நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார். 1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார் . இது பசுமைப் புத்தகம் என…
-
- 19 replies
- 2.9k views
-
-
எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். 'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்கா…
-
- 2 replies
- 5.8k views
-
-
ஈழம்: இருதய பூமியை இழக்கும் அபாயம் தீபச்செல்வன் ஈழத்தின் வடக்கு-கிழக்கு நிலப்பகுதியின் இடையில் இருதய பூமியாக உள்ள கொக்கிளாய்ப் பிரதேசத்தில் அரங் கேற்றப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த ஈழத்தையும் அதிரப் பண்ணியுள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதியைப் போலவும் ராணுவத்தினரால் மூடிவைக்கப்பட்டு ஆளப்படும் பகுதியைப் போலவும் இருக்கும் கொக்கிளாயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். வடக்கு-கிழக்கு நிலத்தின் இணைவிடம் என்பதால் அந்த இருதய நிலத்தில் ஈழத் தமிழர்களின் இருப்பைச் சிதைத்து அதைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அரசு முழுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ராணுவத்தின் கோட்டையாக 28 வருடங்களாக இருந்த கொக்கிளாய்ப் பிரதேசம் அழிந்து, பேர…
-
- 2 replies
- 769 views
-
-
எதற்காக கனேடிய அரசிற்கு நாம் ஒரு விளா எடுக்க வேண்டும் ...அதுவும் பெங்கு தமிழ் என்ற பெயரில் நடாத்த வேண்டும்? எதற்கு நன்றி இவர்களுக்கு ... 1) போர்குற்றவியலுக்கு துனை நின்றதற்காகவா ? 2) இனப்படகொலைக்கு துனை போனதற்காகவா ? இவர்களை பாராட்ட வேண்டுமா ? எதற்காக ? 2009 எங்கே சென்றனர் எமது இந்த பேரவலத்திற்கும் இவர்களுக்கு பங்குண்டு இவர்களுக்கு விளாவா ? கேளுங்கள் எதற்காக 100000 பேரை கொலை செய்யும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர் என்று ... பொங்கு தமிழ் விளா எடுப்பு எம் இன அழிவை பார்த்துக் கொண்டிருந்ததற்காகவா ? இந்த கயவஞ்சகர்களுக்காகவா ? இவர்களின் கைகளிலும் இரத்தக்கறை உண்டு ... எமது இன அளிவை ரசித்தவர்களில் இவாகளும் ஒன்று ... இன்று இவர்கள் குரல் கொடுக்கின்றன…
-
- 52 replies
- 3.1k views
-
-
தரங்கெட்ட தமிழ் தளங்கள். இன்று அவசரமாக இந்த பதிவை இடவேண்டிய கட்டாயம். இந்த பதிவு தாங்களும் ஊடக இணையம் ஒன்றினை வைத்து நடத்துகின்றோம் என்று கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பவர்களுடைய முகத்திரையினை கிழித்தெறியும் முகமாக இப்பதிவினை இடுகின்றேன். இந்த பதிவினை வாசித்தறிந்த பிறகு ஆ என்று வாயை பிளந்திடுவார்கள். கள்ள நெஞ்சுக்காரர்கள். சரி. நாம் விடையத்திற்கு வருவோம். அண்மைக்காலமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றியும் பலர் பலவாறான பதிவுகளை இட்டிருந்தனர். அத்துடன் சேர்த்து தகவல் திருட்டு பற்றியும் அவர்கள் பேசியிருந்தார்கள். சாதாரணமாக நடக்கும் ஒரு சின்ன விடையத்தினை கூட வக்கிரமான தலையங்கங்களுட…
-
- 1 reply
- 7.2k views
-
-
வெறுமனே கிடந்த சீனா விறுவிறுவென சோவியத் சீனாவாக மாறிவிட்டது என்ன செய்யப்போகிறது ரஸ்யா… சீனாவும், ரஸ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே பாரிய மோதல் அறநீராக ஓடிக்கொண்டிருப்பதாக இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. அதை கச்சிதமாக வெற்றி கொள்ளவே ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புற்றின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார் என்றும் கூறுகின்றன. இந்த ஆய்வுகளில் இருந்து திரட்டக்கூடிய தகவல்கள் இப்படியுள்ளன : சீனாவும், ரஸ்யாவும் கம்யூனிசத்தின் அடிப்படையில் கொண்டிருந்த நட்பு இதுவரை ரஸ்யாவை கம்யூனிச அண்ணனாகவும், சீனாவை தம்பியாகவும் காட்டி வந்தது, ஆனால் ரஸ்யர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சீனா எடுத்த நகர்வு தற்போது சீனாவை அண்ணனாக்கி ரஸ்யர்களை தம்பியாக்கிவிட்டது, இதற்கான காரணங்கள் …
