Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இனவெறித் ’தீ’ என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 01 அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார். வௌ்ளையினப் பொலிஸ் உத்தியோகத்தர்களால், கறுப்பினத்தவர்கள் மீது, இனவன்மம் கொண்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது, அமெரிக்க வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கண்டனத்துக்கும் கவல…

  2. தமிழ்த் தலைமைகளும், தேர்தலும் | கருத்தாடல் | Sivasubramaniam Jothilingam

    • 0 replies
    • 544 views
  3. "எழுக தமிழ்' ஏற்படுத்தியிருக்கும் சங்கடங்கள் செல்­வ­ரட்னம் சிறி­தரன் 'எழுக தமிழ்' பேரணி, எதிர்­பார்த்­ததைப் போலவே பல எதிர் உணர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது. இரண்டு முரண்­பட்ட கருத்­துக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை இந்தப் பேரணி வெளிப்­படச் செய்­தி­ருக்­கின்­றது. அதே­போன்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் மக்கள் அணி திரள்­கின்ற விட­யத்தில் இரண்டு முரண்­பட்ட கருத்­துக்­களைக் கொண்­டி­ருப்­பதை இந்தப் பேரணி வெளிக் கொணர்ந்­தி­ருக்கின்றது. 'எழுக தமிழ்' பேர­ணி­யா­னது, தமிழ் மக்கள் பேர­வையின் பய­ணத்தில் கிடைத்­துள்ள மூன்­றா­வது வெற்­றி­க­ர­மான நிகழ்­வாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. பலத்…

  4. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் உள்ளேயும் வெளியேயும் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்று வருகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அதிகாரபூர்வ கூட்டத்தொடருக்குப் புறம்பாக, பக்க நிகழ்வுகளும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா வளாகத்திலேயே நடைபெறுவதுண்டு. கடந்தமுறை இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. அதற்காகப் பல பக்க நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்திருந்தது. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா உலக வல்லரசாக இருந்த போதிலும், உலக வரைபடத்தில் எள்ளளவு சிறிய நாடான இலங்கை, அப்போது அமெரிக்காவுடன் கடுமையான இராஜதந்திர மோதலில் ஈடுபட்டது. தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டுவதற்காக சீனா, ரஷ்யாவின் துணையுடன் இலங்கை எல்லா முயற்…

  5. தடத்திற்கு தடை தரலாமா? – முனைவர் ஆ. குழந்தை 39 Views இங்கிலாந்தில் உள்ள தீவிரவாதச் சட்டம்(2000) பிரிவு 2(1, 2)இன் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து, தடை செய்திருக்கிறது. இந்த தடையை நீக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக திருமிகு மாயா இலெசுடர், திருமிகு மால்கம் பிர்டிலிங், திருமிகு சேக்கப் ரொபினோலிட்சு ஆகிய சட்டத்தரணிகள் வாதாடினர்(1,2பத்திகள்). அதன் விளைவாக நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு அறிக்கையில் மூன்று பகுதிகள் உள்ளதாக நான் பார்க்கின்றேன். அந்த மூன்று பகுதிகளை விளக்கிவிட்டு, நமது கடமைகளை ஆராய்…

  6. மாலைத்தீவு மையவாடியா? -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கையில், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாரா? மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீத், தமது ‘டுவிட்டர்’ கணக்கில், வெளியிட்டு இருந்த ஒரு தகவலின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்துள்ளார். ‘இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொவிட்-19 நோயால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகளை, மாலைத்தீவில் நடத்தும் விடயத்தில், இலங்கைக்கு உதவும் முகமாக, ஜனாதிபதி சொலிஹ் உரிய அதிகாரிகளுடன் பேச்ச…

