கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
என் வலைப்பூவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் நான் எழுதி வரும் ஒரு சிறு அனுபவப்பதிவு..என்னை எழுத தூண்டிய யாழில் பதியும் ஆசையுடன்.. தமிழ்மணத்தில் இணைந்த பின்னர் உங்களில் பலரின் வலைப்பூக்களை பார்த்தேன். அதில் பெரும்பாலனவை அனுபவப்பதிவுகளாகவே இருக்கின்றது. பெரும்பாலும் நான் எழுதுவதும் எனது அனுபவங்களையோ, அல்லது என்னை சுற்றி நடப்பவையாகவே இருக்கும். ஈழத்தில் வருடக்கணக்கில் வாழாவிடினும், எனக்கும் பங்கருக்குள் தொடர்ந்து பல நாட்கள் வசித்த அனுபவம் உண்டு. சாவையும், இரத்தத்தையும் நானும் பார்த்திருக்கின்றேன். காயம்பட்டவர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்திருக்கின்றேன். வெளிநாட்டு மண்ணிலேயெ இருந்த எனக்கு, ஊர் செல்லும் காலம் வந்தால் இருக்கும் மனநிலையை எழுத்தில் …
-
- 8 replies
- 1.7k views
-
-
அண்மையில் எம்மை சோகத்தில் ஆழ்த்தி சென்ற பாலா மாமாவிற்காக "நானும் என் ஈழமும்" தொடரை அர்ப்பணம் செய்கிறேன்.... ------------------------------------------------------------------------------------ உங்களில் எத்தனை பேர், கோயிலை கடக்கும் நேரங்களில் எல்லாம் கையெடுத்து கும்பிடுவீர்கள்?அல்லது நெஞ்சில் கைவைத்து "இறைவா" என சொல்வீர்கள்? எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு. அதனால் எனக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம்..இன்று வரை தொடர்வது.. அதை பற்றி பார்க்கலாம்... ஊருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் அப்பப்பாவீட்டில் அதிக நேரத்தை செலவழிப்பேன். காரணம் அங்கு இருக்கும் புத்தகங்கள், பழைய படங்கள், அப்பபாவின் இசை கருவிகள்...அதில் வீணை மீட்டுகிறேன் என்று கம்பிக்களை அறுத்த வீரத்திருமக…
-
- 9 replies
- 2k views
-
-
மூன்றாவது பாகத்தை எழுத முதல், என்னை எழுத ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. புலத்தில் தமிழ் கற்ற எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை தூக்கி எறிய வைத்து, தொடர்ந்து "நீங்க எழுதுங்க பபா" என சொல்லும் உறவுகளுக்கு என் அன்பு எப்பொழுதும் உண்டு. முதல் இரண்டு தொடரும் எழுதும் போது, நினைவுகள் பல மனதில் வர கண்ணீருடன் தான் எழுதினேன். இந்த பாகத்தில் எமை காக்க களத்தில் நிற்கும் போராளிகளை பற்றியதாக இருக்கும். அவர்களுடான என் உறவு, அவர்களை பற்றி என் மனதில் இருப்பவை. ஊரில் எங்கட வீட்டுக்கு முன்னால போராளிகளின் வீடு. எங்கள் வீடு அவர்கள் வீடு என பிரிப்பது பாவம் என்பேன். காலையில் கண் முழித்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை "அண்ணாக்கள்" என்று அவர்கள் பின்னாலே…
-
- 16 replies
- 2.8k views
-
-
நானும் என் ஈழமும் - 4 தினமும் ஏதோ ஒரு செயல், ஒரு பொருள், ஒரு மனிதர்...என் நினைவுகளை ஊருக்கு கொண்டு செல்ல தவறுவதில்லை. எதிலும் சொந்த ஊரை காண்பது எம்மவருக்கு புதிதல்லவே. "சொர்க்கமே வந்தாலும் அது நம்மூரை போல வருமா" என்ற பாடலை கானாபிரபா அண்ணாவே எத்தனை தடவை வானொலியில் போட்டிருப்பார். அடுத்த மாதம், என் பல்கலைக்கழக நண்பன் ஒருவருக்கு திருமணம். அதே நண்பன் 3 வருடங்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்திற்கு எனக்கு தந்த வாழ்த்து மடலை பார்த்தே ஆக வேண்டும் என அவரின் வருங்கால துணைவியார்ஆசைப்பட்டார். என் விலை மதிக்க முடியாத கடிதப்பெட்டியை எடுத்த பொழுது கண்ணில்பட்ட ஒரு மடல்..... இந்த பாகத்தை எழுத தூண்டியது! --------------------------------------------------------…
