Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? செல்வரட்னம் சிறிதரன்:- 01 மார்ச் 2014 இரணைமடு குளத்து நீர் தொடர்பாகவும், ஜனாதிபதி ஆணக்குழு தொடர்பாகவும் இரண்டு முக்கிய தீர்மானங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கூடி நிறைவேற்றியிருக்கின்றது. இரண்டுமே மிகவும் முக்கியமான தீர்மானங்கள். கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இரண்டு தீர்மானங்களும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இரணைமடு குளத்து நீர் தொடர்பாக விரிவாக விவாதித்திருக்கின்றார்கள். மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக வாதிட்டதன் பின்னர், ஏகம…

  2. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்ப…

  3. 17 JUL, 2023 | 04:55 PM வட இலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு ஏறத்தாள 350 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் இவ்வரசு பற்றியும், அதன் நான்கு பக்க அரண்கொண்ட அரசமாளிகை, அதிலிருந்த பெரிய ஆலயம், அரச அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் இருப்பிடங்கள், பூங்காவனம், புனித ஜமுனா ஏரி, நீதி மன்றம், நாற்றிசைக் கோவில்கள், காவலரண்கள், கோட்டைகள் முதலியன பற்றியும் கூறுகின்றன. அவ்வரலாற்றை மீள் நினைவுபடுத்துவதாகவே இன்றும் நல்லூரின் சிறிய வட்டாரத்திற்குள் எஞ்சியிருக்கும் ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோரணவாசல் முதலான மரபுரிமைக் கட்டிடங்களும், நினைவுச…

  4. ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன் May 5, 2019 சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’ என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott ) கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் இந்து மகா சமுத்திரத்தில் தமிழ் நாட்டை வர்தா புயல் தாக்கிய போதும் இலங்கையை கஜா புயல் தாக்கிய போதும் முகநூலும் ஏனைய சமூக வலைத் தளங்களும்; கைபேசிச் செயலிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கின. தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதில் பாரம்பரிய தொடர்பு சாதனங்களை விடவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களை விடவும் சமூக வலைத்தளங்களும் கைபேச…

  5. சுமந்திரனும் தமிழ்த் தேசியவாதிகளும் என்.கே. அஷோக்பரன் / 2020 மே 18 இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில், கடந்த வாரத்தின் மிகச்சூடானதும், பரபரப்பானதுமான விடயமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சமுதித்த சமரவிக்ரமவுக்கு வழங்கிய பேட்டி அமைந்திருந்தது. அதில் குறிப்பாக, ஒரு கேள்வியும் ஒரு பதிலும், சுமந்திரனைத் 'துரோகி' என்று, பொதுவில் விளிக்குமளவுக்கு, அவரது உருவப்பொம்மைக்கு செருப்புமாலை அணிவிக்கும் அளவுக்குத் தம்மை, 'தமிழ்த் தேசியவாதிகள்' என்று உரிமைகொண்டாடுபவர்களிடையே கடும் விசனத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அந்தப் பேட்டியில் சமுதித்த, ''நீங்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்க…

    • 1 reply
    • 741 views
  6. மகிந்தவின் பொறிக்குள் தமிழ் தலைவர்களும் விக்னேஸ்வரனும் சிக்குவார்களா? 10 அக்டோபர் 2013 ராஜதந்திரத்தில் வெல்வார்களா? பாவம் மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸவரி இலட்சக்கணக்கான தமிழ் மக்களினதும், ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களினும் ஒன்றுமே இல்லாத மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி என்பது தமிழரசுக் கட்சியின் தனித்த வெற்றியோ, இரா சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியோ, சீ.வீ விக்னேஸ்வரன் என்ற முன்னாள் நீதியரசரின் நீதிக்கு 132000 விருப்பு வாக்குகளுடன் கிடைத்த வெற்றியோ அல்லது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தனிப்பட்ட கட்சிகளின் அவர்களின் தலைவர்களின் செல்வாக்கிற்கோ கிடைத…

  7. துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன. அதேவேளை, இந்நெருக்கடி, தனியே ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, பல நாடுகளைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது. …

  8. இலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை Ahilan Kadirgamar / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, பி.ப. 04:00 Comments - 0 இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா? அல்லது இருபெரும் கட்சிகளுக்கிடையிலான மோதலா? அல்லது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான சட்டரீதியான குழப்பமா? நான் இந்த நெருக்கடியை ஒரு வரலாற்று ரீதியிலான அரசியல், பொருளாதார காரணிகளின் விளைவாகப் பார்க்கின்றேன். சோகக்கதையும் கேலிக்கூத்தும் மாக்ஸினுடைய பலவிதமான எழுத்துகள் மத்தியில், அரசியல் சம்பந்தமான மிகவும் முக்கியமான படைப்பாக The Eighteenth Brumaire of Louis Bonaparte (லூயி போனபார்ட்டினுடைய பதினெட்டா…