-
- 1 reply
- 692 views
-
-
இந்தியா வல்லரசாக வேண்டாம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு ஸ்ரீலங்கன் சொன்னார் பொறுத்திருந்து பாருங்கள் அமெரிக்கா ரஷ்யாவிற்கு அடுத்தப் படியாக உலகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை வரப்போகிறது என்று சொன்னார் அது அவரது ஆசை எதிர்பார்ப்பு அதில் தவறு இருப்பதாக அதீத கற்பனை இருப்பதாக யாரும் சொல்ல முடியாது என் நாடு முன்னேறி விடும் என்று நான் நினைப்பது எந்த வகையில் தவறாகும். இன்று நம் நாட்டில் பலரும் உலகின் அடுத்த வல்லரசு இந்தியாதான் என்று உரக்கப் பேசி வருகிறார்கள் இதை கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது எங்கெல்லாம் மனித உரிமைகள் மீரப்படுகிறதோ எங்கெல்லாம் அப்பாவி ஜனங்கள் கொடுமை படுத்தப் படுகிறார்களோ அங்கெல்லாம் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் அராஜ…
-
- 2 replies
- 1.4k views
-
-
முண்னணிப் போர் அரங்கில் பெண்கள் சண்டையிட விரும்பினால் அதைத் தடுக்க யாரல் முடியும். பண்பாட்டுத் தடைக் கற்கள் குறுக்கே நின்றன. இப்போது அவை படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெண்களை களமருத்துவ அணியில் சேர்த்தார்கள் பிறகு இராணுவ வாகன ஓட்டுநர்களாக இணைந்தார்கள். இவை ஆபத்தில்லாத பணிகள் அல்ல. அப்கானிஸ்தான் போரில் அமெரிக்கப் பெண்கள் களமருத்துவப் பிரிவிலும் கனரக வாகனம் ஒட்டும் பிரிவிலும் பங்காற்றுகிறார்கள் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், படுகாயம் அடைகிறார்கள் மேற்கு நாட்டவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. உலகெல்லம் சென்று களச் செய்திகளைத் திரட்டும் எனக்கு அப்கானிஸ்தான் அனுபவும் வித்தியாசமானது. ஏனென்றால் அது அமெரிக்க வெள்ளைப் பெண்கள் பங்குபற்றும் போர் களத்தில் காயப் படுவோரை அகற்றும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி: ஒரு ஆய்வு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது. 2014ல் ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட அண்டை நாடுகள் பல போட்டி போடும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தனது கேந்திர விவகாரக் கொல்லைப்புறமாகக் கருதும் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் எரிச்சலைத் தரும் ,எனவே இது இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும் என்றும் சில நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் இப்படியான பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே அளித்து வருகிறது என்றும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழோசையிடம் …
-
- 0 replies
- 638 views
-
-
காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது: 15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.” அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்…
-
- 0 replies
- 1k views
-
-
பத்தாவது நினைவு தினம் - உங்கள் பகிர்வுகள் எவ்வாறு இந்த நிகழ்வு உலகத்தை தமிழர் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை பாதித்துள்ளது என உங்கள் எண்ணங்களை பகிருங்கள். நன்றி. ------------------------------------------------------------------------------------ 11 / 09 / 2001 அன்று அமேரிக்கா மீதுபின்லாடனால் தலமைவகிக்கப்பட்ட அல்கைடா ஒரு பயங்கரவாத தாக்குதலை நடாத்தியது. இதில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். அதன் விளைவுகள் உலக ஒழுங்கையே மாற்றிவிட்டன, அதில் எமது தாயக விடுதலைப்போராட்டமும் சிக்கியது. கடந்த பத்துவருடகாலத்தில் மேற்குலகம் ஈராக் மற்றும் அப்கானிஸ்தான் மீது யுத்தங்களை தொடுத்து பல இலட்சம் மக்களை கொன்று தனது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை' முன…
