நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின் போது யாழ்.பொது நூலத்தின் முன்பாக ஆர்பாட்த்தில் ஈடுபட்ட காணமல் போனவர்களுடைய உறவினர்களுக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணமல் போனவர்களுடைய உறவினர்களுடைய வீடுகளுக்கு செல்லும் இராணுவப் புலனாய்வாளர்களே இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றர். இவ்விடையம் தொடர்பாக யாழ்.காவல்துறை நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மறுநாள் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்.பொத…
-
- 0 replies
- 359 views
-
-
தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின் பதிவு.. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின் ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன். மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது. விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை.... ஒரு சொட்டு மது இல்லை.... எவரும் குடித்து விட்டு வரவில்லை.... அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவ…
-
- 3 replies
- 359 views
-
-
தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி Vigetharan A.S ஓகஸ்ட் 20, 2021 ~ Vigetharan A.S திருச்சி சிறப்பு முகாம் அ.சி. விஜிதரன் “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!” தனது வயிற்றைக் கிழித்து இரத்தம் வழிய, வழிய கத்தும் குரல் மட்டும் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. உலகமே ஆப்கனிஸ்தானில் ஓடும் விமானத்தில் இருந்து விழுந்த மனித உயிர்களுக்கு இரங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு எந்தவித குறைவும் இல்லாமல் இருக்கும், தனது வயிற்றைக் கிழித்துக் கதறும் இந்த வீடியோ அதிக கவனம் ஈர்க்காமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆ…
-
- 0 replies
- 359 views
-
-
முப்பது வருடங்களாக இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு பட்டறிவு வரவில்லை போலும். எமது இன உரிமைக்கான தீப ஒளியை காண வேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின் நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம் பெற்ற சில முக்கிய சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 1. 1987ம் ஆண்டு அமைதி படை என்ற பெயரில் இலங்கையினுள் நுழைந்த இந்திய இராணுவம் பிரபாகரனை கொல்வதற்கு அவரது இரகசிய இருப்பிடத்தை இலக்கு வைத்து கொலை ஆயுதங்களுடன் கொமாண்டோ படை அணியினரை யாழ் மருத்துவ பீட…
-
- 0 replies
- 358 views
-
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தமிழர்கள் வாழும் பகுதியில் தாெடர்ந்து மூடப்பட்டு வரும் பாடசாலைகள் கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கல்விக்கு வழங்கும் நிதியைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அதனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், வடக்கு மாகாணத…
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
'பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு' - இலங்கையில் சர்ச்சை யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் அம்பாறை மாவட்டம் - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. இந்த இடத்தை மையப்படுத்தி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் வசிப்பிடங்களை கையகப்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (19ஆம் திகதி) நூற்றுக்கணக்கான போலீஸார் மற்றும் படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன், முஹுது மகா விகாரையைச் சுற்றியுள்ள 72 ஏக்கர் பரப்…
-
- 0 replies
- 358 views
-
-
எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டெய்லிமிரர் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பி…
-
- 0 replies
- 358 views
-
-
‘சிறீலங்கா அரசு பன்னாட்டு சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து மறைந்து போகாது தடுப்பது எப்படி?’ – யஸ்மின் சூக்காவுடன் ஒரு நேர்காணல் October 24, 2020 தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா (Yasmin Sooka), கடந்த பல ஆண்டுகளாக சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உரத்துக்குரல் கொடுத்து வரும் ஓர் மனித உரிமை ஆர்வலர் ஆவார். அவரது தலைமையில் இயங்குகின்ற உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Project for Truth and Justic – ITJP) என்ற அமைப்பு, சிறீலங்காவின் இறுதிப்போரின் போதும், அதன் பின்னரும் அங்கே மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி பன்னாட்டுச் சமூகத்தில், தமிழ் மக்கள் சார்பாகக் குரலெழுப…
-
- 0 replies
- 358 views
-
-
போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஒரு காலத்தில் வல்லரசுகளின் கைகளில் இருந்தன. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிறிய நாடுகளில் அதன் பயன்பாடு ஏற்கெனவே போரின் தன்மையை மாற்றுகிறது என எழுதுகிறார், ஜொனாதன் மார்கஸ். பெரும்பாலும் ராணுவ வரலாற்றில் ஒரு ஆயுத அமைப்பு ஒரு முழு யுத்த யுகத்தின் அடையாளமாக மாறும். மத்திய காலத்தில் அஜின்கோர்ட்டில் ஆங்கிலேய வில்லாளர்கள் பயன்படுத்திய நீளமான வில் அல்லது இரண்டாம் உலகப் போரின் தரைப் போரில் பயன்படுத்தப்பட்ட திறன்ம…