-
- 10 replies
- 2.1k views
-
-
முன் குறிப்பு: கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டு தொடரை படித்துப்பாருங்கள். http://www.ijigg.com/songs/V2AC4A0EP0 சிறு வயது முதல் ஈழத்தை விட்டு பிரிந்திருக்கும் என் தந்தை, தன் பிள்ளைகள் ஈழத்தையும்,தமிழையும் நேசிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என அடிக்கடி சொல்வார். அதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் மாவீரர்தின மாதத்தில் இருந்து தை வரை ஈழத்திற்கு அழைத்து சென்றுவிடுவார். மூன்று அண்ணன்களுடன் இங்கு வசிக்கும் எனக்கு, அங்கு சென்றால் எண்ணிலடங்கா அண்ணன்கள் கிடைப்பார்கள். அப்படியான என் ஈழத்தை நோக்கிய பயணத்தில் அழுகைகளும், சோகங்களும், வீரமரணங்களும், அவலச்சாவுகளும், வெடிகளும், இரத்தமும், இடம்பெயர்வுகளும் சற்றும் குறைவில்லாமலே இருந்தது. ஆனாலும் அத்தனை இழப்புக்களையும் தாங்கும் சக்தி அ…
-
- 18 replies
- 4.3k views
-
-
மாவீரர் தின பதிவு - தலைவர்க்கு துணையாக வேண்டும், தமிழீழம் மலர்ந்தாக வேண்டும் [கீழிருக்கும் பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்] வழமையான வேலை, படிப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மாவீரர் நாளான இன்றைய பொழுதிற்கான வேலைகளில் மூழ்கியபடியே இருக்கும் போது நடந்தவை பல மனதிலே தோன்றி , கண் வழியே இறங்கிகொண்டிருக்கின்றது. தனியே இருந்து அழவும், போராடவும் நாம் ஒன்றும் யாருமற்றவர்கள் இல்லையே. எங்களுக்கு தோள் தர உறவுகள் நீங்கள் இருக்கின்றீர்களே. இன்றைய நாள் "கார்த்திகை 27" உலகில் உள்ள அனைத்து தமிழர்களையும் ஏதோ ஒரு வகையில் நிறுத்தி வைக்கும் என்றே சொல்லலாம். என்னைக்கேட்டால் மாற்றுக்கருத்துக்காரர்களை கூட என்பேன்.எத்தனை ஆயிரம் உயிர்கள் எமக்காய் விதைத்தாயிற்று. தமிழன் ஒரு போதும…
-
- 8 replies
- 3.1k views
-
-
கடந்த ஞாயிறு சிட்னியில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. வீட்டை விட்டு போக முடியாத நிலை. போக முடியாத நிலை என்பதை விட, வெளியே செல்ல மனம் இல்லை என்பதே உண்மை. காரணம் ஈழத்தில் சென்றவாரம் காலமாகியிருந்த என்னுடைய மாமா தான். இருப்பினும் தமிழனாக பிறந்துவிட்டு, பொங்குதமிழுக்கு போகாமல் இருப்பது, சொந்த அடையாளத்தை இழப்பது போன்றதல்லவா. காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை பொங்குதமிழில் பங்கெடுக்க சென்றிருந்தேன். அந்த நான்கு மணி நேரங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அதிலும் எனக்கு, மாமாவின் மறைவும் மனதில் இருக்க போக, மிகவும் வேதனையான மணித்துளிகளாக அமைந்துவிட்டது. சென்றவாரத்திலிருந்து வீட்டில் மிகவும் சோகமான சூழல். துக்கம் விசாரிக்க வருபவர்களும், தூர தேசங்களிலிருந்து வரும் தொ…
-
- 18 replies
- 3.2k views
-
-
ஈழத்தோடான என் அனுபவங்களில் போர்,போரின் கொடுமைகள்,பாதிப்புகளை தவிர்த்து சில விசித்திரமான மனிதர்களையும் கண்டேன். சற்று முன் என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவருடன் தொலைபேசியில் கதைத்ததன் பலனாக சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்றும் (2006)ஒரு நாள் இப்படி தோன்றிய நினைவுகளின் பலனாக நான் கதையாக எழுதிய ஒரு நிகழ்வை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கனடாவில் இருந்து பெரியம்மா குடும்பம் வந்திருந்தார்கள். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அக்காவின் கணவர், மற்றும் அவர்களில் குழந்தைகள். அங்கு விடுமுறை காலம், இங்கு அப்படியா? விடுமுறை காலம் அல்லவே! புலம்பெயர் வாழ்க்கையின் சாபத்தில் இதுவும் ஒன்று எனலாம். வேறு நாட்டில் இருந்து உறவினர்கள் வந்தால் விடுமுறை…
