அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
சத்திய சோதனை! களத்திலிருந்து பசீர் காக்கா / காக்கா அண்ணா காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். 'சோகசோபிதசொர்ணக்குயில்' இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார். 'மயானத்தில் மன்னன்' என்ற பேரிலும் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதாபாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக …
-
- 0 replies
- 724 views
-
-
தேசியமென்னும் வெற்றுக் கூடு – அன்றும் இன்றும் ? - யதீந்திரா அரசியலில் ஒரு கூற்றுண்டு. அதாவது, பேருந்தை தவறவிடுதல். வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, அதனை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்தக் கூற்றின் பொருளாகும். தமிழில் இதனை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுதல் எனலாம். ஒரு மேற்குலக நாடொன்றின், தூதுவருடனான கலந்துரையாடலொன்றின் போது, இதனை நான் குறிப்பிட்டேன், அவர் திரும்பக் கூறினார், நீங்கள் பேருந்தை தவறவிட்டது மட்டுமல்ல, பேருந்திலிருந்து பாய்ந்துமிருக்கின்றீர்கள். திபெத் ஆண்மீகத் தலைவர் தலைலாமா கூறுவார். அதிஸ்ட தேவதை எப்போதாவதுதான் கதவை தட்டுவார். அவர் கதவை தட்டும்போது தாமதிக்காமல் கைகை பிடித்து, உள்ளுக்குள் இழுத…
-
- 0 replies
- 768 views
-
-
மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்மொழிவு செய்துள்ளார். இந்தச் செய்திக்கு, பலவாறான எதிர்வினைகள் தமிழர்களிடம் எழுந்துள்ளன. அதில் மேவி நிற்கும் எதிர்வினை, 13ஆம் திருத்தத்துக்காகவா, தமிழர்கள் இத்தனையை இழந்தார்கள் என்ற உணர்ச்சிவசப்பட்ட நிலையாகும். உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு அப்பால், பகுத்தறிந்து சிந்திப்பதுதான் அறிவார்ந்த செயலாகும். அதற்க…
-
- 0 replies
- 434 views
-
-
விக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா? யதீந்திரா சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பிலும் புதுடில்லியில் பேசியிருக்கிறார். புதிய அரசியல் யாப்பொன்று வரும் என்பதில் சம்பந்தனுக்கு நம்பிக்கையிருப்பின் பின்னர் எதற்காக 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் பேச வேண்டும்? சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் புதுடில்லி சென்ற குழுவில் சம்பந்தன் மட்டுமல்ல ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லிக்கு அ…
-
- 0 replies
- 504 views
-
-
உலகச் செல்வமும் ஏழ்மையும் உலகமயமாதல். திறந்துவிடப்பட்ட உலக சந்தை என்று வந்த பிறகு உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகுகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது. "உலகமயமாதலால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. ஆகவே, உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்" என்று சமீபத்தில் சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது. வருடாவருடம் உலகின் மி…
-
- 0 replies
- 1.2k views
-
-
திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்… September 30, 2018 1 Min Read கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது. உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ‘…
-
- 0 replies
- 606 views
-
-
மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும் பி.மாணிக்கவாசகம் February 23, 2019 மறப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதாக அது அமைய வேண்டும். மனம் திருந்தாமல் மன்னிப்பு கோருவதை மனக்காயங்களுக்கு உள்ளாகியவர்கள் ஏற்பதில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. வடபகுதிக்கு அரச முறையாகப் பயணம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம். இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். உண்மையான மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்ட அழைப்பாக இதனைக் கருத முடியவில்லை. ஏனெனில் மறந்து, மன்னிக்க வேண்டிய விடயங்களில் அல்லது சம்பவங்களில் என்ன நடந்தது, யார் யாரெல்லாம் பங்கேற்றி…
