நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஈழத்தமிழர்களுக்கு தோள் கொடுப்போம்! - கன்னட மனித உரிமை அமைப்புகள் உறுதியேற்பு!! தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்), கண. குறிஞ்சி (PUCL), அமரந்தா (இலத்தின அமெரிக்க நட்புறவு அமைப்பு), சேவ் தமிழ் இயக்கம் ஆகியோரின் முன்னெடுப்பின் விளைவாய், கடந்த ஜூன் 2ஆம் திகதி பெங்களுரில், கர்நாடக, ஆந்திர, கேரள, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி, போர்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தினைத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee) சார்பில் ஜூலை 2 பெங்களுரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ம…
-
- 2 replies
- 962 views
-
-
ஜெனீவா-கட்டுநாயக்க-முள்ளிவாய்க்கால் கடந்த மே 30 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவைத் தொடர்பற்றிய கண்ணோட்டமே இது. மேற்படி பேரவையின் கூட்டத் தொடர், இலங்கையின் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் நிகழ்ந்த அடக்குமுறை, அராஜகம் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட் டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ராவய பத்திரிகைக்கு எழுதிய கண்ணோட்டத்தின் தமிழாக்கம். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமானது. அன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்தோ கயின்ஸ் உரை…
-
- 0 replies
- 702 views
-
-
ஜெயலிலிதாவை எப்படி கையாளப் போகிறது அரசாங்கம்? இலங்கையின் இராஜதந்திரம் பலவீனமானது என்ற விமர்சனங்கள் அவ்வப்போது வெளியாகின்றபோதும், அதன் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்னதான் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், இலங்கை அரசு தனது இராஜதந்திர நகர்வுகளை முழுமூச்சோடு மேற்கொண்டு வருகிறது. மேற்குலகைப் பகைத்துக் கொண்டதை இலங்கையின் இராஜதந்திர பலவீனங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள பலமான இராஜதந்திர உறவுகளின் பக்கத்தை யாராலும் மறந்து விட முடியாது. இலங்கையின் பிரதான இராஜதந்திர பலமே இந்தியா தான். எல்லாவிதமான வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் இலங்கைக்கு கவசமாக இருப்பது இந்தியா தான் என்பதில் சந்தேகம்…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது! பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் எ…
-
- 0 replies
- 925 views
-
-
ஐரோப்பா தாண்டி மணக்கும் ஐ.தே.கவின் அம்மண அரசியல்.. ஐ.நாவை மதிப்பதா இல்லை அதை மதிக்காத ரணிலை மதிப்பதா..? சிங்கள அரசியலில் ஏறத்தாழ செல்லாக்காசாகிவிட்ட ஐ.தே.க இப்போது இனவாதமே ஒரே வழி என்ற இடத்திற்கு மறுபடியும் வந்திருக்கிறது. சமீபத்தில் ஐ.தே.க கூறியிருக்கும் மூன்று முக்கிய கருத்துக்கள் போருக்குப் பின்னும் அக்கட்சி புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன. 01. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வில் போலீஸ் சேவையை வழங்குவதை ஐ.தே.க எதிர்க்கும் என்று சென்ற வாரம் கரு.ஜெயசூரியா கூறியிருந்தார். 02. போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தாம் அனைவரும் ஒன்றுபட்டு அதை எதிர்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கா நேற்று க…
-
- 0 replies
- 1.1k views
-
-
எப்போது மகிந்தாவின் முறை வரும் எமக்கான நீதியும் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது. தற்போது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான மாநாடு சுவிஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர்பிய போர்க்கைதி றற்கோ மிலடிக் கைது புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்றய புதிய உலகு இனவாத அரசுகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நம்பிக்கையுடன் ச.ச.முத்து எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது : முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக,இனஅழிப்புக்காக,போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித் தனங்கள…
-
- 0 replies
- 811 views
-
-
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள் : ப்ரியந்த லியனகே (எனக்கு மின்னஞ்சலில் வந்த இந்த கட்டுரையாலர் ப்ரியத லியனகே அவர்களுக்கும் இதை மொழிபெயர்த்த முஸ்லிம் தோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கும் என் நன்றிகள் இருவரும் இலங்கையில் வாழ்கிறார்கள்) இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன். இப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நினைவுக்குள் நடுகல் ஆனவர்களும் பூபதி அம்மாக்களும் ஆனந்தபுரத்தில் அனல் நடுவே நின்று வீரம் விளைத்தவர்களது நினைவு போன வாரத்தில் கடந்துபோனது. ஆனந்தபுரம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் திசையை தீர்மானிக்கும் ஒரு சமராகஇருந்தது. அந்தசமர் வெற்றிபெற்றால் சிங்கள படைகளும்,அதற்கு முண்டுகொடுத்தபடியேநின்றிருந்த வல்லாதிக்கபடையும் மோசமாக பின்வாங்கிஓடிவிடும்.வெல்லப்படமுடியாத ஒரு மரபுவழிப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஊடாக தமிழீழ நிலங்களின் பிரிந்துபோகும் உரிமை யாராலும் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கு தனது முழுநிதியையும், ஆளணியையும் மாவிலாற்றிலிருந்து தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு இறக்கிவிட்டிருந்த சிங்களம் ஆனந்தபுரத்…
-
- 0 replies
- 917 views
-
-
