அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
மஹிந்தவின் மீள்வருகையை தடுக்க மைத்திரி எடுக்கும் முயற்சி தேசிய அரசாங்கம் என்ற பெயரில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அமைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் காலாவதியாகும் நாள், நெருங்கி வரும் நிலையில், இந்த அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்புகின்றனர். ஒப்பந்தம் காலாவதியாகிய உடன், தாம் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வதாக ஸ்ரீ ல.சு.க எம்.பிக்கள் சிலர் அண்மையில் கூறியிருந்தனர். டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய…
-
- 1 reply
- 345 views
-
-
ஈழத் தமிழரின் துன்பியல்கள் ஜூலைகளில் வெற்றிகளும் இல்லாமலில்லை இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறலாம். கட்சிகள் காலத்துக்கு ஏற்றவாறு கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். சிங்கள அரசுகள் தமிழினத்துக்கான தீர்வை வழங்குவதற்குப் பின்னடிக்கலாம். ஆனாலும் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவை மாறிமாறி நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழினத்துக்கெதிராக இடம்பெற்ற படுகொலைகள், அராஜகங்கள், இன வன்முறைகள் பெரும்பாலும் ஜூலை மாதங்களிலேயே நடந்தேறியிருக்கின்றன. ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலகட்டத்தில் உல…
-
- 0 replies
- 387 views
-
-
நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன் டிசம்பர் மாதம் 5 ஆம்திகதி 2013 அன்று தென்னாபிரிக்க நேரம் இரவு 8 மணி 20 நிமிடமளவில் நெல்சன் மண்டேலா இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தென்னாபிரிகாவின் இன்றைய ஜனாதிபதி ஜகோப் சூமா மரணச் செய்தியை உலகிற்கு அறிவித்தார். தென்னாபிரிக்க நிற வெறி அரசுக்கு எதிராகப் போராடிய மண்டேலாவின் வரலாற்றில் ஆயிரம் சுவடுகள் எம்மக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அவர் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கினார் என்பதையும் அதனை சரியான திசைவழியில் தான் ஆரம்பித்தார் என்பதையும் அதனால் தான் அது வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிட்டது என்பதையும் பலர் சாட்சியாகச் சொல்கிறார்கள். அமரிக்க ஜனதிபதி ரொனால்ட் ரீகனும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரட் …
-
- 5 replies
- 1.3k views
-
-
மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா? இலங்கையில் தமிழ்த்தரப்பின் எதிர்கால அரசியல் போக்கு நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, சம்பந்தனும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் …
-
- 0 replies
- 331 views
-
-
கோட்டா கோ கமவும் மே பதினெட்டும்! நிலாந்தன். May 1, 2022 கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் ஒருவர் பதிலளித்தார். அரசியல் சிவில்,சமூக செயற்பாட்டாளரான அவர் அண்மையில் கோட்டாகோகம கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் தரும் தகவல்களின்படி ரணவிரு குடிலில் அமர்ந்திருக்கும் படைவீரர்கள் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதில் இணைந்து செயற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் யுத்தவெற்றியை ஒரு அரசியல் முதலீடாக முன்னெடுக்கும் ராஜபக்சக்களின் யுத்த வெற்றிவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் அவர்களை யுத்த வெற்றி வாதத்திற்கூடாகப் பார்க்கத் தேவையில்…
-
- 0 replies
- 479 views
-
-
உலகிலுள்ள 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல்:அமெரிக்கா 46 ஆம் இடம்:சிறிலங்கா 165 ஆம் இடம் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற பெயருடன் இயங்கும் அமைப்பினால் (Reporters Without Borders' World Press Freedom Index) இன்று 2014 ஆம் ஆண்டின் உலக நாடுகளுக்கிடையேயான பத்திரிகை சுதந்திர தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சென்ற வருடத்தை விட 13 படிகள் கீழிறங்கி அமெரிக்கா 46 ஆம் இடத்தையும் சிறிலங்கா 165 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்வருடம் அமெரிக்காவின் பின்னடைவுக்கு இரு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் முதலாவதாக சமுக வலைத் தளமான விக்கிலீக்ஸில் அமெரிக்க இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்ந்த முன்னால் இராணுவ வீரருக்கு அமெரிக்க அ…
-
- 5 replies
- 733 views
-
-