-
- 0 replies
- 4.1k views
-
-
திருமலையில் பறிபோகும் தமிழ்நிலங்களும் அழிக்கப்படும் வளங்களும்! திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னக்கரச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கும்புறுபிட்டி மக்கள்கோரிக்கைவிடுத்தனர். இவ்வுப்பளத்தை தனியார்கம்பனி ஆரம்பிப்பதற்கு கடந்த பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. மக்களால் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுத்து வந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் உப்பள பணிகள் இழுபறிநிலையில் இருந்து இருகின்றன. இந்நிலையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இச்செயற்றிட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உப்பள உரிமையாளர்களுக்கும் இடையில் கும்புறுப்பிட்டி க…
-
- 1 reply
- 709 views
-
-
இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும் Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 06:04 Comments - 0 -அதிரதன் அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது பழமொழியோ, சான்றோர் வாக்கோ, எப்படி இருந்த போதிலும், இப்போது செயற்பாட்டுப் பயனில் இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் சொல்லியாக வேண்டும். அப்படியானால், இலங்கையில் இனப்பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும்; காணாமல் போனோர் பிரச்சினை முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி பொங்கியிருக்க வேண்டுமே? ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 40ஆவது கூட்டத்தொடர், கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது. இதன் ஆரம்பமே, இலங்கையிலிருந்து எழுந்த ஜனநாயக…
-
- 0 replies
- 530 views
-
-
யேமன் உள்நாட்டுப் போர்: மனிதப் பேரவலத்தின் நான்கு ஆண்டுகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 28 வியாழக்கிழமை, பி.ப. 05:39Comments - 0 உலகில் நடப்பவை எல்லாம், கவனம் பெறுவதில்லை. கவனம் பெறுபவைகளில் பல, வெறும் பெட்டிச் செய்திகளாகவே கடந்து போகின்றன. நமக்குச் சொல்லப்படும் செய்திகளை விட, நமக்குச் சொல்லாமல் விடப்படும் செய்திகள் அதிகம். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், இலங்கையின் உள்நாட்டுப் போர், அவல முடிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கும் இட்டுச் சென்ற போது, உலகம் வாழாவிருந்தது என்பது, தமிழ் மக்கள் பலரது மனக் கவலை. இன்று, பத்தாண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒரு மூலையில், இலங்கையை ஒத்த இன்னொரு மனிதப்பேரவலம் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமறிவோமா?…
-
- 1 reply
- 697 views
-
-
அவர்களுக்காக இவர்களா, இவர்களுக்காக அவர்களா? காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:35 Comments - 0 மக்கள் தங்களுக்குள், “சத்திரசிகிச்சை வெற்றி; ஆனால், நோயாளி இறந்து விட்டார்” என நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. அது போலவே, இம்மாதம் எட்டாம் திகதி, யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் (தமிழரசுக் கட்சித் தலைவர்) மாவை சேனாதிராஜா, ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்ட, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. படை முகாம்கள் அமைப்பதற்கு, மக்களின் காணிகளை அப(சுவீ)கரிப்புச் செய்ய முடியாது என, அங்கு, அவர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 749 views
-
-
