நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று; இந்திய விமானம் முதலாவதாக தரையிறக்கம் ஒருபுறம் நாட்டின் போக்குவரத்துத்துறை அபிவிருத்தி; மறுபுறம் காணிகளை இழந்தோரின் தீர்க்கப்படாத துயரம் "பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்படும் நிலங்களுக்கான நட்டஈடு தருவதாக அரசாங்கம் எங்களுக்கு அறிவித்தல் தரவில்லை. உண்மையில் ஒரு ஜனநாயக நாடெனில், மக்களிடம் விருப்பங்களைக் கேட்க வேண்டும். ஆனால், மக்களின் அபிப்பிராயங்களை எங்களிடம் கேட்கவில்லை" என பலாலி விமான நிலையத்துக்கான நுழைவாயில் அமைக்கப்படும் நிலங்களின் உரிமையாளரான கதிர்காமநாதன் கூறுகின்றார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு, யாழ். விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று 17 ஆம் திகதி திறந்து …
-
- 0 replies
- 358 views
-
-
அண்டை நாடான இந்தியாவின் பக்கத் துணையின்றி இலங்கைத் தமிழ் மக்கள் விமோசனம் பெற முடியாதென்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மையை தமிழ் மக்கள் ஒரு போதும் மறந்தவர்கள் அல்ல. இலங்கையில் தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதிகள் துவம்சம் செய்த போதெல்லாம் இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே ஈழத்தமிழர்களிடம் இருந்தது. அதேபோன்று இந்தியாவும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தது. இவ்வாறானதொரு நெருக்கமான உறவுக்குத் தமிழகத்துச் சகோதரர்களும் இந்து சமயத்தின் ஞானபூமியாக இந்தியா இருப்பதும் காரணமாயிற்று. இவைதவிர இலங்கை - இந்திய உறவு என்பது ஈழத் தமிழர்களினூடாக ஏற்பட்ட உறவு என்பதும் இங்கு நோக்குதற்குரியது. எனவே இந்திய தேசத்தினதும் ஈழத் தமிழர் களதும் உறவு …
-
- 1 reply
- 445 views
-
-
'ஒருத்தனுக்கு ஒருத்தி': பொய்யாக்கும் தலங்கம கலாசாரம் வேண்டாம் -மேனகா மூக்காண்டி இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கென்ற கலை, கலாசா, பண்பாடு, மற்றும் ஒழுக்கங்கள் போன்ற தனித்துவமாகக் காணப்படுகின்றன. அந்தத் தனித்துவத்தை, காலாகாலத்துக்கு பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. ஒருவரின் நடத்தை, ஒழுக்கம், செயற்பாடுகள், நடை - உடை - பாவனை அனைத்துமே, இவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர், இந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பறைசாற்றிவிடுகின்றது. எனவே, நாம் ஓரிடத்தில் ஏதேனும் தவறை இழைத்துவிட்டால், அது எமது சமூகத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பதை எந்…
-
- 0 replies
- 555 views
-
-
‘தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு ரீதியில் தீர்வு’ ஹஸ்பர் ஏ ஹலீம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற சிறந்த கொள்கைப் பிடிப்பிலேயே அரசியலில் இறங்கியுள்ளேன். தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்து அரசியல், பொருளாதார ரீதியாகத் தீர்வைப் பெறவேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அரசியல்துறைப் பொறுப்பாளருமான ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே, மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் கூறியதாவது, கேள்வி - உங்களைப் பற்றிய அறிமுகமும் அரசியல் பிரவேசம் தொடர்பான நிலைப்பாடும் என்ன? எனது பெயர் ஆத்மலிங்க…
-
- 0 replies
- 357 views
-
-
2022இல் நாட்டில் பஞ்சம் வருமா? வ. சக்திவேல் “இதுவரை காலமும் யூரியா உரங்களைப் பாவித்து வந்த எமக்கு, தற்போது ஓர் ஏக்கருக்கு நைதரசன் எண்ணை ஒரு லீற்றர், பொட்டாசியம் 24 கிலோ தந்துள்ளார்கள். இன்னும் பசளை எண்ணை ஒரு லீற்றர் தருவதாகச் கூறியுள்ளார்கள். எமக்குத் தந்துள்ள நைதரசன் எண்ணையில் அரை லீற்றரை 5 கிலோ மண்ணில் கலந்து இரண்டு தடவைகள் விசிறும்படி தெரிவித்துள்ளார்கள். இது எமக்குப் புதிய விடயமாகும். இதனை இம்முறை பாவித்து விளைச்சலைப் பார்த்தால்தான் தெரியும். நோய்க்கு வைத்தியரிடம் சென்றால் மாத்திரைகள் எடுத்து, அதைப் பாவித்த பின்னர்தான் நோய் தீர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூறமுடியும். அதுபோன்றுதான் எங்களுடைய நிலைமையும். எனினும் இந்த இயற்கை பசளை மற்றும் எண்ணை வகைகளைப் பய…
-
- 2 replies
- 405 views
-
-
