Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. திரு கஜேந்திரகுமார் அவர்களும் , திரு சுமந்திரன் அவர்களும் ஏறத்தாள ஒரே காலப்பகுதியில் இரண்டு ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியின் சிலபகுதிகளை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். முடிவு உங்களிடம். {தி,பாலமுருகனின் முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது } ------------------------------------------------------ 1}Sunday Leader {19/04/2015} :-தமிழ் தேசியக்கூட்டமைப்பு புலிகளையும் அவர்களின் கொள்கைகளையும் ஆதரிக்கின்றது என்கிற‌ ஒரு குற்றச்சாட்டு உண்மையானதா?? சுமந்திரன் : இல்லை , விடுதலைப்புலிகளில் எங்களுக்கு எந்த வித விசுவாசமும் இல்லை. அவர்களின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் தமிழர்க…

  2. மஹிந்தவின் பலவீனத்தின் வெளிப்பாடு? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 கோட்டாபய ராஜபக்‌ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு ராஜபக்‌ஷ குடும்பம் முடிவு செய்து விட்டது என்றும், அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்களை, கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கத் தூதரகத்தில் கையளித்து விட்டார் என்றும் பரபரப்பான செய்திகள், ஊடகங்களில் அடிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், “அப்படியான முடிவு எதையும் எடுக்கவில்லை” என்று, குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் மஹிந்த ராஜபக்‌ஷ. ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்த போதே அவர், கோட்டாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக நிறுத்துவதென்று முடிவு எட…

  3. இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலர் கோத்தபய ராஜபக்ச அதிபர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, ``எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்'' என்று முழக்கமிட்டார். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, போர்க்காலத்தில் பாதுகாப்புத் துறையில் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள்…

    • 0 replies
    • 452 views
  4. கல்முனையும் கன்னியாவும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 04:21 Comments - 0 கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான அதிகாரங்களுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தல் என்பது, அப்பிரதேச தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களிடையே அபிப்பிராய பேதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அண்மையில் இந்த விடயம் சூடுபிடித்தது. இது, இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையோ, இன்று நேற்று உருவான பிரச்சினையோ அல்ல. 1989ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக அப்பிரதேச தமிழ் மக்களாலும் தலைமைகளாலும் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையாகும். இதுவரை காலமும் பதவிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதனைக் கண்ட…

  5. ‘ஒப்பரேசன் கிழக்கு’ - நோக்கம் என்ன? Editorial / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:32 Comments - 0 -இலட்சுமணன் ‘எனது வாழ்நாளில் இந்த நாளைத் தான் காணக் காத்திருந்தேன்’ என, காஷ்மிர் பிரிக்கப்பட்ட விவகாரம் குறித்து, தனது ட்விட்டரில் கருத்திட்ட சுஷ்மா சுவராஜ் மறைந்துவிட்டார். 2019 ஓகஸ்ட் மாதத்தின் முதல்வாரத்தில், காஷ்மிர் விவகாரத்தில், இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள், உலகத்திலேயே ஒரு களேபரத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இது வரலாற்றுப் பதிவாகிவிட்டது. உலகம் முழுவதுமே, தேசியவாதமும் பாதுகாப்புவாதமும் தலைதூக்கி வருகின்றன. இஸ்‌ரேலின் பாலஸ்தீனம் மீதான நிலைப்பாடு, இலங்கையின் தமிழ் ஈழம் மீதான நிலைப்பாடு, மியான்மரின் றோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான நிலை…

  6. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நியமிக்கப்பட்ட குழுவினர் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இது ஒரு குறுகிய கால முயற்சி. உண்மையில் இந்த முயற்சியை ஆகக் குறைந்தது ஆறு மாதங்களிற்கு முன்னராவது மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் பேரவை ஒரு சில முயற்சிகளை இறுதி நேரத்தில் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பேரவையால் நியமிக்கப்பட்ட குழுவினர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயகத்தின் செயலாளர் சிறிகாந்தா, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணிய…

    • 5 replies
    • 656 views
  7. கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள் -லக்ஸ்மன் கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து, அவர்களையும் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம் செய்யக்கூடிய வாய்ப்புகளை ஜனாதிபதி வழங்க வேண்டும்; அதன் ஊடாகவே சிறுபான்மையினர் உடனான நல்லிணக்கத்தை வெற்றிபெற வைக்க முடியும் என்ற கோசங்கள் வலுத்த நிலையில் தான், தேசிய கீதம் தொடர்பான இடறல்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் ஊடாக, மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இதை ஏற…

