நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
யுத்த தீவிரத்துக்கு வழிசெய்த 2007 ஆம் ஆண்டு இன்றுடன் கழிய நாளை புதுவருடம் 2008 ஆம் ஆண்டு பிறக்கின்றது. போர் மேகங்கள் சூழ்ந்து, கொ?975;ூர வன்முறைப் புயலாக யுத்தம் வெடிக்கும் சூழலில் புத்தாண்டுக்குள் நுழைகிறோம். கடந்த சுமார் ஆறுவருடங்களாகப் பெயரளவுக்கேனும் நின்று தாக்குப்பிடித்த யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு இறுதிக் கிரியை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கோடி காட்டி விட்டதால், அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புடன் "ஈழ யுத்தம் 4' என்ற அவத்தைக்குள் அவலத்துக்குள் புத்தாண்டில் நாடு பிரவேசிக்கப்போகின்றது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் இந்த செயற்றிறன் அற்ற நிலைமை குறித்து 2006 இறுதியிலேயே சுமார் ஒரு வருட…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப் மறைந்தார் ! எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான். வியட்நாம் ஜெனரல் வோ-குயன்-கியாப் தனது 102-வது வயதில் இராணுவ மருத்துவமனையில் உறவினர்கள் சூழ காலமானார். ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா என்ற மூன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய நீண்ட கால போரின் இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வோ-குயன்-கியாப். 1954-ம் ஆண்டு. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க இராணுவத்தின் துணையோடு வியட்நாம் மக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் 8-வது ஆண்டு. அதிகரித்து…
-
- 0 replies
- 395 views
-
-
யூடியூப் பகிர்வு: கொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்! "அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு 'பதில்' சொல்வதில் இருந்து சிலர் போக்குக் காட்டலாம்... ஆனால், இணையத்தில் வெறும் 2 நிமிட வீடியோ பதிவால் உருவான போக்கு (ட்ரெண்டிங்), அந்தச் சிலரை உலுக்குவது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறது, அட்டகாசமான ஒற்றைப் பாடல் வீடியோ" | அந்த வீடியோ இணைப்பு கீழே | இந்த முயற்சியெல்லாம் நமக்கு மிகவும் நெருக்கமான கொடைக்கானலுக்காக என்கிறபோது, நம் கவனம் அனிச்சையாக அதிகரிக்கிறது. அந்த வீடியோ பதிவைப் பார்க்கும் முன் அவலம் மிகு ஃப்ளாஷ்பேக் - சுருக்கமாக: "என் பொண்ணு இவாஞ்சலினுக்கு வயசு 26. ஆனா பார்த்தா பெரிய பொண்ணாட்டம் தெரியாது. அவள…
-
- 158 replies
- 29.7k views
- 1 follower
-
-
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம்…
-
- 0 replies
- 186 views
-
-
http://www.youtube.com/watch?v=NBjpSg5fuzQ http://www.dailymail.co.uk/news/article-2523482/Cheetah-dog-enjoy-playful-game-chase-snow.html
-
- 0 replies
- 514 views
-
-
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வீட்டு விசேஷத்திற்கு சமீபத்தில் நேரில் போய் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. பொதுவாக யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தம்பதிகளை போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்து அனுப்புவது அவரது வழக்கம். மிகவும் முக்கியமானவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் இருக்கிற இடத்திற்கு செல்வார் ஜெ. பாடகர் யேசுதாஸ் முன்னாள் முதல்வர் ஜெ.வின் குடும்ப நண்பர் வட்டத்தில் இருக்கிறார் என்பதை பறைசாற்றியது இந்த வருகை. இதை தொடர்ந்து ஒரு விஷயத்தை கசிய விடுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில். தினமும் போயஸ் கார்டனில் இருக்கிற ஜெயலலிதா வீட்டில் பக்தி பாடல்கள் யேசுதாஸ் குரலில்தான் ஆரம்பிக்குமாம். அதே மாதிரி இரவு நேரங்களில் பக்தி பாடல்களை க…
-
- 1 reply
- 1.5k views
-
-
