அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
அன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு! ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டதாகவும் அதற்கு கோடாலிக் காம்பாக மாறிய அந்தக் காட்டிலுள்ள மரம் ஒன்றே காரணம் என்றும் அந்தக் கதையை சொல்லி முடித்தீர்கள். அன்றைய முதல்வர் விக்னேஸ்வரனைக் குத்துவதற்கே அந்தக் கதையை சொன்னீர்கள். இப்போது கனகச்சிதமாக அந்தக் கதை உங்களுக்குத்தான் பொருந்துகின்றது. சில வருடங்கள் ஓடி மறைந்திருக்கின்ற இன்றைய நிலையில், இப்போது யார் கோடாலிக்காம்பு என்பதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. திரு. விக்னேஸ்வரன் அந்த…
-
- 1 reply
- 647 views
-
-
இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா? - நிலாந்தன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்தத்தை அரசாங்கம் நீக்கினால் அதை இந்தியா தடுக்குமா என்று உரையாடப்பட்டது. அதற்கு கணேசலிங்கம் ஏற்கனவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்ட பொழுது அதை எதிர்க்கவில்லை எனவே இனிமேலும் 13ஆவது திருத்தத்தில் கைவைத்தால் இந்தியா எதிர்க்கும் என்று எப்படி எடுத்துக் கொள்வது ?என்று கேட்டார். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை அகற்றக் கூடும் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ராஜபக்சக்கள் இந்…
-
- 1 reply
- 501 views
-
-
20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன் Bharati October 17, 2020 20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு -நிலாந்தன்2020-10-17T21:31:56+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore நிலாந்தன் இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19 ஆவது திருத்தத்தின் மூலம் தான். ஏனெனில் 19 ஆவது திருத்தம் மஹிந்த ராஜபக்சவை போட்டியிலிருந்து நீக்கியது. எனவே கோத்தாபய தனது ராஜபக்ஷ வம்சத்தின் அடுத்த வாரிசாக போட்டியிட சந்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன? உலகின் கவனத்தை கவர்ந்துள்ள கட்டுரை Rajeevan Arasaratnam November 12, 2020 ஜோ பைடனிற்கு சென்னையுடன் உள்ள தொடர்பு என்ன? உலகின் கவனத்தை கவர்ந்துள்ள கட்டுரை2020-11-12T22:16:46+05:30அரசியல் களம் LinkedInFacebookMore அமெரிக்க தேர்தலிற்கு முன்னர் ஜோ பைடனிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து தெரிவித்த கட்டுரையொன்று மீண்டும் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் டிம்விலாசோ-வில்சே ஜோ பைடனிற்கு இந்தியாவுடன் பூர்வீகத்தொடர்பொன்றுள்ளது.கமலா ஹாரிசிற்கு உள்ளதை போல. இருவரினதும் பூர்வீகதொடர்புகள் சென்னையி…
-
- 1 reply
- 829 views
-
-
காவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன் 91 Views கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரைக் காணொளி எடுக்கின்ற செயற்பாட்டைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் உத்தேச பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதியை நீக்க வேண்டும் எனக் கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் அண்மை நாட்களாக பாரிஸ் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் வெளிப்படுத்திய கோபாவேசம், சட்டவரைபின் குறிப்பிட்ட பகுதியை தாம் மீள எழுதுகின்றோம் என்று அரசு அறிவிப்பை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சட்டத்தை முழுமையாகக் கைவிடுவதே அரசு உண்மையில் மேற…
-
- 0 replies
- 669 views
-
-
கொடூரக் குற்றங்களுக்கு இழப்பீட்டு வெகுமதியுடன் விடுதலை – வழிகாட்டிய விசாரணைக்குழு – பி.மாணிக்கவாசகம் 90 Views இலங்கையின் நீதி நியாயச் செயற்பாடுகள் நடுநிலையானவைதானா என்ற கேள்வி காலத்துக்குக் காலம் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. நீதி நியாயப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டும். பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பளிக்க வேண்டும். பாதிப்புகள் மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதும் நீதிப் பொறிமுறையின் தலையாய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் நீதி நியாயம் தொடர்பிலான இந்த நியதிகளும் சாதாரண மக்களின் இவற்றுக்கான எதிர்பார்ப்பும் இலங்கையின் நீதித்துறையினால் நிறைவேற்றப்படவில்…
-
- 0 replies
- 492 views
-
-
-
- 24 replies
- 2.3k views
-
-
‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார். அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன. குறித்த உரையைத் தொடர்…
-
- 254 replies
- 20k views
- 1 follower
-
-