  8. மீன் சட்டிக்குள்ளேயே இருக்கட்டும் அடுப்புக்குள் விழக் கூடாது - நிலாந்தன் உப்புக்குத் தட்டுப்பாடு. ஒரு கிலோ உப்பு பக்கெட் 300ரூபாய்க்கு மேல் போகிறது. இத்தனைக்கும் இலங்கை ஒரு தீவு. சுத்திவர உப்புக்கடல். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரச்சாரத்திற்கு அள்ளிக் கொட்டுவதற்கு தாராளமாக நிதி இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரமாண்டமான கூட்டங்களை சிறீதரன் ஒருவரைத் தவிர தேசிய மக்கள் சக்திதான் ஒழுங்குபடுத்துகின்றது. கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்கள் தமது இருப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் தமிழ்க் கட்சிகளிடம் இல்லாத ஓர் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். பூட்டிக் கிடக்கும் ஒரு கடை அல்லது ஒரு மண்டபம் அல்லது ஒரு முழிப்பான இடம் போன்றவற்றில் கவிழ்த்து விடப்பட்ட பானா வடியில…

    • 1 reply
    • 425 views
  9. மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம் October 14, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். “மாகாணசபை தேர்தல்களை…

  10. கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம் -மொஹமட் பாதுஷா இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையை, மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான புள்ளிவிவரங்கள், மக்கள் ஆறுதலடையும் விதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அதுபோலவே, தற்போதிருக்கின்ற களச் சூழலைப் பயன்படுத்தி, ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம், சட்டத் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்வது மட்டுமன்றி, ஆட்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அரசாங்கம் எடுத்து வருகின்ற எத்தனங்கள், 'சாண் ஏற முழம் சறுக்கும்' நிலைமைகளையே அவதானிக்க முட…

  11. பல்லாயிரக்கணக்கான உயிர்களின் பலியிடலால் உருப்பெற்ற தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று அத்தனை இழப்புக்களையும் கேவலப்படுத்துவாத தன்னை வெளிப்படுத்திவருகிறது. வெறும் தன்முனைப்பு வாதங்களுக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான விவாதங்களைச் சுட்டிக்காட்டலாம். வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கருத்துக்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, அதற்கு பொருத்தமான இடம் எது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஓமந்தையை சிபாரிசு செய்திருந்தார். ஆனால், கொழும்பின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அவருடன் இணைந்து நிற்கும் …

    • 0 replies
    • 493 views
  12. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு ஏன்? அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து அவர்களால் பணியாற்ற முடியவில்லை. சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே… கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி அவர்கள் வளர்க்கிறார்கள். பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள் கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்…

  13. பல்கலைக்கழக மாணவர் புரட்சி: விடுதலையை வென்றெடுக்கும் தந்திரங்களும் தோற்கடிக்கும் தந்திரங்களும் - பிரம்மாதவன் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விடுதலை செய்யப்படவில்லை என்று வானொலியில் வாசிக்கப்பட்ட செய்தியைக் கேட்டது முதல் மனம் உள்ளுக்குள் குமுறத் தொடங்கியது. அதுவே இப்பத்தியின் ஆரம்பமாயும் ஒரு விடயத்தை பகிரங்கமாக இச்சந்தர்ப்பத்தில் சொல்லிவிடவும் வழிகோலியது. ஒரு போராடும் இனத்தில் புரட்சியின் வித்துக்கள் மட்டுமே கருவறையிலும் பள்ளிக்கூட அறைகளிலும் கல்லறைகளிலும் என எல்லாச் சூழலிலும் ஆரோக்கியமாகவே இருக்கவல்லன. பள்ளிக்கூட அறைகளில் மட்டுமே அது துளிர்விட ஏதுவான சாதகச்சூழுல் நிரம்பிக் காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில யாழ் பல்கலைக் க…

  14. அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது. மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது. 250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாப…

    • 6 replies
    • 808 views
  15. மக்களுக்கும் தலைமைக்குமான இடைவெளி அதிகமாகிறதா? பதில் தருகிறார்... சரவணபவன் பா.உ

  16. இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? ஜனாதிபதித் தேர்தலிலோ நாடாளுமன்றத் தேர்தலிலோ ஒரு கட்சி வெற்றி பெற்றால், நாட்டை ஆட்சி செய்ய, அந்தக் கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவே கருதப்படுகிறது. ஆனால், பதவிக்கு வரும் அக்கட்சி, விரும்பியவாறு எதையும் செய்வதற்கு, அக்கட்சிக்கு மக்கள் ஆணை வழங்கியதாக அதன் மூலம் அர்த்தம் கொள்ளலாமா? முடியாது. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்குப் பதிலாக, எவ்வாறான அரசமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரப்போகிறது என்று ராஜபக்‌ஷ குடும்பத்தினரைத் தவிர, வேறு எவரும் அறிந்திருந்தார்களா என்பது சந்தேகமே. அந்தநிலையில், தமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என்று, எதேச்சாதிகாரமாக எதையும் செய்வதற்கு, அரசாங்கத்தின் தலைவர்கள் முயல முடியாத…