  7. உலக மானிடத்தின் நம்பிக்கை கனவுகள்-2021-பா.உதயன் பல துன்பமும் துயரம் நிறைந்த வாழ்வோடு விடைபெறுகிறது 2020.உலகத்தையே உலுக்கி அதன் குரல் வளையை நெரித்தபடி இருக்கும் கொரோனாவின் வரவும் அதன் பின் உலக அரசியல் பொருளாதார சமூகவியல் மாற்றங்களோடு 2021 பிறந்திருக்கிறது.உலகமே எதிர் பார்த்திருக்க முடியாத ஒரு துன்பவியல் நிகழ்வினால் துன்பமும் துயரமுமாக பல்லாயிரம் மனித வாழ்வுகளை பறித்தெடுத்து போய் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத வைரசு ஒன்று.பலர் உறவுகளை சிலர் நண்பர்களை அருகில் இருப்பவர்கள் அன்பானவர்கள் என்று அந்த கொரோனாவின் கோரப்பிடியில் அகப்பட்டு அநியாயமாக இறந்து போன துயர நினைவுகளால் தூக்கம் மறந்த துன்பம் நிறைந்த மனிதர்களாகிப்போனோம்.எல்லா எம் கனவுகளையும் எம் பாடல்களையும் கொரோனா என்ற கொ…

  8. தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு? தமிழ் மக்­க­ளிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அந்­நி­யப்­ப­டுத்­து­கின்ற இர­க­சியச் சதித் திட்டம் ஒன்றை அர­சாங்கம் அரங்­கேற்­று­கி­றதா? கடந்த 7ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன், இந்தக் கேள்­வியை எழுப்­பி­யி­ருந்தார். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாமல் இருப்­பதைச் சுட்­டிக்­காட்­டியே அவர் இந்தக் கேள்­வியை அர­சாங்­கத்தை நோக்கி எழுப்­பினார். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள், ஐம்­பது நாட்­க­ளு…

  9. முதல்வருக்கு வைக்கப்படும் செக் மழை விட்­டாலும் தூவானம் நிற்­கா­தது போன்று, வடக்கு மாகா­ண­ச­பையில் ஏற்­பட்ட பெருங் குழப்பம், பல்­வேறு தலை­யீ­டு­களின் மூலம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டாலும், அதனைச் சார்ந்த பிரச்­சி­னைகள் அவ்­வப்­போது எழுந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை என்ற பிரச்­சினை மாத்­திரம் தீர்க்­கப்­பட்­டுள்­ளதே தவிர, அதற்கு அடிப்­படைக் கார­ணி­யான பல்­வேறு பிரச்­சி­னைகள் இன்­னமும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அதில் முக்­கி­ய­மா­னது, சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் இரண்டு அமைச்­சர்கள் தொடர்­பாக நடத்­தப்­பட வேண்­டிய புதிய விசா­ரணை. சுகா­தார மற்றும் போக்­கு­வ­ரத்து அமை ச்சர் …

  10. முதல் அமர்வில் கூறத் தவறிய விடயங்களும் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டி பேச்சுக்களும் - அ.நிக்ஸன்- 28 அக்டோபர் 2013 Notes முதலமைச்சரின் அதிகாரங்கள் பற்றிய சட்டரீதியான அனுகுமுறைகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் ஒத்தழைப்பு வழங்குவார்கள்? மாகாண சபை நிரந்தரமானது என்ற நம்பிக்கையுடன் தமது பதவிகளை மட்டும் உறதிப்படுத்த முற்படும் உறுப்பினர்கள் பாதிப்புகள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிக்க தவறுகின்றனர் வடமாகாண சபையின் முதல் அமர்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இரண்டு விடயங்களை கூறியது. ஓன்று அரசியல் தீர்வின் முக்கியத்துவம் இரண்டாவது அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு வெளியில் நின்று நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தமிழகம் புலம் பெயர்தமிழர்கள் என்ற இரு சமூகங்களின் ஒத்தழைப்பு. 1…

  11. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் இலங்கை குறித்த அறிக்கை இலங்கையின் மனித உரிமை நிலவரத்தினை மிகைப்படுத்தப்பட்ட – எதிர்மறையான விதத்தில் சித்தரிக்கின்றது- வெளிவிவகார அமைச்சு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் வருடாந்த அறிக்கை குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. மனித உரிமைகள்…

    • 0 replies
    • 253 views
  12. உயிர் பிழைக்குமா இலங்கை? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த வாரம் இலங்கை சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடுதான். எரிபொருள் தட்டப்பாட்டை, தனியார் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட வசதிக்குறைவுதான் என்று, குறுகிய பார்வையில் அணுகிவிடக்கூடாது. எரிபொருள் தட்டுப்பாடு என்பது, மிகப்பெரிய அடிப்படை வசதி சார்ந்த ஒரு பிரச்சினை. மனித சமூகத்தின் வளர்ச்சியில், விரைவுப் பிரயாணம் என்பது மிக முக்கிய அம்சம். மனிதனானவன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரைவில் பயணிக்க முடியும் என்பது, மனித சமூகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் அடிப்படையாக உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், நகரமயமாக்கலின் பின்னர் பயணம் என்பது, எமது வாழ்வியல…

