Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by Surveyor,

    சேற்றுழவு முடிந்ததும், வயலில் பரம்புக் கட்டையை வைத்து பரம்படித்துக்கொண்டிருந்தான் முருகேசன். பரம்படிப்பு இன்றைக்கு முடித்தால்தான், நாளைக்கு நாற்று நடவை ஆரம்பிக்க முடியும். வாய்க்காலில் தண்ணீர் ஓடும் போதே, நடவை முடித்துவிட்டால், தண்ணீர் பிரட்சனை வராதல்லவா..... காளை மாடுகள் இரண்டும் பரம்புத்தடியை இழுத்துச் செல்ல, பரம்புத் தடிமீது ஏறி நின்று கொண்டான் முருகேசன். ஏதோ விமானத்தில் பறப்பது போல் இருந்தது முருகேசனுக்கு. உன்மையில் விமானத்தில் பறக்க ஆசைப்பட்டவன்தான் முருகேசன்....... இயற்பியலின் மீதும், விண்வெளி ஆராய்ச்சியிலும், மிக்க ஈடுபாடு உள்ளவன்தான். அதனாலேயே இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தான், தனது இளங்கலை மற்றும் முதுக…

  2. நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது எனது காணியில் பாதையை அடைத்துக்கொண்டு நின்ற மாமரத்தை தறிக்கவேண்டியிருந்தது. பெருமரங்கள் தறிப்பதற்கு முதல் விதானையிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்கள்....அதனால் விதானையாரின் அலுவலகம்? சென்றேன். அவரது அலுவலகம் ஒரு பழையவீட்டின் முன் விறாந்தையில் ஒரு அறையுடன் ஒதுக்கப்பட்டிருந்தது....வீட்டுவிறாந்தையில் ஒரு மேசையும் அதன் முன் ஒரு வாங்கும் போடப்பட்டிருந்தது. அவர் ஒன்று விட்டு ஒருநாள் வேலைக்கு வருவார் என்று போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது....எனது நல்லகாலம் நான் போனபோது onduty யில் இருந்தார்....ஆனால் பெரும்பாலும் அவரை தேத்தண்ணி கடைகளில்தான் காணமுடியும் என்றார்கள்.....வேலை நேரத்திலும் அடிக்கடி வெளியேபோய் நினைத்த நேரத்திற்கு வருவாராம்.... நான் போனது ஒர…

  3. 1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி நடேசன் குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது காலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர் யோசப் மாத்தையா யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது. உடனே குளியலறைக்குள் நான…

  4. எனது வீட்டு டெக், அந்த மேல் இருக்கையில் இருந்து மக்கோவன் வீதியை பார்த்தபடி குமார் என்னை கட்டி பிடிக்கின்றான் .அவனது மூன்று பெண்பிள்ளைகளும் முந்திரிகை பந்தலுக்கு பின் ஓடி ஒளிக்க பெடியன் கண்ணை கட்டியபடி பிடிக்கப்போகின்றான் .எனது சின்னவருக்கு நம்பவே முடியால் இருக்கின்றது .மூன்று பெட்டைகளும் ஒரே மாதிரி, ஒரே உடுப்பு வேறு.ஆனால் பெடிக்கு வித்தியாசம் தெரியுது.நான் குமாரை கேட்கின்றேன் "உனக்காவது வித்தியாசம் தெரியுமா" சிரித்தபடி குமாரின் மனைவி சொன்னா இவருக்கென்ன வீட்டில் நிற்பதில்லை நான் படும்பாடு சொல்லி மாளாது.ஆனால் அதுகள் மாத்திரம் ஆளை ஆள் அந்தமாதிரி அடையாளம் பிடிக்கும்.கலிபோணியாவில் இருந்து காரில் வந்தனியா என்று கேட்க, எல்லாம் தமிழ்நாட்டில் மொட்டர்சைக்கில் கொடுத்த கெப்பு என சி…

    • 9 replies
    • 2.3k views
  5. Started by கிருபன்,

    சனல் – 4 – வெற்றிச்செ்ல்வி (”காணாமல் போனவனின் மனைவி” சிறுகதை தொகுப்பு, சோழன் படைப்பகம், 2012, இந்தியா) சனல்-4 கானொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகுந்தாவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அவள், அறியாத, காணாத, கேள்விப்படாத மரணங்களா அதில் புதிதாக இருந்துவிடப் போகின்றன? யுத்தம் முடிந்ததாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டாலும்; அவள் கண்ட பிணங்களின் கோலங்கள் மட்டும் நினைவில் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. அழிக்க முடியாத பதிவுகளாய் மூளையில் பதிந்துவிட்ட அவை மரணம் தாண்டியும் அந்த ஆத்மாவை அமைதியாக வாழ விடுமா தெரியவில்லை; மறந்துவிட வேண்டும். கொஞ்ச நாட்களுக்காகவாவது மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். முடிகிறதா? இதோ நிமலன் தொலைப…

