத்திக்க ஆரம்பிச்சு வருஷம் ஒண்ணாச்சு...'' என்றதும், அமைதியாக அம்மாவை பார்த்தாள், சவிதா. ''இல்ல... அந்த பையன் அருண் வீட்டிலிருந்து போன் பண்ணிட்டே இருக்காங்க... என்ன பதில் சொல்றதுன்னு தெரி…

  13. இட்லிக்கடை - சிறுகதை மனுஷி பாரதி, ஓவியம்: எஸ்.ஏவி.இளையபாரதி வயிற்றுக்கு மட்டும் எப்படித்தான் பசி என்கிற மணி மிகச்சரியாக அடித்துவிடுகிறதோ? எங்காவது இட்லிக் கடையில் சாப்பிடலாம் எனக் கண்களை மேயவிட்டபடியே போய்க் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட தெரு முழுக்க பெட்டிக்கடைகள், பானிபூரி கடைகள் நிறைந்திருந்தன. ஆனால், எல்லாமே பூட்டப்படுவதற்கு ஆயத்தமாக இருந்தன. ஒன்றிரண்டு டீக்கடைகளிலும் ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டிருந்தார்கள். மீன்குழம்புடன், மெத்தென்ற இட்லிக்கு நாக்கு ஏங்கிக்கொண்டிருந்தது. அஜந்தா சிக்னல் வளைவில் மிக உயர்ந்த ஸ்டார் ஹோட்டல் புதிதாக முளைத்திருந்தது. பத்து வருடத்துக்கு முன்பு அங்கே ஒரு திரையரங்கம் இருந்ததாக நினைவு. அஜந்தா சிக்னல் என்ற பெயரும்கூட, …

  14. இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்ப…

  15. ஆகாசப் பூ - சிறுகதை பிரபஞ்சன், ஓவியங்கள்: ஸ்யாம் அவள் புரண்டு படுத்தாள். இப்போது எல்லாம் இப்படி அடிக்கடி புரண்டு புரண்டு படுத்து, அறுந்துபோகும் உறக்கத்தின் இழையைத் துரத்திச்சென்று விடியும் வரை அவஸ்தைப்பட வேண்டியிருந்தது அவளுக்கு. மூன்று மூன்றரை மணிக்கு, இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். காதுகளுக்கு அருகில், விளங்காத சத்தங்கள், மொழிச்சொற்கள், யாரோ பக்கத்தில் இருந்துகொண்டு பேசுவதுபோல. என்ன பேசுகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை. ஏறக்குறைய உறக்கத்தில் ஆழ்ந்தாள். உலகம் விடிந்துகொண்டிருந்தது; சத்தமாகத் தெரிந்தது. பால் வெளிச்சம் படரும்போது, தோட்டத்து மரங்களில் இருந்து பறவைகள் பேசத் தொடங்கிவிடும். உணவுவிடுதிக்குக் கறந்து தர மாடுகள் நடக்கும் ஓசை, பால…

  16. எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்வது அதன் நிழலில்தான். அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு கோபம் இருந்தது. அம்மாவிற்கு கோபம் வரும் பொழுதெல்லாம் என்னை அடிப்பதற்கு கையில் எதாவது குச்சி கிடைக்காதா என்று தேடும்பொழுது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பது அந்த முற்றத்து வேம்பு மரக் குச்சிதான். குச்சி கையில் கிடைத்து விட்டால் அவ்வளவுதான் முட்டிக்கு கீழ் வீங்கிவிடும். இதற்காகவே நான் என்ன செய்தேன் தெரியுமா? கைக்கெட்டும் கிளைகளை எல்லாம் அம்மாவிற்கு தெரியாம வெட்டி விட்டேன். அதற்கும் குச்சி சிதற சிதற வாங்கி இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் அந்த மரம் எங்களுக்கு …

