நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
சென்னையில், அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தில் அமுலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை. பாமக கட்சி எம்எல்ஏ ஜிகே மணியின் மகன் தமிழரசன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். சமீப காலமாக பெரு வியாபார ஈழத்தமிழர்கள் பலரது பெயர்கள், தமிழக அரசியல் வாதிகளுடன் சேர்த்து பேசப்படுவது கவனிக்கத்தக்கது.
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின் பதிவு.. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின் ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன். மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது. விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை.... ஒரு சொட்டு மது இல்லை.... எவரும் குடித்து விட்டு வரவில்லை.... அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவ…
-
- 3 replies
- 344 views
-
-
கடலோர மீன்பிடிக்கு மரணம்: இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கையின் வடகடலில் கடல் வெள்ளரி விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றன. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். பலமுறை எடுத்துகூறியும் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் எட்டப்படவில்லை என்று மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, வடகடலில் மீன்வளத்தை முழுமையாக சுரண்டும் செயற்பாடுகள், வடக்கு மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் அழிப்பு, மீன்வலைகளை அறுத்தெறிந்து அட்டகாசம் செய்தல், இந்திய மீனவர்களின் அத்துமீறல், இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றினால், தங்கள…
-
- 10 replies
- 741 views
- 1 follower
-
-
சட்டமறுப்புப் போராட்டத்துக்கு தமிழ்க் கட்சிகள் தயாராகுமா?-அரசியல் ஆய்வாளா் யதீந்திரா செவ்வி May 1, 2023 தமிழா் தாயகப் பகுதிகளில் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. புதிதாக அறிமுகப்படுத்தபடவிருக்கும் பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் மற்றும் தமிழா் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமறுப்புப் போராட்டம் ஒன்றுக்கும் தாம் தயாராக இருப்பதாக அன்றைய தினம் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கின்றாா். இவை குறித்து உயிரோடைத் தமிழ் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் தமது கருத்துக்களைப் பகிா்ந்துகொண்டிருந்தாா் அரசியல் ஆய்வாளா் யதீந்திரா. அவரது செவ்வியின் முக்கிய…
-
- 0 replies
- 190 views
-
-
மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! April 26, 2023 — அழகு குணசீலன் — இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் அமைப்பு ஜனநாயக விழுமியங்களைக் கொண்டது. இந்த ஜனநாயக விழுமியங்களை கொழும்பு பெரும்பான்மை சிங்கள அரசு கடைப்பிடிக்கின்றதா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் இந்த ஜனநாயக உரிமையை கோரி நிற்கின்ற சிறுபான்மையினர் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும். தமிழர் அரசியல் எதைக் கோருகிறதோ அதைக் கடைப்பிடிக்கின்றதா? ஜனநாயகத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கின்றதா? முன் மாதிரியான அரசியலைச் செய்கின்றதா? என்பதே இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வி. மட்டக்களப்பு அரசியல் அண்மைக் காலமாக ஒரு வாய்வன் முறை – பேச்சு வன்முறை அரசியலாக மாறி வருகிறது. போகப் போக…
-
- 0 replies
- 473 views
-
-
இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன? சாதியத்தை வென்ற மாவீர சரித்திரம் எங்களுக்கு இருக்கு மறந்துவிட்டோமா?
