அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில் புருஜோத்தமன் தங்கமயில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த தேர்தல் வெற்றிக…
-
- 0 replies
- 531 views
-
-
‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி Oct 01, 2018 உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கட்டுரையிலே உலகில் தற்போது அரசியல் செல்வாக்குமிகுந்த அம்சங்கள் பலவற்றை எடுத்துக் கூறுகிறார். சமயம்சார்ந்த அரசியலா? அல்லது மனித உரிமை சார்ந்த அரசியலா? அல்லது இணையத்தளத்தால் பலம்பெற்றுள்ள டிஜிற்ரல் தொழில்நுட்பமா? இவை எல்லாவற்றையும் விட நாடுகள் பாதுகாப்புக்கான மிகப்பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அணு ஆயுத பலமா? எது இன்றைய உலகில் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல…
-
- 0 replies
- 626 views
-
-
கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 19 புதன்கிழமை, மு.ப. 02:09Comments - 0 விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் அண்மைய நாள்களில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்களுக்குச் சூட்டப்பட்ட தலைப்…
-
- 0 replies
- 551 views
-
-
சர்வதேச அரங்கிலும் உள்நாட்டு மீடியாக்களிலும் அதிகம் பேசப்படாத தொடர்ச்சியான உள்நாட்டுப் போர் இந்திய நாட்டில் நடக்கிறது. நக்சலைற்றுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் இடதுசாரிகள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரை நடத்துகின்றனர். மேற்கு வங்காள நக்சல்பாரி கிராமத்தில் நடந்த கிளர்ச்சி காரணமாக நக்சல், நக்சலைற், நக்சல்வாதி என்ற பெயருடன் நிலமற்றோர், சாதிக் கொடுமைக்கு ஆளானோர், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறையால் பாதிக்கப்பட்டோர், வேலையற்றோர் போன்றவர்களின் கூட்டு நடவடிக்கையாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. நக்சல்பாரி கிராமத்தில் 1967ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்னும் ஒயவில்லை. ஏனென்றால் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்கள் களையப்படவில்லை. அவை கூடுகின்றன ஒழியக் குறையவில்லை. இந…
-
- 0 replies
- 1.1k views
-
-
குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன் 07/11/2015 இனியொரு.. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடைய அரசியல் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது. வீசிய கையும் வெறும் கையுமாக அவர் தென்மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்…
-
- 0 replies
- 278 views
-
-
புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலா…
-
- 1 reply
- 702 views
-
-
வெள்ளை வேன் சுமந்து சென்ற ப்ரியாவின் எதிர்பார்ப்பு : ப்ரியந்த லியனகே அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப…
-
- 1 reply
- 707 views
-
-
ஒரே திசைக்கு தொடுக்கப்படும் அம்புகள் Kamal / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:44 Comments - 0 எமக்கு நேரவிருக்கும் இழப்புகளிலிருந்து எம்மை காத்துக்கொள்வதையே பாதுகாப்பு என்கிறோம். அந்த வகையில், உயிர்ச் சேதங்கள்,சொத்துச் சேதங்கள் உள்ளிட்ட பலவாறான சேதங்களை முன்பே அறிந்து, அதற்குத் தடைக்கல் போடுவதையே பாதுகாப்புச் செயன்முறையாகக் கருதமுடியும். இந்தப் பாதுகாப்புச் செயற்பாடுகளின் பரப்பு விரிவடைந்து செல்லும்போது, தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, பௌதீக வளங்களின் பாதுகாப்பு என்று பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. இவற்றில், பிரதான கட்டமைப்பாக, தேசியப் பாதுகாப்பைக் கருதலாம். தேசிய பாதுகாப்பு என்ற விடயத்துக்குள், பொதுமக்களின் பாதுகாப்பு, அரச பாதுகாப்…
-
- 0 replies
- 500 views
-
-
2024 பாரளுமன்ற தேர்தல் முடிவுகள்; தேசிய மக்கள் கட்சியும் தமிழ் மக்களும் ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் எமது பாடசலை காலங்களில், இளைஞர்கள் யுவதிகள் ஒருவரை ஒருவர் காதலிப்பதும், பின்னர் பிரிவில் முடிந்ததும், அதிகமாக தமது காதல் கடிதங்களில் எழுதும் சினிமாப்படல் என்பது, 1962ம் ஆண்டில் வெளியான “நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்” வெளியான ஓர் பாடல். இப்பாடலை விரும்பியவர்கள் முழுதாக கேட்டால் இன்னும் பல சிந்தனைகளுடன் இன்றைய தமிழ் அரசியலில், விசேடமாக கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி வெளியான இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடியும். தமிழ் வைத்தியம் என சொல்லப்படும், ஆயுள்வேத வைத்தியத்தின் மருந்துகள் மிகவும் கசப்பும் கைப்பும் நிறைந்தவை. இந்த அடிப்பட…
-
- 0 replies
- 247 views
-
-
