Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரையோரப் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த யூன் மாதம் 1.8 பில்லியன் யென்னை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஜப்பான் வழங்கியது. சிறிலங்காவின் கரையோரப் பாதுகாப்புப் படையின் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்குடனேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கப்பல்கள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்துதல், கடற்கொள்ளையர…

  2. உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் சம்பந்தனின் நிலைப்பாடு என்ன? - யதீந்திரா அரசாங்கம் மிகவும் அவசர அவசரமாக சில விடயங்களை அரங்கேற்றி வருகிறது. மக்களுடனான கலந்தலோசனைக்கான செயலணி (Consultation Task Force), காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, குறித்த அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. அவ்வாறாயின் இதுவரை மக்கள் வழங்கிய ஆலோசனைகளின் பெறுமதி என்ன? அரசாங்கத்தின் மேற்படி செயலானது அரசாங்கம் விடயங்களை இதயசுத்தியுடன் அணுகவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உண்மை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள…

  3. போர் நடந்தபோது ஏழு நாட்டு இராணுவமும் இலங்கைக்கு உதவி செய்தது. இதில் அமெரிக்கா கடந்த ஆண்டு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவும் பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது. கொலைக்காரனே போர்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று உலகத்திலேயே ஒரு வினோதமான அறிவுரையை ஐ.நா.வும் உலக நாடுகளும் இலங்கைக்கு வழங்கியது. "இனப்படுகொலை" என்று சொல்லாமல் "போர்குற்றம்" என்று சொல்கிறது. "சுதந்திர ஈழத்தை" பற்றி பேசாமல் "சரிகட்டுதல்"-ஐ பற்றி பேசுகிறார்கள். ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் நாமெல்லாம் அப்பாடா என்று மகிழ்ச்சியடைந்தோம். இந்தியா ஆதரித்தவுடன் நமது மக்கள் ஏதோ இனி அவர்கள் வாழ்வில் விடியல் ஏற்பட்டுவிடும் என்று சிந்தனை இழந்தோம். நடக்கும் அரசியலை, இராஜதந்திரத்…

  4. இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது. இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது... தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை …

    • 3 replies
    • 618 views
  5. காஸ்ட்ராேவும் தமிழரின் உரிமை போராட்டமும் கியூ­பாவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், உலகப் புகழ்­பெற்ற புரட்­சி­யா­ள­ரு­மான பிடல் காஸ்ட்­ரோவின் மரணம், உல­கெங்கும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யதைப் போலவே, தமி­ழர்கள் மத்­தி­யிலும் அதன் தாக்கம் உண­ரப்­பட்­டி­ருக்­ கி­றது. ஏனென்றால், இரு­பதாம் நூற்­றாண்டின் பின் அரைக் காலப் பகு­தியில் தமி­ழர்கள் மத்­தியில் காஸ்ட்ரோ மிகவும் பிர­ப­ல­மான ஒரு­வ­ராகத் திகழ்ந்­தவர். தனி­நாடு கோரிப் போராட்டம் நடத்­திய தமிழ் அமைப்­பு­களால் முன்­னு­தா­ரணம் கொண்ட தலை­வர்­களில் ஒரு­வ­ராகப் பார்க்­கப்­பட்­டவர். அதனால் தான், பிடல் காஸ்ட்­ரோவின் மரணம் உல­கெங்கும், ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தைப் போலவே, தமி­ழர்கள் மத்­தி­யிலும் பலத்…

  6. போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!! 'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்! இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.' இவ்வாறு இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அரு…

  7. யாழ். மாநகர சபையின் அரசியல்; யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்? பனங்காட்டான் ‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!” என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. ‘நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்” என்பது இதன் பொருள். நடந்து முடிந்த யாழ்நகர மேயர், நல்லூர் தவிசாளர் தெரிவுக்கான கொடுக்கல் வாங்கலில் வென்றது யார்? தோற்றது யார்? யாருக்கு லாபம்? அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும், தலைவிரித்தாடும் கொரோனா கொடுநோயின் தாக்கம் பற்றியும் எல்லோரும் மோதிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழர் தாயகத்தில் ஓர் அரசியல் நாடகம…

  8.  ரத்தன தேரரும் பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மீண்டும் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் வெளியிட்ட ஒரு கருத்தை அடுத்தே இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “நான் எதிர்காலத்தில், எனது கட்சியான ஹெல உருமயவிலிருந்தும் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினராகக் கடமையாற்றப் போகிறேன்” என்று அண்மையில் சில இடங்களில் கருத்து வெளியிட்டதனால் ரத்தன தேரர், சில வாரங்களாகச் சர…

  9. திருகோணமலைத் துறைமுகத்தை ஐந்து வருட குத்தகைக்கு அமெரிக்காவுக்கு வழங்க உடன்படிக்கை கோட்டாபயவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாடுபட்ட தேசியப் பற்றுள்ள தேசிய இயக்கம் அம்பலப்படுத்தியது தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துக் கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் சீனாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தோ பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பை உறுத…