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
உலக நாடுகள் தம்மை வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. சில நாடுகள் மிகக்குறுகிய காலத்தினுள் முன்னேற்றமடைந்துள்ளன. வறுமை, யுத்தம், ஊழல் என்பன சில நாடுகளை பின்னோக்கித் தள்ளுகின்றன. விஞ்ஞானம் ,தொழில்; நுட்பம் என்பன வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இவற்றுக்குச் சரிசமமாக அகதிகளின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மூன்று மில்லியன்மக்கள் அகதிகளானர்கள் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு அகதிகளின் தொகை 5.8 சதவிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உண்டட்டுக் கலவரத்தால் அகதிகளாக இந்தியவுக்குச் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகச் சென்று இந்தோனேஷியாவில் பரிதவிக்கின்றன…
-
- 0 replies
- 357 views
-
-
'இணையப் போராளி'களும் போராட்டங்களும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சமூக ஊடக இணையத்தளங்களின் அதிக பிரபலத்தன்மை காரணமாக, இணையம் மூலமான செயற்பாடுகள் என்பன அதிகரித்துவிட்டன. அவற்றில், இணையம் மூலமான போராட்டங்களென்பவை, அண்மைக்காலத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவையாகக் காணப்பட்டன. உலகில் ஏதாவது முக்கியமான விடயமொன்று இடம்பெற்றால், ஊடகங்களால் நிபுணர்கள் எனப் பெயரிடப்படுபவர்கள் மாத்திரம் கருத்துச் சொல்வதை பொதுமக்கள் கேட்கின்ற நிலைமையை, சமூக ஊடக இணையத்தளங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி, தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புக் க…
-
- 0 replies
- 357 views
-
-
அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு “சிறுமியைப் பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை செய்த நபர் கைது” கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டின் அனேக அனேக ஊடகங்களில் அவ்வப்போது பேசப்பட்ட செய்தியொன்று, நாளடைவில் தலைப்புச் செய்தியாகும் அளவுக்குப் பிரபல்யமானது. இவ்வாரத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் அயல்நாடுகளான மாலைதீவு மற்றும் இந்திய நாட்டு ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை அளித்திருந்தமையைக் காண முடிந்தது. அது மாத்திரமல்லாமல், இவ்விடயம் தற்போதும் சமூகவலைத்தளங்களுக்குத் தீனி போட்டு வருகின்றது. சரி, சம்பவத்துக்கு வருவோம்; 15 வயதுச் சிறுமியைப் பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான நபரொருவர், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தி…
-
- 1 reply
- 357 views
-
-
‘தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு ரீதியில் தீர்வு’ ஹஸ்பர் ஏ ஹலீம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற சிறந்த கொள்கைப் பிடிப்பிலேயே அரசியலில் இறங்கியுள்ளேன். தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்து அரசியல், பொருளாதார ரீதியாகத் தீர்வைப் பெறவேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அரசியல்துறைப் பொறுப்பாளருமான ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே, மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் கூறியதாவது, கேள்வி - உங்களைப் பற்றிய அறிமுகமும் அரசியல் பிரவேசம் தொடர்பான நிலைப்பாடும் என்ன? எனது பெயர் ஆத்மலிங்க…
-
- 0 replies
- 357 views
-
-
ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க மாநாட்ட்டில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எச்சங்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு அழித்தனர் எனவும் கூறியுள்ளார். வரலாற்று சன்றாக இருந்த எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/article/the-remains-adimanitan-were-destroyed-indian-army-1698…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
கொரோனா ஊரடங்கு: இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் நிலை என்ன? Getty Images கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தரப்பினரும் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருந்தபோதிலும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாகக் கொடுத்து உதவுவதால், அன்றாட உணவிற்கு மிகுந்த சிரமம் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர் முகாம்களில் வசிப்பவர்கள். இதனிடையே, கொரோன…
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும். இலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை…
-
- 0 replies
- 357 views
-
-
உலகின் மிகப்ப;ழை;மையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்ட;ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது. இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. என…
-
- 0 replies
- 357 views
-
-