கோத்தாவின் தலைவலி துமிந்த சில்வா என்பவன் தூள் (போதைப்பொருள்) கோஸ்ட்டி தலைவன். செய்த கொலைக்காக மரண தண்டனை பெற்று சிறையில் இருந்த போதும், தனது தூள் ராஜ்யத்தினை சிறையில் இருந்தே நடத்திக் கொண்டு இருந்தான். பாதுகாப்பு செயலாளராக, கோத்தா இருந்த போது, அவருடன் மிக பெரும் உறவினை வைத்து இருந்தான். தான், விடுதலை செய்யப்படுவேன் என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. மாறாக எனது தந்தை, பிரேமச்சந்திரா, மகிந்தாவின் வலது கையாக இருந்தார். சந்திரிக்கா, மகிந்தவினை முன்னிலைப்படுத்த மறுத்த போது, ஒரு ஜனநாயக வாதியாக, தேவையான அரசியல் செய்து, அவர் பிரதமர் ஆகவும், பின்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடவும் பெரும் ஒத்தாசை செய்தார். அப்படி செயல் பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட போது…
-
- 5 replies
- 958 views
-
-
சீனா: ஒரு பட்டை ஒரு பாதை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலத்துடன் கருத்துக்களும் மாறுகின்றன. உலகின் தீர்மானகரமான சக்திகள் எப்போதும் ஒன்றாக இருக்கின்றன. மாறுகின்ற காலங்கள் அதிகாரத்தின் தன்மையையும் இயங்கியலையும் தீர்மானிக்கவும் மாற்றவும் வல்லன. மாற்றங்கள் மாறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதை காலம் பலமுறை சுட்டிக் காட்டியபடி இருக்கிறது. எல்லாச் செயல்களும் அதிகாரத்துக்கான அவாவினால்ல. அதேவேளை அதிகாரத்தின் தன்மைகள் மாறியுள்ள நிலையில் புதிய பாதைகள் அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்வனவாக இருக்கின்றன. இந்தவாரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 29 நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 584 views
-
-
செலாவணித் தட்டுப்பாடு: 1970களிலும் பஞ்சத்தில் மூழ்கடித்தது எம்.எஸ்.எம். ஐயூப் மின்சார விநியோகத்தைத் தடையின்றி நடத்திச் செல்ல, மின்வெட்டைத் தவிர வேறு வழியே, அரசாங்கத்துக்கு இல்லை என்று தான் தெரிகிறது. மின்சாரத்தோடு சகலதும் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில், மின்வெட்டுத் தொடர்ந்தால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில், சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரை விட இன்று, வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்கதாக மின்சாரம் மாறியுள்ளது. அக்காலத்தில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கிணறுகள், ஆறுகள், வாவிகளில் இருந்தே மக்கள் நீரைப் பெற்றுக் கொண்டனர். கொழும்பு போன்ற நகரங்களிலும் பல இடங…
-
- 0 replies
- 392 views
-
-
கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 01 ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்) மெலிஞ்சிமுனை நோக்கிய பயணம்: தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் விருது வழங்கல் (யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபம்), மண்டைதீவு கண்டல் காடு ஒதுக்கு கள விஜயம், பறவை ஆய்வுகள், யாழ்ப்பாணம் கொக்குவில் ராமகிருஸ்ண வித்தியாசாலையில், எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் அமைப்பின் சர்வதேச ஈரநிலக் கொண்டாட்டம், பரிசளிப்பு விழா, பலாலி வீதி, கோண்டாவில் எழுதிரள் பணி…
-
- 1 reply
- 352 views
-
-
கல்வித் தகைமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது. ‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி, படித்துப் பட்டம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவா, மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒருவகையில், ஏலவே உள்ள அரசியல்வாதிகளின் நடத்தைகளும் நடவடிக்கைகளும், முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய மோசமான அரசிய…
-
- 0 replies
- 749 views
-
-
தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65வது குடியரசுதின வைபவம் வழமைபோல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தன. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களின் கூட்டு அணுகுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், உறுதிப்பாட்டோடும், பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும் இருதரப்புக்களும் செயற்பட வேண்டும் என்றும், இதனையே …
-
- 3 replies
- 788 views
-
-
யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம் சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது. ஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல ஊடகங்கள், தேசியளவில் மிகவும் முக்கியமான விடயங்களை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறைப்பதில் அர்த்தம் இல்லை என்பது தெளிவாக இருக்கையிலும், அவை அச்செய்திகளை மறைக்கவே செய்கின்றன. உதாரணமாக, அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கிய இரண்டு தீர்ப்புகளை, ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதைச் சுட்டி…
-
- 0 replies