-
- 19 replies
- 2.5k views
-
-
ஈழத்தோடான என் அனுபவங்களில் பல வலிகளையும், அதிர்ச்சிகளையும் கொண்டது. இவ்வலிகள் தினமும் இரவில் வந்து அழ வைப்பதுண்டு. சில வலிகள் தினசரி வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சில வலிகளோ உணர்வுகளோடு அதிகமாகவே விளையாடும். இத்தனை வலிகளுக்கிடையில் கிடைத்த சில மகிழ்ச்சியான அனுபவங்கள் நினைத்து நினைத்து பார்க்க இனிமையானவை. இந்த சில இனிப்பான அனுபவங்களுக்கு, பல துன்பமான அனுபவங்களை மறக்கவைக்கும் சக்தி அதிகமாகவே உண்டு. என்ன தான் ஒஸ்திரேலியாவில் வசதியும், பாதுகாப்பும் இருந்த போதும், ஈழமே எனக்கு பெரிதாக தோன்றும். ஈழத்தில் எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும் இங்கு கிடைக்கவில்லை என்பதே முதன்மை காரணம். இங்கு காலை தொடக்கம் மாலை வரை தனியே இருக்க வேண்டும். ஆனால் ஊருக்கு செ…
-
- 15 replies
- 2.7k views
-
-
நேற்றைய தினம் தமிழ்ச்செல்வன் மாமாவை நாம் இழந்த நாள். எதற்கெல்லாமோ பதிவு எழுதுகின்றோம், அவரை நினைத்து ஒரு பதிவு போடாமல் இருக்கலாமா? என கடந்த சில வாரங்களாகவே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறாகிற்று! நேற்று பதிவும் எழுதவில்லை. கணணியை தொடவும் இல்லை. நவம்பர் 1, நான் பேசுவதும் நடப்பதுமே சாதாரண காரியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. இது நடந்து இன்றிலிருந்து 13 வருடங்கள் இருக்கும். அன்றைய வருடமும், வழமை போல் வருடத்தின் இறுதியில் அப்பாவும், நானும் தாயகத்தை நோக்கி செல்கின்றோம். இந்த முறை பயணத்திற்கான காரணம் என் அப்பாச்சிக்கு நடக்கவிருந்த சத்திரசிகிச்சை. கண்ணில் சிறு கோளாறு, எம்மிடத்தில் தான் மருத்துவத்திற்கு தேவையானவை இருப்பதில்லை…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம். என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான் எங்கள் குடும்பமே தாய் நாட்டை நேசிக்க காரணமாக இருந்தது என்பது என் கருத்து. வெளிநாடுகளில் வாழ சந்தர்ப்பம் கிடைத்த போதும், வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என அறிந்த போதும்; “நீங்கெல்லாம் போய்ட்டு வாங்கோ, நான் என் மண்ணை விட்டு வர மாட்டேன்” என சொல்லி, இறுதிவரை தன் வார்த்தையை காப்பாற்றினார். ஊரில் இருந்த அப…
-
- 16 replies
- 3.7k views
-
-
இப்போதெல்லாம் எம்மில் பலர் அதிகம் சொல்லும் வார்த்தையாகிவிட்டது 'கிளிநொச்சி'. இந்த பெயருக்குரிய இடத்திற்கு நான் பல தடவைகள் சென்றுள்ளேன். சில மாதங்கள் வாழ்ந்த்துள்ளேன். உலகத்தில் நான் சென்ற அத்தனை இடங்களிலும் பார்க்க எனக்கு அந்த வன்னி மண் தான் பிடித்திருந்தது. ஒரு தடவை சென்ற போது அதிகம் மக்கள் இல்லாத அமைதியை கண்டேன். பின்னர் சென்ற போது இடம்பெயர்ந்த மக்களையும், அவர்களை துரத்தும் மலேரியா காய்ச்சலையும், மரத்தடியே அவர்கள் தங்குவதையும் கண்டேன். பின்னொரு தரம் சென்ற போது வன்னிமண் அம்மக்களை ஒழுக்கமாய் வாழ வைப்பதை கண்டேன். இறுதியாக சென்ற போது ஒரு நேர்மையான அரசாங்கள் ஒழுக்கமாக நடப்பதை கண்டேன். இன்று அம்மண்ணில் எதிரியின் கால்கள் எனும் போது மனசு துடிக்கின்றது, கோபம் வருகின்றது. க…
-
- 10 replies
- 4.5k views
-
-
