Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம் May 24, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — லொக்டவுணில் சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று “நாம் பிறந்த மண்”. சிவாஜி, ஜெமினி, கமல், கே.ஆர்.விஜயா, நாகேஸ், படாபட் ஜெயலட்சுமி நடித்த படம். வின்ஸன்ட் இயக்கியது. 1977இல் வெளியானது. முன்பு இதை 1980களின் தொடக்கத்தில் பார்த்திருந்தேன். இயக்கங்கள் புத்தெழுச்சியோடு உலவிய 1980களின் முற்பகுதியில் நாம் பிறந்த மண், கண் சிவந்தால் மண் சிவக்கும், இனியொரு சுதந்திரம், ஊமை விழிகள் போன்ற படங்கள் புரட்சிப்படங்களாக இளைஞர்களால் பார்க்கப்பட்டன. தமிழ்ப்படங்களுக்கு அப்பால் உமர் முக்தார், பைவ் மான் ஆமி (Five Man Army), ஜெயில் பிறேக் (Jail Break)…

  2. சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை. 25/04/2021 பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்.. நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா …

  3. தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ் 3 Views மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள் மனத்திரையில் அலை வீசிக் கொண்டே இருக்கின்றன. இது ‘போருக்குள் வாழ்ந்தோம்’ என்ற இரு சொற்பதங்களுக்குள் அடக்கக் கூடிய அல்லது சொல்லி விட்டுக் கடந்து செல்லக் கூடிய விடயம் அல்ல இந்த முள்ளிவாய்க்கால் 18 மே 2009 வரையான பேரவலம். மனித வாழ்வுக்கு அடிப்படையான, அத்தியாவசியமானவை எவை என்றால்? உணவு…

  4. ‘என் வழி தனி வழி’ (தமிழ் தேசியம் – சில கேள்விகள்) April 1, 2021 — கருணாகரன் — தமிழ் தேசியம் – சில கேள்விகள் “தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலையே ஆதரிக்கிறார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் பலவும் கூட தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுடன்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. புலம்பெயர்திருக்கும் மக்களிலும் பெரும்பான்மையினர் தமிழ்த்தேசிய அரசியலின் பக்கமே நிற்கின்றனர். அப்படியிருக்கும்போது நீங்கள் தமிழ்த்தேசிய அரசியலின் மீது கடுமையாக விமர்சனங்களையும் எதிர்ப்பையும் முன்வைக்கிறீர்களே! இது தவறென்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராக நிற்பது தவற…

  5. பெரும் கனவான் பில் கேட்ஸ் அண்மையில் விவாகரத்து பெற்று இருந்தார் பில்லர். ஆனால் இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் ஒரு பெரும் வில்லர் என்பதை வெளிவரும் பல விவகாரங்கள் வெளிக்காட்டுகின்றன. இவரை பார்க்கும்போது, ஒரு கனவான் (ஒரு கவுரவமான மனிதர் போல முக அமைப்பு) போல, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நினைவு வரும். அவரும் ஒரு கனவான் போலவே தோன்றுவார். ஆனால், ஜான் மேஜர், வில்லங்கமான ஆள் என்று வெளியே தெரிய வந்தது, அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த எட்வீனா காரீ, ஓய்வு பெற்ற பின்னர், தனது டயரி குறிப்பினை வெளியிட்ட போது, தான் பிரதமரை ஏதோ கேட்க அவரது அறைக்கு போனபோது, தன்னை கட்டி அனைத்து, முத்தம் தந்தார் என்றும், (அம்மா, எதார்த்தமா சொன்னாலும…

    • 13 replies
    • 1.8k views
  6. ஈழத்து மக்கள் தொடக்கத்திலிருந்தே மீண்டும் தொடங்க வேண்டியிருக்கிறது – தோழர் பாஸ்கர் 18 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தோழர் பாஸ்கர் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தாலும், அதில் உயிர் நீத்தாருக்கு நினைவு கூருவதற்கு உரிமையே இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது. வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்ற புதன் அன்று புதிய நினைவுக் கல் வைக்கப்படும் போதே இராணுவமும் போலீசாரும் எதிர்த்திருக்கிறனர். பின்…

  7. இது மரணத்தோடு ஆடும் ஆட்டம் May 19, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிபயங்கரமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் முதலாவது அலையின் போது உண்டான எச்சரிக்கை உணர்வையும் கட்டுப்பாட்டையும் இப்பொழுது காணமுடியவில்லை. உதவியளிப்புகளும் இல்லை. முதல் அலையின்போது ஏற்பட்டிருந்த கவனத்தினால் வறிய குடும்பங்களுடைய பொருளாதாரம் மற்றும் நாளாந்த உணவு,அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளுர் மட்டத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் உறவுகளிடத்திலுமிருந்து பல விதமான உதவிகள் செய்யப்பட்டன. அரசாங்கம் கூட வறிய குடும்பங்களுக்கு ஒரு தொகை உதவிப் பணத்தைக் கொடுத்தது. அத்துடன் பொருட்களின் விலையிலும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டு விலையிருந்தது. சில பொருட்களை சில வ…