- 334 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு? நிலாந்தன்:- இடைக்கால அறிக்கையை மக்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது அவர் மற்றொரு விடயத்தையும் கூறியுள்ளார். அதாவது வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்புத் தோற்றால் அது யாப்புருவாக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்ற தொனிப்பட. எனவே தமிழரசுக்கட்சியானது இடைக்கால அறிக்கையை முன்வைத்து மக்களாணையை கேட்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்பு…
-
- 0 replies
- 326 views
-
-
சீமானும் தமிழ்த் தேசியமும் - நிலாந்தன்:- 24 ஆகஸ்ட் 2014 இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஓன்று புலிப்பார்வை, மற்றது கத்தி இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை முகநூலில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்ககள் இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இன மான அரசியலில் சீமானின் எழுச்சி எனப்படுவது ஏனைய தமிழகத் தலைவர்களோடு ஒப்பிடுகை…
-
- 2 replies
- 806 views
-
-
கூட்டமைப்பினருடனான பிரதமரின் உறுதிப்பாடும் தொடரும் முரண்பாடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது நிபந்தனைகளை முன்வைத்ததாகவும் அந்த நிபந்தனைகளுக்கு பிரதமர் இணக்கம் தெரிவித்தமையினாலேயே கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக வாக்களித்தது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. பொது எதிரணியினாரல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி அதன்மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றன. இந்த வாக்கெடுப்பிற்கு முன்னர் தமிழ்த் த…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழர்களை ஆதரிக்குமா இந்தியா ? By Digital Desk 2 11 Dec, 2022 | 02:44 PM (என்.கண்ணன்) “இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை” “சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா” இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த புதன்கிழமை ராஜ்ய சபாவில் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அவரது அந்த உரை, இந்தியாவி…
-
- 3 replies
- 416 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றது
-
- 0 replies
- 612 views
-
-
ஆஹா, ஹொங்கொங் மக்களும் உலக மக்கள் புரட்சி இயக்கங்களுடன் இணைந்து விட்டார்களே. சிங்கப்பூர் போன்றே அதே விதமான வர்த்தகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பெயர் போன ஹொங்கொங் கூட ஒரு புரட்சித்தலமாக மாறும் என நாம் நினைத்திருக்க மாட்டோம். அது புரட்சித்தலமாக மட்டுமன்றி மிகப்பண்பான எதிர்ப்பாளர்கள் (politest protestors) கொண்ட இடம் எனவும் பெயர் பெற்றுவிட்டது. லட்சோப லட்சமாகக் மக்கள் இரவுபகலாகக் கூடியிருந்தும், அவர்கள் பொலிஸ் தாக்குதலுக்கு முகம் கொடுத்திருந்;தும், சிரித்த முகத்துடன் அமைதியுடன் எதனையும் எதிர்கொள்பவர்களாக இருக்கின்றார்கள். போகும் பாதைகளை அவர்கள் அடைக்க நேர்ந்தால் அசௌகரியத்துக்கு மன்னிக்கவும் என்று அறிவித்தல் போடுகின்றார்களாம். இரவு முழுக்க மக்கள் தங்கிய இடங்கள் காலை பார்த்த…
-
- 0 replies
- 447 views
-
-
எப்போது இவர்களுக்கு நீதி கிடைக்கும் என்னுடைய மகனுக்கு என்ன நடந்தது? என்னுடைய கணவர் எங்கே? என் சகோதரனுக்கு நடந்தது என்ன? இவ்வாறான கேள்விகளை எழுப்பிய வண்ணம் காணாமல் போனோரின் உறவினர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது அரசாங்கத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இந்த காணாமல் போனோரின் உறவினர்கள் இவ்வாறு தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தக்கோரி போராடி வருகின்றனர். ஆனால் இதுவரையும் எந்தவொரு சம்ப…
-
- 0 replies
- 604 views
-
-
இராணுவச்சூழலுக்கு இயல்பாக்கமடையும் வடக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு பாராளுமன்றத்தில், மாகாண சபையில், உள்ளூராட்சி சபைகளில் முக்கியமானது. அந்த விடயங்களை மறந்து விட்டு. அரசியல்வாதிகள் வேண்டாம் , நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பும் போக்கு, இப்போதைய நிலையில், ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல. அரசியல் என்பது சமூகத்தினதும், அன்றாட வாழ்வியலினதும் ஒரு அங்கம். அதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான், அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை கிளப்பி விடுகின்றனர். ஒரு பக்கத்தில், அரசியல்வாதிகளை ஓரம்கட்ட வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கிளம்பியிருக்கும் ந…
-
- 0 replies
- 389 views
-
-
விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு. இரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை…
-
- 0 replies
- 452 views
-