-
- 19 replies
- 1.9k views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை? Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக் குண்டுதாரிகளினால் ஏககாலத்தில் ஒருங்கிசைவான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் முழு குடும்பங்களும் பெற்றோருடன் பிள்ளைகளும் இலங்கையின் அன்பையும் நட்பிணக்கத்தையும் அனுபவிக்க வந்த வெளிநாட்டவர்களும் அடங்க…
-
- 0 replies
- 156 views
-
-
தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றானதும் ஒழுக்கமும் தெய்வீக ஐதீகமும் கொண்டதுமான அருகிவரும் விளையாட்டுமான போர்த்தேங்காய் (எறி தேங்காய்) அடித்தல் வைபவம் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நேற்று (18) மாலை நடைபெற்றது. ஒருவர் தனது கையிலே தேங்காய் வைத்திருக்க இருபது மீற்றர் தூரத்திலுள்ள இன்னொருவர் தனது கையிலுள்ள தேங்காயை மற்றவரின் கையிலுள்ள தேங்காயை நோக்கி வீசுவார். அந்த சந்தர்ப்பத்தில் மற்றையவர் தனது கையிலுள்ள தேங்காயினால் எதிரே வரும் தேங்காயை தடுத்து உடைக்கும் அல்லது அடிக்கும் நிகழ்வு “போர்த்தேங்காய் அடித்தல்” என அழைக்கப்படுகிறது. சித்திரை வருடபிறப்பினை தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த தேங்காய் அடித்தல் வைபவம் நடைபெறும். தேங்காய் …
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
போர் வெற்றிக்காக பரபரப்பாக இயங்கும் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் போர் ஆரம்பமாகிய நாளில் இருந்து உக்ரைன் போரின் களமுனையில் உக்ரைன் தரப்பு தற்காப்பு தாக்குதல்களில் தான் ஈடுபட்டு வருகின்றது. வலிந்த தாக்குதலை மேற்கொள்ள கடந்த வாருடத்தின் நடுப்பகுதியில் அது முயன்றபோதும் ரஸ்ய படையினர் தமக்கு பாதகமான களமுனைகளில் இருந்து வெளியேறியதால் அது உக்ரைனுக்கு வெற்றியாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொண்டு தமது படையினரின் மனவலிமையை தக்க வைக்கவும், உதவிகளை வழங்கும் நேட்டோ நாடுகளை திருப்த்திப்படுத்தவும் வேண்டிய நிலையில் உக்ரைன் உள்ளது. எனவே தான் அண்மைய நாட்களின் உக்ரைனின் வலிந்த தாக்குதல் தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து எ…
-
- 1 reply
- 630 views
-
-
பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைந்து வரும் கிழக்கு மாகாணம்-மட்டு.நகரான் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் நிலைமையென்பது மிகவும் கவலைக்குரியதாகவேயிருந்து வருகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகள் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் தமிழர்களின் பொருளாதாரம் என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வளங்கள் உள்ளபோதிலும் அதனை பயன்படுத்துவதற்கான பொருளாதார வளம் இல்லாத காரணத்தினால் அந்த வளங்கள் வீண்விரயமாவதுடன் மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையாத சூழ்நிலையே காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதானமாக காணப்படும் விவசாயதுறையினைக்கூட முழுமையாக கட்டியெழுப்பமுடியாத நில…
-
- 0 replies
- 170 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிக…
-
- 2 replies
- 318 views
-
-
சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின் தளத்தைத்தையும் கடற்பரப்பையும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வைத்துக்கொள்வதற்கு சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை ஒன்றும் புதிதல்ல. அத்துடன் இது முதல் தடவையும் அல்ல. 2022 ஓகஸ்ட் இல், சீன உளவுக் கப்பலான 'யுவான் வாங்-5' ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய இராஜதந்திர மோதலை உருவாக்கியது. இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில…
-
- 0 replies
- 138 views
-
-
April 14, 2023 உழைக்கும்போதே செலுத்தும் செலுத்தும் வரி (Pay As You Earn - PAYE) முறையின் கீழ் அரசாங்கம் வேறுபட்ட வருமான வரைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. 100,000 ரூபாவுக்கும் 141,667 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறும் ஒருவர் 100,000 ரூபாவுக்கு மேலாக பெறுகின்ற சம்பளத்துக்கு 6 சதவீத வரியைச் செலுத்தவேண்டும். அதேபோன்றே 141,667 ரூபாவுக்கும் 183,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறுபவர் 12 சதவீத செலுத்தவேண்டும். 183,333 ரூபாவுக்கும் 225,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 18 சதவீதத்தையும் 225,000 ரூபாவுக்கும் 226,267 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 24 சதவீதத்தையும் 226,267 ரூபாவுக்கும் 308,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்…