கண்ணீரும் கட்டுநாயக்காவும் திகதி: 14.03.2010 // தமிழீழம் இந்து மாகடலின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் சர்வதேச அரங்கில் சிறிலங்காத் தீர்வுக்கு அதன் பருமனுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் உண்டு இதனால் அதன் துறைமுகங்களுக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கும் பெரும் செல்வாக்கு இருப்பதை பார்க்கலாம். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் சிறிலங்காவின் ஒற்றை வான்வழிப் போக்குவரத்துப் பாதையாக இடம்பெறுகிறது கொழும்பில் குழப்பமும் அமைதியின்மையும் தோன்றுவதற்கு முன்பு பெருமளவு மேற்கு கிழக்கு உல்லாசப் பயணிகள் கட்டுநாயக்கா ஊடாக வந்து போயினர். இதனால் சிறிலங்கா பெரும் வருகையை ஈட்டியது உல்லாசப் பயணிகள் வருகை குறைந்ததோடு இன்று வருவாயும் குன்றி விட்டது. அவர்கள் மாலைதீவுகள் போன்ற …
-
- 7 replies
- 1.2k views
-
-
அவர்கள் அழிக்க விரும்பும் ரத்தச்சிவப்பு கையெழுத்து சரி, கங்கிரஸ் தான் ராஜீவைக் கொன்று விட்டார்களே எனும் கோபத்தில் விடுதலை செய்யவில்லை, இந்த பாஜகவுக்கு என்ன பிரச்சனை என சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஆனால் இதைக் கேட்பவர்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான ஒற்றுமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். காந்தியின் காலத்தில் இருந்தே இந்துத்துவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒரு தரப்பு அமைதி வழியில் இந்து ராஜ்ஜியத்தை தோற்றுவிக்க முயன்றனர்; மற்றொரு தரப்பினர் வன்முறையை விரும்பினர். முதலாவது தரப்பினர் காந்தியுடன் இணைந்து பணியாற்றினர், ஆனால் காங்கிரஸுக்கு வெளியே இருந்து கொண்டு. இவர்களை காந்தி அங்கீகரித்து …
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன். அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். ‘தொழில்வளர்ச்சி' என்கி…
-
- 0 replies
- 643 views
-
-
புதிய வரி எவ்வாறு அறவிடப்படும் ? - விளக்குகிறார் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேஷமூர்த்தி By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 11:58 AM புதிய வரி அறவிடல் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துகிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி ஒரு இலட்சம் ரூபா மாதாந்த வருமானம் அல்லது சம்பளமாக பெற்றால் வரி அறவிடப்படமாட்டாது. ஆனால் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் ரூபா பெற்றால் 2500 ரூபாஅறவிடப்படும். அது படிப்படியாக அதிகரிக்கும். மாதம் 5 இலட்சம் ரூபாவை சம்பளமாக அல்லது வருமான பெற்றால் அவர் ஒரு இலட்சத்து 4 ரூபாவை வரியாக செலுத்தவேண்டும் நேர்கண்டவர் – ரொபட் அன்டனி …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள் Editorial / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 09:53 ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று வ…
-
- 2 replies
- 737 views
-
-
கேள்விக் குறியாகும் வடபுலத்து மீன்பிடியின் எதிர்காலம் Editorial / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 07:25 Comments - 0 இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்றுவரும் மீன்பிடித் தொழிற்றுறை, பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றது. குறிப்பாக, அவை இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றன. முதலாவது, இந்திய இழுவைப் படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதும் எம்மவர்களின் வலைகளைச் சேதமாக்குவதும் பிரதானமானவை. இரண்டாவது, வெளிமாவட்ட மீனவர்கள், வடக்கில் வாடிகளை அமைத்து, மீன்பிடிப்பதன் ஊடு, உள்ளூர் மீனவர்களின் மீன்பிடியும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றன. இவை இரண்டும் எமது அரசியல்வாதிகளின் கவனத்தை எட்டவில்லை; அதற்கான காரணங…
-
- 0 replies
- 260 views
-
-
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை - கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (ஆர்.யசி) சஹ்ரான் பற்றியோ அல்லது அவருடைய குழுவினர் பற்றியோ தமக்கு எந்தவித தகவல்களும் முன்னர் வழங்கப்பட்டிருக்க வில்லையெனவும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை எனவும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் தெரிவித்தார். கேள்வி : காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கருத்துக்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு எழ…
-
- 0 replies
- 280 views
-
-