அமெரிக்காவும்.... அப்பமும்...! [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 08:15.08 PM GMT ] இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க உயரதிகாரிகளுக்கு இப்போது அப்பம் ஒரு முக்கியமான உணவாக மாறிவிட்டது. இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த நிஷா பிஸ்வால், சமந்தா பவர், தோமஸ் சானொன் என்று முக்கியமான அமெரிக்க இராஜதந்திரிகள் அனைவருமே அப்பத்தைச் சுவைத்து விட்டுத் தான் சென்றனர். அதுமட்டுமன்றி, இதனை அப்பம் இராஜதந்திரம் என்றும் கூட, வெளிப்படுத்தி வருகின்றனர். அப்பம் இராஜதந்திரம் என்ற பதம் இப்போது கொழும்பு இராஜதந்திர மட்டத்தில் மட்டுமன்றி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வரை பிரபலமாகி விட்டது. இந்த அப்பம் இராஜதந்திரம் இலங்கைக்கு அறிமு…
-
- 0 replies
- 685 views
-
-
Columnsசிவதாசன் இலான் மஸ்கின் பழிவாங்கும் அரசியல்? சிவதாசன் இலான் மஸ்க் என்ற ஒட்டகம் இப்போது வெள்ளை மாளிகைக்குள் புகுந்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பிறக்காததால் ஜனாதிபதியாக வர முடியாதென்பதை உணர்ந்து பின் கதவால் உள்ளே வந்து தனது கனவுகளை நனவாக்க முயல்கிறார். இதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களும் தெரிகிறது. ஏன் அவருக்கு இந்த பதவி வெறி? இலான் மஸ்கிற்கும் டொணால்ட் ட்றம்பிற்கும் ஒரு பொதுமையுண்டு. அது ஈவிரக்கமற்ற பழி வாங்கும் தன்மை. இவர்கள் இருவருமே இனத்துவேஷிகள். ஆனால் ட்றம்பின் இனத் துவேஷம் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மீதான மோகமும், மரியாதையும் அவரை இயக்குகின்றன. வெள்ளை இனத்தவரைத் தவிர அவர் ஏனையோரை மதிப்பதில்லை. அவருடைய தந்தையா…
-
- 0 replies
- 540 views
-
-
வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழீழக் கோரிக்கையை பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான இக்கட்சி ஆதரிக்கிறது என்பதே இத்தகவல். இது பற்றி குழப்பமான தகவல்கள் வெளியாகிவருவதனால் அதனைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. கடந்த மாத இறுதியில் கொன்சவேர்ட்டிவ் கட்சியினால் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (https://assets-global.website-files.com/5da42e2cae7ebd3f8bde353c/5dda9249…
-
- 1 reply
- 667 views
-
-
"தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தந்தை செல்வநாயகம் சென்தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் வேளையிலே சகோதரனின் உடல்நிலை கருதி விடுமுறை கோரியபோது…
-
-
- 8 replies
- 706 views
-
-
NPP யின் தடுமாற்றங்கள்: குழப்பங்களும் வரலாற்றுப் பொறுப்பும் May 24, 2025 — கருணாகரன் — மிகச் சிறப்பான மக்கள் அங்கீகாரத்தையும் அரசியல் ஆணையையும் பெற்றிருக்கும் NPP, தீர்மானங்களை எடுப்பதில் குழப்பத்துக்கு – தடுமாற்றத்துக்கு- உள்ளாகியிருப்பது ஏன்? இன்றைய இலங்கையில் அனைத்துச் சமூகத்திலும் ஜனவசியம் மிக்க ஒரே தலைவராக இருக்கிறார் அநுரகுமார திசநாயக்க. ஆனாலும் அந்த மக்களுடைய நம்பிக்கைகளை நிறைவேற்ற முடியாதிருப்பது எதற்காக? NPP க்குப் பின்னிருக்கும் அல்லது அநுரகுமார திசநாயக்குவுக்குப் பின்னுள்ள சக்திகள் எவை? யாருடைய நிகழ்ச்சி நிரலில் NPP இயங்குகிறது? அல்லது அநுரகுமார திசநாயக்க இயங்குகிறார்? ஜே.வி.பி தவிர்ந்த வெளிச்சக்திகளின் பின்னணியோ பிடியோ இல்லாமல் தனித்துச் சுயாதீனமாக NPP …
-
-
- 4 replies
- 398 views
- 1 follower
-
-
ஆர்ப்பாட்ட இடமும் புலிகேசிச் சிந்தனைகளும் என்.கே. அஷோக்பரன் இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி என்றொரு, கற்பனை வரலாற்று, அரசியல் நையாண்டித் திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில், மக்கள் கூட்டங்களிடையே தினம் தினம் நடக்கும் ஜாதிச்சண்டைகளுக்குத் தீர்வு தர விளையும் மன்னர் புலிகேசி, ‘வீணாக வீதிகளில் சண்டையிட்டு அரசாங்கச் சொத்துகளுக்குச் சேதத்தை விளைவிப்பதை விட, ஒரு மைதானம் அமைத்து, அதில் சண்டையிட்டு, அதற்கொரு வரியை விதித்தால், இந்த நாட்டுக்கு நிறைய வருமானம் வரும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்’ என்று காரணம் சொல்லி, ஜாதிப் பிரிவினைகளால் உண்டாகும் சண்டைகள் இடம்பெறுவதற்கென்று ‘ஜாதிச்சண்டை மைதானம்’ என்று ஒன்றை அமைத்து, அத…
-
- 1 reply
- 543 views
-
-
இனப் படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிக மோசமான குற்றச்செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. இந்த வார்த்தையை யூத இனத்தை சேர்ந்த சட்டத்தரணியான ரஃபேல் லெம்கின் என்பவர் அறிமுகப்படுத்தினார். எந்தெந்தச் செயல்பாடுகள் இனப்படுகொலை எனக் கருதப்படுகிறது? மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. `ஜெனோசைட்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்' என்பது கிரேக்க சொல் ஆகும், அது `இனம்' அல்லது பழங்குடி…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களுடன் யாழ்ப்பாணம…
