அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
தமிழரசுக் கட்சி: 75 ஆண்டுகள் ? – நிலாந்தன் adminDecember 22, 2024 தமிழரசுக் கட்சிக்கு 75 வயது. கடந்த புதன்கிழமை அதை விமரிசையாகக் கொண்டாட முடியவில்லை என்று அதன் தொண்டர்கள் சிலர் கவலைப்பட்டுக் கொண்டார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை? 75 ஆண்டுகள் எனப்படுவது ஒரு மனிதனின் முழு அயுளுக்குக் கிட்டவரும். இந்த 75ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழரசுக் கட்சி சாதித்தவை எவை? சாதிக்காதவை எவை ? இப்பொழுதுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளில் பெரிய கட்சி அது. நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கும் கட்சியும் அது. ஒரு விதத்தில் தாங்களே தலைமை சக்தி என்ற பொருள்பட சுமந்திரன் கூறிக்கொள்வார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை எடுக்கும் பொறு…
-
- 0 replies
- 269 views
-
-
ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்! August 19, 2025 — அழகு குணசீலன் — முத்தையன்கட்டு குளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம், அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இளைஞனின் கொலைக்கு இராணுவமே காரணம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிய நிலையிலேயே, தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் ஹர்த்தால் அழைப்பு வெளியானது. சுமந்திரனின் இந்த அழைப்பு தனிநபர் அழைப்பு என்பதே மக்களதும், பொது அமைப்புக்கள், கட்சிகளின் நிலைப்பாடாக ஆரம்பம் முதல் இன்று வரை இருக்கிறது. இடையில் இது குறித்த விசாரணைகள் வேறு பல குற்றவியல் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளன. இந்த உண்மைகள் மரணம் குறித்து மக்களுக்கு …
-
-
- 8 replies
- 545 views
-
-
சிறிதரன்: தவறுகளும் மீளலும் September 11, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைப் பற்றிய ‘படங்காட்டுதல் அல்லது சுத்துமாத்துப் பண்ணுதல்‘ என்ற கட்டுரை, அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். அவர்களுடைய கேள்விகளில் முக்கியமானவை – 1. சிறிதரன் மட்டும்தான் இப்படி (கட்டுரையில் குறிப்பிட்டவாறு கல்வி, மருத்துவம், விவசாயம், சூழல் விருத்தி, கடற்றொழில், பனை தென்னை வளத் தொழில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைக்கு – பிரதேசங்களின் அபிவிருத்திக்கு, இளைய தலைமுறையினரின் திறன் விருத்திக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு, பண்பாட…
-
- 0 replies
- 231 views
-
-
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன். “முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள். ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..” இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம் போன்ற வார்த்தைகளை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி விளங்காமல் கதைத்துவிட்டுப் போகிறார் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது அரசாங்கம் திட்டமிட்டு வடக்கில் தன் கவனத்தைக் குவிக்கிறது என்பதனை இது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்வதா? ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு மிகக்குறுகிய காலத்தில் அதிக தடவை விஜயம் செய்த ஒரே ஜனாதிபதி அனுரதான்.அப்படித்தான் அவருடைய அமைச்சர்களும். அரசாங்கம்…
-
- 0 replies
- 142 views
-
-
தமிழ் மக்கள் யார் பக்கம்? விடுதலை பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிவந்த தமிழ்த் தலைவர்கள் யாவரும், இப்போது அமெரிக்காவில் இடம்பெற்ற கொலையை அடுத்து, இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, வாய் திறக்கவில்லை. பல சமயங்களில், மௌனம் சொல்கின்ற செய்தி வலுவானது. அமெரிக்கா என்பது, ஆட்சியாளர்களும் அரச எதிர்ப்பாளர்களும் இலகுவாக ஒன்றிணையும் புள்ளி ஆகும். அந்தப் புள்ளியில் இன்னமும், எல்லோரும் ஒன்றிணைகிறார்கள். அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. யோகர் சுவாமிகளின் வழியில், 'எந்தப் பொல்லாப்பும் இல்லை' என்று இவர்கள், அமைதி காக்கிறார்கள். தமிழ் மக்கள், மேற்குலகை நம்பினால் தீர்வுகிடைக்கும் என்று, இன்றும் சொல்லப்படுகிறதுளூ அன்றும் சொல்லப்பட்டது. ஆனால், என்ன கிடைத்…