  9. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு பகிரங்கக்கடிதம் 2 - இனவாத உப்பில் ஊறிய மிளகாய் சிவக்காது – நடராஜா குருபரன் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிதாமகரும் ஜே.வீ.பீயின் முன்னாள் அரசியற்குழு – மத்திய குழு – செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் இயந்திரம் என அழைக்கப்பட்டவருமான குமார் குணரட்ணத்திற்கு நான் எழுதிய முதலாவது பகிரங்கக் கடிதம் பல வாதப் பிரதி வாதங்களை தோற்றுவித்திருக்கிறது. அந்தப் பகிரங்க மடல் முகப்புத்தகத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியதுடன் என்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படவும் ஏதுவாகஅமைந்தது. எனது முதலாவது மடலில் நான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதில் முன்னிலை சோசலிசக் கட்சியையும் அதன் முன்னணியான சம உரி…

  10. அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வியாழக்கிழமை, 07 மார்ச் 2013 17:23 ‘எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம், கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தின் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாகக் கூறிய வார்த்தைகளை இன்று நாம் கண்கூடாக நிதர்சனமாகக் காண்கின்றோம். சனல்-4 மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் அழிவுகளை ஜெனீவாவில் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கின்றது. No fire Zone ஆவணப்படத்தைப் பார்த்த பல நாட…

    • 3 replies
    • 740 views
  11. ஓய்வூதியர்களின் தேசியம்? நிலாந்தன் 09 ஜூன் 2013 "கைநிறைய காசும் உண்டு நிறைய ஓய்வும் உண்டு ஆனால் பொழுதுதான் போகவில்லை - அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன்" வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற மருத்துவர் தனக்குத் தெரிந்த ஒருவரோடு பின்வரும் தொனிப்படக் கதைத்திருக்கிறார். ''நான் ஓய்வு பெற்றுவிட்டேன். எனது மகன் இப்பொழுது மருத்துவராகிவிட்டான். கைநிறைய உழைக்கிறான். எனக்கு இப்பொழுது நிறைய ஓய்வும் உண்டு. காசும் உண்டு. ஆனால், பொழுதுதான் போகவில்லை. அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த....... என்ற பிரமுகரோடு கதைத்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று யோசிக்கிறேன்' என்று. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் தமிழ் மி…

    • 2 replies
    • 740 views
  12. THINATHANTHI INTERVIEW. தந்தி டிவி குறும் நேர்கானல். - வ.ஐ.ச.ஜெயபாலன் . சற்றுமுன் தினத்தந்தி என்னைக் குறும் பேட்டிகண்டது. . மகிந்த ஊடாக சீனா இனப்பிரச்சினையில் ஒரு தீர்வை முன்வைகிறதன் மூலம் இலங்கையில் இந்தியாவின் தளத்தை தட்டிப்பறிக்க முனைகிறது என்கிற சேதியை தெரிவித்துள்ளேன். இத்தகைய ஒரு நகர்வு தொடர்பாக விடுதலை புலிகளோடும் பேச சீனா முயன்றது. இதனை என்னிடம் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். . ” சீனா சிங்கப்பூரில் வைத்து எங்களுடன் தொடர்புகொண்டது. இந்தியா எங்களுக்கு எதிராக இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் செயல்பட விரும்பாததால் சீனாவின் முயற்ச்சியை நிராகரித்துவிட்டோம். இதனை இந்தியாவிடம் தெரிவ…

    • 0 replies
    • 740 views
  13. இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 03 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:50 Comments - 0 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகள், கிட்டத்தட்ட ஒருமித்த வகையிலேயே முன்னெடுக்கப்பட்டன. சில சமயங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒருமித்த நிலை இருந்தது. எனினும், பிரதமர் ரணில், தன்னிச்சையாகச் செயற்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 26 ஆட்சிக் …

  14. மக்கள் சீனமும், சீன மக்களின் வாழ்க்கையும் ! – இரா. சிந்தன் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புதிய நகரத்தையே கட்டியமைத்து வருகிறார்கள். அது மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு முன் மாதிரியாக அமையப்போகிறது. அதன் பெயர் ‘ஜியோங்கன் நியூ ஏரியா’. இந்த நகரம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பல லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் இந்த நகரம் குறித்த திட்டத்தை வெளியிட்ட சீன குடியரசின் தலைவர் ஜி ஜின்பிங் ‘வரும் ஆயிரம் ஆண்டுக்கான பெரிய உத்தியாக இது அமையும்’ என்றார். உண்மையிலேயே, முன்னேறிய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கே கொண்டதாக அந்த நகரத்தை கட்டமைக்கிறார்கள். மனித நடமாட்டத்திற்காக சாலைகள், சரக்குப் ப…

