அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள். இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சி…
-
- 0 replies
- 880 views
-
-
'மோடியின் வெற்றி உலகிற்கும், இந்தியாவிற்கும் கெடுதியானதொரு செய்தியாகும்' இந்தியப் பொதுத்தேர்தலில் நரேந்திர மோடிக்குக் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான வெற்றி இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லதொரு செய்தியல்ல. குறிப்பாக இந்தியாவின் ஆன்மாவுக்குத் தீங்கானது என்று லண்டன் கார்டியன் பத்திரிகை இந்தியத் தேர்தல் முடிவு குறித்து எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலில் மோடி என்ற ஒரு மனிதன் வெற்றி பெற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியொரு கட்சியை அறுதிப் பெரும்பான்ம…
-
- 0 replies
- 321 views
-
-
வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள் வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
1, அதிகார பரவலாக்கல் விடயத்திலும்; இந்தியாவின் பிடி எதிர்காலத்தில் இருகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று ஊகிக்க கூடியதாக இருக்கிறது. 2.அதிகார பரவலாக்கமானது ஒரு வகையில் இந்தியாவுக்கு இலங்கையை கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது. 3. அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும்பாவிக்க முடியும். முறையான அதிகார பரவலாக்கலை எந்தளவிற்கு தட்டிக்கழிக்கலாம்? அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்…
-
- 1 reply
- 793 views
-
-
ருத்ரகுமாரனின் கேள்விக்கு என்ன பதில்? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளில் ஒன்றான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரண்டாவது அரசவையின் நான்காவது நேரடி அமர்வை இம் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் மாநகரில் நடத்தியிருக்கிறது. ஒரு தொகுதி அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவிலிருந்து நேரடி காணொளி இணைப்பின் மூலம் இம் அமர்வில் பங்கு பற்றியிருக்கின்றனர். இம் அமர்வை மக்கள் பார்க்கக்கூடிய வகையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இம் அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் ஆரம்ப உரையினையும் நிறைவுரையினையும் ஆற்றியிருக்கிறார். அவரின் உரைகளின்…
-
- 0 replies
- 805 views
-
-
தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு? கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 29 , மு.ப. 06:03 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது தவறு என்பது போன்ற கருத்துகள் வெளியிடப்படுவதுடன், இப்போது நிர்க்கதியான நிலைக்குள், கூட்டமைப்பு தள்ளப்பட்டிருக்கிறது போன்ற விம்பத்தைத் தோற்றுவிக்கும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் தோல்வியை எதிர்பார்த்திருந்த போதும், அவருக்குத் தமிழ் மக்கள் திரண்டு போய் வாக்களித்தது, பலருக்கும் அதிர்ச்சிய…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
ஈழக்கனவுக்கு எதிரான இரண்டாவது யுத்தம் [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2016, 04:12.44 PM GMT ] போரின் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், இவர்களின் ஈழக்கனவை அழிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்டது. எமது படைகளிடம் போரில், தோல்வி கண்ட போதும், போர்க்களத்தில் இருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். புலிகளின் தனி ஈழத்துக்கான கொள்கையை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல…
-
- 1 reply
- 742 views
-
-
இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஜக்கிய அமெரிக்கா, இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைய முடியாதளவிற்கு பயணத்தடையை விதித்திருந்தது. இந்தத் தடை அறிவிக்கப்பட்டிருக்கும் சம வேளையிலேயே ஜ.நா மனித உரிமைகள் பேரiயின் கூட்டத் தொடரும் ஆரம்பித்திருந்தது. மேலோட்டமாக பார்த்தால் அமெரிக்காவின் பயணத் தடைக்கும் ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் தொடர்புள்ளதான ஒரு தோற்றம் தெரியக் கூடும். இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் பேசுபவர்களும் இவ்வாறான தொணியில் பேசுவதையும் ஆங்காங்கே காண முடிகின்றது. ஆனால் அமெரிக்காவின் பயணத் தடை அறிவிப்பிற்கும், ஜ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 323 views