    • 3 replies
    • 545 views
  10. அமெரிக்க – மேற்குலக ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ தோல்வி: ஆப்கானிஸ்தான் Photo: Jim Huylebroek for The New York Times ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார். அதற்கு இணையாக அவரது எதிர்த்தரப்பினரும் அவரை தாரளமாக பழி சுமத்தியுள்ளனர். 2010இல் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இராணுவ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 2010 அமெரிக்க மேற்குலக அரசின் அரசியல் – இராணுவ நகர்வு, ஆப்கானிஸ்தான் சார்ந்து மட்டுமல்ல, ஈராக்கிலும் தோல்வியைத் தழுவியுள்ளது என அம்பலப்படுத்திய போது, தோல்வியை ஏற்பதற்குப் பதிலாக ஆவணங…

  11. தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச ஆதரவைக் கொண்டிருக்கும் முஸ்லிம், மலையகக் கட்சிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. அரசாங்கத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்ட முடியாமலும் தாமதமான அல்லது பாராமுகமான நடவடிக்கைகளை எதிர்க்க முடியாமலும் தத்தளிக்கும் இரண்டும் கெட்டான் நெருக்கடி நிலைக்குள், இவை இன்று தள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ‘உள்ளே இருக்கவும் முடியாது, வெளியேறிச் செல்லவும் முடியாது” என்ற பெரும் பொறிக்குள் சிக்கியிருக்கின்றன. இந்த நிலையானது, ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கும் தமிழ், முஸ்…

  12. கண்துடைப்பு நடவடிக்கை காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் பற்­றியும் அதற்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறித்தும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை நோக்­கும்­போது, இந்த செய­ல­கத்­தினால் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னைக்கு சரி­யான தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. ஆட்கள் வலிந்து ஏன் காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள்? அவர்­களை காணாமல் ஆக்­கி­ய­வர்கள் யார்? ஆட்கள் காணாமல் ஆக்­கப்­பட்­டதன் பின்­னணி என்ன என்­பது போன்ற வினாக்­க­ளுக்கு விடை கிடைக்­கா­விட்டால், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைப் பற்­றிய இந்த செய­ல­கத்தின் விசா­ர­ணை­க­ளினால் என்ன பயன் கிடைக்கப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை. நிலை­மா­று­கால…

  13. இந்திய - சீன வல்லரசுகளின் சதுரங்க ஆட்டம் - டெசா இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுக்கொண்டுள்ள காலகட்டம் இது. இலங்கையின் தேசிய அரசியலிலும் சரி, இலங்கை சார்ந்த சர்வதேச அரசியலிலும் சதுரங்க ஆட்டங்கள் மிகக் கச்சிதமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் சார்ந்த சர்வதேச நகர்வுகள் மீதே பார்வையை திருப்ப வேண்டியுள்ளது. இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ இலங்கை வந்துள்ளார்.ஆனால் இது அவரது இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் அல்ல. அவரது விஜயத்தில் இலங்கையும் ஒரு தரிப்பிடம் அவ்வளவுதான். இம்முறை சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீயின் பயணமானது எ…

  14. நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும் கலாநிதி ஜெகான் பெரேரா பாராளுமன்றத்தில் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக நீடித்த அரசியல் மற்றும் பொருளாதார குழப்பநிலை முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் மத்தியில் தற்போதைக்கு ஒரு நம்பிக்கையுணர்வு ஏற்பட்டிருக்கிறது. வெற்றிபெற்ற பிறகு சபையில் உரையாற்றிய அவர் தன்னுடன் கைகோர்க்குமாறு எதிரணி தலைவர்களுக்கு சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு அழைப்பு விடுத்தார். தற்போதைய சூறாவளிக்கு மத்தியில் அரசுக்கப்பலை நிலையுறுதிப்படுத்துவதற்கு தேவையான அறிவு வளமும் பல வருடகால ஆட்சிமுறை அனுபவமும் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது என்பத…

  15. ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் Photo, Swissinfo ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும். இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள்…

  16. இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபடி புலிகள் சர்வதேச hPதியாக முடக்கப்பட்டுள்ளார்கள் என்பன …

    • 2 replies
    • 1.3k views
  17. இலங்கை ஒற்றையாட்சி அரசிற்கு ஏற்ற முறையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விரும்பும் இந்தியா - கொழும்புப் பிரதிநிதிகளின் ஆலோசனையுடன் பூச்சிய வரைபு தமிழர்கள் ஒற்றையாட்சியை ஏற்பதற்கான பரிந்துரைகள் காலிமுகத் திடலில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களில் சிங்கள மக்களுடன் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றியதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் மாற்றங்கள் ஏற்படுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் பூச்சிய வரைபில் (zero draft) நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இக் கருத்தின் ஊடாக, ஈழத்தமிழர்களுடைய பிரதான அரசியல் நியாயப்பாடுகள் புறம் தள்ளப்பட்டுள்ளன. ஆணையாளர் மிச்…