  6. நோ துறூ ஒழுங்கை- No Through Road" 2000 ஆண்டு நாங்கள் அப்ப A/L படிச்ச காலம். பள்ளிக்கூட காதலுக்காக பெட்டையளுக்கு பின்னால திரிஞ்ச காலம். O/L ஓட எங்கட வயது பெட்டைகளுக்கு பின்னால திரியுற வேலையை நிறுத்தி எங்கள விட வயது குறைஞ்ச பெட்டையளுக்கு பின்னால திரியும் "ஒப்பிறேசனை-operation love" ஆரம்பிச்ச காலம். பருத்துறையில இருந்து நெல்லியடி, யாழ்ப்பாணம், அச்சுவேலி எண்டு கொஞ்சம் எங்கட நடவடிக்கைகளை விரிவு படுத்திய காலம். இயக்கம் காம்(camp) அடிக்க போறதுக்கு ஆயத்தப்படுத்துறதை விட அதிகமாக பிளான்(plan) போட்ட காலம். வேவு நடவடிக்கையில மூன்று படிநிலை இருக்கு, 1.முதல்ல லவ் பண்ணுற பெட்டை எந்த ரியூசனில படிக்கிறாள் எண்டு ரெக்கி எடுப்பம் 2.அவள…

  7. எனக்குப் பிடித்த கதைகள் 30 மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் •• இரண்டு புத்தகங்கள் மலையாள மூலம் : அசோகன் செருவில் தமிழில் : சுகானா மறுநாள் இரவு …

    • 0 replies
    • 1.8k views
  8. சுதர்சினி (சிறுகதை) – தமிழினி -மறைந்த தமிழினி அவர்கள் 2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை) மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. பகல் பொழுதெல்லாம் சூரியனின் வெம்மையான கதிர்களால், அடுப்புக்கல் போல சூடாகி விட்ட கொங்கிறீட் சுவரின் வெப்பமூச்சாக, உடலை எரித்துவிடுவது போலத்தான் உரசிச் செல்கிறது. அடைக்கப்பட்ட சுவருக்குள்ள…

    • 5 replies
    • 2.7k views
  9. வேலி - கோமகன் அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த தொலைபேசி அழைப்பு, வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்” என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலையணையைக் கட்டிப்பிடித்தேன் .…

  10. Started by ரஞ்சித்,

    1995 இல் அவனை முதன் முதலில் பார்த்தபோது அவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. என்னைச் சுற்றி வலம் வந்துகொண்டிருந்த மற்றையவர்களில் அவனும் ஒருவனாகக் கரைந்துபோயிருந்தான். எதுவென்று புரியாத பயத்திலும், அவசரத்திலும் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. கிருலப்பனை வீட்டிலிருந்து காலையில் அவசர அவசரமாக பஸ்பிடித்து அரக்கப் பரக்க ஓடி, புதினப்பத்திரிக்கையில் உரைபோட்ட காட்போட் பைலுடனும், வீட்டுக்குப் போட்டுப் பழசாகியிருந்த பாட்டாச் செருப்புடனும், பெல்ட் கட்டாமல் வெறும் பாண்டுடன், கட்டைக் கைச் சேர்ட்டுடன் என்னைப் பார்த்தீர்களென்றால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். 1995 ஒக்டோபரில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகி முதல் மூன்று மாதங்களிலும…

  11. சில நாட்களுக்கு முன் லா சப்பலில் வீதியில் சென்று கொண்டிருந்தேன். போகும் பாதையில் ஒரு கூட்டமாக இருந்தது. நடுவில் இரு பெண்கள் (பிரெஞ்சுக்காரர்கள்) வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். காதுக்கு எட்டியவரையில் அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்பதும் நீண்டநாளாக அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதும் தெரிந்தது. அனைவரும் ஒரே அலுவலகததில் வேலை செய்பவர்கள் என்பதும் அலுவலகத்தை விட்டு வீதியில் நின்று பிரச்சினைப்படுகிறார்கள். மீதிப்பேர் சமாதானப்படுத்துகிறார்கள் என்பதும் தெரிந்தது. அவர்களைக்கடந்து போய் சில செக்கன்களில் பெரும் அவலக்குரல் கொண்டு ஒரு பெண் கத்துவது கேட்டது. தானாடாவிட்டாலும் சதையாடும் அல்லவா?. திரும்பி வந்தேன். ஒரு பெண் மேலாடை கி…