போலீசாரை அலற வைக்கும் DNA பூதம். இலங்கையில் அண்மையில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்டார். 'வேகமாக' களமிறங்கிய லோக்கல் பொலிசார், 17 வயது மாணவர் ஒருவரையும், மேலும் ஒரு 33 வயதானவரையும் கைது செய்து அவர்கள் தான் குற்றம் புரிந்தவர்கள் என்று நீதிமன்றில் நிறுத்தியது. மேலும் பத்திரிகை மகாநாடு கூட்டி, அவர்களது போதப் பொருள் பாவனை குறித்து சொல்லி, அவர்கள் தான், வேறு யாரும் இல்லை என்பதாக, தமது தீர்ப்பினை வழங்கி விட்டார்கள். நீதிமன்றமோ, DNA டெஸ்ட் நடத்த உத்தரவு பிறப்பித்தது. ரிசல்ட் வந்தபோது, அவர்களுக்கும் இந்த கொலைக்கு தொடர்பு இல்லை என்று, அவர்கள் விடுவிக்கப் பட்டனர். விசாரணை CID யினர் வசம் கொடுக்கப் பட்டது. அவர்களும், கொண்டையா என்பவரைய…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஏன் கிறிஸ்தமஸ் கொண்டாடுகிறோம்: - சிறப்பு பதிவு [Thursday 2015-12-24 08:00] கிறிஸ்துமஸ் தோற்றம் இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடை காண முற்பட்டுள்ளனர். உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், …
-
- 0 replies
- 714 views
-
-
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு தேர்தல் களம் சூடாகி விட்டது. தாம் தயார் செய்த வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் அறிவிக்கவுள்ளன. இவை நாடளாவிய ரீதியான பொதுவிடயம். மாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் தேர்தல் களம் எவ்வாறாக இருக்கும் என்று ஆராய்ந்தால், முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் இறங்கவுள்ளன. இவ்வாறு தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கன்னை பிரிந்து பிர சாரம் செய்யும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்வதான நிலைமைகள் உருவாகும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு அப்பால், ஊடகங்கள் கூட தத்தம் சார்புநிலைகளை அறம் பிழைத்து வெளிப்படுத்த ம…
-
- 1 reply
- 335 views
-
-
ஒன்றிணைந்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள்ளும் அதன் உள்ளூர் அமைப்புகளுக்குள்ளும் கொள்கை விவகாரங்களிலும் ஆழமானதொரு நெருக்கடி தோன்றியிருக்கின்ற ஒரு நேரத்தில் அதன் 65ஆவது வருடாந்த மாநாடு நடைபெறுகின்றது. சீனப்பாரம்பரியத்தின்படி நெருக்கடி என்பது ஒரு கெட்டவிடயமாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. நல்லதுக்கோ கெட்டதுக்கோ ஒரு நெருக்கடி ஒரு திருப்பு முனையாகக் கூட இருக்கலாம். சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரை, கணிசமான பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அதேவேளை அந்தப் ப…
-
- 0 replies
- 557 views
-
-
ராஜேந்திரன் வி சீமான் | Seeman தனது கட்சியிலேயே ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை போன்ற கிளை அமைப்புகளை ஏற்படுத்தி சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார் பிறப்பும் பின்னணியும்: சிவகங்கை மாவட்டம் , இளையான்குடி வட்டத்திலுள்ள அரணையூர் எனும் கிராமத்தில், செந்தமிழன் - அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக, 1966-ம் ஆண்டு , நவம்பர் 8-ம் நாள் பிறந்தார் சீமான். படிப்பும்.. திரைப் பயணமும்: தனது சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த சீமான், 1987-ம் ஆண்டு இளையான்குடியிலுள்ள ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார். பட்டப்படிப்பை முடித்த சீமானுக்கு சினிமா துறையின் மீது ஆர்…
-
- 0 replies
- 676 views
-
-
ஆடி வேல் விழா இவ்வருடம் ஆவணி வேல் விழா ஆனது எப்படி! இலங்கையின் வரலாறு தொடங்கிய காலம் முதல் இத்தீவை ஆண்ட மன்னர்களின் போஷிப்பையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தமை பற்றி பாளி நூல்கள், வரலாற்று மூலகங்கள், சந்தேச நூல்கள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. குபேரன், இராவணன், மகாநாகன் பாண்டிய கதிர்காம சத்திரிய மன்னர்கள், தேவநம்பிய தீசன், துட்டகாமினி, 2ஆம் காசியப்பன், 4ஆம் அக்ரபோதி, தம்புலன், 3ஆம் மகிந்தன் சோழ மன்னர்கள், விஜயபாகு, மகா பராக்கிரம பாகு என இலங்கையை ஆட்சிசெய்த பல மன்னர்களின் ஆதரவையும் மானியங்களையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தது. கி.பி.1581 முதல் 1593வரை சீதாவக்கை இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் கதிர்காமத்தில் இருந்…
-
- 2 replies
- 1.1k views
-
-
15-08-13 அன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டனில் ஆற்றிய உரை.....
