நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
தலைவர் என்றால் எப்படியும் இருக்கலாம் என்று இங்கு வரையறை செய்யப்பட்டுள்ளது .அல்லது அப்படி நடந்து கொள்கின்றனர்.மகளுக்காக செய்வதை போல் மக்களுக்கு செய்த தலைவர்.பேரன்களுக்கு செய்ததை போல் பெருசுகளுக்கு செய்யாத தலைவர் இவர் பெயர் தான் தமிழின தலைவர். இந்த புகைபடைத்தை பாருங்கள் ,இந்த அளவு நேசித்த நேசித்த குழந்தைகளை கூட இனத்தின் மானம் காக்க போர் முனைக்கு அனுப்பிய தலைவன். இப்படி தான் இருக்க வேண்டும் ,இதை விட்டு அளவுக்கு மேல் சொத்தை சேர்த்து விட்டு ,வாய்தா வாங்கியே உலக சாதனை செய்வது.மகனுக்காக கட்சி வளர்ப்பது,அடுத்தவன் மேல் சவாரி செய்தே காலத்தை ஓட்டுவது இப்படி மேலும் பலர் நம் தமிழ் நாட்டில் தலைவர்களாக வலம் வந்து நம்மையும், நம் நாட்டையும் வளம் கொழிக்க செய்பவர்களா…
-
- 0 replies
- 517 views
-
-
மனிதர்களை நெறிப்படுத்துவதற்காகத்தான் அனைத்து மதங்களும் சட்டங்களை இயற்றின. அந்த சட்டங்கள் மனித சமூகத்தின் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் என்பதே ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும் கூட. இஸ்லாமிய சமூகத்தை நெறிப்படுத்தும் ஷரீஆ சட்டதிட்டங்கள் மீதும் இவ்வாறான நம்பிக்கையே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் கூட இருக்கும். எனவே, ஷரீஆவைப் பின்பற்றுவதாகக் கூறும் நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப ‘மொழிபெயர்க்கப்படும்’ ஷரீஆ மற்றவர் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத விடயமாகும். அதையும் விட முக்கியமாக, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை எவ்வாறு ‘மொழிபெயர்க்கப்படுகின்றன’ ,…
-
- 3 replies
- 672 views
-
-
9 ஜனவரி பாரிஸ் நகரில் மீண்டும் ஒரு அரச பயங்கரவாதம். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பின் நிறுவன உறுப்பினர் Sakine Cansiz மற்றும் அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் Fidan Dogan மற்றும் Leyla Soylemez படுகொலை செய்யப்பட்டார்கள். குர்திஸ்தான் மக்களின் விடுதலை போராட்டம் தமிழீழ மக்களின் விடுலை போராட்டம் போல் நிலம், மொழி, கலை, கலாச்சாரம், உரிமை பாதுகாப்பு போராட்டமாகும். நாம் தமிழீழ தாயகத்திற்காக போராடுவது போல் அவர்களும் குர்திஸ்தான் நாட்டின் உருவாக்கதிட்காக போராடுகிறார்கள். அவர்களும் சர்வதேச புவியல் அரசியல் மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயர்த்த மரியாதையை கொண்டவர்கள், எமது மக்களின் அற்பணிப்பில், எமது போராட்டத்தில் பல வழிகளில் ஒன்ற…
-
- 8 replies
- 692 views
-
-
சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை
-
- 0 replies
- 434 views
-
-
இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள். இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை. மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான் வரலாறு. இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். 5 மாணவர் படுகொலை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
-
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது. பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. இத்தகைய கொடியவர்கள் சமூகத்தில் களையப்பட வேண்டும், இந்த கொடுமையான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை பாரபட்சமற்ற வகையில் வெளிக…
-
- 2 replies
- 440 views
-
-
மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாட்டில் அனைத்துலக தமிழீழ மக்களவை சார்பில் திருசோதி அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அனைத்துலக மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள் பேரவை. முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர் தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல் மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக இருக்கின்றோம் இதனை புரிந்து…
-
