அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய் April 6, 2020 “வைரலாகிவிட்டது” என்ற வார்த்தையை சிறிதேனும் அச்சமின்றி நாம் யாரேனும் இனி பயன்படுத்த இயலுமா? நம்முடைய நுரையீரல்களைக் கவ்விக் கொள்ளக் காத்திருக்கின்ற, கண்ணுக்குப் புலப்படாத, செத்துப் போகாத ஆனால் உயிரும் இல்லாத சின்னஞ்சிறிய உறிஞ்சு குமிழ்கள், படைபடையாக அப்பிக் கொண்டிருக்குமோ என்றெண்ணி பீதியடையாமல், ஒரு கதவின் கைப்பிடியையோ, ஒரு அட்டைப்பெட்டியையோ, ஒரு காய்கறிப் பையையோ இனிமேலும் நம்மால் தொட முடியுமா? அறிமுகமில்லாத ஒருவரை முத்தமிடலாம் என்றோ, பேருந்தில் தாவி ஏறலாமென்றோ, குழந்தையை பள்ளிக்கு அனுப்பலாமென்றோ, அச்சம் சிறிதுமின்றி நம்மால் இனி யோசிக்க முடியுமா? சின்னச் சின்ன சந்தோசங்களாகக் கூட இருக்கட்டும்…
-
- 0 replies
- 555 views
-
-
கொரோனாவின் எதிரொலியாக மாற்றமடையப் போகும் உலகப் பாரம்பரியங்கள் சு. ஜீவசுதன் இனிவரும் காலங்களில் தேவாலயங்களிலும் கிறிஸ்தவ சபைகளின் ஆராதனைகள் மற்றும் எழுப்புதல் கூட்டங்களிலும் தேவசெய்திகளைக் கேட்க மற்றும் பிரார்த்தனைகளில் பங்குபற்றவும் வருபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ரொட்டித்துண்டுகளை ஒற்றையாகப் பகிரப்படுகின்ற வைன் கிண்ணங்களில் அமிழ்த்தியுண்ண விரும்பப்போவதில்லை. சில கத்தோலிக்க திருச்சபைகள் ஆராதனைகளின்போது அவ்வாறான கிண்ணங்களைப் பயன்படுத்துவதை இலகுவாகக் கைவிடவும் கூடும். அத்துடன் இவ்விரு பிரிவினரும் பிரார்த்தனையின் முடிவில் அமைதிக்கான சமிக்ஞைகளை அருகருகே இருப்பவர்களுக்கு வெளிக்காட்டும்போது பாரம்பரியமாகக் கைலாகு கொடுத்தோ அல்லது கட்டித்தழுவுவதன் மூலமோ தெரியப்படுத்தாது தமது…
-
- 0 replies
- 547 views
-
-
[size=5]கோதபாயாவின் வெருட்டலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும்;[/size] [size=4](ஐ.தி.சம்பந்தன்)[/size] [size=4]அண்ணன் அளவு மீறிய அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக ஆட்சிபுரிகிறார் என்ற் மமதையில், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பொறுப்பான அரச ஊழியரான பாதுகாப்புச்செயலாளர் கோதபாயாவின் பேச்சுக்களும் செயலும் தமிழ் மக்களை அச்சத்திற்குட்படுத்தியுள்ளது. இவர் பதவியின் அடிப்படையில் ஒரு அரச ஊழியர். அரச ஊழியர் என்ற நிலையிலிருந்து கொண்டு அரசியல் ரீதியான கருத்துக்களைக் கூறும் அதிகாரம் இவருக்கு இல்லை. அதுவும் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருப்பவர் அரசியல் கருத்துக்கள்கூற உரிமை இல்லை.[/size] [size=4]அரச ஊழியராகவிருந்த திரு. ரி.;பி.இலங்கரத்தினா அரச லிகிதர் சேவைச் சங்கத்தில், …
-
- 4 replies
- 788 views
-
-
BREXIT: இலங்கையும் தமிழர்களும் இதில் எங்கே? தெய்வீகன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வுகள், இப்போதைக்கு ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரம் கணிசமானளவு சலசலப்புக்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அரசியல் ரீதியான இன்னும் பல வெடிப்புக்களை எதிர்வரும் மாதங்களில் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம், தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவை, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை தமது நாட்டு மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு எதிரான முடிவு என்றும் இம்மாதிரியான …
-
- 0 replies
- 359 views
-
-