  17. Started by putthan,

    மறக்காமல் வெள்ளிகிழமை பின்னேரம் ஏழு மணி போல் ஒருக்கா வீட்ட வாரும் தம்பி என்று மணி அண்ரி சொன்னவுடன் சுரேஷ் ஏன் ஏதாவது விசேசமா அண்ரி என்றான்..அப்படி ஒன்றுமில்லை நீ வா,காரணத்தை சொன்னா தேவை இல்லாம அலட்டுவாய் ஆனபடியா நீ வெள்ளிகிழமை மனிசியையும் பிள்ளைகளையும் கூட்டி கொண்டு வா. மணி அண்ரி சுரேஷின் அம்மாவின் தோழி.இப்பொழுது சிட்னியில் மகள் சும்தியுடன் வாழ்ந்து வருகிறா கணவன் மூன்று வருடங்களிற்கு முன் சிவபதம் அடைந்து விட்டார்.ஹரிதாஸ் சுவாமிகள் என்றால் மணி ஆண்ரிக்கு உயிர் ஊரிலே பஜனைகளை பூசைகளை என்று வைத்து தனது பக்தியை ஊர்மக்களுக்கு வெளிபடுத்து கொண்டிருப்பா ஊரில் சிலர் மணி ஆண்ரியை பஜனை ஆண்ரி என்று நக்கலாகவும் கூறுவதுண்டு.அதில் சுரேஷும் ஒருவன். ஹரிதாஸ் சுவாமிகள் பற்றி கதைக்க வ…

    • 8 replies
    • 2.1k views
  18. ஞாபகம் சொல்ல எவருமில்லாமல் துர்க்கையம்மன் வீதி. ஞாபகங்கள் தாங்கிய கையெழுத்துக்கள் சேர்த்து வைப்பதிலும் ஒவ்வொருவரின் ஞாபகமாக எதையாவது சேர்ப்பதில் பெரியதொரு நிறைவு.அப்படிச் சேர்த்து வைத்த கையெழுத்துக்களும் , ஞாபகப்பொருட்களும் நாட்டுக்குள்ளேயே தொடர்ந்த இடப்பெயர்வுகளுடனும் , புலப் பெயர்தல்களுடனும் ஒவ்வொன்றாய் தொலைந்து போய் விட்டது. அது 1991ஜனவரி மாதம் வாணி கல்வி நிலையத்தில் கால் வைத்த போது முதல் அறிமுகம் மதி, அவன்தான் முதல் அறிமுகமாய் மேசையொதுக்கி இடம் தந்தவன். அதன் பின்னர் துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா என அடுத்தடுத்து வந்த உறவுகள். எல்லோரின் நினைவுகளும் நெஞ்சுக்கு…

    • 3 replies
    • 2.1k views
  19. அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும் கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ அது வேறு மொழி போல காற்றில் பரவி கரைந்து கொண்டிருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post.html

    • 6 replies
    • 2.1k views
  20. துரோகம் தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன். பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர். ‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காக…

  21. அது ஒரு மரண வீடு அதுக்குத்தான் போய் விட்டு வந்தேன் .அதனால் தான் என்னவோ மனசு என்னமோ மாதிரி இருக்கு. இறந்தவன் வேண்ட பட்டவனோ அல்ல.இருக்கும் பொழுது ஒரு நாளும் கண்டதில்லை .அவனை முதல் முதலாக பிணமாக பார்க்க வேண்டிய எனக்கு ஏதோ எழுத்து போலும்,எனக்கு வேண்ட பட்டவருக்காக போயிருந்தேன் , மனசுக்கு என்னமோ மாதிரி இருந்தது இறந்தவனை பார்த்து அல்ல, அந்த மரண வீட்டு சடங்கு நடக்கும் சூழல் போய் விட்டு வந்தாலே ஒரு மாதிரி இருக்குமோ என்னவோ. இறந்தவன் இள வயதுக்காரன் என்ற படியால் அகலா மரணம் என்று நினைக்கலாம் ,அப்படி இல்லை வருத்தம் வந்து தான் இறந்து இருந்தான் . இது பற்றிய விசயங்களை நானே தேடி கேட்க வேண்டியதில்லை . அங்கு வந்தவர்களே பேசி கொண்டார்கள். அவர்களுக்கு தான் பேசிக்கொள்வதற்க்கு உந்…