- 0 replies
- 351 views
-
-
டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு; சில சிந்தனைகளும் கண்டனங்களும்! டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய பிறகு மாணவி உயிர் பிரிந்தது உலகையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கி வலது சாரிகளின் பேச்சுக்கள் மிகவும் அருவருப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் பலர் கூறும் கருத்துக்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணராததாகவே படுகிறது. டெல்லியில் கடும் போராட்டம் நடந்தது, காவலர் ஒருவர் பலியானார். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனை மத்தியதர வர்க்க வெளிப்பாடு என்று கொஞ்சம் சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் பலர் பேஸ்புக், பிளாக் என்று கருத்து மழை பொழிந்து வருகின்ற…
-
- 0 replies
- 519 views
-
-
செங்கல்பட்டு ‘சிறப்பு’ முகாமில் இருந்து தமிழ் உணர்வைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்ட உங்கள் சகோதரன் பேசுகிறேன், எழுதுகிறேன்... கெஞ்சவில்லை! இங்கே பெயர்தான் சிறப்பு முகாம். மற்றபடி இது ராஜபக்சேவின் வதை முகாமுக்கு முன்னோடியான முகாம்தான். தமிழகத்தில் ஈழத் தமிழர் ஏதிலிகள் முகாம்கள் நிறைய உள்ளன. அவற்றில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. யுத்தகாலத்தில் இங்கே வந்த எங்கட ஜனங்களுக்கு, வீடுகள் கட்டித் தாரோம் என்ற பெயரில் சில கொட்டகைகளை எழுப்பித் தந்திருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் தினம்தோறும் தங்களது அன்றாடத்தை நகர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு இன்னொரு நாட்டிடமிருந்து அகதிகளை ஏற்கிறது என்றால்... சர்வதேச சட்டங்கள் கிடக்கட்டும், மனித நேய சட்டப்…
-
- 1 reply
- 677 views
-
-
பதவியினைப் பறித்த கிறிஸ்மஸ் பார்ட்டி கொலம்பியாவிற்கான கொண்டுராஸ் தூதுவர் Carlos Rodriguez கிறிஸ்மஸ் பார்ட்டியினை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தார். இரு விபச்சாரப் பெண்களும் அழைக்கப் பட்டார்கள். எல்லாம் நன்றாகத்தான் போனது. பார்டி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து திருப்பி வேலைக்கு வந்தால் இரண்டு லப்டோப்கள் காணமல் போன சங்கதி தெரிந்து போலிசினைக் கூப்பிட்டார்கள். அட, யாரு ஆட்டையினை போட்டது எண்டு முதலே தெரிந்திரிந்தால் கூப்பிட்டு இருக்க மாட்டார்கள். லவட்டிக் கொண்டு போனது விலை மாதர்கள். விஷயம் வெளியில் பரவ, இப்ப தனது நாட்டினை தவறாக பிரதிநித்துவப் படுத்தியதற்க்காக தூதுவர் ராஜினாமா செய்ய வேண்டியதாகி விட்டது. தூதுவர் தனது 'காரியத்தில்' கண்ணாய் இருந்திருக்க, அவர்களும…
-
- 6 replies
- 755 views
-
-
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன. ஆடம் லான்சா அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் நியூட்டன் நகரிலுள்ள சாண்டி ஹூக் பள்ளிக்குள், சந்தோஷமாக கைவீசி சென்ற இளந்தளிர்கள் அடுத்த சில மணி நேரத்துக்குள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் எவரையும் மனம் கனக்க வைக்கும். இந்தக் கொடுமையான சம்பவம், 6-7 வயது நிரம்பிய 20 குழந்தைகளையும், 6 பள்ளி அலுவலர்களையும், கொலையாளியையும், அவரது தாயையும் சேர்த்து 28 உயிர்களை காவு கொண்டுள்ளது. ஆடம் லான்சா என்ற 20 வயது நிரம்பிய இளைஞன் …
-
- 4 replies
- 621 views
-
-
ஒரு வழக்கறிஞர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் கௌரவம் குறித்தும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் சட்டத்தின் ஆதிபத்தியம் குறித்தும் தமது மனச்சாட்சிக்குத் தாம் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை குறித்து விசாரணை மேற்கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த அவர் முடிவு செய்தமை இதனாலேயே ஆகும். ஒரு நாட்டின் தலைவரது செயற்பாடுகள் மட்டுமே அவரது கருணையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டுமேயல்லாது, அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. அதேசமயம் ஒரு சாதாரண பொதுமகனது மனதில் உருவாகும் கருணை போன்றல்லாது, ஓர் அரச தலைவரது நெஞ்சத்தில்…