-
- 13 replies
- 1.4k views
-
-
இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது -ஆக்கம்: கா. அய்யநாதன் இலங்கை அரசுக்கு எதிராக குற்ற விரல் நீட்டும் நாடுகள், ஒரு நீண்ட யுத்தத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தை முறியடித்தது தொடர்பான உண்மையையும், தாங்கள் தோற்கடித்த பயங்கரவாதிகளின் இயற்கையை அறியாதவர்கள் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மிகுந்த மன வருத்தத்துடன் பேசியுள்ளார். கொழும்புவில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த தெற்காசிய மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ள ராஜபக்ச, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையையும், பயங்கரவாதத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட துயரத்தையும் அறிந்தவர்களா? இந்த உண்மைகளைப் பற்றி எந்த வகையிலாவது இந்…
-
- 1 reply
- 793 views
-
-
வணக்கம் உறவுகளே. முன்பு ஜரோப்பாவில் எம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை ஜரோப்பிய அவலம் என்கிற நாடகமாக தயாரித்திருந்தேன்.அதனால் பலரின் வரவேற்பினையும் சிலரின் எரிச்சல் வெறுப்புகளையும் சம்பாதித்திருந்தேன். பின்னர் நேரப்பிரச்சனையால் தொடரமுடியாமல் நிறுத்தி விட்டேன். மீண்டும் அலம்பல் என்கிற சமகால அரசியல் நிகழ்வுகளை மேலோட்டமாக தொட்டுச் செல்லும் விதமாக அலம்பல் என்கிற நிகழ்ச்சியினை தயாரித்திருக்கிறேன் . இதோ அரசியல் அலம்பல் நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் அலம்பல் தொடரும். முன் அறிவித்தல் செய்திருப்பவர் நம்ம யாழ்கள சயந்தன். நன்றி வணக்கம்
-
- 30 replies
- 2.4k views
-
-
எங்களை அழித்தது இந்தியா தீபச்செல்வன் - ஈழத்தில் வடக்கில் கிளிநொச்சியில் பிறந்தவர். பல்வேறு பிரதேசங்களில் அகதியாய் இடம் பெயர்ந்து வாழ்ந்தவர். பிறந்த நாளிலிருந்து இடம்பெயர்ந்து... பல்வேறு பாடசாலைகளில் படித்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர். தமிழ் விசேடப் பட்டப் படிப்பைப் படித்து விட்டு ஒன்றரை வருடங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் ஊடக அலகில் வருகை விரிவுரையாளராகவும் பயிற்சி ஆசிரியராகவும் பணியாற்றி வருபவர். அதே பல்கலைக்கழகத்தில் மாணவராக 2008-09 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பொறுப்பு வகித்தவர். விடுதலைப் புலிகளின் உத்தியோகப் பூர்வ தொலைக்காட்சியில் விவரணப் படத் தயாரிப்பாளராக இயங்கியவர். கற்கை …
-
- 0 replies
- 1.1k views
-
-
மரண தண்டனை எதிர்ப்பு எந்தவிதமான குற்றத்துக்கும் மரணதண்டனை தீர்ப்பாகாது என்று நம்புபவன் நான். உலகில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற உலகின் முக்கியமான சில நாடுகளில் துரதிர்ஷ்டவசமாக இன்னமும் இந்தத் தண்டனை செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலும் பல மாகாணங்களில் இந்தத் தண்டனை கிடையாது. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, அதன்மீதான கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள நிலையில் செப்டெம்பர் 9-ம் தேதி அன்று அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று வெளியாகியுள்ள தகவல்களால் தமிழகத்தில் பலர் மரண தண்டனைக்கு எதிரான …
-
- 2 replies
- 1.2k views
-
-