    • 6 replies
    • 2.1k views
  22. வீரப்பனிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்...! - ஒரு கலகல கடத்தல் அத்தியாயம் ஒரு முறை வீரப்பன் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, மூன்று கோடி ரூபாய் அரசாங்கத்திடம் கேட்கிறார். பல நாள் காத்திருந்த அரசாங்கமும், அவனுக்கு பணம் கொடுக்க ஒரு கட்டத்தில் சம்மதித்துவிடுகிறது. பணம் கொடுக்க வருபவரின் அடையாளம் வெள்ளை சட்டையும், ஒரு இருச்சக்கர மோட்டார் வாகனமும்தான். அந்த காட்டிற்கு மத்தியில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் பாதையில், வீரப்பனும் அவனது கூட்டாளிகளும், பணத்தை பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். அப்போது, அந்த சாலையில் ஒருவர் மிதிவண்டியில் தண்ணீர் பானைகளைக் கட்டிக் கொண்டு செல்கிறார். அவரை ஊன்றி கவனித்த வீரப்பனுக்கு சந்தேகம் வரு…

  23. வேண்டுதல் சிறுகதை: விமலாதித்த மாமல்லன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு கிழவர் படுத்த படுக்கையாகி அன்றோடு ஆறாவது நாள். பாத்ரூம் போகக்கூட எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே இருந்துவிட்ட அன்றே, எல்லோருக்கும் சொல்லிவிடுவது எனப் பெண்ணும் மாப்பிள்ளையும் முடிவுசெய்துவிட்டார்கள். கிழவரைப் பார்த்துக்கொண்டது என்னவோ இளைய பெண்தான் என்றாலும், அவள் இருந்தது அவர் வீட்டில். இளையவள் சொந்தத்திலேயே மணமுடித்து இருந்ததால், அவர் வீட்டிலேயே சுவாதீனமாய் மாப்பிள்ளையும் தங்கிவிட்டார். அவர் பார்க்கும் வேலைக்கு அதைப்போல இரண்டு வீடுகளை வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அக்கம்பக்கத்தில்கூட பெரிய வம்பு எதுவும் எழவில்லை. இன்னும் இருந்த இரண்டு…

  24. கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன் என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. – த.அகிலன்- – 01- அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் என்றும் சொல்ல முடியாது, படகுகள். துரதிஸ்டவசமான உண்மையென்னவெனில் யுத்தபூமிகளிலிருந்து தப்பிப்பதற்கு பலரிடமுமுள்ள முதல் தெரிவாகவும் வாய்ப்…

  25. Started by sathiri,

    நான் யாழில் புலம்பெயர் தேசத்தில் நடந் உண்மைச்சம்பவங்கள் பலவற்றை முன்னர் கதையாக்கியிருந்தேன் அவற்றின் பதிவுகள் வைத்திருக்கவில்லை இந்தக் கதையும் நான் யாழில் போட்டிருந்ததுதான் இன்று கூகிழில் மேய்ந்த பொழுது இந்தக் கதை கிடைத்தது இப்போ பல புதியவர்கள் யாழில் இருப்பதால் திரும்ப இதை இணைக்கிறேன் நன்றி புதன்கிழமை, 31 ஆவணி 2005 யாழ் பட்டால்த்தான் கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். "எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன். எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி... அதுக்கு பிறகு நாலு நாளா ஆளைக் காணேல்லை. உன்ரை கான்ட் போனுக்கும் அடிச்சுப்பாத்தன். வேலை செய்யேல்லை. என்னடா உன்ரை கோல…

    • 8 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.