  18. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அல்­லது அதற்கு உயிர்ப்­பிப்­ப­தற்கு பல்­லின மக்­களின் உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்­டி­யதும், அவர்­க­ளுக்­கான உரி­மை­களைப் பகிர்ந்­த­ளிப்­பதும் அடிப்­ப­டையில் அவ­சியம். அவ்­வாறு உரி­மைகள் மதிக்­கப்­ப­டா­விட்டால், அந்த உரி­மைகள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டா­விட்டால், ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட முடி­யாது. ஜன­நா­ய­கத்தை உயிர்ப்­பிக்­கவும் முடி­யாது. இந்த வகையில் ஜன­நா­ய­கத்தை மீண்டும் நிலை­நி­றுத்தப் போவ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் தோல்­வியைத் தழு­வி­யி­ருப்­ப­தா­கவே கருத வேண்டி இருக்­கின்­றது. ஊழல்கள் மலிந்த, சர்­வா­தி­காரப் போக்கில் சென்ற சி…

  19. தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல. பக்கத்து வீட்டுத் தேர்தல்தான் என்பது போன்ற ஒரு மனோ நிலையே அதிகம் தென்படுகின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் தமிழ்க் கட்சிகள் எப்படிச் செயற்படப்போகின்றன என்பதைப் பொறுத்து தமிழ் மக்கள் அருட்டப்படக்கூடும்;. இணக்க அரசியலைச் செய்யும் கட்சிகளைப் பொறுத்த வரை இத்தேர்தல் தொடர்பில் ஒரே தெரிவுதான் உண்டு. அதாவது அரசாங்கத்தைப் பாதுகாப்பது. ஆனால், ஏனைய கட்சிகளின் முன்னால் ஒன்றுக்கு மேற…

  20. தமிழர்களை மேலும் வதைப்பது நியாயமா? இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வை வழங்­காது இழுத்­த­டிப்­ப­தன் மூல­மாக நாட்­டில் இன்­னு­மொரு ஆயுத மோத­லுக்­குத் தூபம் இடப்­ப­டு­கின்­ற­தா­வென்ற சந்­தே­கம் எழும்­பி­யுள்­ளது. நீண்ட ஆயுத மோதல் ஒன்று இடம்­பெற்று முடி­ந்து 10 ஆண்­டு­கள் பூர்த்­தி­யா­கப் போகின்றன. இந்­தப் போரி­னால் ஏற்­பட்ட அழி­வு­கள் கணக்­கிட முடி­யா­தவை. இந்த நாடு சகல துறை­களி ­லும் பின்­தங்கி நிற்­ப­தற்கு நீண்டு சென்ற ஆயு­தப் போரே கார­ண­மெ­னச் சொல்ல முடி­யும். நாட்­டின் அரிய வளங்­கள் யாவற்­றை­யும் இந்­தப் போர் ஈவி­ரக்­க­மின்ற…

  21. இந்தியக் கப்பல் – சீனக்கப்பல் – நிர்மலா சீதாராமன்! நிலாந்தன். இந்தியக் கப்பல் ஒன்று இலங்கைத் துறைமுகம் ஒன்றினுள் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், சீனக் கப்பல் இலங்கைக் கடலுக்குள் பிரவேசித்தது. அது சில நாட்கள் தரித்து நின்று ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின் வெளியேறிய கையோடு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார்.அவர் வடக்கு கிழக்கிற்கும் வருகை தந்தார். அவர் வந்து போன கையோடு, சீனத் தூதுவர் வடக்கிற்கு வருகை தருகிறார். நாட்டில் என்ன நடக்கின்றது? நாட்டின் ஜனாதிபதி கூறுகிறார், இந்தோ பசுபிக் மூலோபாயம் எனப்படுவது யதார்த்தமற்றது என்று.புவியியல் பாடங்களைப் பொறுத்தவரை அப்படி ஒரு பதம் 2000 ஆவது ஆண்டுகளுக்கு முன் பிரயோகத்தில் இருக்கவில்லை. ஆசிய பசிபிக் என…

  22. தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது தொடர்பில் நான் முன்னரும் பல தடவைகள் விவாதித்திருக்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்களின் வாதங்களுக்கும் அரை தசாப்தகால வயதாகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதற்காக நாம் செலவிடப் போகின்றோம்? ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் ஓரளவு சுமூகமான சூழலில், தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த வேண்டிய தேவை முன்னரைவிடவும் அதிக கனதியுடைய தேவையாக மாறியிருக்கிறது. இவ…

  23. பொறுப்புக் கூறல் சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்… January 19, 2019 மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் எவ்வாறு பொறுப்பு கூறப் போகின்றது என்பது, பிறந்துள்ள புதிய ஆண்டில் எழுந்துள்ள பல்வேறு கேள்விகளில், அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத் தேவையைக் கொண்டுள்ள தமிழர் தரப்பு அரசியலிலும் கூர்மையான விடயமாகக் கருதப்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநாவின் மனி;த உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சூடு பிடித்திருக்கும் என்பதே இதற்கான காரணமாகும். யுத்தம் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகின்றது. ஆனால், யுத்தகாலத்தில்; குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.