கொழும்பு அரசியலில் ஐ.நாவின் அறிக்கை குறித்து இருந்து வந்த எதிர்ப்புணர்வு இப்போது இந்தியாவின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. சிங்களத் தேசியவாதிகள் பலரும் இப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு முதலாவது காரணம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பது. இரண்டாவது காரணம் இந்தியா கொடுக்கத் தொடங்கியுள்ள அழுத்தங்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்து வந்த மிகநெருக்கமான உறவு இப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது.அக்கினிப் பிரவேசத்தைக் கடக்க வேண்டிய நிலை என்று சொன்னால் கூற அது மிகையில்லை. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந…
-
- 0 replies
- 720 views
-
-
The state of Sri Lanka: After two years, how are efforts progressing in the seemingly intractable conflict between the Sinhalese and Tamils? http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?videoid?957997816001 பேராசிரியர் சேரன், ரமேஸ் கெற்றியராச்சி, பேராசிரியர் கிரேக் ஸ்கொற், சுதாமி பூலோகசிங்கம் மற்றும் ஜோதி சண்முகம் ஆகியோருடன் tvo தொலைக்காட்சிச்சனலுக்காக டானியல் கித்ஸ்
-
- 6 replies
- 1.2k views
-
-
அதிகாரப் பகிர்வு எட்டாக் கனியே நிபுணர் குழுவின் போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏன் அவசியம் என்பது தொடர்பாக விளக்குகிறார், சிங்களப் பத்தி எழுத்தாளரும் அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது மேற்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பவருமான சுனந்த தேசப்பிரிய. ராவய பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அந்த விமர்சனப்பத்தியின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நிலவும் இனப்பூசலுக்குக் காரணமான மோதலுக்கு பேச்சு மூலம் தீர்வுகாண எந்த ஒரு வாய்ப்பும் இந்த நாட்டில் இதுவரை அமையவில்லையா? என்றொரு கேள்வி எம்முன் உள்ளது. இந்த வினா, அதாவது யுத்தத்துக்கு மூலகாரணியான தமிழ் மக்களது சமூக அரசியல் கலாசார உரிம…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
தன்மானத் தமிழன்! தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரி…
-
- 0 replies
- 895 views
-
-
யானை பின்னே.... மணி ஓசை வரும் முன்னே.. ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது,…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கையிலும், மற்றையை இடங்களிலும் ? பெரிதும் பேசப்படும் ஒரு விடயம் யுத்த குற்றமும் , நல்லிணக்கமும். இங்கே பலரும் வாறபடியால், யாரவது விளக்குவீர்களா, இலங்கையரசு மீது யுத்த குற்றம் சாட்டினால் ஏன் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று? அரசாங்கம் இன்னமும் யுத்த குற்றம் செய்கிற நிலையில் அல்லது அதற்குரிய தண்டனைகளை கொடுக்கிற நிலையில்- அது கைது செய்யப்பட்ட புலிகளில் உயர் நிலை தலைவர்களாய் இருந்தால் என்ன, கடைசி மாதத்தில் அல்லது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர் சிறுமியாய் இருந்தால் என்ன, அவர்களுக்கு ? தண்டனை கொடுத்து , ? புனர்வாழ்வளித்து வெசாக்குக்கும், பொசன் பண்டிகைக்கும் எதோ "தமிழ் படங்களில் வாரமாதிரி அண்ணையை, பங்காளியை கொலை செய்திட்டு - படம் தொடங்கேக்கை அல்லது முடியேக்க…
-
- 0 replies
- 777 views
-
-
கலைஞர் டீவி பாக்குறவங்களைக் கைதுபண்ணு இலவசம் இனி அவியாது http://www.dinamalar.com/
-
- 4 replies
- 3.9k views
-
-
அன்பான யாழ் இணயத்தள நண்பர்களே ஐ நா வின் அறிக்கையை யாராவது தமிழில் மொழி பெயர்த்து இத்தளத்தில் இணைப்பீர்களா. ஏனெனில் ஒவ்வொரு தமிழரும் இதனை ஆழமாக வாசித்து செயல் வடிவம் கொடுக்கும் காலம் இது என்பதை அன்புறவுகள் யாவரும் அறிவீர்கள்.என்னிடம் இல்லாத ஆனால் உங்களிடம் உள்ள திறமையை நீங்கள் நிச்சயம் பயன் படுத்தி செயல் வடிவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
April 24,2011 We can more than understand the emotions that bedevil Mahinda Rajapaksa following the advisory report on possible war crimes in Sri Lanka which was handed over to the UN Chief Ban Ki-Moon. But we must at this juncture point out a few salient facts to Sri Lanka’s moonstruck public – poised to raise a show of hands when ordered to do — all in the name of patriotism. Let us be more explicit. Even as Sri Lankans cry foul and engage in a finger-pointing, tongue wagging, mud-slinging exercise against UN Secretary General Ban Ki-Moon, none of us, and that includes the entire local and foreign media in Sri Lanka were present in the hinterlands of…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை இந்தியத் தரப்புக்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆளாளுக்குக் கறுவிக் கொண்டு நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில் மறு புறத்தில் சிப்பாய்கள் காணாமற்போன விடயத்தில் மர்ம முடிச்சு அவிழும் சூழல் ஏற்பட்டிருப்பதாக இப்போது தெரியவருகின்றது. இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற்போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சுட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும…
-
- 0 replies
- 1.3k views
-
-
நியூயோர்க் ஜக்கிய நாடுகள் சபை முன்றலில் பாரிய கவனயீர்ப்பு மே 18ம் திகதி புதன்கிழமை பாரிய கவனயீர்ப்பு நடைபெற சகல ஒழுங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன'கனடாவிலிருந்து பெருமளவிலானோர் வருவதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெகு விரைவில் முழுவிபரங்களுடன்.