  15. அரசமைப்பு அரசியல் Ahilan Kadirgamar அரசியல் தீர்வு தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடத்தில், பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருப்பதற்கான காரணம் என்ன? தெற்கிலும் வடக்கிலும் உள்ள பிற்போக்கான சக்திகள், பொதுத் தளத்தில் தமது ஆதிக்கத்தை உயர்த்தியிருப்பதோடு, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகளை நிராகரிப்பதில் முன்னேற்றம் காண்பது எப்படி? அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும், அரசியல் தூரநோக்குப் போதாமலிருப்பது தான் காரணமென நான் வாதிடுவேன். மக்களுடன் கலந்துரையாடி, அரசியல் தீர்வு தொடர்பாக மக்களைச் சென்றடையாமல், அரசாங்கம் மாற்றப்பட்ட பின்னர் 3 ஆண்டுகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. அதனோடு சேர்…

  16. உயிர்த்த ஞாயிறில் திறக்கப்பட்ட, புதிய போர் முனை? நிலாந்தன்… April 28, 2019 போர் வெற்றிக்குப் பின் 2009 இலிருந்து இலங்கை அரசாங்கம் அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்குகளை கொழும்பில் நடத்தி வருகிறது. மைத்திரி பால சிறிசேன அரசுத்தலைவராகிய பின்னரும் அக்கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய அவர் இறுமாப்போடு பின்வருமாறு பிரகடனம் செய்தார் ‘சிறிலங்காவுக்கு இப்போது எதிரிகள் இல்லை’ என்றுஆனால் அப்படியல்ல சிறிலங்காவுக்கு எதிரிகள் உண்டு என்பதைத்தான் உயிர்த்த ஞாயிறு அன்று வெடித்த குண்டுகள் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின் இனி எதிரிகள் இல்லை என்ற முடிவுக்கு ஏன் மைத்திரி வந்தார்? ஏனெனில் அவர் புலிகள் இயக்கத்தை மட்டும் தான் எதிரிகளாகப் பார்த்தாரா? அத…

  17. எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! முருகவேல் சண்முகன் தமிழரின் தாகம் தணிவதில்லை, அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சந்தர்ப்பங்களில், அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாக, சனிக்கிழமை (24) இடம்பெற்ற எழுக தமிழ்ப் பேரணி அமைந்திருந்தது. சுயபாதுகாப்பு முறையில் உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் சாத்வீக போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது. அதுவும், இப்போதைய காலவோட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களைத் தயார்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டமைப்பையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது, களத்திலிருக்கும் மக்களை பிரதிபலிக்காது, வாக்கு வங்கி அரசியலையும் தமது பதவிகளைத் …

  18. எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் - பௌத்த அச்சம் எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்…

  19. சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் ஜெனிவா உடன்படிக்கைகளும் போர் மனித வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கிறது. புராதன காலந் தொட்டு போர் பற்றிய விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் நிலவுகின்றன. பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் படைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை. போரின் போது பொது மக்கள் பாதிப்படைகின்றனர் என்பது தான் உண்மை. இதனால் போர் சூழலில் அகப்பட்ட பொது மக்களையும் போரில் இருந்து விலகிய போராளிகளையும் பாதுகாப்பதற்கு மனிதநேயச் சட்டங்கள்(Humanitarian Laws) உருவாக்கப் பட்டுள்ளன. போர் தொடர்பான சட்டங்களும் விதிகளும் 1864,1906,1929,1949 ஆகிய வருடங்களில் உருவாக்கப்பட்டு இன்று நடை முறையில் இருக்கின்றன. சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் ஜெனிவா கொன்வென்ஷன்கள் (Geneva C…

    • 0 replies
    • 739 views
  20. அகதிகள் உருவாக்கம் எழுதப்படாத விதியா? உல­கம் முழு­வ­தி­லும் மனித குலம் அமை­தி­யாக வாழ்ந்து வரு­கின்­றதா? மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட ஜன­நா­யக அர­சு­க­ளாக இருந்­தா­லும் சரி, மன்­ன­ராட்சி அர­சு­க­ளாக இருந்­தா­லும் சரி, சர்­வா­தி­கார ஆட்­சி­க­ளாக இருந்­தா­லும் சரி மக்­கள் சகல உரி­மை­க­ளை­யும் பெற்று வாழ்­கின்­ற­னரா? பஞ்­சம், பசி, பட்­டி­னி­யின்றி உலக மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர் என்­பதை எவ­ரா­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யுமா? நாட்­டுக்கு நாடு ஏற்­ப­டு­கின்ற போர், உள்­நாட்­டுப் போர்­கள், இனத்­தின் மேலான அர­சின் ஒடுக்­கு­மு­றை­கள், மதப் பிணக்குகள் எனப் பல்­வேறு பிரச்­சி­னை­கள் உல­கத்­தின் கண்­முன்­னால் தின­மும் நடந்­தேறி வரு­கின்­றன. …