போர்க் குற்றங்களுக்கு இலங்கையை விட அதிகமாக அஞ்சும் இந்தியா இலங்கை மீண்டும் தனது விளையாட்டை காட்டத் துவங்கியுள்ளதால் இந்தியா கலக்கமடைந்துள்ளது. எல்டிடிஈயை தோற்கடித்ததும், வடக்கு இலங்கையில் தமிழர்களை அடிமைபோல அடக்கி வைத்திருக்க ராணுவத்தை குவித்து வைத்த பின்னரும் இன்றைய தேதி வரை சிவசங்கர் மேனன், ராஜபக்சேயுடன் தமிழர் விரோத வசனங்களையே பேசி வருகிறார். தனது இனப்படுகொலை இந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று இலங்கை ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. மாறாக ஐநாவில் உள்ள சர்வதேச நபர்களின் தொடர்பு மூலமாக இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதைத் தடுத்து மனித இனம் மீது செய்த குற்றங்களுக்கான பொறுப்பை இலங்கை தவிர்த்து வருகிறது. வைரஸால் (நம்…
-
- 2 replies
- 906 views
-
-
42 வருட சர்வாதிகாரத்தின் மீதான வெறுப்பே கடாபியின் வீழ்ச்சி சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க… அரபு நாடுகளில் சட்டத்திற்கு முரணாக ஆட்சியில் இருக்கும் சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்துவதற்கான போராட்டம் லிபியாவுடன் முடிவடையவில்லை அது தனது பயணத்தைத் தொடர்கிறது என்று இன்றைய மேலைத்தேய பத்திரிகைகள் எழுதியுள்ளன. மேலும் லிபியாவில் நேட்டோ கூட்டுப்படைகள் தாக்குதல்களை நடாத்தினாலும்கூட அங்கு ஆட்சி சரிவதற்கு பிரதான காரணம் கடாபியின் 42 வருடகால சர்வாதிகார ஒடுக்குமுறையே என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. கேணல் கடாபி உண்மையாக ஒரு இஸ்லாம் நேசர் என்ற கோணத்திலேயே தனது ஆரம்பகால அரசியலை ஆரம்பித்தவர். அந்தப் பின்…
-
- 2 replies
- 971 views
-
-
இது யாழ்பாணத்தின் வானிலை பற்றி BBC தமிழ் சேவையில் தந்திருக்கும் தகவல். கடவுளே மிச்ச நேரங்கள் என்னவாக இருக்குமோ? BBC தமிழ் சேவையில் 1 அல்லது 2 தமிழர்கள் இல்லாதவைரையில் இதேமாதிரியான விடயங்கள் தவிர்க்க முடியாது உள்ளது. அது என்னவோ, ஒரு தமிழ் பேசாதவன், உள்ள சேவையில், கில்லிங் பில்ட் என்று ஒன்று ஒன்றை போட்டு அது இப்ப மற்ற மற்ற நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களில் விவாதிக்கிறார்கள், இது போன்ற ஒன்றை BBC உள்ளார் ?தமிழ் அன்பர்கள் செய்தால், அல்லது செய்வதரற்கு யார் யார் தடையாக இருக்கிறார்கள். மாறிவரும் உலகில், BBC தனது மாறாத நிலையை மாற்றி தமிழர்களின் இன்றைய நிலைய எடுத்து செல்ல முன்வர வேண்டும். இந்தியாவில் நடக்கிற அரசியல் அசிங்கங்களை மீறி வந்து கொண்டிருக்கும் பொதுவான தமிழர் சார்பு நி…
-
- 0 replies
- 916 views
-
-
போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது. இன்றைய காலகட்டம் மட்டுமல்லாது, நீண்ட காலமாக இலங்கையின் தேசிய இனமான ஈழத்தமிழர்கள், சிங்கள பாசிச வாதிகளின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெவ்வேறு தலையீடுகளால், இன்றய திகதிவரை தடங்கலாக வந்திருக்கின்றன. 2009ல், இனப்படுகொலையில் முடிந்த சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு, ஒற்றை தமிழனும் இலங்கையில் இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதற்கான திட்டங்களுடன் நகர்வுகள் தொடருகின்றன. தமிழினமும் தன்னால் முடிந்த அளவுக்கு மான உணர்வுடன் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருகிறது. கடைசியாக இனப்படுகொலைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு தமிழினம…
-
- 1 reply
- 773 views
-
-
சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன.. அதிரடி உண்மைகள்.. August 9, 2011 மானிடப்படுகொலையாளருக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவம் செயற்படப்போகிறது.. அமெரிக்க அதிபர் அமைக்கும் புதிய அற்றோசிற்றி பிறவின்சன் போட் (Mass Atrocities Prevention Board) சென்ற வாரம் சிறீலங்காவின் வான் பரப்பின்மீது அமெரிக்க விமானங்கள் சுமார் பத்துவரை பறந்து போனது தெரிந்ததே. இந்த விமானங்கள் தற்செயலாக சிறீலங்கா மீது பறப்பதற்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது. அதற்கான காரணங்கள் பல உள்ளன. முதலாவது உலக சமுதாயமும், ஐ.நாவும் சிறீலங்கா ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் வன்னியில் நடைபெற்றது போரல்ல மானிடப் படுகொலைகளே.. அரசு என்ற காரணத்திற்காக.. இந்தியா துணையிருக்க…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்க நிதிச் சிக்கல்: பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த அமெரிக்கா அரசுக்கு வாங்கிய கடனை திரும்பத் தரும் தகுதி குறைந்துள்ளது என்று ஸ்டாண்டர்ட் அண்டு புவர் எனும் பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு அறிவித்ததையடுத்து, உலகின் பங்குச் சந்தைகளில், பிரளயம் ஏற்பட்டுப் புரட்டிப் போட்டது போல் கடும் சரிவு ஏற்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையும் தப்பிக்கவில்லை. நிறுவனங்களில் இருந்து நாடுகள் வரை, அவற்றின் கடன் பெறும் அல்லது திருப்பிக் கட்டும் திறன் பற்றி ஒரு பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தரும் திறன் சான்று, அமெரிக்கா போன்றதொரு பொருளாதார வல்லரசைத் திணறச் செய்யுமா? என்கிற வினாவிற்கு விடை தேட வேண்டுமெனில், அதற்கு அந்நாட்டு பொருளாதார ந…
-
- 0 replies
- 741 views
-
-
கைமாறும் பொருளாதார அதிகாரம்! மேற்கத்திய வல்லரசுகள்தான் உலக அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ராணுவ பலமும் அரசியல் ராஜதந்திர உத்திகளும் அந்நாடுகளுக்குச் சாதகம். ஆனால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக் குறையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். "பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சந்தைகளே வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும் என்று அவர்கள் கணித்திருக்கிறார்கள். அதாவது 5 முதல் 10 சதவீதம் வரையிலான வர்த்தகம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து "பிரிக்' நாடுகளுக்குச் செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த மாற்றத்த…
-
- 0 replies
- 851 views
-
-
உலகம் தூற்றுகிறது, டெல்லி போற்றுகிறது சிறிலங்க நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதருமான சமல் ராஜபக்ச தலைமையில் வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இந்தியாவின் மக்களவையில் வரவேற்பு அளித்து மரியாதை தரப்பட்டுள்ளது. இன்று காலை சமல் ராஜபக்ச தலைமையில் மக்களவையின் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்த குழுவினரை வரவேற்று அவைத் தலைவர் மீரா குமார் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அ.இ.அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சொரணையுள்ள உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால், ப்ளீஸ் சிட் டவுன் என்று தொடர்ந்து கூறி, ஏதோ ஒன்றும் தெரியாத பள்ளிப் பிள்ளைகளை அடக்குவது போல் கோவத்தை விழியில் காட்டி, …
-
- 3 replies
- 828 views
-
-
குறுகிய லட்சியங்கள் குற்றங்களே :முன்னாள் ஜனாதிபதி கலாம் பேச்சு தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். “யூத் மீட் – 2011′ விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். “நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன. டி.கே…
-
- 0 replies
- 639 views
-