  17. சாத்வீகப் போராட்டம் பயங்கரவாதம் ஆகுமா? ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்று சொல்வார்கள். தன்மைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் பிரச்சினைகளைக் கையாள்வதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டியது அவசியம். அரசியலைப் பொறுத்தமட்டில் இந்த உத்தி மிகமிக முக்கியமானதாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்கின்றது. போராட்டங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகள் தோற்றுப் போயிருக்கின்றன. முதலில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பலன் கிடைக்கவில்லை. சாத்வீகப் போராட…

  18. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் விட­யத்தில் காட்­டப்­படும் தாமதம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பாட்டில் தாம­தப்­போக்கு காட்­டப்­ப­டு­கின்­றதோ என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. ஏனெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் எந்­த­வொரு விட­யங்­களும் உறு­தி­ செய்­யப்­ப­ட­வில்லை. அனைத்தும் பேச்சு மட்­டத்­திலும் யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்ட நிலை­யி­லுமே காணப்­ப­டு­கின்­றன என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான செயற்­பாடுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அந்தச் செயற்­பா­…

  19. இந்தியாவில் இருந்து அவரை நாடுகடத்தியநாள் இன்று1982,நவம்பர்,05-38,வருட்ம்அவர்தொடர்பான பதிவு இது1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியத்தராகப் பணியாற்றினார்.ஐ நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும் தமிழர் அமைப்புகளுக்கெல்லாம் ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய ஏ சி எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்…

  20. ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையை ஏற்று உலகின் பாதுகாப்பையும், அமைதியையும் பேணுக! 78 Views சிறீலங்கா, இலங்கைத் தீவில், இலங்கை மக்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாத நிலப்பரப்பாக, ஆனால் சீனாவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் நிலப்பரப்பாக ஒரு நிலப்பரப்பை இந்துமா கடலின் மேல் கொழும்புத் துறைமுக நகரச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இவ்வாரத்தில் உருவாக்கியுள்ளது. அரசியல் மொழியில் கூறுவதானால், இலங்கைத் தீவில் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற அதன் வரலாற்று இறைமையாளர்களைக் கடந்து, சீன இறைமையாளர்களை இன்றைய சிறீலங்கா அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. பில்லியன் கணக்கில் பணத்தை ராஜபக்ச குடும்ப ஆட்சியினர் பெறுவதற்காக இலங்கைத் தீவி…

  21. அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ்த் தரப்பினர் சாதித்தது என்ன? கிழக்கில் பறிபோகும் நிலங்கள், வழிபாட்டு இடங்கள், தொல்பொருள் ஆராட்சி என்ற பெயரில் தொடரும் கையகப்படுத்தல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆதவன் வானொலியில் 30.05.21 ஞாயிறு இரவு லண்டன் நேரம் இரவு 7.00 மணிக்கு இலங்கை இந்திய நேரம் இரவு 11.30ற்கு ஒலிபரப்பாகிய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் - பதில் அளிக்கிறார் https://soundcloud.com/user353945565/sets/nerukku-ner

    • 0 replies
    • 560 views
  22. வட மாகாணசபைத் தேர்தலிற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்ட நாள் முதல், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற காரசாரமான உரையாடல்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்தியில் உருவாகி இருந்ததை மக்கள் அறிவார்கள். அந்த விவாதங்கள் அடங்கி, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, ஓய்வுபெற்ற நீதிபதி கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து, அரச தரப்பால் களமிறக்கப்படுவதாக, ஊடாகப்பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பொறுப்பாளர் தயா மாஸ்டர், ஐ.ம.சு.மு.வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்ட விவகாரம் குறித்து, தென்னிலங்கையில் விவாதம் தொடர்கின்றது. இவைதவிர, அரசோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்று, முஸ்லிம் கொங்கிரசின் தவிசாளர் ப…

  23.  புலம்பெயர் தரப்புகளின் தாயக வருகை; சாதித்தவை எவை? ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் தாயகப் பகுதிகளை நோக்கி வருகை தரும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக, புலம்பெயர்அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களின் வருகை எதிர்பார்க்கப்பட்ட அளவினைத் தாண்டியிருக்கின்றது. தாயக மக்களை நேரடியாகச் சந்திப்பதும் அவர்களின் பிரச்சினைகள், ஆதங்கங்களைப் புரிந்து கொள்வதும், அதனூடாகக் களம் எப்படியிருக்கின்றது என்கிற அடிப்படைகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.