FINAL STAGE OF THE TAMIL MUSLIM DISCOURSE. இறுதிக் கட்ட தமிழர் முஸ்லிம்கள் பெரும் கருத்தாடல். . நன்பன் சித்திக் அவர்களுக்கு. . M YM Siddeek மச்சான் நான் என்ன நினைக்கிறேன் நீ என்ன நினைக்கிறாய் என்பது கருத்துகள்தான். அவற்றுக்கு சம்பந்த பட்ட மக்கள் ஆதரவு தராவிட்டால் அவை செயல்படுவதில்லை. வடகிழக்கு விவகாரத்தில் தமிழர் முஸ்லிம்கள் என மொழியால் ஒன்றுபட்ட இனத்தால் வேறுபட்ட இரு இனங்கள் செயல் படுகின்றன. அவை வெவ்வேறு அரசியல் தலைமைகளை கட்டி எழுப்பியுள்ளன. அவற்றின் தேசிய சர்வதேசிய நடவடிக்கைகளின் வரலாறும் வெற்று பட்டவை. இதைவிட சிங்கள பிரதேசங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் 1987ல் தமிழ்ப் போராளிகளது மிக குறைந்த பட்ச்சக் கோரிக்கையாக இந்திய அழுத்தத்தால் மாகாண சபைகளும் வடகிழக்கு இண…
-
- 0 replies
- 356 views
-
-
இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக வவுணதீவு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாதத்தை உரமேற்றும் செயற்பாடுகளானது இதற்காகவே அச்சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐய்யப்பாட்டினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவீரர் தின நினைவேந்தல் மூலம் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றுள்ள பின்னணியில் எதேச்சதிகார அடக்குமுறைகள் கால் தூசாக பறக்க விடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 356 views
-
-
முல்லைத்தீவை ஆக்கிரமிக்கும், தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும்? December 15, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தினர் செய்த ஆக்கிரமிப்பு வேலைகளை, இன்றைக்கு இலங்கை தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் செய்கின்றதா என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பரவான கேள்வியாகும். முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இவ் இரு திணைக்களங்களும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து ஆள்வதில் முனைப்புக் காட்டி வருகின்றன. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கானது, கல்வி, அபிவிருத்த…
-
- 0 replies
- 356 views
-
-
கூட்டுக் குற்றவாளிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 22, 2019 அரசியல்வாதிகளுக்கும் நாட்டில் உள்ள மோசமான குற்றவாளிக ளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றமை இலங்கை எத்தகைய கீழ்நிலைக்குச் சென்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இந்தியாவில் மாத்திரமே இத்தகைய நிலமை இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அது இங்கும் காணப்படுகின்றமையை எண்ணி வெட்கித் தலைகுனியவேண்டும். ஊடகங்கள் அனைத்தும் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவருமான மதுஷ் தொடர்பான செய்திகளைப் பரபரப்புடன் வெளியிட்டு வருகின்றன. இவ…
-
- 0 replies
- 356 views
-
-
ஐநாவில் அதிரடி காட்டும் ஶ்ரீலங்கா! தமிழர்களுக்கு தீர்வு இதுவே!! | Sri Lanka | Jaffna தமிழர் தொடர்பாக ஐ.நாவிற் செயற்படுகின்ற ஒரு சகோதரியினுடைய கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. ஒரு இளம்பெண்ணாக இருக்கிறார். சிறப்பாக விளக்குகின்றார். யாழ்க்கள உறவுகள் பார்க்பதற்காக இணைத்துள்ளேன். நன்றி-யூரூப் நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி
-
- 1 reply
- 356 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ? ( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.) ப…
-
- 0 replies
- 356 views
-
-
மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாட்டில் அனைத்துலக தமிழீழ மக்களவை சார்பில் திருசோதி அவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார் அனைத்துலக மக்கள் பேரவை கனடாதொடக்கம் நியூசிலாந்து வரை இருக்கும் அத்தனை நாடுகளிலும் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுதான் அனைத்துலக தமிழ் மக்கள் பேரவை. முள்ளிவாய்க்கால் போரிற்கு பின்னர் தமிழ்மக்களின் அரசியல் தேவை கருதி புலம் பெயர்நாடுகளில் புலம்பெயர் அரசியல் மன்றங்களில் தமிழர் பிரச்சனையினை தமிழர்களின் தீர்வினை எடுத்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அனைதுலக அமைப்புத்தான் அனைத்துலக தமிழீழ மக்கள் பேரவை. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை இட்டு பெருமைப்படுகின்றோம் தமிழர்கள் ஆகிய நாம் இன்றுவரை விடுதலை அடையாத இனமாக இருக்கின்றோம் இதனை புரிந்து…
-
- 0 replies
- 356 views
-
-
சமஷ்டி தீர்வுத் திட்டமும் இனவாதிகளின் கூச்சலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டித் தீர்வு உள்ளடக்கப்பட்டுவிட்டது என்ற புதிய கண்டுபிடிப்பை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எடுத்துக்கூறியிருக்கின்றார். கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஷ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள். தமிழர்களுக்கான பிராந்திய சமஷ்டி ஆட்சியை விரும்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் இணைந்து புதிய…
-
- 0 replies
- 356 views
-