  12. Started by கிருபன்,

    அகல்யா ஆர். அபிலாஷ் நானும் சில நண்பர்களும் கருத்தரங்குக்கு முந்தின நாளே சென்றுடைந்த போது விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு நாய் உடலை குறுக்கி புட்டத்தை லேசாய் தூக்கி ஒரு குட்டை அருகே மலம் கழிக்க முயன்று கொண்டிருந்தது. நீராய் கழிந்த மஞ்சள் மலம் மெல்ல அந்த குட்டையின் கறுப்புநீரில் ஓவியனின் தூரிகையை முக்கும் போது கரையும் சாயம் போல் கலந்து ஓடத் தொடங்கியது. தன் அவஸ்தை முடிந்து நாய் எங்களை தலைதூக்கிப் பார்த்தது. சந்தீப்பும் பார்த்திவ் ஷர்மாவும் என்னை நோக்கி சிரித்தனர். நாங்கள் அப்பகுதியில் பார்த்த நாய்களை கணக்கெடுத்து வந்தோம். அதன் செவியின் நுனி கத்தரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் எ.பி.சி எனும் கருத்தடை செய்யப்படாத ஒன்று என குறித்துக் கொண்டோம…

  13. Started by கிருபன்,

    கிழவர்கள் கடல்புத்திரன் - நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருச‌த்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் . அவன் தரப்பில் ,மனைவி... தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிற…

  14. மனிதனும் விலங்கும்மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,''இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி …

  15. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசுக்கான, புலம்பெயர் சிறுகதைப் போட்டிSEP 11, 2015 | 8:59by புதினப்பணிமனைin அறிவித்தல் காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016′ – வள்ளுவராண்டு 2047 காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகள…

  16. மலர்ந்தும் மலராத காலை பொழுது. வேகமாக நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். கையின் உயர்த்தி கடிகாரதினைப் பார்த்தார். பரவாயில்லை, நேற்று இதே இடத்தில் வந்த நேரத்திலும் பார்க்க இரு நிமிடம் முன்னதாக வந்தது விட்டோமே என்று நினைத்துக் கொண்டார், காலை நடைப் பயிற்ச்சியில் இருந்த அந்த மனிதர். அவரை, மிக விரைவாக ஆபத்து நெருங்கிக் கொண்டிருகின்றது என்பதை அவர் அறிந்திருக்க வில்லை. ஆனால் தான் தற்போது மறைந்து இருக்கும் லண்டன் மாநகரில், தனக்கு ஆபத்து வர வாய்ப்பு இல்லை என நம்பிக் கொண்டிருந்தார் அவர். அவர் தனது நாட்டின் அமைச்சராக இருந்த போது, ஒரு பில்லியன் டொலர் பணத்தினை ஆட்டையைப் போட்டு விட்டு ஓடி வந்து விட்டார் என அவரது நாட்டின் அரசு குற்றம் சுமத்தி இருந்தது. அவரோ அதை மறுத்து இருந்தார். பிர…

    • 25 replies
    • 17k views
  17. கரண்டி ஏந்திய... 3000 பேர். குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கான்டிராக்டர் திடீரென்று ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மண்வெட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்? துரத்தி விட்டார். 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள். 2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது. "புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மண்வெட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியி…

    • 1 reply
    • 569 views
  18. இந்த விடுமுறையில் நாட்டுக்கு சென்ற பொழுது சந்தித்த சிலரில் சில இளைஞர்களுடன் பேசிய பொழுது கேள்வி பட்ட விசயம் இவ்வளவுத்துக்கு இப்படி சற்றும் சத்தமில்லாமால் ஊடுருவிட்டார்கள் சற்று ஆச்சரியமாக இருந்தது .பக்கமாக பக்கமாக ஆய்வு கட்டுரைகள் நடத்தும் இவர்கள் கூட ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை .இதே போல 80 களிலும் 83 இன கலவரத்துக்கு முன்னே சில வியாபர ஏஜன்ட் வடிவத்தில் இருந்த வெறும் சதாரணர்களே இந்த ஆள் பிடித்து தரும் படி கேட்ட சம்பவம் அங்கங்கே நடை பெற்று கொண்டு இருந்தது ..அந்த நேரம் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்று நம்ப மறுத்த விடயம் ..பின்னர் ஆனால் சந்திரகாசன் ஆள் பிடிக்க ஆளாக செய்யபட்ட பின் தான் ஆங்கில ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன. இது புலானாய்வுதுறையினர்.. …