நானும் என் ஈழமும் 5 கடந்த ஞாயிறு நடந்த நாட்டுப்பற்றாளர் தினம் மனதில் பல நினைவுகளை விதைத்து சென்றுவிட்டது. என் வாழ்வில் சந்தித்த சிலர் தம்மை பற்றி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இவர்களை பார்த்து பெருமைபடுவதா இல்லை வருத்தப்படுவதா? "என்ன ஆனாலும் சரி பபா படிச்சு பெரிய ஆளா வரணும். அதை இந்த முகிலன் அண்ணா பார்க்கணும்" அடிக்கடி என் முகிலன் அண்ணா சொல்லும் வார்த்தை. முதன் முதலில் பட்டமளிப்பு விழாவிற்கு மேடையேறிய போது , என்னை அறியாமல் என் கண்கள் முகிலன் அண்ணா இருக்கின்றாரா என பார்வையாளர்களை பார்த்தது. இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. எப்பொழுது நாங்கள் ஊருக்கு சென்றாலும் முகிலன் அண்ணாவை பார்க்காமல் …
-
- 17 replies
- 2.9k views
-
-
பங்குனி மாதம் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான். பயம் மட்டுமல்ல படபடப்பு, வெறுப்பு, சோகம், தனிமை என அனைத்தும் ஒன்றாக வந்து கொல்லும். "பள்ளிக்கூடத்துக்கு போகாமல் ஊர் சுத்தி கொண்டு திரியுங்கோ" என அப்பாச்சி பேசும் போது; எனக்கும் புரியவில்லை. என்னை அழைத்து சென்ற அப்பாவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்த மாதம் தரவிருந்த பரிசு. பொதுவாக ஆண்டின் இறுதி மாதங்களில் ஊருக்கு செல்வது தான் வழக்கம். அப்பொழுது தானே எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கும். அந்த வருடம் ஆண்டின் இறுதியில் அப்பாவிற்கு வேலையில் விடுமுறை கிடைக்காததால் பங்குனி மாதத்தில் சென்றோம். ஊரில் கொஞ்சம் போரின் கோரம் அதிகமாக இருந்ததால் அண்ணன்களும் தங்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் பங்கர் அருகே நாட்களை கழித்து கொண்டிருந்தார்…
-
- 20 replies
- 3.7k views
-
-
நானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பா…
-
- 2 replies
- 769 views
-
-
நானும் பில்லாவும். சாத்திரி ஒரு பேப்பர். நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால் ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு வாற ஞாயிற்று கிழைமை படம் நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன் இந்தியாவ…
-
- 17 replies
- 2.8k views
-
-
என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிடும். அதன் பின்னர் அவள் தூங்கும் சமயமாக நான் வெளியே புறப்படும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். மகளுக்கு இரண்டு வயது நடந்தபோது என்னை ஆச்சரியப்படுத்த ஆரம்பித்தாள். நான் எப்போவாவது பயணம் புறப்பட ஆரம்பித்தால் உடனேயே அழத் தொடங்கி திரும்பி வரும்வரை நிறுத்…
-
- 17 replies
- 2.2k views
-
-
கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. ‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான ப…
-
- 0 replies
- 736 views
-
-
நானும்... எனக்கும், நீயும்... உனக்கும் என்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது. அதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொ…
-
- 4 replies
- 1.6k views
-
-
நானென்னடி பிசாசா? என்ர மூச்சுக் காத்தை உடம்பை விட்டு வெளியாலயும், வெளிக்காத்தை உடம்புக்கு உள்ளயும் எடுக்க முடியாம, ஒருவழியா திணறிக் குளறி? அட சத்தியமா நான் குளறினன் சத்தம் வரவே இல்லை. ஊப்ஸ்...... ஒருவேளை நான் செத்துப் போட்டனோ? பாழ்படுவார் அடிச்ச செல்லில காயந்தானே பட்டன். அதுவும் இந்தக் காலில கொஞ்சம் இரத்தம் ஓடுது. இதுக்குப் போய் நான் செத்துப் போவனே?.. ஆ…… ஐயோ இதென்ன என்ர கால் முழங்காலுக்குக் கீழ அரைச்ச இறைச்சிமாதிரிக் கிடக்கு “ஐயோ என்ர கால் போட்டுது.. ஐயோ என்ர கால் போட்டுது. ஆராவது என்னைத் தூக்குங்கோடா. அடுத்த செல்லுகளை கட்டையில போவாங்கள் குத்த முன்ன என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோடா.. எனக்கும் பெண்டு பிள்ளைகள் இருக்கடா….” “அடேய் அடேய் மொல்ல …