டெல்லி (Delhi) தும்மினால், கொழும்புக்கு (Colombo) சளி பிடிக்கும் என்ற துணைக் கண்டத்தில் உள்ள இராஜதந்திரிகளுக்குத் தெரிந்த ஒரு பழைய நகைச்சுவையை இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தமது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இது நகைச்சுவை என்பதை காட்டிலும், இது, தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வரலாற்று சமூக - அரசியல் தொடர்புகளை கோடிட்டு காட்டுகிறது. அத்துடன், அதன் விளைவாக வரும் நீரோட்டங்கள் டெல்லியை விட கொழும்பில் அரசியல் முன்னேற்றங்களை காட்டுவதாக அந்த ஆசிரியர் தலையங்கத்திலை: ராகுலை எதிர்க்கட்சி தலைவராக்க தீர்மானம் பதவியேற்கும் நிகழ்வு இந்த நாட்டில் ஒரு புதிய ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அங்குள்ள அதிகா…
-
- 0 replies
- 447 views
-
-
கலாமின் இலங்கை அவதாரம்!இரு கடலோர நிலவரம் ஆக்கம்: இரா.தமிழ்க்கனல் சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்னைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர் பாக ஒரு தீர்வைச் சொல்ல... பிரச்னை பற்றிக் கொண்டுள்ளது. ''இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்பதுதான் கலாம் சொன்ன யோசனை. கலாமின் இந்தக் கருத்துக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடைய…
-
- 0 replies
- 581 views
-
-
ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும் : சபா நாவலன் ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. உலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப்…
-
- 6 replies
- 845 views
-
-
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச் சூழ அமைந்துள்ள கடற்பரப்பு நாட்டுக்கு கிடைத்துள்ள அருங்கொடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் …
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
பாதை திறப்பில் பதுங்கிய அனுரவும் முந்திக்கொண்ட சுமந்திரனும் | இரா மயூதரன்
-
-
- 2 replies
- 455 views
-
-
NPP யாக JVP — கருணாகரன் — மாற்றத்துக்குரிய சக்தியாக ‘தேசிய மக்கள் சக்தி‘ (NPP) யை நம்புகின்ற – வரவேற்கின்ற அளவுக்கு அதைக் குறித்த வலுவான சந்தேகங்களும் உண்டு. இதற்குக் காரணம், JVP யாகும். NPP க்குள் ஒலிக்கும் அல்லது NPP யை இடையிடு செய்யும் JVP யின் எதிர்மறையான குரல்கள் பலமானவையாகவே உள்ளன. அதுவே சந்தேகம் (நம்பிக்கையீனம்) அச்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகும். குறைந்த பட்சம் NPP முற்போக்கு முகத்தையும் முகாமையும் கொண்டுள்ளது. அதனுடைய இன்றைய கவர்ச்சியே இதுதான். ஆனால், NPP யைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது அதை இடையீடு செய்யக்கூடிய நிலையிலுள்ள JVP யோ கடந்த காலத்தின் ஒளி மங்கிய பிரதேசத்திலேயே இன்னும் இருக்கப்பார்க்கிறது. இதற்கு அ…
-
- 0 replies
- 432 views
-
-
ஆட்சியாளர்களின் நண்பர்களும் விரோதிகளும் -நஜீப் பின் கபூர்- ஆட்சியாளர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் மற்றும் இன்னும் இரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிப்பு என்பன வெகுவிரைவில் வர இருப்பதால் அவைபற்றி பேச இருக்கின்றன. அதற்கு முன்னர் அனுர அரசின் நண்பர்கள், விரோதிகள் என்ற தலைப்பில் சில விடயங்களை பேச எதிர்பார்க்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது நமக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு கதைதான். எனவே அதற்கு நாம் மேலும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் இன்றைய நண்பர்கள் நாளை விரோதிகளாகலாம். இன்றைய விரோதிகள் நாளை நண்பர்கள…
-
- 0 replies
- 231 views
-
-
[size=6]இலங்கைத்தீவில் தமிழ்தேசியத்தின் இருப்பும் அதன் எதிர்காலமும் – மீள் சிந்திப்புக்கான முன்மொழிவுகள்[/size] [ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 09:50 GMT ] [ புதினப் பணிமனை ] /images/t/Art/thinking-statue.jpg 'புதினப்பலகை'க்காக ம.செல்வின். [அண்மையில் நோர்வே ஒஸ்லோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற ‘போருக்கு பின்னான இலங்கையில் நிலஅபகரிப்பும் இனப்பிரச்சனையும்'; என்ற கருத்தரங்கில் பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம் இலங்கையின் தேசியஇனப்பிரச்சனை சார்ந்த அரசியலினை ‘மீள்சட்டகப்படுத்தல்’ [Reframing] செய்யவேண்டிய அவசியம்பற்றி பேசியிருந்தார். இக்கட்டுரை அவர்குறிப்பிட்ட விடயத்தினை விளங்கிக்கொள்ளும் ஆரம்ப முயற்சியே]. 01. பிர…