  21. முள்­ளி­வாய்க்­காலும் பிடல்­காஸ்ட்­ரோவும் மண்­ணு­லகில் சில மனி­தர்கள் மர­ணித்­தாலும் அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் கால ஏட்டில் அழிக்­க­மு­டி­யாத கல்­வெட்­டு­க­ளா­கி­விடு­கின்­றன. அந்த வகையில் 638 கொலை­ முயற்­சி­களை முறி­ய­டித்த கொரில்­லா­ வீரர், அமெ­ரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ மிகவும் சிறந்த முன்­னு­தா­ரணம். பிடல்காஸ்ட்ரோ என்­பது இந்த நூற்­றண்டின் தலைவர் மட்­டு­மன்று கடந்த 50 வரு­டங்­க­ளுக்கு மேல் அமெ­ரிக்­காவை கதி­க­லங்­க­டிக்க வைத்­திடும் ஓர் மந்­தி­ரச்சொல். அமெ­ரிக்­காவில் பல தேர்­தல்கள் இடம் பெற்­று­மு­டிந்­து­விட்­டன. ஆனாலும் அத்­தனை அதி­பர்­க­ள‌தும் ஒட்­டு­மொத்த முயற்­சியே பிடல்காஸ்ட்ரோவை ஒழிப்­ப­தா­கவே அமைந்து இருந்­தது…

  22. டெலோ ஊதிக் கெடுத்த சங்கு புருஜோத்தமன் தங்கமயில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி...’ என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை, இலங்கைக்கு இந்தியா வழங்க வேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து, இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதும் செயற்றிட்டத்தை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கடந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பித்தது. அதில், இணைந்து கொண்டதன் மூலமே, தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அவதிப்பட வேண்டி வந்திருக்கின்றது. சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், தமிழ்க் கட்சிகளின…

  23. நல்­ல­வரா, கெட்­ட­வரா? - முகாபே ஒரு சகாப்தம் 'நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலு­நா­யக்கர் என்ற கதா­பாத்­திரம். அவ­ரிடம் சிறு­வ­யது மகள் கேட்பாள்' அப்பா, நீங்க நல்­ல­வரா, கெட்­ட­வரா?' அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் 'தெரி­ய­லையே அம்மா!' சிம்­பாப்­வேயின் நீண்­ட நாள் ஜனா­தி­பதி ரொபர்ட் முகா­பேயும் அதே மாதிரி தான். மக்­களின் நேசத்­தையும், வெறுப்­பையும் சம்­பா­தித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலை­வரா, மோச­மா­ன­வரா என்று சிம்­பாப்வே மக்­களைக் கேட்டால், தெரி­ய­லையே என்று தான் பதில் கூறு­வார்கள். கால­ணித்­துவ ஆட்­சியின் அடிமைத் தளை­களில் இருந்து தமது தேசத்­திற்கு விடு­தலை தேடித்­தந்த தைரி­ய­மா­ன­தொரு தலைவன். அந்தத் தலைவன், தனது 95 வயதில் இறு…

  24. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. இலங்கையின் அரசியல் நிலை தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அவர் எழுதிய ஆய்வு இது. இன்றைய அரசு ஒரு பயங்கரவாத அமைப்புப் போன்றே செயற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டுகிறார் அவர். அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது. இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது ஏ9 நெடுஞ்சாலை. அதில் படையினரின் கடைசி சோதனைச் சாவடியைத் தாண்டியதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குவதற்காக விடுதலைப் புலிகள் ஆவணங்களைச் சோதிக்கும் அலுவலகத்தை அடைந்தோம். இது 2002இல் நடந்தது. அன்று அந்தப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்த எவருமே இரண்டு நாடுகளுக்கு இடையில் த…

  25. வடபகுதி மக்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே தீவிரவாதிகள்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன Rajeevan Arasaratnam May 24, 2020 வடபகுதி மக்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே தீவிரவாதிகள்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன2020-05-24T18:04:41+00:00அரசியல் களம் வடபகுதி மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவது குறித்த தனது கருத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித…

    • 1 reply
    • 739 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.