வடக்கின் அரசியல் ; இதுவும் இரண்டாம் அலைதானா? July 13, 2020 2020 தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்த நிலையில் மீண்டும் கொரொனா அச்சம் ஆட்கொண்டு இரண்டாம் அலை என பேசப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் வருகைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. அந்த வரிசையில் வடக்கு அரசியல் மீது அவதானத்தைச் செலுத்தினால் அங்கும் இந்த இரண்டாம் அலை அரசியல் சூழலே நிலவுவதாக உணரமுடிகிறது. கட்சிகளையும் கொள்கைகளையும் அதன் பேசுபொருட்களையும் தாண்டி சுமந்திரனே அதிகமாகப் பேசப்படுகிறார். அது குறித்தே இங்கேயும் அவதானத்தைச் செலுத்தாமல் அங்கே போட்டியிடும் கட்சிகள் என்ன பேசுகின்றன என்பது பற்றி அவதானிக்கலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு …
-
- 0 replies
- 439 views
-
-
வெற்றித் திமிர் குப்புறக் கவிழ்க்குமா? ராஜபக்ஷ சகோதரர்கள் தலைமை தாங்கும் அரசாங்கம், தோல்விகள் அல்லது அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது, பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உச்சக்கட்ட வெற்றியைப் பெற்றிருந்தது. இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தப் பயன்படுத்தும், ‘விடுதலைப் புலிகளை’ தோற்கடித்து பெறப்பட்ட வெற்றி அது. அந்த வெற்றியைக் கொண்டாடாத சிங்களவர்கள் யாருமே இல்லை எனலாம். அந்தளவுக்கு, உச்ச வெற்றியைத் தொட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் சரிந்து வீழ்ந்தது. ஓர் இரும்புக் கோட்டையைக் கட்டுவதற்குச் சாதகமான ப…
-
- 0 replies
- 461 views
-
-
திருவிழா முடிந்தது... சோற்றுக்கு என்ன வழி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 07 தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள், நெருக்கடிகளை உருமறைப்புச் செய்து, மக்களின் கவனத்தைக் கச்சிதமாகத் திசைதிருப்பி இருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றாக, இலங்கையர்களைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் தயாராக இருக்கிறோமா? நடந்து முடிந்துள்ள தேர்தல், இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக, இனமுரண்பாடுகளைக் கூர்மையாக்கி உள்ளது. இது எதிர்பார்த்ததே! …
-
- 0 replies
- 611 views
-
-
வவுனியாவில் புளொட்டின் வதைமுகாம் கிட்லர் இன்னும் சாகேல்ல. வவுனியா கோவில் குளத்தில் உமாமகேஸ்வரன் வீதியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இரகசிய வதை முகாமொன்றைப் பாதுகாத்து வருகின்றனர். கோவில் குளம் பகுதியில் உள்ள சிவன் கோவில் நிர்வாகத்தினர் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் ஆதரவில்லம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோவிலின் பின்பக்க மதிலுக்குப் பின்னால் அமைந்திருக்கும் இவ்வதை முகாமானது புளொட் இயக்கத்தினரால் இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் புளொட் இயக்கத்தின் மயானம் அமைந்துள்ளது. இம்மயானத்தில் வருடாவருடம் தமது இயக்கத்தினரின் நினைவுநாள் மற்றும் தங்களின் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார்கள். இங…
-
- 0 replies
- 1.4k views
-
-
எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும் இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது. அப்படியொரு மக்கள் திரட்சியையும் கோரிக்கைகளின் கோசத்தையும் மீளவும் நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதனை, கிழக்கிலுள்ள…
-
- 1 reply
- 558 views
-
-
-
- 0 replies
- 855 views
-
-
நாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம்! Gunnar Sørbø - (தமிழாக்கம்: ரூபன் சிவராஜா) 'போருக்குப் பின்னான சிறிலங்கா' எனும் தலைப்பில் மூத்த நோர்வேஜிய ஆய்வாளரும் கிறிஸ்தியான் மிக்கல்சன் ஆய்வு மையத்தின் - Christian Michelsens institutt (CMI) முன்னாள் பணிப்பாளருமான Gunnar Sørbø அவர்கள் அண்மையில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். <em>Morgenbladet</em> (The Morning Paper) எனும் நோர்வேஜிய வார இதழில் இவ்வாய்வு வெளிவந்தது. *** இரத்த வெள்ளத்தோடும், தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையிலான நீண்டநெடிய உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு…