-
- 0 replies
- 413 views
-
-
இது இன்னமும் யாழில் ஒருவராலும் இணைக்கப்படவில்லை என நினைக்கின்றேன். ------------------------------------------- சாணக்கியன்... கடந்த 13 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு சமர்களில் பங்கெடுத்தவர். ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை அத்தனை அவலங்களையும் கண்கூடாக அனுபவித்தவர். தற்போது தலைமறைவில் இருப்பவர், 'சாணக்கியன்’ என்ற புனைபெயரில் 'முள்ளிவாய்க்காலில் இருந்து... ஓர் அவலக் குரல்’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். இன்றைய இலங்கையை... இலங்கை அரசின் ஈன அரசியலை... இலங்கையை மையப்படுத்தி ஈழத் தமிழரின் ரத்தம் குடிக்கப் போட்டியிடும் உலக அரசியலைக் கண் முன் காட்சிகளாக விரியச் செய்கின்றன இவரது எழுத்துகள். ஈழத் தமிழர்களுக்காக உயிர் வாழ வேண்டி இர…
-
- 2 replies
- 617 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் பள்ளி ஒன்றில் சிறுவர்கள் இருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பல மாணவர்களை சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவை உறையச் செய்த இந்தக் கொலைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர் “பவுலிங் ஃபார் கொலம்பைன்” என்ற பட்த்தை இயக்கினார். அந்தப் படத்தில் சிறு அனிமேஷனாக அமெரிக்காவின் துப்பாக்கி வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். அதை உங்கள் பார்வைக்கு தருகிறோம். அமெரிக்காவின் வரலாறு இங்கிலாந்தில் இருந்த சட்ட திட்டங்களை மறுத்து ஒரு கூட்டம் அமெரிக்கா செல்கிறது. அங்கு அவர்களை வரவேற்கும் சிவப்பிந்தியர்களைப் “காட்டுமிராண்டிகள்” எனச் சுட்டுக் கொல்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் கொலைகளின் வரலாறு, பின்பு மனநோயாக பர…
-
- 0 replies
- 445 views
-
-
ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது. 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால…
-
- 2 replies
- 2.4k views
-
-
இரண்டாவது தடவையாக அமெரிக்க சனாதிபதியாகியுள்ள ஒபாமா தனக்கென்று சில முத்திரை பதிக்கும் திட்டங்களை முன்னெடுப்பார். அவரின் இராஜாங்க செயலாளர் தெரிவான ஜோன் கெரி உலக அரசியலில் எவ்வாறான செயற்பாட்டுக்களை எடுப்பார் என்பதில் இஸ்ரேலிய மற்றும் ஆசிய நிலவரங்கள் தங்கி உள்ளன. அமெரிக்க பெருளாதாரமே அமெரிக்கர்களின் பார்வையில் ஒபாமாவை பற்றிய விம்பத்தை உருவாக்கும்.
-
- 13 replies
- 910 views
-
-
பெற்றோர்களை பராமரிக்க தவறும் பிள்ளைகளுக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டமொன்றை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பிள்ளைகளால் பராமறிக்கப்படாமால் தனிக்கப்படும் பெற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறதாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இங்கு 60 வயதுக்கு மேலான முதியவர்கள் 16 கோடியே 70 இலட்சம் பேரும் 80 வயதுக்கு மேல் 10 இலட்சம் பேரும் உள்ளதாக தெரிவிக்கிகப்படுகின்றது. கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோருக்கு ஒரு குழந்தை சட்டம் சீனாவில் அமுலில் உள்ளது. இதனால், ஒரு பிள்ளை மட்டுமே கொண்ட குடும்பங்களில் அப்பிள்ளை வளர்ந்து தம் இருப்பிடம்விட்டு வேறு இடங்களுக்கு செல்வதால் பெற்றோர் கவனிக்கப்படாமல் விடப்படும்…
-
- 3 replies
- 512 views
-
-
உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல் தனது கன்னிப் பயணத்தில் சீனாவில் இருந்து இங்கிலாந்து சௌதெம்ப்டன் துறைமுகம் வந்து அடைந்தது. 17,000 தொன் சரக்கு கொள்ளளவு கொண்ட இக்கப்பல், இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளிய கப்பலின் கொள்ளளவு 11,000 தொன். வீடியோ பார்க்க: http://bcove.me/3jf8a3cx
-
- 0 replies
- 705 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=05v6z7AwhHA[/xml]