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ் மன்னர்களினால் சீருடனும் சிறப்புடனும் ஆழப்பட்ட எம் தாயகத்தின் முடிவு ஒல்லாந்தர் பிரித்தானியரின் வருகையின் பின்னர் முடிவு பெற்றது. இது உலகறிந்த வரலாற்று உண்மை.பிரித்தானியரின் ஆட்சியின் பின் தமிழினம் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பது உண்மையிலும் உண்மை. சுமார் 60 ஆண்டுகளிற்கு மேலாக தமிழினம் பல இன்னல்களை அனுபவித்துவருகிறது... இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக 30வருடத்திற்கு முன்பு எம் தேசியத்தலைமை உருவாகியது.அதிசிறந்த தலைமையாகவும், அசைக்கமுடியாத வீரர்களாகவும்,தாயகத்தின் அடிமைவிலங்கை உடைக்க தீரமாகப்போராடினார்கள்.பல அதிஉயர் வெற்றிகளையும் வரலாற்றில் பதித்தார்கள். இவை யாம் அறிந்த உண்மைகள்.ஆனால் உருண்டோடும் உலகச்சக்கரத்தின் பொருளாதார, அரசிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந…
-
- 1 reply
- 2.5k views
-
-
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் எகிப்து ஜெமன் லிபியா பகறேன் இப்போது மெதுவாக சிரியா என்றெல்லாம் அரசுக்கெதிராக் பிரச்சனைகளை கிழப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலமாக பிரச்சனையில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் அமைதியில் இருக்கிறார்கள். ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது யார்? யாருக்காவது ஏதாவது தெரியுமா?
-
- 0 replies
- 1.2k views
-
-
2012இல் உலகம் அழியப்போகிறதா? ஞாயிற்றுக்கிழமை, 20 மார்ச் 2011 15:43 இளைய அப்துல்லாஹ் world-2012"என்ன 2012 இல் உலகம் அழியப்போகுதாம்" என்று சுவிற்சர்லாந்தில் இருந்து ஒரு நேயர் எனது ரீ.வி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது கேட்டார். இது பெரும் சிக்கலான பிரச்சனை. இப்பொழுது தமிழ் ஆட்கள் மத்தியில் சுற்றி வருகின்ற ஆயிரம் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 2012 இல் உலகம் அழியுமா? திருகோணமலையிலும் இதுதான் கதை. பேர்லின் என்று எல்லா இடமும் இதுதான் கதை. ஏன் இந்தக்கதை வந்தது என்று யோசிக்கின்றேன். தேடியபொழுது கிடைத்தது. மாயா என்கின்ற இனக்குழுவினரின் கலண்டர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு பிறகு எந்தவிதமான உலகத்தகவல்களும் இல்லை என்ற செய்தி. இ…
-
- 3 replies
- 2.1k views
-
-
‘மலையே வரினும் தளராதிருங்கள்’ நாங்கள் இருக்கின்றோம்!! தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கென்றொரு நாடும் இல்லை. இவ்வரியின் ஆழத்தில் வேரூன்றி நிற்கும் எம் மக்களின் உரிமைக்குரலை அறியாதவர் உலகத்தில் எவரும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் தமது சொந்த நலன்களுக்காக எம்மைப் புறக்கணித்தே வருகிறார்கள். அதைவிடக் கொடுமையானது சொந்த நாட்டிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகள் போல் வாய் பேசா ஊமைகள் போல் எம்மக்கள் வாழ்கிறார்கள். அனைவராலும் உச்சரிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழரின் தாயகப் பிரதேசம் என்ற நிலைமை எழுத்தில் கூட வர மறுக்கப்படுவதாக மறைக்கப்படுவது மிகவும் வேதனையான விடயம். யுத்தம் முடிந்தததாக கூறிவரும் இலங்கை அரசு பாதுகாப்பிற்கென மீண்டும் மீண்டும் செலவுகளை அதிகரித்த வண்ணமேயுள்ளது. …
-
- 0 replies
- 1.2k views
-