  19. கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்? வவுனியா நகரை எங்களின் கார் நெருங்கிக் கொண்டிருந்தது. நாட்டு நிலவரங்களை எங்களோடு துணையாக வந்த சிவா களைப்பில்லாது கொழும்பிலிருந்து சொல்லி வந்துகொண்டிருந்தான். பின்னணியில் சக்தி எப்ஃ எம்மில் ‘வேணாம் மச்சான் வேணாம்’ என்கிற பாடல் போய்க் கொண்டிருந்தது. காதலாய் இருந்தாலென்ன வீரமாய் இருந்தாலென்ன தோற்றுப் போனவர்களின் கதைகளின் உள்ளடுக்குகளில் துயரமே ததும்புகிறது. சிவா பேசிக்கொண்டிருக்கும் விடயங்கள் தற்போதைய மோஸ்தரில் கறுப்பிலா வெள்ளையிலா அல்லது பழுப்பிலா வருமெனத் தெரியாது நான் குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் சிவப்பும் மஞ்சளுமான வர்ணங்களைத் தெரிவு செய்து சிவா ஒரு பெரும் கனவுக்காய்த் தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தும் இருக்கின்றான். சிவாவும் ந…

  20. பல வருடங்களாக ஆயத்தப்படுத்தி ஆவலுடன் நாட்களை எண்ணிக் காத்திருந்த பயணம் அது. போவதென்று முடிவெடுத்து வேலைத்தளத்திலும் அனுமதிபெற்று, பிள்ளைகளை உசுப்பேத்தி, அவர்கள் நாள்தோறும் அந்த நாமத்தை உச்சரிக்க (எதுவென்று கேட்கிறீர்களா? அட நம்ம கண்டாவைத்தான் சொல்கிறேன்!) வைத்து விட்ட பயணம். பயணிக்கும் தேதியும் முற்றாகிவிட, சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே விமானச் சீட்டுக்களையும் வாங்கிவிட்டோம். தென்கொரியாவின் தலைநகர் சியோலினூடாகப் பயணிக்கும் பயணம் அது. அதுவும் பயணச் சிட்டுக்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிக் கொண்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. பயணச் சீட்டுக்கள் வாங்கிய நாளிலிருந்து அனைவரையும் கணடாக் "காய்ச்சல்" பற்றிக்கொள்ள அதுவே எங்கள் எல்லோருக்கும் தியானம் என்று ஆகிவிட்டது. பயணிக்…

  21. மனதில் தோன்றிய எண்ணங்கள் சரியான இடத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் பயணம் எளிதாக இல்லாமல் போகலாம். வாழ்கையில் அந்த சரியான இடம் எது என்றே தோன்றாமல் குழம்பிக் கொண்டிருக்க, மிகச் சரியான இடத்தில் ஆரம்பித்திருந்தும், தொடர்ந்த பயணங்கள் திருப்தியை அளிக்காமல் திசை மாறி நீர்த்துப் போகலாம். அந்த மாதிரியான நிலைமை நிஜவாழ்கையில் பலருக்கு நடக்குது. சிலரோட வெற்றியும் தோல்வியும் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமில்லை, சூழ்ந்து வரும் நிலைமைகளாலும் ஏற்படலாம். சின்னக்காவின் உண்மையான பெயர் யாருக்கும் ஊருக்குள்ள அவா உசிரோடு இருந்த காலத்தில் தெரியாது, அது என்ன என்று , இந்தக் கதையின் முடிவில் நடந்த சம்பவத்தில் ஒரு நாள் அவா உயிர் இல்லாமால்ப் போன அந்த நா…

    • 0 replies
    • 1k views
  22. அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று. அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள். எலும்புக்கு தோல் போர்த்தியது போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது. குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் இன்று ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது …

  23. கோமா சக்தி - சிறுகதை அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது. கிரேக்க பழமொழி இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத்…

  24. அண்மைக்காலச் சிறுகதைகள் இமையம் மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்குக் கற்பனையும் கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. கதையில்லை என்றால் கற்பனை இல்லை. கற்பனை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு உயிர்ச்சத்தாக இருப்பது கற்…

  25. Started by கிருபன்,

    இரை மாதவன் ஸ்ரீரங்கம் மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள் கடந்தும் அவன் கண்களில் நங்கூரமிட்டிருக்கும் அச்சத்தை உணரமுடிகிறது என்னால். இவனுடன் பிடிபட்ட நான்குபேர்கள் தனது கண்ணுக்கு முன்பாகவே ரத்தம் சிதற இறந்துபோனதை இவன் இறுதிமூச்சுவரை மறந்துவிட முடியாது. மலங்க மலங்க விழித்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.