-
-
முதலமைச்சர் சீ.வி. வின்னேஸ்வரனால் தலைமை தாங்கப்படும் வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தை அரசியலமைப்பு சீர்திருத்தச் செய்முறையில் கவனம் செலுத்தி ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தில் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீள ஒன்றிணைத்து ஒரே சமஷ்டி அலகாக்குமாறு விடுத்துள்ள அம்சம் முக்கியமானதாகும். ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தை நீக்கிவிட்டு "சிங்களம் மட்டுமே', என்னும் சட்டம் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு சிங்களமே முழு நாட்டிற்குமான, உத்தியோகபூர்வமான மொழி என பிரகடனம் செய்யப்பட்ட நாள் முதலாக தமிழரசியலின் பிரதான நிலைப்பாடு சமஷ்டியாட்சியாக இருந்து வந்துள்ளது. அக்காலகட்டத்தில் நாட்டின் குடித்தொகையில் ஏறத…
-
- 0 replies
- 325 views
-
-
[size=4]பிரபாகரன் மானத்தை இழந்து உயிரைக்காக்கும் ஒருவரல்ல..[/size] [size=4]நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்ம் பீ.பீ.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் முடிவுகள் மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.[/size] [size=4]போரில் தோல்வி என்று அறிந்த பின்னரும் அதைச் சந்திப்பதே சரியான வழி என்று முடிவு செய்த காரணத்தால் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு அவர் காரணமாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.[/size] [size=4]அத்துடன் மட்டும் நிற்கவில்லை பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும் பொது மன்னிப்பு இல்லை, மற்றைய அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும், அனைவருடைய புகைப்படங்களும் எடுக்கப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.[/size] …
-
- 15 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 861 views
-
-
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு http://www.youtube.com/watch?v=xycN1kpUfgQ
-
- 2 replies
- 742 views
-
-
-
- 0 replies
- 550 views
- 1 follower
-
-
ஒக்டோபர் வெளியேற்றம்; ஒரு மொழிச் சமூகச் சவால்கள்! -சுஐப் எம். காசிம்- மூன்றாவது இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்திய வடபுல முஸ்லிம்களின் ஒக்டோபர் வெளியேற்றம், இப்போது மூன்று தசாப்த காலத்தை எட்டி நிற்கின்றது. விடுதலைப் போராட்டத்துக்கு வேண்டாதவர்கள் அல்லது வேறு ஒரு காரணத்துக்காகவே இவர்கள் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். எந்தக் காரணங்களானாலும், தமிழர்கள் என்ற அரசியல் அடைமொழிக்குள் இந்த முஸ்லிம்களை உள்வாங்க வடக்கு, கிழக்கு விடுதலைப் போராளிகள் விரும்பியிருக்கவில்லை. ஏன், இந்த விருப்பமின்மை ஏற்பட்டதென்று இன்றுவரைக்கும் தமிழ் மொழி மண்ணில் விவாதங்கள் இடம்பெறவே செய்கின்றன. முட்டை முதல் வந்ததா? அல்லது கோழி முதல் உயிரெடுத்ததா? என்ற பாணியில் அமைந்துள்ள இந்த விவாதங்கள்தான…
-
- 0 replies
- 339 views
-
-
அப்படியானால் இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது.. இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதென்று இந்திய நேசரான ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் மட்டக்களப்பில் கூறியிருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்திய மார்வாடிகளின் பொருளாதார பலம் எப்படி விளையாடியது என்பதையே இக்கட்டுரை எளிமையாகப் பார்க்கிறது. முதல் தவறு : ஜே.ஆர். இழைத்த முட்டாள்தனமான தவறு.. 1977 ல் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையை இன்னொரு சிங்கப்பூர் ஆக்குவேன் என்று அறிவித்தது.. அதைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், அமெரிக்காவுக்கு வர்த்தகத்தை திறந்துவிட்டு சுதந்திர வர்த்தக வலயத்தை அமைத்தார். இந்தியாவிற்கு அருகில் இந்தியாவை விஞ்சி இன்னொரு சிங்கப்பூரா..? இந்தியாவின…