-
- 10 replies
- 1.7k views
-
-
நானே கொல்லப்பட்டேன்!(நிமிடக்கதை) மட்டக்களப்பு நகரமே அன்றுகாலைப் பொழுதைப் பறிகொடுத்திருந்தது. காந்தியின் சிலை வெண்துணியால் மறைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் கட்சித்தலைவர் பேச்சாளர் என அனைவரையும் நித்திரைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக்கொண்டுவந்ததுபோல் தோன்றியது. காந்தி இன்றுதான் இறந்தாரோ என்ற ஐயம் ஏற்படுமளவில் அவர்களது முகம் சோகமே உருவாகக் காட்சியளித்தது. அவர்களின் முன்னால் சில காவல்துறையினரும் இந்தியத்துணைத்தூதர் பாதுகாப்பு அதிகாரிகளென நின்றுகொண்டிருந்தனர். காவல்துறை ஆய்வாளர்களால், பலமணிநேரமாகியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை காந்தியின்கண்ணிலிருந்து வழியும் குருதிக்கான கரணியத்தை. மோப்பநாயொன்று குருதிபடிந்த இலையொன்றோடு வந்தது.எந்த மரத்து இலை என்று பார்த்த எங்…
-
- 8 replies
- 1.5k views
-
-
நான் - A அவள் - Z By பட்டுக்கோட்டை பிரபாகர் | 'ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!' - என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்? எனக்கு கவிதைகளே அலர்ஜி, அவள் மனதுக்கு அவை தான் சாப்பாடு. வீடா ஹவ் ஸ்மார்ட்! ஹவ் இன்டெலிஜெண்ட்! என்ன என்னவோ நிறைய படிப்பாள். அந்த ஆசிரியர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. வேதா ரொம்ப சிம்பிள். ஐ- ப்ரோ கூட வைத்துக் கொள்ள மாட்டாள். மாவு அப்பா மாட்டாள். உதட்டை ரணப்ப…
-
- 0 replies
- 530 views
-
-
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1 தாலா பானுவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை என்பதால் அவர் கணவர் முகமது மூலமாகவே அவர்கள் கதை வெளியுலகுக்கு வந்திருக்கிறது. அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள். பர்மா என்று சொல்லும்போதே அவர் கண்கள் மினுமினுப்போடு விரிகின்றன. பர்மா என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு நாடல்ல, குட்டி சொர்க்கம். கனவில் மட்டுமே காணக்கூடிய மயக்கமூட்டும் காட்சிகளை ஒருவர் பர்மாவில் அசலாகக் காணமுடியும். விக்டோரியன் கட்டடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நவீன வர்த்தக வளாகங்களும் நிரம்பியிருந்தாலும் பர்மாவை நவீனத்துவம் இன்னமும் முழுக்க முழுங்கிவிடவில்லை. அழகிய ஓடைகள், பச்சைப் பசேலென்று விரிந்திருக்கும் கானகப் பகுதிகள், ஒருவேளை பொம…
-
- 17 replies
- 5k views
-
-
நான் அவனில்லை... (நெடுகச் சீரியஸாய் வாசிச்சும் எழுதியும் அலுத்துப்போச்சு...அதுதான் சும்மா பம்பலுக்கு எழுதினது... ) இருட்டடி எண்டால் என்னெண்டு உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.இருட்டுக்க ஒளிச்சு நிண்டு ஆரிலை கோபமோ அவருக்கு,அடிக்கிறவன் ஆரெண்டு யோசிக்கிறதுக்கு ரைம் குடுக்காமல் அடிச்சிட்டு அடிக்கிறவன் எஸ்க்கேப் ஆகிறதுதான் இருட்டடி.இதில அடிக்கிறவன் யாரெண்டும் அடிவாங்குகிறவன் யாரெண்டும் பாத்துக்கொண்டு நிக்கிறவனுக்கு விளங்காது.ஒருதடைவை ஊரில நானும் உந்த இருட்டடியில இருந்து மயிரிழையில தப்பினனான்.அது சம்பவமல்ல...தரித்திரம்..சா இல்லை..சரித்திரம்... அதைத்தான் நான் இப்ப உங்களுக்குச் சொல்லப்போகிறன். சம்பவம் நடந்த அண்டு நல்ல அமாவாசை இருட்டு...நானும் என்ர நண்பனும…
-
- 33 replies
- 3.8k views
-
-
எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில்…
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-