யேர்மனி கைல்புறோன் நகர தமிழ்மக்களால் தாயகத்தில் அல்லறும் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கவும் அம் மக்களின் அவலநிலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் கடந்த சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம்ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை விழிப்புநிலைப் போராட்டமும் நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்கான பரப்புரை நிகழ்வும் முன்னெக்கப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு பதிவு
-
- 0 replies
- 715 views
-
-
ரசியாவும் உக்ரைனும் sudumanal John J. Mearsheimer (image -thx: reddit.com) "த எக்கோனமிஸ்ற்" இதழில் 19.03.2022 வெளிவந்த கட்டுரை இது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் மியர்ஸைமர் தனது பார்வையை வெளிப்படுத்துகிறார். நியூயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட மியர்ஸைமர் (75) அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அறியப்பட்ட கறாரான விமர்சகரும் ஆவார். // சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை// – புட்டின் * 1962 கியூப எவுகணை நெருக்கடிக்குப் பிறகு உக்ரைன் போர் மிகப் பயங்கரமான சர்வதேச நெருக்கடி வாய்ந்ததாக உருவாகியிருக்கிறது. இந் நிலைமையை தடுக்க வேண்டும், அல்லது முடிவுக்குக் க…
-
- 2 replies
- 407 views
-
-
ரஜினி ஏன் கட்சி ஆரம்பிக்க மாட்டார்? ஆர். அபிலாஷ் நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி எனச் சொல்லிசேனல்கள் விவாதங்கள் நடத்தி வருகின்றன. ரஜினி கட்சிஆரம்பிப்பார் எனச் சொல்லி கால் நூற்றாண்டு கடந்து விட்டது; அப்படிச் சொன்னவர்களுக்கே தாடி, மீசை நரைத்து, தலையெல்லாம் சொட்டையாகி விட்டது. இனியும் ஏன்யாமற்றொரு தலைமுறையை குழப்பறீங்க என காறித்துப்பலாம் தான். ஆனால் அதைவிட முக்கியமாய், இப்போது கட்சி ஆரம்பத்தால்ரஜினிக்கு என்ன பிரச்சனைகளெல்லாம் வரும் எனக் கேட்பதுபயன் தரும். 1) ரஜினிக்கு சமூக அரசியல் ஆர்வமோ பிரக்ஞையோ இல்லை. ஒருங்கிணைப்புத் திறனும் இல்லை. அவர் அரசியலுக்கு ஏற்றவரேஅல்ல. இதை நம்மை விட நன்றாக ரஜினியும் லதாவும் அறிவார்கள…
-
- 0 replies
- 858 views
-
-
ரஜீவ விஜயசிங்கவிற்கு ஒரு திறந்த மடல்! (செய்தி நோக்கு) பேராதனையில் பேராசிரியர் என்ற உயர் கல்விப் பட்டத்தைப் பெற்றவர் நீங்கள்! சமாதான காலத்தில் சமாதானம் தொடர்பாக பிரித்தானியாவின் பிறாட்போர்ட் பல்கலைக் கழகம் நடத்திய பட்டறையில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர் நீங்கள்! சனநாயகம் - நல்லாட்சி என்றெல்லாம் மேற்குலகம் பீற்றிக்கொள்ளும் நற்பதங்களுக்கு அப்பொழுது வரைவிலக்கணம் கொடுக்க முற்பட்டவர் நீங்கள்! ஆனால்... திடீரென்று மகிந்த ராஜபக்சவின் கூடாரத்திற்குள் நீங்கள் நுழைந்த பொழுது அதனை புத்திஜீவிகள் எதிர்பார்க்கவில்லைதான்! சமாதான செயலகத்தின் பணிப்பாளராக பதவியேற்ற நீங்கள் அதனை போர்ச் செயலகமாக மாற்றிய பெருமைக்குரியவர். "நான் சமாதான செயலகப் பணிப்பாளர் மட…
-
- 2 replies
- 2.6k views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரின் நிலை என்ன அவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது எனும் மனதை நெகிழ வைக்கும் *நேரடி ரிப்போட் நீண்ட நாட்களாக கைதான இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது திருமணமான முருகன், சாந்தன், ராபட், பயஸ் எப்படி இருக்கிறார்கள் அவர்களை சென்று நேரடியாக பார்த்து வந்து கலக்கத்துடன் விளக்கம் அளிக்கும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன். இவற்றுடன் 25 ஆண்டுகளாக இவர்கள் 7 பேரின் விடுதலை குறித்து தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைகளுக்கு இன்னும் சில தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனக் கூறப்பட்ட சூழ் நிலையில், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் இன்றைய தினம் விடுதலையாகக் கூடும…
-
- 0 replies
- 321 views
-
-
ரணிலின் சூழ்ச்சியால் நடந்த சர்வ கட்சி மாநாடு பற்றி விபரமாக பேசுகிறார் காண்டீபன்.