காரணம் என்ன? ஏலவே 1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டபோது வட கிழக்கெங்கும் கறுப்புக் கொடியேற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர் நிலையாகவே தொடர்ந்து வந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களால் பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் நான்காவது குடியரசு தினமான 1976 ஆம் ஆண்டு கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானது எனக் குற்றம் சாட்டி அரசியல் அமைப்புக்கு முரணான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தினால் ஆ.அமிர்தலிங்கம், வி.என். நவரத்தினம், க.பொ.இரத்தினம், கே. துரைரத்தினம் ஆகி…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையை இறுக்கும் இனவாதம் இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும் மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் அவதானிக்க முடிகிறது. அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் மத, கலை, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை தாக்குதல்களை மேற்கொணடு வர…
-
- 0 replies
- 300 views
-
-
வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல் அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன. உண்மையில், நாட்டில் என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த, சிங்கள இனவாதம், ஏன் மீண்டும் கிளர்ந்தெழுகிறது? இந்தக் கேள்விகள் பலரிடத்தில் உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பதில்கள் வருகின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இவை ஒன்றும், எதேச்சையான நி…
-
- 1 reply
- 371 views
-
-
முள்ளிவாய்க்காலும் இனவாதமும் வடமாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசாங்கமும் தென்னிலங்கையரும் அதையொரு குருஷேத்திரமாகப் பார்க்கும் நிலை இன்னும் அற்றுப்போகவில்லை என்பதற்கு உதாரணம் கடந்த 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு. அதில் பங்கெடுத்துக்கொண்ட வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது தென்னிலங்கையினரின் பாய்ச்சல் தீவிர இனவாதத்தை கொட்டுவதாகவிருக்கிறது. வடமாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து தென்னிலங்கை சமூகமும் ஆட்சியாளர்களும் பேரின தலைவர்களும் பௌத்த பேரினவாதிகளும…
-
- 0 replies
- 324 views
-
-
ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து ஜனாதிபதி ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எண்ணம் பற்றிய மேலதிக தௌிவு புலப்படுகிறது. குறித்த சர்வகட்சி மாநாட்டில், ஜனாதிபதி ரணில், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தமை, இங்கு கவனிக்கத்தக்கது: “அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆம் திர…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழ்த் தேசியப் பேரியக்கம் – மு.திருநாவுக்கரசு “கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ஏற…
-
- 0 replies
- 641 views
-
-
நீதிபதிகளை அவமதிப்பதற்கான நாடாளுமன்றச் சிறப்புரிமை? நிலாந்தன். சரத் வீரசேகர மீண்டும் ஒரு தடவை முல்லைத்தீவு நீதிபதியை இழிவாகப் பேசியுள்ளார்.குறிப்பிட்ட நீதிபதியை அவர் அவ்வாறு அவமதிப்பது இது இரண்டாவது தடவை.அதுவும் அதை அவர் நாடாளுமன்றத்தில் வைத்துச் செய்கின்றார். இதையே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்ற குற்றமாகக் கருதப்படும். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைக்குள் பதுங்கிக் கொண்டு சரத் வீரசேகர நீதிபத்தியை அவமதிக்கின்றார்.அப்படியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்குள்ள சிறப்புரிமைக்குள் மறைந்து கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா? நாட்டின் சட்டங்களை இயற்றும் அதி உயர் சபை ஒன்றில், நீதிமன்றங்களை …
-
- 1 reply
- 728 views
- 1 follower
-
-
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 414 views
-
-
இன்று தாயகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சம்பவங்களும் எமக்கு ஒன்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏதேனும் ஒரு வழியிலேனும் போராடாமல் தாயகத்தில் உள்ளவர்களால் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதை. இன்று இருக்கும் அவல நிலையில் இது உடனடி சாத்தியமில்லை எனிலும், வரும் சந்ததி தனக்கு உகந்த ஒரு போராட்ட முறையை கையில் எடுத்து போராடும் என்று நம்புகின்றேன். (நிச்சயம் அது ஆயுத போராட்டமாக இருக்க கூடாது என்றும் விரும்புகின்றேன்) அப்படி போராட முற்படும் ஒரு சந்ததி யாரை தன் முன்னோடியாகக் கொள்ளும்? இறுதி வரைக்கும் தன்னாலான அனைத்து முறைகளிலும் போராடின புலிகளையா அல்லது சிங்கள இராணுவம் கூட செய்யத் தயங்கிய கொடூரங்களை தம் மக்களுக்கு செய்த மாற்று இயக்கங்களையா? இந்தக் கே…
-
- 124 replies
- 10.2k views
-
-
25 SEP, 2024 | 11:00 AM "மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." "நெருக்கடியான நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு இந்தியா என்பதை இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்க புரிந்துகொள்வதற்கு புதுடில்லி கால அவகாசத்தை வழங்கவேண்டும்." "தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாளுவதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையைக் கடை…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