-
- 1 reply
- 730 views
-
-
[size=2][size=4]மே 17 என்ற அமைப்பின் தலைவர் திருமுருகன் ஐ.நாவிற்கு எதிராகவும், சர்வதேச சமுதாயத்தின் கபடச் செயல்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மே 17 வன்னியில் நடந்து முடிந்த பெருங் கொலைகளுடன் தமிழகத்தின் தலைமைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதன் அடையாளமாக அமைக்கப்பட்டதே மே 17 என்ற இயக்கமாகும்.[/size][/size] [size=2][size=4]சிறீலங்காவும், மற்றய நாடுகளும் சேர்ந்து இனப்படுகொலைக்கு தயாராகிவிட்டதை 2008 லேயே ஐ.நாவிற்கு சுட்டிக்காட்டிய அறிக்கை வெளியாகிவிட்டது.[/size][/size] [size=2][size=4]ஆனால் இது பற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் ஐ.நா இருந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.[/size][/size] [size=2…
-
- 8 replies
- 1.4k views
-
-
தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன் கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில். அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி. மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள். அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ண…
-
- 0 replies
- 123 views
-
-
நாட்டில் முற்றிலுமாக மட்டுமல்ல, சரி பாதியளவு கூட இனவாதத்தை இல்லாது செய்ய முடியாது என்பதற்கு அண்மைய நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையில் இனவாதம் இன்று நேற்று புகுத்தப்பட்ட ஒன்றல்ல. அது இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சத்தின் அடிப்படை கோட்பாடே இனவாதம் தான். மஹாநாமதேரர் தொடங்கி வைத்த இந்த இனவாதம் இன்று பாடசாலைகள் தொட்டு பல்கலைக்கழகங்கள் வரை வியாபித்து நிற்கின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும், சிங்கள மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கைகலப்பை பலரும், பலவிதமாக பேசியிருக்கலாம். பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டதும் உண்மை. சிலர் மாணவர்களின் பிரச்சினையில் அரசியல் கலக்ககூடாது என்…
-
- 0 replies
- 618 views
-
-
சுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 24 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் எதிராக நின்று, தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வெற்றிக்காக ஓடும் எந்தவொரு வேட்பாளரும், இன்னொரு வேட்பாளரை நம்புவதற்குத் தயாராக இல்லை. தோற்பதற்காகவே களமிறக்கப்பட்ட வே…
-
- 0 replies
- 554 views
-
-
சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரையோரப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த யூன் மாதம் 1.8 பில்லியன் யென்னை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஜப்பான் வழங்கியது. சிறிலங்காவின் கரையோரப் பாதுகாப்புப் படையின் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்குடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கப்பல்கள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்துதல், கடற்கொள்ளையர…
-
- 0 replies
- 424 views
-
-
உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றி வருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force), காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அவ்வாறாயின் இதுவரை மக்கள் வழங்கிய ஆலோசனைகளின் பெறுமதி என்ன? அரசாங்கத்தின் மேற்படி செயலானது அரசாங்கம் விடயங்களை இதயசுத்தியுடன் அணுகவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உண்மை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள…
-
- 0 replies
- 483 views
-
-
போர் நடந்தபோது ஏழு நாட்டு இராணுவமும் இலங்கைக்கு உதவி செய்தது. இதில் அமெரிக்கா கடந்த ஆண்டு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவும் பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது. கொலைக்காரனே போர்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று உலகத்திலேயே ஒரு வினோதமான அறிவுரையை ஐ.நா.வும் உலக நாடுகளும் இலங்கைக்கு வழங்கியது. "இனப்படுகொலை" என்று சொல்லாமல் "போர்குற்றம்" என்று சொல்கிறது. "சுதந்திர ஈழத்தை" பற்றி பேசாமல் "சரிகட்டுதல்"-ஐ பற்றி பேசுகிறார்கள். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் நாமெல்லாம் அப்பாடா என்று மகிழ்ச்சியடைந்தோம். இந்தியா ஆதரித்தவுடன் நமது மக்கள் ஏதோ இனி அவர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடும் என்று சிந்தனை இழந்தோம். நடக்கும் அரசியலை, இராஜதந்திரத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 14 replies
- 2.2k views
-