-
- 4 replies
- 622 views
-
-
தமிழர்களுக்கு தொடரும் அநீதி வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்தமான குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினருக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். போராட்டம் நடத்தப்பட்ட பகுதிக்கு இராணுவத்தினரைக் கொண்டு சென்ற இவரே, அங்கு கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார். அந்தச் சம்பவத்தில் 14 வயது மாணவன் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதுடன் 33 பேர் காயமடைந்தனர். மஹிந்த ர…
-
- 0 replies
- 361 views
-
-
நிலைக்குமா ஆட்சி..? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-02#page-22
-
- 0 replies
- 383 views
-
-
"ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்க்குமா இந்தியா.!? Navaratnam Wimal & Nish | srilanka 13th amendment நன்றி - யூரூப்
-
- 0 replies
- 500 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆண்டுகள் 16 http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-8
-
- 0 replies
- 266 views
-
-
ஒருங்கிணையும் எதிர்கட்சிகளும், சிந்திக்காத தமிழர் தலைமைகளும் | திரு.யதீந்திரா | நிலாந்தன் மகாதேவா
-
- 0 replies
- 316 views
-
-
யுவான் வாங் 5: இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் - இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை சீனா உறுதிப்படுத்தியதா? 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனாவிற்கு சொந்தமான விண்வெளி ஆய்வு கப்பலான யுவான் வாங் - 5, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நடவடிக்கை, தற்போது சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், ஆரம்பம் முதல…
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தினை ஒரு இறுக்கமான நிலமைக்குள் தள்ளியுள்ளது. சுதந்திரத்துக்காக அவாவுறும் இனத்தின் அபிலாஷகளை கருத்தில் எடுக்காத எந்தத் தீர்வுத் திட்டமும் அப் பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியாது. தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டமும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டமும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதே உதாரணம் மீண்டுமொரு முறை புதுப்பிக்கப்படும் வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேசத்தின் அணுகு முறை தொடர்கின்றது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாத வகையிலும் குறை மதிப்பீடான அலட்சியப் போக்கிலும் எடுக்கப் படும் நடவடிக்கைகள் இவ்வாறான பாரிய தவறினை மீண்டும் அரங்கேற்றப் போகின்றது. சர்வதேச நாடுகள்…
-
- 11 replies
- 2.4k views
-
-
எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரையில் சக்கடத்தார்? - நிலாந்தன் இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள்,சந்திப்புகள்,எழுதிய உடன்படிக்கைகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. ஆயுதப் போராட்டம் கொழும்பின் மீது நிர்ணயகரமான அழுத்தத்தை பிரயோகித்தது. அதனால் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நிலைத்திருந்த இரண்டு உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இவ்வாறு ஆயுதப் போராட்டத்…
-
- 2 replies
- 492 views
-
-
போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்கள் ஏன்? “...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள், பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்…