-
- 0 replies
- 483 views
-
-
டோனி மார்டின், இங்கிலாந்தின் ஒரு விவசாயி. இவர் பண்ணை வீட்டினுள் அடிக்கடி புகுந்து அவரது பொருட்களை திருடி கொண்டு போகும் திருட்டுப் பயல்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்து, ஒரு நாள் இரவு துப்பாக்கியுடன் காத்திருந்தார் அவர். நள்ளிரவு நேரம். மெதுவாக இரு கொள்ளையர்கள் வேலி மேலாக பாய்ந்து குதித்து உள்ளே வந்தார்கள். முதல் வெடியில் ஒருவர் காலி. அடுத்த வெடியில், வேலி மேலால் பாய்ந்து ஓட முயன்ற அவரது கூட்டாளி காலில் காயத்துடன் தப்பி விட்டார். (பின்னர் நிரந்தர ஊனம் அடைந்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார்.) கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு டோனி மார்டின் நீதி மன்றில் நிறுத்தப் பட்டார். தனது சொத்தினை பாதுகாக்க முயன்ற டோனி மார்டினா, அல்லது 'இடர்' (risk) எடுத்து திரு…
-
- 2 replies
- 909 views
-
-
பேய்கள் பின்தொடர்கின்றன. ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான்."உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''. என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன. மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர் இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் ஒன்று கூடுவதற்கும், அரசியல் விவாதங்களை நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது.போராடிய முன்னணி மாணவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சீர்த்திருத்த முகாம்களிலும், சிறைகளிலும் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஊடகங்களும், அரச ஆதரவாளர்களும் மாணவர்கள் சமூகத்தைச் சீர்குலைப்பதாகக் பிரச்சாரங்களை மேற்கொண்டன. இவையெல்லாம் நடந்தது இலங்கையின் வடக்கிலோ கிழக்கிலோ அல்ல. இன்று ஜேர்மனியில் அகதிகளாக தஞ்சம் கோரிய மக்கள் மட்டுமல்ல ஜேர்மனியர்கள் கூட அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே அரசு அவ்வாறு செயற்பட்டது. இன்றைய ஜேர்மனிய மக்களது சிந்தனையைத் தீர்மானிக்கும் போராட்டத்தை 60களில் நடத்திய பல்கல…
-
- 0 replies
- 626 views
-
-
பயாபிறா குடியரசின் தோற்றமும் மறைவும். (1967 -1970)..! நைகீரியா நாட்டின் தென் – கிழக்கில் பயாபிறா குடியரசு (Republic of Biafra) 30 மே 1967 தொடக்கம் 15 ஜனவரி 1970 வரை செயற்பட்டது. அதற்கு பயாபிறா என்ற பெயர் ஏற்பட அந்த நாட்டின் தென் புறத்தில் அத்திலாந்திக் மாகடல் ஓரமாக இருக்கும் பயாபிறா விரிகுடா (Bight of Biafra)காரணமாகிறது. நைகீரியா நாட்டில் இருந்து பிரிந்து சென்ற இக்போ (Igbo) இன மக்கள் தனி நாட்டுப் பிரகடனத்தை 30மே 1967ல் அறிவித்தனர். அன்று உருப்பெற்ற குடியரசுக்கு எதிரான போரை நைகீரியா அரசு தொடங்கியது. நைகீpரியா உள்நாட்டுப் போர் (Nigerian Civil War) என்றும் நைகீரியன் பயாபிறா போர்(Nigerian Biafran War) என்றும் அழைக்கப்படும் போர் யூலை 1967ல் தொடங்கி 15 ஜனவரி 1970ல் முடிவுற்ற…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒருவன் வாழ்ந்தான் எபதற்குச் சாடசியாக அமைவது அவனது மரணமும் அதன் பின்னரான நாட்களுமேயாகும். வாழ்தல் என்பதற்கும் உயிரோடு இருத்தல் என்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. வாழ்தல் என்பது மரணத்தின் பின்னரும் நிலைத்திருக்கும் மாண்பு கொண்டது. மரணம் உடலைச் சாய்த்த பின்னரும் மக்கள் மனங்கள் அவனது நினைவோடு லயித்திருப்பது அவனது வாழ்தலின் சாட்சியமாக உள்ளது. பாரிஸ் நகரில் பலிகொள்ளப்பட்ட பரிதி அவர்களது வாழ்தலும் உயர்ந்த பதிவுகளையும் பல நினைவுகளையும் அவர் வாழ்ந்த தளங்களிலும் அவர் நேசித்த மனிதர்கள் மனங்களிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. பரிதி என்ற மாமனிதன் எதை எங்களிடம் விட்டுச் சென்றான்...? எதை எங்களிடமிருந்து கவர்ந்து சென்றான்...? தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியத்தின் உயிரோடையாக…
-
- 1 reply
- 677 views
-