-
- 0 replies
- 589 views
- 1 follower
-
-
இந்திய ராஜதந்திரத்தினை ஆட்டம் காண வைக்கும் சிங்கள ராஜதந்திரம் இலங்கை, இந்திய ராஜதந்திர போரில், இலங்கை என்னும் சிறு வண்டு, இந்தியா என்னும் யானையின் ஒரு காதில் புகுந்து மறு காதால், வெளியேறும் பலே விளையாட்டினை பல முறை செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா ஏமாறுவது வழக்கமாகி வருகிறது. முதலில் உலகம் எங்கும் இல்லாத வழக்கமாக, இலங்கையில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் வந்த தோட்ட தொழிலாளர்கள் 5 லட்ச்சம் பேரை திருப்பி பெற வைத்தது. அதே இந்தியா பின்னர், உகாண்டாவில் இருந்து வெளியேற்றி டெல்லிக்கு அனுப்பப்பட்ட, இந்தியர்களை, பிரிட்டனுக்கு அனுப்பி விட்டிருந்த்தும் குறிப்பிடத்தக்கது. தமிழர் இயக்கங்களை வளர்த்து ஆயுதம் கொடுத்த இந்தியாவினை படைகளை அனுப்ப வைத்து, அவர்களுடன…
-
- 1 reply
- 493 views
-
-
Thaainilam- Land Grabbing The Real Pandemic for the Tamils in Sri Lanka - A Documentary (Feb 2022) அண்மைக்காலத்தில் தாயகத்தின் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகவந்த பதிவாக உள்ளது. எமது தாயகத்தின் நிலப்பறிப்போடு தொடர்புடைய அனைவரும், குறிப்பாக எமது வளரிளம் தமிழர்கள் அறியவேண்டிய பல விடயங்கள்(முழுமையா இல்லாதபோதும்) உள்ளன. இதனை திண்ணையில் பகிர்ந்த ஏராளனவர்களுக்கு நன்றி நன்றி - யூரூப் சிறுபிழைதிருத்தம்
-
- 0 replies
- 192 views
-
-
மெல்லச் சாகும் தாயகம் – சிங்கள மயமாக்கலின் அப தந்திர உத்திகள்..! சிங்கள மயமாக்கல் அரசியல் பொறிமுறையின் நிகழ்ச்சி நிரல் உத்திகள் எவை என்றும் அவை எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பது பற்றியும் மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வி. பூபாலராஜா விளக்கியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சிங்கள பெளத்த அடிப்படைவாத ஆளும் வர்க்க பிற்போக்குவாதிகள், 75 ஆண்டுகளாக இலங்கையை ஆண்டு வருகின்றார்கள். இவர்களது நிகழ்ச்சிப் பொறிமுறையானது ஆளும்கட்சி மாறினாலும் ஒரே விதமாகத்தான் அமைந்துள்ளன. ஆட்சியாளர்களது சிங்கள மயமாக்கல் பொறிமுறையிலுள்ள அபதந்திர உத்திகள் எவை எனப் ஆராயவோம். 1) சிங்கள பெளத்த அடிப்படை வாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் வக்கிரமாக விதைத்தல். 2) ச…
-
- 3 replies
- 408 views
-
-
Courtesy: தி.திபாகரன், M.A. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நெருக்கடியால் பட்டினி சாவு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்படப் போவதில்லை. உலகின் அரசியல் பொருளாதாரம் என்பது உச்சக்கட்ட. வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலனித்துவத்தின் முடிவுடன் Dead labour (இயந்திர சாதனங்களும் மூளையுழைப்புச் சாதனங்களும், அதேவேளை உயிருள்ள மனித உழைப்பு Living labour எனப்படும்) வளர்ச்சியுடன் பாரியளவு தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து பண்ட உற்பத்தியில் இயந்திரங்கள் பல்லாயிரம் மனிதர்களுடைய வேலையை சில இயந்திரங்களும் ரோபோக்களும் செய்து முடித்து விடுகின்றன. இதனால் உபரி உற்பத்தி (தேவைக்கு அதிகமான பண்டங்களின் உற்பத்தி) சேமிப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி திடீரென ஏற…
-
- 2 replies
- 250 views
-
-
பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம்: அதன் நல்ல, தீய மற்றும் அவலட்சணமான விடயங்கள் அம்பிகா சற்குணநாதன் on April 3, 2023 Photo, Ishara S.kodikara/AFP, THE GUARDIAN நல்ல விடயங்கள் மார்ச் 22, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் பெரும்பாலான பகுதிகளை மீளக் குறிப்பிடும் சட்ட மூலமாகக் காணப்படுகின்றது. கைதினைக் குறிப்பிட்டு ஆவணமொன்று வழங்கப்படல், பெண்கள் மீதான சோதனைகள் பெண் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படல், மொழிபெயர்ப்புக்கான அணுகல் அத்துடன் தடுப்புக்காவல் ஆணை ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்படும் நபர்கள் 14 நாட்களுக்…
-
- 0 replies