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கான இந்தியத் தூதுவராக, தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்தி, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஏற்கெனவே கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், முக்கியமானதொரு காலகட்டத்தில் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான கவுன்சிலராகப் பணியாற்றியவர் என்பதால்தான், தரன்ஜித் சிங்கின் இந்த நியமனம் ஆழமான கரிசனைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதைய அரசாங்கத்துடனான உறவுகளில், புதிய அணுகுமுறைகளைக் கையாளுவதற்காகவே இவரை நியமிக்க இந்தியா முனைகிறதா என்ற சந்தேகம் பலரிடம் தோன்றியிருக்கிறது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, மூன்றாண்டு பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக பொறுப்பே…
-
- 0 replies
- 544 views
-
-
சர்வதேசப் பெருந்தெருவில் தமிழீழத்திற்கான குறுக்குத்தெரு தத்தர் 'சர்வதேச நியமனங்களின்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் இந்தியா தலையிட முடியாது' என்று ஒரு தரப்புக் கூறுகின்றது. 'இலங்கையின் இனப்பிரச்சினை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையே. அதில் வேறெந்தொரு நாடும் தலையிடக்கூடாது. அதை இலங்கை அரசே தீர்த்துக் கொள்ளட்டும்' என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். 'இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று மேலும் இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். இங்கு ஒவ்வொரு அரசினதும் அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களினதும் அரச நலன்சார் கொள்கைகளின் கீழ் மேற்படி கருத்துக்கள் முன்வைக்க…
-
- 0 replies
- 803 views
-
-
அரசாங்கத்தின் அலட்சியமும் கொரோனாவின் மீள்பரவலும் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை எப்போதுமே ஆச்சரியங்களால் நிறைந்த நாடு. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உலகம் பூராவும் சுகாதாரத்துறையினர் தலைமை தாங்கிக் கொண்டிருக்கையில், இலங்கையில் இராணுவம் தலைமையேற்றிருக்கின்றது. சுகாதார அமைச்சரோ, மத அனுஷ்டானங்களை நடத்தி, பானையில் அடைக்கப்பட்ட புனித நீரை ஆற்றில் கொட்டுவதில் கவனமாக இருக்கிறார். பிரதமரோ, மத - மார்க்க நிறுவனங்களிடம் கொரோனா வைரஸுக்கு எதிரான பிரார்த்தனைகளை முன்னெடுக்குமாறு கோருகிறார். ஜனாதிபதியோ, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பொதுமக்களைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ்ஸுக்கு எதிரான நடவடிக்கைகளில், முதல் தரப்பாக இருக்க வேண்டிய வைத்திய…
-
- 1 reply
- 866 views
-
-
அமெரிக்கா ஓர் உலகப் பேரரசு. அது தன் எதிர்காலத்தை நூற்றாண்டுக் கணக்கில் அல்லது ஆயிரமாண்டுக் கணக்கில் திட்டமிடும். எனவே அதன் வெளியுறவுக் கொள்கை; பாதுகாப்பு கொள்கை; பொருளாதாரக் கொள்கை போன்றன நூற்றாண்டுக் கணக்கிலேயே திட்டமிடப்படும். இவ்வாறு நூற்றாண்டுக் கணக்கில் திட்டமிடப்படும் ஒரு வெளியுறவுக் கொள்கையை நான்கு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்கும் ஒரு புதிய தலைவர் எடுத்த எடுப்பில் மாற்றிவிட முடியாது. ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அது சாத்தியம். அண்மையில் தெரண ஆங்கில ஊடகத்துக்கு இலங்கையின் வெளிவிவகார செயலரும் ஓய்வுபெற்ற வான்படைப் பிரதானியுமான ஜெயநாத் கொலம்பகே ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார் “ஐந்து ஆண்டுகளை நோக்கி அதாவது ஒவ்வொரு கட்சியும் அதன் …
-
- 0 replies
- 722 views
-
-
அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்னைய ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து வன்செயல்களில் ஈடுபட்டிருந்த பௌத்தவாத கடும்போக்காளர்களின் மதவாதச் செயற்பாடுகளை இந்த அரசாங்கமும் ஊக்குவிக்கின்றதோ என்று சந்தேகப்படும் அளவில் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அந்த அமைப்பைப் பின்பற்றி வேறு சுமணரத்ன தேரர் போன்ற சில பௌத்த மதகுருமார்களும் மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது முஸ்லிம் மக்களை அதிருப்தியடையவும், ஆத்திரமடையவும் செய்திருக்கின்றது. இதனால் முஸ்லிம் மக்களும் இந்த அரசாங்கத்தைச் சந்தேகத்தோடு நோக்…
-
- 0 replies
- 311 views
-
-
தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன. கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது. உறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை…
-
- 1 reply
- 475 views
-
-