யூலை வன்முறைகளை நினைவுகூர்வதன் அரசியல் பெறுமதி என்ன? Jul 30, 2019 யதீந்திரா 1983ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சிங்கள வன்முறைகள் ஆண்டு தோறும் நினைவு கூறப்படுகின்றன. அரசியல் கட்சிகள் ஒரு புறமும், சிவில் சமூக குழுக்கள் ஒரு புறமுமாகவும் இவ்வாறான நினiவு கூரல்களை செய்து வருகின்றனர். இவ்வாறான நினைவு கூரல்கள் வெறுமனே ஒரு தமிழ் அரசியல் சம்பிரதாயமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வாறான நினைவு கூரல்களின் அரசியல் பெறுமதி என்ன? அரசியல் பெறுமதி ஒன்றை இலக்காகக் கொண்டு இவ்வாறான நினைவு கூரல்கள் இடம்பெறுகின்றனவா? இவ்வாறான நினiவு கூரல்களின் எடுக்கப்படும் உறுதி மொழிகள் என்ன? அவ்வாறு ஏதேனும் உறுதிமொழிகள் இதற்கு முன்னா…
-
- 0 replies
- 812 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம் நீட்டின. தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார் போன்று தோன்றியது. பொருளாதாரத்தை விக்கிரமசிங்க கையாண்ட முறையைப் பாராட்டி அந்த நாடுகள் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டன. சர்வதேச நாணய நிதியமும் அதேபோன்று அவருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் தலைமையிலான நடவடிக்கைகளுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கு விசேட முயற்சிகளை முன்னெடுத்தது…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் விரும்பவில்லையாம். அவர் ஜேவிபியில் இருந்தவர். அதன் தீவிர இனவாத முகம். தனது தோழர்களின் வெற்றிக்காக வழிவிடும் அவருடைய மேற்படி அறிவிப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு ஒரு விளக்கம் உண்டு.அவனுடைய மனைவி ஒரு வழக்கில் மாட்டுப்பட்டு இருக்கிறார்.அந்த விவகாரத்தை மீண்டும் ஜேவிபியின் அரசாங்கம் கிளறி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதனால்தான் ஜேவிபியை சந்தோஷப்படுத்த விமல் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பத…
-
- 0 replies
- 364 views
-
-
இந்த கட்டுரை ஒருவருடத்துக்கு முன் வந்தது காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கபடுகிறது . ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து த…
-
- 2 replies
- 666 views
-
-
தேர்தல் புறக்கணிப்பு இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல், மீண்டும் நடைபெற இருக்கிறது. தேர்தல் களம், கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மீண்டுமொருமுறை தமிழ் மக்களிடையே, ‘ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்’ என்ற கருத்தும் அந்தக் கருத்துகான எதிர்ப்பும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்த வாதப் பிரதிவாதங்களில், தேர்தல் புறக்கணிப்புப் பற்றிப் பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்தக் கட்டுரையின் நோக்கம், ‘புறக்கணிப்பு’ என்பதன் ஜனநாயக அரசியல் பங்கையும் முக்கியத்துவத்தையும் விளங்கிக்கொள்ள முயற்சிப்பதுடன், இன்றைய சூழலுக்கு, அது ஏற்புடையதா என்ற வினாவுக்கு விடைகாண முயற்சிப்பதும் ஆகும்.…
-
- 2 replies
- 567 views
-
-
‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை -விரான்ஸ்கி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார். அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன. இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
கூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை காரை துர்க்கா இம்முறை சிவராத்திரி தினமன்று, திருக்கோணேஸ்வரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. வழிபாடுகளை முடித்துக் கொண்டு, கோவில் முன்றலில் இளைப்பாறும் வேளையில், திருகோணமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. “ஒரு காலத்தில், திருகோணமலையில் முதலிடத்தில் இருந்த தமிழினம், இன்று கடைநிலைக்குச் சென்று விட்டது” என்று, பெருமூச்சு விட்டுத் தனது கவலையைப் பகர்ந்துகொண்ட அவர், நிறைய விடயங்களை ஆதங்கத்துடன் அவிழ்த்துக் கொட்டினார். “சரி ஐயா, அடுத்து நாங்கள் தேர்தல் வி…
-
- 0 replies
- 524 views
-
-
42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன். முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும்…
-
- 1 reply
- 307 views
-
-
கனடாவில் சுயதனிமைப்படுதல் நடைமுறையில் இருக்கிறதா? Bharati April 16, 2020 கனடாவில் சுயதனிமைப்படுதல் நடைமுறையில் இருக்கிறதா?2020-04-16T08:46:45+00:00Breaking news, அரசியல் களம் ரொரன்ரேவிலிருந்து குரு அரவிந்தன் உலகத்திலே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. முதலாவது இடத்தை ரஷ்யா எடுத்துக் கொண்டது. தமிழர்கள் அதிகமாக வாழும் மூன்றாவது முக்கிய நாடாக இன்று கனடா இருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் மக்கள் உயிருக்கு அஞ்சிப் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதில் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தக் கலவரத்தைக் காரணமாகக் காட்டிப் புலம்பெயர்ந்தவர்களும் உண்டு. அதிகளவில…
-
- 1 reply
- 773 views
-