  13. நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம்: மக்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு! puthinam நம்மை நோக்கி அவலமும் துன்பமும் விரைந்து வருகின்றமையால் எதிர்கொள்ள தயாராவோம்- நாம் தனித்துவிடப்படவில்லை- தென் அமெரிக்க நாடுகளைப் போல் எழுவோம் என்று தமிழீழ மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளனர். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (07.01.06) "சேர்பியாஇ பொஸ்னியாவைப் போல் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் விரைவில் சிறிலங்கா" என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய உரை: சர்வதேச நீதிமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கும் சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மி…

    • 0 replies
    • 1.3k views
  14. கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? யதீந்திரா உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசு கட்சி இதுவரை வெளியிட்டுவந்த அரசியல் தீர்வு தொடர்பான நம்பிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டது. சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். புதிய அரசியல் யாப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதே தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டுவந்த கதை. தற்போது அந்தக் கதையை எழுதிய சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு கதையின் போக்கை எவ்வாறு மாற…

  15. அர­சியல் தீர்வின் முக்­கி­யத்­துவம் நாட்டில் புரை­யோடிப் போயி­ருக்கும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான உட­னடி அவ­சியம் தொடர்பில் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற சூழலில் அதனை உணர்ந்து அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுப்­பதில் அவ­சரம் காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் வர­லாறு முழு­வ­துமே தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் இழுத்­த­டிப்­புக்­க­ளையே செய்து வரு­கி­றது. தமிழ் பேசும் மக்கள் வாழ்நாள் முழு­வதும் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னரே தவிர அந்த விட­யத்தை எவரும் ஆர்­வத்­துடன் அணு­கு­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அதே­வேளை…

  16. வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும் – பி.மாணிக்கவாசகம்.. உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட…

  17. நிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இலங்கை குறித்த இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான நிபுனரும் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விஷேட அறிக்கையிடும் ஐக்கிய நாடுகள் நிபுனரும் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தயாரித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அமர்வில் பிரஸ்தாபிக்கவுள்ள…

  18. காபந்து அரசாங்கம் உண்மையா? சாத்தியமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வோர் அரசியல் கட்சியும், தத்தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது. நாட்டின் பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய மூன்று கட்சிகளும், இந்த நிலையை எதிர்நோக்கியுள்ளன. ஐ.தே.கவினதும் ஸ்ரீ.ல.சு.கவினதும் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளதை, இவ்வ…

  19. (விசேட ஆய்வு ஜெரா) இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்ப…

  20. மஹிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா? மஹிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தர் மீண்டும் அரசியலுக்குள் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியைப் பெற்று விடுவதற்காக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றார். மஹிந்தருக்கு ஆதரவான கூட்டங்கள் என்ற போர்வையில் நுகேகொடை, கண்டி. இரத்தினபுரி என்று மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது கடந்த வியாழக்கிழமை இரத்தினபுரிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களை மஹிந்தவின் விசுவாசிகளான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார, தினேஷ்குணவர்தன, உதய கம்மன்வில ஆகியோர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார்கள். ஆனால் இரத்தினபுரிக் கூட்டத்திற்கு எதிர்பார்த்த மக்கள் கூட…

  21. ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். அது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு. அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை…

  22. இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள் January 7, 2019 34 . Views . பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை. சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை அதிகரித்தும், தனியார்மயமாக்களை அதிகரித்துமே தமது ஆட்சியை மேற்கொள்கின்றன. அரசியல் பொருள…

  23. அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பி.கே.பாலச்சந்திரன் இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு புறத்திலே, கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டியிருப்பதுடன் அதற்கு முட்டுக்கொடுக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழர்களுக்கு விரோதமானவராக நோக்கப்படுகின்ற முன்னாள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.