-
- 3 replies
- 1k views
-
-
குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரை செய்ய வேண்டும் – கனடாவெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை இலங்கை அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், ந…
-
- 0 replies
- 462 views
-
-
மாணவர் போராட்டமும் ஈழத் தமிழர்களும் - அ.மார்க்ஸ் - சுமார் மூன்று வாரங்கள் தமிழகத்தைக் குலுக்கிய மாணவர் போராட்டம் ஓய்ந்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்சில் மாநாடு கூட இருந்த தருணத்தில் சானல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட பாலச்சந்திரன் கொலைப் படங்கள் மாணவர் எழுச்சியைப் பற்ற வைத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைப் (12) பிடித்துப் பங்கரில் வைத்திருந்து பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டும் படங்களை இங்கு ‘இந்து’ நளிதழ் வெளியிட்டது. யாருடைய மனதையும் உலுக்கும் படங்களாக அவை அமைந்தன. 2009 மேயில் நடந்த போர்க்கொடுமைகளில் ஒன்று இது. பாலச்சந்திரனை மட்டுமல்ல பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் இப்படிப் படுகொலை செய்யப்பட்டனர…
-
- 0 replies
- 768 views
-
-
பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்ற கேள்விகள் எழுகின்றன, இல்லையா? ஆனால், 1980களில், அதே நிலைமையில் காணப்பட்ட ஒரு பெண், ஆட்சியைப் பிடித்தார் என்றால், அவரது திறமைகளையும் துணிச்சலையும் பாராட்டத் தோன்றுகின்றது தானே? ஜெயலலிதா ஜெயராம் என்ற, …
-
- 0 replies
- 324 views
-
-
-
- 1 reply
- 755 views
-
-
மீண்டும் பரபரக்கும் திருகோணமலை - கே.சஞ்சயன் கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது. அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. …
-
- 1 reply
- 429 views
-
-
அழுத்தங்களைத் தாண்டிய அரசின் செயற்பாடுகள்: ஜீ.எஸ்.பி வரிச்சலுகை லக்ஸ்மன் சர்வதேச அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதற்குச் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனராக இருக்கின்ற அஜித் நிவாட் கப்ரால் முன்னர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை வெளியிட்ட கருத்தாகும். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால், அதற்கு அரசாங்கம் என்றவகையில் நாங்கள் முகம்கொடுப்போம். ஏனெனில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் நாட்டுக்கு கிடைப்பது நூற்றுக்கு 3வீதமான நிவாரணமாகும். என்றாலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து பெற்றுக…
-
- 0 replies
- 344 views
-
-
இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-30#page-5
-
- 0 replies
- 362 views
-
-
99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்திர சர்மா, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருப்பது பிரித்தானியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக அவர் முன் மொழிந்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பிரித்தானிய அரச…
-
- 0 replies
- 607 views
-
-
வருகிறது தேர்தல் நஜீப் பின் கபூர் ——————————- எரிபொருட்களுக்கும் சமையல் எரிவாயுக்காகவும் ஏன் அன்றாட உணவுக்குக்கூட மக்கள் இரவு பகலாக வீதியில் நிற்கின்றார்கள்.விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பசளையின்றி நாசம் போன தங்கள் விளை நிலங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தாய்மார் தமது குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு போடுவது எப்படி என்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வருமானத்துக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு வருவதால் என்ன பண்ணலாம், ஏது பார்க்கலாம் என்று ஓடித்திரியும பெற்றோர். பள்ளிப் படிப்பை தொடர வழி இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள்.…
-
- 0 replies
- 230 views
-
-
வாக்காளருக்கு அபராதம் அவசியம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது. அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூ…
-
- 0 replies
- 308 views
-