நல்லிணக்கம் பற்றிய நம்பிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- அண்மையில் கிளிநொச்சி நகரில் ஒரு அறிவிப்பு வாகனம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நிவாரணங்களைக் கோரிக் கொண்டு விலத்திச் சென்றது. தெற்கு மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிவாரணப் பொருட்களை வழங்க முன்வருமாறும் அந்த அறிவிப்பு வாகனம் சொல்லிக் கொண்டு போனது. அந்த தெருவால் போக்குவரத்து செய்த பலரும் அந்த வாகனத்தைப் பார்த்துச் சென்றனர். சிலர் லேசாக புன்னகைத்தபடி சென்றனர். ஆனால் பொதுமக்களும் வர்த்தகர்களும் தெற்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஆர்வத்துடன் வழங்க முன்வந்தனர். இலங்க…
-
- 0 replies
- 283 views
-
-
வெற்றியும் பொறுப்பும் - நிலாந்தன் 29 செப்டம்பர் 2013 கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலான தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி மற்றுமொரு முறை தமிழ் இனமான அரசியல் பெருவெற்றி பெற்றிருக்கிறது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை இதுவென்று கூட்டமைப்பு கூறுகிறது. இதுசரியா? பெருமளவுக்கு உணர்ச்சிகரமான விவகாரங்களின் மீது தளமிடப்பட்டிருக்கும் ஜனநாயகப் பரப்புகளில் எளிமையான கவர்ச்சியான சுலோகங்களே பொதுசனங்களை விரைவாகச் சென்றடைகின்றன. சிக்கலான தேர்தல் விஞ்ஞாபனங்களைப் படிப்பாளிகளும், அரசியல் மயப் படுத்தப்பட்ட பொதுசனங்களும் வாசிப்பதுண்டு. மார்ச்சிய முலவர்கள் கூறியதுபோல கருத்து மக்களைப் பற்றிக் கொண்டு ஒரு சக்தியாக உருவெடுப்பதற்கிடையில் எப்பொழுதும் எரிபற்று நிலையில் இருக்கு…
-
- 0 replies
- 532 views
-
-
திண்ணைப் பேச்சும் தமிழரசுக் கட்சியும்! நிலாந்தன். November 7, 2021 கடந்த செவ்வாய்க்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாசவிடுதியில் 7 கட்சிகள் கூடின. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது அச்சந்திப்பில் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதில் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்ட போதிலும் பங்குபற்றவில்லை. மனோ கணேசனும் ரவுப் ஹக்கீமும் சந்திப்புக்காக கொழும்பிலிருந்து வந்திருந்தார்கள். எனினும், எதிர்பார்த்தபடி ஒரு இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு ஒரு தீர்மானத்தை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பில் முடிவெடுப்பதற்கு தமிழரசுக்க…
-
- 1 reply
- 551 views
-
-
சிதையும் கோட்டாபயவின் கனவு! திணறும் இலங்கை (Video) விளம்பரம் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) தலைமையில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்று கடந்த 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. ருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண …
-
- 0 replies
- 372 views
-
-
அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும் நாடோடி புத்தாண்டுக்குப் பின்னர், ஜனவரி 18ஆம் திகதியன்று இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள், கொழும்பு அரசியலில் பேசும் பொருளாகியது. ஒன்று, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை. மற்றொன்று, தமிழ்பேசும் கட்சிகளால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்ட கடிதமாகும். இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்த…
-
- 0 replies
- 363 views
-
-
கேள்விக் குறியாகியுள்ள விடுதலை - செல்வரட்னம் சிறிதரன் 22 பெப்ரவரி 2014 ராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவரகள் விவகாரம் உலக அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கின்றது. பாரதப் பிரதமராக இருந்து, ஒரு தேர்தலைச் சந்தித்திருந்தபோது, வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றிருந்த வேளை, தமிழ் நாட்டில் வைத்து ராஜிவ் காந்தி மிகவும் துணிகரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இது ஓர் அரசியல் கொலை. பிராந்திய வல்லரசாகிய இந்தியப் பெருநாட்டின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட இவருடைய கொலை, பிராந்திய சர்வதேச அரசியல் கொலையாகக் கணிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றிருந்தன…
-
- 3 replies
- 833 views
-
-
ஆண்டு 2001 தமிழர் தேசத்திற்கெதிரான அனைத்துலக திட்டமாக முக்கியமான நான்கு திட்டங்களை வரைவு செய்கிறது அமெரிக்கா. 1. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த்தேசிய செயல்பாடுகளை முடக்குதல் 2. புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல் 3. ஈழத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல் 4. இறுதியாக புலிகளை படைகளை அழித்தொழிப்பு செய்தல் இந்த திட்டத்திற்கு பெயர்தான் “ஆபரேஷன் பெக்கன்” முதலில் அவர்கள் செய்த வேலை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் புலிகள் அமைப்பை தடை செய்தது... நிதி ஆதாரத்தை முடக்கியது... தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக திரிகோணமலையில் தனது இராணுவ தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. இதன் மூலம் தெற்காசியா…