-
- 1 reply
- 335 views
- 1 follower
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 07:46 தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் கருதியதில்லை. சர்வதேச ரீதியில், தென்னிலங்கை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து நின்ற போதெல்லாம், ஒரு ஆபத்பண்டவராக ரணில் செயற்பட்டிருக்கிறார்; காப்பாற்றியிருக்கிறார். ஆனாலும், அவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ‘ஒற்றை’ ஆட்சியாளராகக் கொள்வதற்கு, தென்னிலங்கை ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. அப்படிப்பட்ட நிலையில், உண்மையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விரும்புகிறாரா என்றொரு கேள்வி, பல தரப்புகளாலும் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றது. ஐக்கிய …
-
- 0 replies
- 379 views
-
-
ரணிலின் இலங்கை அரசியலில் மிகவும் துரதிஷ்ட்டம் மிக்க நபர். ஒவொரு முறையும் பிரதமராகி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பதவி இழக்கும் ஒரு மனிதர். கடந்த தேர்தலில், மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், விகிதாசார முறைமையில், நாடு முழுவதும் விழுந்த கொஞ்ச வாக்குகளினால் கிடைத்த ஒரேயொரு நியமன சீட் மூலம் எம்பியாகி இன்று கட்சி பலமே இல்லாமல், பலவீனமான நிலையில், அதே போல் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஜனாதிபதியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு பிரதமர் ஆகிறார். இது, குருடன் சுமக்கும் நொண்டி வழிகாட்டி ஊர் போற கதை. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சக்கடதார் ஏறுறார். கவுண்டு விழத்தான் போறார். அவருக்கு, இழக்க எதுவும் இல்லாதால் முயல்…
-
- 4 replies
- 623 views
-
-
ரணிலின் சுதந்திர தின ‘வெற்றி’ உரைக்கு தமிழர் தரப்புடனான பேச்சு வழிவகுக்கும் Posted on December 18, 2022 by தென்னவள் 16 0 இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவென ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தமிழர் தரப்புடனான பேச்சுவார்த்தை ஜெனிவாவை ஒதுக்கிவிட ரணில் வகுத்திருக்கும் திட்டத்தில் முக்கியமானது. அதேசமயம், இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண ஏற்பாடாகி விட்டதாக தமது சுதந்திர தின உரையில் அவர் குறிப்பிடுவதற்கும் இந்தப் பேச்சுவார்த்தை வாய்ப்பளிக்கப் போகிறது. வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சு நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் ஓர் அறிவிப்பை விடுத்தார். தமிழர் பிரச்சனைய…
-
- 0 replies
- 172 views
-
-
ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா March 8, 2024 இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள் குழம்பிப்போயுள்ளாா்கள். இந்த நிலையில், இன்றைய தாயகக் களத்தில் அரசியலில் என்ன நடைபெறுகின்றது என்பதை ஆராய்கின்றாா் அரசியல் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான யதீந்திரா! கேள்வி – பொலிஸ் அதிகாரத்தைத் தவிா்துவிட்டு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கல் தொடா்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை ஒ…
-
- 0 replies
- 204 views
-
-
ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் - இந்தக் கதை தெரியுமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம் பண்ணுவதும் இவ்வாறே சங்க கால முதல் நம்மிடையே நீடித்து வந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணமும் உண்டு. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமீபத்தில் கிழக்கு மாகாணம் சென்றிருந்தபோது தனக்கு றோயல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரைக் கண்டு அவரை கௌரவப்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் பெயர் சிவலிங்கம் மாஸ்டர். அது பற்றி அவரிடம் பேசுவதற்காக பெரிய கல்லாற்றில் அமைந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றோம்.பொக்ைக வாய், கபடமற்ற புன்…
-
- 0 replies
- 652 views
-
-
ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித பொ.ஜ.முவும் சு.கவும் இணையாது; எமது கூட்டணியில் மைத்திரியையும் உள்ளீர்க்க தயார் கூட்டமைப்பு எமது கூட்டணியில் இணையாது; விக்கி தரப்பு சிந்தித்து தீர்மானிப்பதே சிறந்தது ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற வுள்ளதோடு, நாம் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து புதிய வேட்பாளரை நிறுத்தவுள்ளோம். எமது தரப்பில் வேட்பாளர் குறித்து பிரச்சினைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்பிக்க என நீண்ட பட்டியல் உள்ளது. எவ்வாறாயினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்ததாகவே அமையும் என்று சுகாதார,போசனைகள் சுதேச மருத்துவத்துறை அமை…
-
- 0 replies
- 292 views
-
-
ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? May 22, 2022 — கருணாகரன் — இலங்கையில் மிக அதிர்ஷ்டசாலியான ஒரு மனிதர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான். யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் பிரமராகியிருக்கிறார். ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக – நின்று ஆட்சி அமைத்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப் போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப் போகின்றவர்களும் கூட எதிர்த் திசையில் நிற்பவர்களே. எவராலும் எதுவுமே செய்ய முடியாது என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் ரணில் வி…
-
- 1 reply
- 248 views
-
-
ரணில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது, போதுமான உறுப்பினர்கள் ஆதரவு தராததால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஜனாதிபதியின் ஒத்துழைப்பு கோரி உள்ளனர். இலங்கை பொது ஜன முன்னணியின் தலைவர் பீரிஸும், கொழும்பு மாவட்ட உறுப்பினர் லொக்குகேயும் இந்த கோரிக்கையை விடுத்து உள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தமக்கு பாராளுமன்றில் 52 உறுப்பினர்கள் உள்ளதாகவும், சுதந்திரக் கட்சி 44 உறுப்பினர்கள் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். இந்த 52 பேரில், விமல், தினேஷ், வாசுதேவ போன்ற சிலர் வேறு கட்சியினர் ஆயினும் மகிந்த உட்பட பலர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆவர். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் இரத்தின தேரர், விஜயதாச ராஜபக்சே போன்றோர் சுயாதீனமாக இயங்குவதால்…
-
- 0 replies
- 363 views
-
-
ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா? December 26, 2022 —ஸ்பார்ட்டகஸ் — உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இவ்வாரம் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ஏற்கெனவே பல தடவைகள் அறிவித்துவிட்ட போதிலும், அந்த தேர்தல்கள் குறித்து நிச்சயமற்ற தன்மை தொடரவே செய்கிறது. சகல உள்ளூராட்சி சபைகளும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20க்கு முன்னதாக அமைக்கப்படக்கூடியதாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்துவரும் எதிரணி கட்சிகள் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சந்தேகத்தை வெளியிட்ட வண்ணமே இருக்கின்…
-
- 0 replies
- 157 views
-
-
ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் - அத்துரலியே ரத்ன தேரர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம் தவறிழைத்து விட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். அத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் அரச அதிகாரங்களிலிருந்து நீக்கப்படவேண்டும். அவர்களை பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை தேட முடியாதெனவும் அத்துரலிய ரத்ன தேரர் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்விய…
-
- 0 replies
- 605 views
-
-
ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்த…
-
- 1 reply
- 262 views
-
-
ரத்தன தேரரின் ‘முயல்’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை, மு.ப. 10:09Comments - 0 முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவாதிகளும், அவர்களுக்குத் துணைபோகும் ஊடகங்களும் நீண்ட காலமாகவே, எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதிகளுடன் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்புகள் இர…
-
- 0 replies
- 691 views
-