-
- 0 replies
- 323 views
-
-
1990ம் ஆண்டு செப்ரெம்பர் 5 வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரால் 174 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். வாகனங்களில் வடபுறமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் ஒருகாட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். தமது கைகளாலேயே அவர்கள் புதைகுழிகளை வெட்டுமாறு பணிக்கப்பட்டனர். பின்னர் வரிசைசையில் நிற்குமாறு பயமுறுத்திப் பணிக்கப்பட்டனர். சிங்கள இராணுவ மிருகங்களால் பின்புறமாகச் சுடப்பட்டுப் புதைகுழிகளில் வீழ்த்தப்பட்டனர். நிர்க்கதியாய் நாதியற்றவர்களாய் வீழ்த்தப்பட்டனர். அவர்களது உயிர்பிழியும் குரல்கள் அன்று காட்டுவிலங்குகளையும் மரங்களையும் பதறவைத்திருக்கும். 23 மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. கிழக்கில் வாழும் புத்திப்பிழைப்பாளர்கள் ம…
-
- 0 replies
- 531 views
-
-
http://www.sankathi24.com/news/33052/64//d,fullart.aspx
-
- 0 replies
- 509 views
-
-
இலங்கையின் தேசிய ‘உணவு அவசரநிலை’க்கு வழிவகுத்த மோசமான பொருளாதாரம் tamil.indianexpress இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவால் ஆகஸ்ட் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலைக்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 6) ஒப்புதல் அளித்தது. “உணவு மாஃபியாவால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை சோதனை செய்வதற்காக இந்த அவசரநிலை தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது தவறான நம்பிக்கையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துதல் மற்றும் சர்வாதிகாரத்தின் திசையில் நகர்த்தும் உள்நோக்கத்துடன் இந்த அவசரநிலை அறிவிக்கப்படுகிறது என்கிறார்கள். இந்த அவசரநிலை இலங்கையின் உணவு நெ…
-
- 0 replies
- 265 views
-
-
சந்திரிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறிவிட்டது. தற்போதைய பிரதம நீதியரசர் அசோகா என்.சில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் இந்த விவகாரத்தை விசாரித்து இத்தகைய ஆலோசனையை வழங்கியிருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்குள் முற்கூட்டியே அடுத்த பதவிக் காலத்துக்கான தேர்தலை நடத்தி, வெற்றியீட்டிய நிகழ்வுகள் கடந்த 31 ஆண்டு காலத்துக்குள் மூன்று தடவைகள் நடந்தேறிவிட்டன. 1978ஆம் ஆண்டின் அரசமைப்புக்குக் கீழ் நிறைவேற்று அதிகார …
-
- 1 reply
- 710 views
-
-
ஈழத்தமிழர் விவகாரம்: தென்னாபிரிக்காவின் இன்னொரு பக்கம்-பரா பிரபா விவரங்கள் உருவாக்கப்பட்டது: 24 ஜனவரி 2014 ஒரு பேப்பர் - இதழ் 207 இல் ‘சர்வதேச விசாரணையைத் தடுக்க உதவும் தென்னாபிரிக்காவும், சில தமிழரமைப்புக்களும்’ என்ற தலைப்பில் கோபி எழுதிய பத்தியின் தொடர்ச்சியாகவே இப்பத்தி அமைகிறது. சில தமிழர் அமைப்புக்களும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களும் தென்னாபிரிக்காவின் ‘உண்மையைக் கண்டறிதலும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு’ (TRC – Truth and Reconciliation Commission) தொடர்பாக தமிழ் மக்களை தவறாக வழிநடத்த முனைவதாகத் தெரிவதால், இது பற்றிய மேலதிக தகவல்களை எழுதுதல் இங்கு அவசியமாகின்றது. ஆர்ஜன்ரீனா, சிலி, பெரு, சியராலியோன் மற்றும் பஹ்ரெயின் போன்ற நாட…
-
- 3 replies
- 605 views
-
-
ராஜபக்ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள் May 23, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, The Washington Times ராஜபக்ஷர்கள் கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்ஷர்கள் தென்னிலங்கையிடம் கோரினர். அந்தக் கோரிக்கையையும் தென்னிலங்கை மக்கள் நிறைவேற்றி வைத்தனர். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை வைத்துக் கொண்டு 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மகுடம் சூட்டினர். தென்னிலங்கை மக்கள் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராஜப…
-
- 0 replies
- 252 views
-