-
- 1 reply
- 733 views
-
-
சம்பந்தனின் நிதானத்தால் சிங்கள ராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா? யதீந்திரா புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே போதுமானது எனவே புதிய அரசியல் யாப்பு ஒன்று இலங்கைக்கு தேவையில்லை என்பதே அவர்களின் அறிவிப்பு. மகா சங்கத்தினரின் இந்த அறிவிப்பை மிகவும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தால் இதில் ஒரு மிக முக்கியமான விடயம் இருக்கிறது. அதாவது, தற்போதிருக்கின்ற அரசியல் அமைப்பே எமக்கு சிறந…
-
- 1 reply
- 497 views
-
-
இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் - அடுத்த திட்டம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச…
-
- 0 replies
- 541 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…
-
- 0 replies
- 342 views
-
-
இடைவெளி ஒரு வண்டியை நான்கு குதிரைகள் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்லும்போது வண்டியில் இருப்பவர்கள் எதிர்நோக்கும் அவஸ்தைக்கு ஒத்ததானதொரு அரசியல் சூழ்நிலைக்கு வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கின் புல்மோட்டை முதல் பொத்துவில் வரையான பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் எந்தத் தலைமையை முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்வது என்றதொரு குழப்ப நிலையை எதிர்நோக்குவதை தற்காலத்தில் உணர முடிகிறது. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருந்தாலும், எந்தக் கடையில் பொருட்கொள்வனவு செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நுகர்வோர்தான். அந் நுகர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேச்சுக்கான முஸ்தீபு மும்முரம்? December 12, 2022 — கருணாகரன் — எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக அடுத்த சில தினங்களில் அதிகாரப்பகிர்வுக்கான பேச்சுகள் நடப்பதற்கான சூழல் கனிந்துள்ளது போலிருக்கு. தமிழ்த் தரப்பிலும் இதற்கான கவனம் ஏற்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் இதைப் பற்றிக் கூடிப் பேசுவது, பேச்சுகள் குறித்துப் பொதுவெளியில் உரையாடுவது, பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது என்று பச்சைக் கொடி காட்டியுள்ளன. ரெலோ இதில் இன்னும் முன்னுக்கு வந்து இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக – பேச்சுக்கு செல்லும்போது நாம் ஒரு பொறிமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று ரெலோவின் பேச்சாளரான சுரேந்திரன் கேட்டுள்ளார். “ஐ.நா.…
-
- 1 reply
- 795 views
-
-
ஜெயக்குமாரி கைது என்பது தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் ஒரு நடவடிக்கை. தீயநோக்கம் கொண்டது - கலும் மக்ரே - தமிழில் - ரஜீபன்:- 05 அக்டோபர் 2014 சுமார் 200 நாட்களுக்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தமிழ்பெண்மணியையும் அவரது மகளையும் கைதுசெய்தனர். ஜெயக்குமாரி காணமல்போன தனது 15 வயது மகன் மகிந்தனிற்க்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அதிகாரிகள் மகிந்தனை விடுதலைப்புலி உறுப்பினர் என குற்றம்சாட்டி கைதுசெய்திருந்தனர். கடந்த நவம்பரில் பிரிட்டிஷ் பிரதமர் முன்னர் யுத்தம் இடம்பெற்ற அந்த பகுதிக்கு சென்ற வேளை அவரை சூழ்ந்துகொண்டு தங்களது வேதனைகளை வெளி;ப்படுத்திய பலர…
-
- 0 replies
- 655 views
-
-
Courtesy: ச.வி.கிருபாகரன், பிரான்ஸ் இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து நடைபெற்ற அரசியல், பொருளாதார, சமூக, கலை மற்றும் கலாசார சம்பவங்கள், நிகழ்வுகளை நாம் மிகவும் அவதானமாக ஆராய்வோமானால், அவை பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம் என்ற அடிப்படையிலேயே கடந்த எழுபத்து ஐந்து வருடங்களாக நகர்ந்துள்ளதை அவதானிக்க முடியும். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த தமிழன் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை, பங்களிப்பு சரித்திரம் மிக சுருங்கிய சில தசாப்தங்களே. ஆனால் இவ் பூமியில் தமிழ் மொழி கலை, கலாச்சாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகள் அல்ல, “கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த தமிழ்”. இதில் இலங்கைதீவில் தமிழர் தாயாக பூமியான வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்க…
-
- 3 replies
- 1.5k views
-