-
- 0 replies
- 685 views
-
-
நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நீங்கள் இருவரும் எனது வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் உரையாடி ஆறுதல் கூறி விடைபெற்றுச் சென்றமை என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாது நான் கடத்தப்பட்ட அன்றே ஊடகங்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் நீங்கள் வெளியிட்ட காரசாரமான கண்டன அறிக்கையையும் இப்பொழுதும் ஆவணமாகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். என் மீது நீங்களும் உங்கள் இருவர் மீது நானும் தனிப்பட்ட வகையில் வைத்திருக்கும் மதிப்புப்பற்றி எங்கள் மூவருக்கும் நன்றாகத் தெரியும். சூரியன் எவ் எம்மெனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக் கூறுமாறு நான் அழைத்த போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் நீங்களும் உங்களது நண்பரும் எனது நண்பருமான …
-
- 0 replies
- 852 views
-
-
சம்பந்தன்: தலைமைத்துவக் காலமும் பிறகும்.. தமிழரின் (தமிழ்த்தேசிய) அரசியல் July 12, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியலில் தலைமைப் பொறுப்பிலிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் மறைந்து ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் தமிழ்த்தேசியவாத அரசியலிலும் சரி, தமிழ்மக்களுடைய அரசியலிலும் சரி எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரியாக வரையறுத்துச் சொன்னால், சம்பந்தனுக்குப் பிறகு தமிழ்த்தலைமை என்று அடையாளம் காணக்கூடிய எவரையுமே காணவில்லை. மட்டுமல்ல, அடுத்து வரப்போகின்ற பத்துப்பதினைந்து ஆண்டுகளில் கூட தமிழ்த்தேசியவாத அரசியலில் மாற்றங்களோ முன்னேற்றமோ ஏற்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் முன்னெடுப்புகளோ, புத்தாக்க முயற்சிகளோ, கருத்தியல் மற்றும் செயற்…
-
- 0 replies
- 267 views
-
-
பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணையக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுதல் என்பது இனவாதம் என்றும் பாசிசத்தை நோக்கி வளர்ச்சியடையும் முழக்கம் என்றும் திட்டமிட்ட பிரச்சாரம் இலங்கையில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கருத்தியல் உலகிற்குப் புதிய ஒன்றல்ல. திரிபு வாதிகளும், ஒடுக்குமுறையாளர்களும், ஏகாதிபத்தியத்தின் அடியாட்களும் உலகம் முழுவதும் சுயநிர்ணய உரிமைக்கு எதிரான எதிர்ப்பை மீண்டும் நிறுவனமயப்படுத்தி வருகின்றனர். இலங்கை சார்ந்த சூழலில் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையும் தேசிய விடுதலையும் குறித்த கருத்துக்களை முன்வைப்பவர்களை அவர்களின் பலம் பல…
-
- 0 replies
- 848 views
-
-
-
- 0 replies
- 581 views
-
-
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன் டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக் கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள். காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின…
-
- 0 replies
- 226 views
-
-
தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது? என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூலை 20 வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக் கூட்டாகத் தேர்ந்தெடுக்கும்போது, சுதந்திரமான தேர்வின் மூலம், நாம் நம்மை ஆளுகிறோம் என்ற கருத்தை அது உறுதிப்படுத்துகிறது. ஒரு நபரின் வாக்களிக்கும் உரிமையானது, அந்த நபர், அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்ற தெரிவை மேற்கொண்டாலும், அந்த நபரை, நமது ஜனநாயக சமூக ஒழுங்கு, தன்னோடு இணைக்கிறது. வாக்களிப்புத்தான் நமது ஜனநாயகத்தின் ஆர…
-
- 1 reply
- 861 views
-