- 154 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலொன்றான பின்லாந்து "நாட்டொ" அமைப்பில் இணைவதற்கான அனைத்துத் தடைகளையும் தாண்டி வெற்றியடைந்துள்ளது. வியாழக்கிழமை மாலையில் துருக்கி நாட்டின் நாடாளுமன்றில் அதன் அங்கத்தவர்களால் பின்லாந்தை இணைத்துக்கொள்வதில் எமக்கு எந்தத் தடையுமில்லை எனும் பிரேரணை நிறைவேறியதன் பின்னராக, அந்நாட்டில் அதிபருக்கு அந்தப்பிரேரணையில் நகல் அனுப்பப்பட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அந்நாட்டு அதிபர் ஏற்றுகொண்ட கடிததை அமெரிக்கவிலுள்ள நாட்டொ தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நாட்டொவில் இணைவதற்கான தடைகள் நீங்கிவிட்டதாக பின்லாந்து நாட்டின் அதிபர் திரு செளலிநீனிஸ்தோ அவர்கள் வெள்ளி காலையில் தனது "டுவீற்றர்" செய்தியின்மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்திருந்த…
-
- 22 replies
- 1.4k views
-
-
ஊழல் தேசத்தில் கல்முனை மீதான கறை மொஹமட் பாதுஷா ‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...’ என்று தொடங்கும் பாடல் வரி, இலங்கை அரசியலின் போக்குகளை நோக்குகின்ற போது, அடிக்கடி ஞாபகத்துக்கு வருவதுண்டு. உள்ளூராட்சி மன்றங்கள் தொடக்கம், மாகாண சபைகள் தொட்டு பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிகள் வரை ஒவ்வொருவரிடமும் மக்கள், இந்தக் கேள்வியை உட்கிடையாக முன்வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இப்போது, உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பெரும் இழுபறியாகி உள்ளது. தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைகள், அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசாங்கம் அதற்கெதிரான கற்பிதங்களைச் சொல்லி வருகின்றது. இப்படியான ஒரு காலகட்…
-
- 0 replies
- 173 views
-
-
வைக்கம் நூற்றாண்டு: பெருகும் பெரியார் பெருமை! Apr 03, 2023 07:02AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை வைக்கம் என்பது கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். தாலுக்கா தலைநகர். இந்த ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர்கள், தாழ்த்தப்பட்டோர் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஒரு சத்தியாகிரக போராட்டம் நூறாண்டுகளுக்கு முன் 1924ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அறுநூற்று மூன்று நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், வெற்றிகரமாக தடை நீக்கப்பட்டவுடன் நிறைவடைந்தது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை அழைத…
-
- 0 replies
- 149 views
-
-
Srilanka போராட்டக்காரர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? அது ஒரு நாள் போராட்டம் என்று தான் பலரும் கருதினர். அடுத்த சில தினங்களில் மிகப்பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். 2022 மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய போராட்டம், அன்றிரவைக் கடந்து, நாட்கள் கடந்து, வாரங்கள் கடந்து, சுமார் 100 நாட்களை கடந்த போது, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்தப் போராட்டத்தில் களமிறங்கிப் போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து, பிபிசி தமிழ், அவர்களை சந்தித்து கலந்துரையாடியது.
-
- 2 replies
- 207 views
- 1 follower
-
-
புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை “பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பயணியை அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வெள்ளை வான் ஒன்றில் வந்த ஒரு குழு அவரை எதிர்கொண்டது. அந்தக் குழு ரமேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தி, அவருடைய கண்களைக் கட்டி, அந்த வானுக்குள் தள்ளியது – அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை ஒருபோதும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. அவரை ஒரு கைவிடப்பட்…
-
- 0 replies
- 545 views
-
-
-
வள்ளுவரும் தமிழ்த்தேசிய அரசியல் விடுதலையும் -வள்ளுவர் சமணத்தை பின்பற்றியிருக்கலாம் என்பது உண்மை. சமணர்கள் பிற்காலத்தில் சைவர்களாக மாறினர் என்பதும் ஏற்புடையது. ஆனால் எந்த ஒரு சமயம் பற்றியும் வள்ளுவர் தனது குறளில் குறிப்பிட்டுக் கூறவில்லை. இந்த நிலையில் தமிழ் நாடு மற்றும் ஈழத்தமிழர் பிரதேசங்களில் வாழும் இக்கால சமய அறிஞர்கள் சிலர் தத்தமது விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்ப வள்ளுவருக்குச் சமய அடையாளமிடுகின்றனர்– அ.நிகஸ்ன் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசிய…
-
- 0 replies
- 192 views
-