-
- 0 replies
- 594 views
-
-
குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம் கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது. கால்பந்தாட்ட உலகக்கிண்ணம் முடிந்துவிட்டது. பேச்செல்லாம் குரோஷிய அணி பற்றியும் அனைவரையும் கட்டியணைத்த குரோஷிய ஜனாதிபதி பற்றியுமாய் இருக்கிறது. …
-
- 0 replies
- 652 views
-
-
இனப்படுகொலையும் இரட்டைவேடமும்-பா.உதயன் அமெரிக்காவும் அதன் நண்பர்களும் அடுக்கடுக்காய் பொய் சொல்லுவதில் வல்லவர். அன்று ஒரு நாள் இராக்கில் இரசாயன குண்டுகள் இருப்பதாக சொன்னது போல் இப்போ இஸ்ரேல் போடவில்லை குண்டுகள் மருத்துவ மனையில் என்று மறுபடியும் பொய். இப்படி எத்தனை பொய்கள் உலகத்துக்கு தெரியும். அண்ணன் சொல்லி விட்டார் இனி அவர் தம்பிமாரும் தொடருவார்கள். நீதி நியாயம் எதுகும் இல்லா உலகமாகிவிட்டது. அண்மையில் நோர்வீய ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் நடை பயணம் போகும் போது காணமல் போய் விட்டான் போலீஸ் மக்கள் உட்பட அனைவரும் தேடினார்கள் நாம் எல்லோருமே அவன் உயிரோடு திரும்பி வரவேண்டும் என்றே மன்றாடினோம் ஆனால் துர்அதிஸ்டமாக அவர் இறந்து விட்டான். இது பெரும் அவலம் நோர…
-
- 0 replies
- 284 views
-
-
தலைமைக்கு இதுதான் தகுதியோ? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:04 முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, “நான் அப்படிக் கூறினேனா” என்று கேட்பது, “அவ்வாறு கூறவேயில்லை” என்று தலையில் அடித்து சத்தியம் செய்வது போன்றன, அரசியல்வாதிகளுக்குப் புதிதான விடயமல்ல. இது அரசியல்வாதிகளின் பொதுமையான குணவியல்பாக மாறியிருக்கிறது. மிகச்சமீபத்தில், இந்தக் குணவியல்புகளை, அப்பட்டமாகவே வெளிக்காட்டியிருப்பவர்கள் இருவர். ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; இன்னொருவர் மஹிந்த ராஜபக்ஷ. இரண்டு பேருமே, ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அதையடுத்த 51 நாள்கள் நீடித்த குழப்பங்களுக்கும் காரணமானவர்கள். இதனால் தான், இரண்டு பேரினதும் செல்வாக்கு, கடுமையாகச் சரிந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆட்சி மாற்றமும் வடமாகாணசபையும்: சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள் நிலாந்தன் இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை காணப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் இல்லைத்தான். இதற்கொரு ஒட்டுமொத்த தலைமைத்துவம் இல்லைத்தான். இதில் எதிர்ப்பைக் காட்டும் எவரும் முழுநேர செயற்பாட்டாளர்கள் இல்லைத்தான். ஆனாலும் இலங்கைத் தீவின் வயதால் மிக இளைய ஒரு மாகாண சபைக்கு வந்த ஒரு முக்கிய சோதனையாக இதைக் குறிப்பிடலாம். இன்று இக்கட்டுரையானது குடிநீரில் என்ன கலந்துள்ளது என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கப்போவதில்லை. அது துறைசார் நிபுணர்களின் ஆய்வுக்குரிய ஒரு பரப…
-
- 0 replies
- 276 views
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2024 | 02:48 PM By SHIHAR ANEEZ ECONOMYNEXT – இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார். எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி ஒருபோதும் எண்ணவில்லை. கொழும்பின் உயர்குழாமை சேர்ந்த குடும்பத்தின் இளையவரான 55 வயதான ஹரிணி இலங்கையின் 16 வது பிரதமராக பதவிபிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் அவர். பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான அவர் இளவயதிலேயே அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தவர். அது தனது தந…
-
-
- 48 replies
- 7.6k views
- 1 follower
-