  8. “போரே என்னைச் செதுக்கியது”-நேர்காணல்-நிலாந்தன் அண்மைக்கலங்களில் நீங்கள் அதிகமாக அரசியல் ஆய்வாளராகவே இனம் காணப்பட்டுவருகின்றீர்கள். ஓவியரும் கவிஞரும் இலக்கியவாதியுமான நிலாந்தன் படிப்படியாக மறைந்துகொண்டிருப்பதாக உணருகின்றேன் ? அப்படி மறையவில்லை. நானுமுட்பட பல ஓவியர்களின் தொகுப்பு ஒன்று அச்சிடப்பட்டு விட்டது. சில வேளைகளில் கவிதை பெருகும். சில வேளைகளில் ஓவியம் பெருகும். சில வேளைகளில் மௌனம் பெருகும். ஆனால் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் பெருகும். கடந்த பத்தாண்டுகளாக அரசியல் விமர்சன கட்டுரைகளே அதிகம் பெருகின. ஏனெனில் இது கருத்துருவாக்கக் காலம். மண்சுமந்த மேனியர் நாடகம், இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதா நிகழ்வு, ஏராளமான வீதி நாடகங்கள், கவியரங்குகள், ஓவியக் …

  9. கிழக்கின் யதார்த்தம் : அம்பாறையில் கருணாவும் திருகோணமலையில் சம்பந்தரும் May 18, 2021 — கருணாகரன் — “அம்பாறை மாவட்டத்தைப் பாதுகாப்பதற்கு கருணாவை வெற்றியடைய வைத்திருக்க வேணும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டு, அம்பாறை பறிபோகிறது என்று அழுவதால் பயனில்லை. இது மாதிரித்தான் திருகோணமலையில் சம்மந்தன் வெல்லும் வரை அதைக் காப்பாற்றவே முடியாது” என்றார் நண்பர் ஒருவர். “இது அரசாங்கத்துக்குச் சார்பான ஒருவரின் கருத்து” என்ற எண்ணமே தமிழிரிற் பலருக்கு உடனடியாகவே ஏற்படும். அவர்கள் அப்படியான சிந்தனை முறைக்கூடாகவே பயிற்றப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் இந்தக் கருத்தையும் இதிலுள்ள நோக்கையும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முற்றாக மறுதலி…

  10. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 வது வருடம்: தொடரும் உளவியல் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! பாலஸ்தீனம் எங்கும் மறுபடி யூத சியோனிச பாசிஸ்டுக்களின் கோரத் தாக்குதலால் பிணங்கள் குவிகின்றன. அந்த மண்ணின் மக்கள் வாழ்ந்த தேசத்தை ஆக்கிரமித்து, வெறுமனே வரலாற்றுக் கதைகளை முன்வைத்து, இது தான் எங்கள் தேசம் என்று கூச்சலிடும் யூதர்களின் இஸ்ரேல் இரத்தத்தால் கட்டியெழுப்பப்படுகிறது. வரலாற்றின் கற்பனைக் கதைகளே ஒரு தேசத்தின் மக்களைக் கொசுக்களைப் போலக் கொன்று குவிப்பதற்கு ஆதாரமாக அமையுமானால் செவ்விந்தியர்களின் இரத்த்ததால் உருவான அமெரிக்காவே முதலில் அழிக்கப்பட வேண்டியிருக்கும். தேசங்கள் தோன்றிய காலத்தின் பின்னர் ஒரு தேசம் இன்னொரு தேசத்தை ஒடுக்குவதும், பல தேசங்கள் ஒரு நாட்டின் எல…

  11. பரந்தன் மாணவி, A/L பெறுபேறு வந்த போது, ஆடை தொழில் சாலையில் வேலை 3 சகோதரங்களுடன், கூலித்தொழில் செய்யும் பெற்றோர் உடன் மிகவும் கஸ்டமான சூழலில் படித்து, A/L சோதனை முடித்து, பரந்தனில் ஒரு ஆடை தொழில் சாலையில் வேலை செய்து வந்தார் மாணவி கல்யாணி. பெறுபேறை பார்க்க கூட அனுமதி இல்லை. வீடு வந்த பின்னர், பார்த்தால், 2A 1B உயிரியலில் எடுத்த நல்ல செய்தி இருந்தது. பல்கலைக்கழகம் போகும் வரை, வேலையில் தொடரப்போவதாக சொல்கிறார் அவர். உறவினர், நண்பர்கள், முக்கியமாக கூட வேலை செய்தவர்கள், வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர், கல்யாணிக்கு,

  12. ஈழ அகதிகளும், கொரோனாவும், தமிழக முகாம்களும் – முதல்வரின் கவனத்திற்கு! May 15, 2021 தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் கொரோனாவிற்கு கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனரா ?. ந.லோகதயாளன். தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தங்கியுள்ள அகதிகள் முகாமில் இதுவரை 7 முகாம்களில கொரோனா தொற்று பரவியுள்ளபோதும் முகாம்களிலேயே கொட்டில்கள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தல் வழங்கப்படுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்காண அகதிகள் முகாமில் ஈழ அகதிகள் 75 ஆயிரம் பேரளவில் தங்கியுள்ளனர். இவ்வாறு ஈழ அகதிகள் தங்கியுள்ள பல முகாம்களில் இருந்து தப்பித்து மீண்டும் தாயகம் திரும்புவது அதிகரிக்கும் நிலையில் தமுழ்நாட்டில் இதுவரை 7 முகாம்களில் உள்ள பலர் கொரோனா தொற்றி…

  13. ராஜீவ்காந்தி, கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அக்கியோருடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டார். ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், தி.மு.க தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றிருக…

  14. 21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலை நாள் மே-18 – சூ.யோ. பற்றிமாகரன் 79 Views ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல உலகாலும் இனப் படுகொலை நாளாக நினைவேந்தல் செய்யப்பட வேண்டிய உலக இனப் படுகொலை நினைவு நாள் மே – 18, 21ஆம் நூற்றாண்டின் இனப் படுகொலை நாள். கடந்த நூற்றாண்டில் ஹிட்லரின் நாஜிக் கூடாரங்களில் 6மில்லியன் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு, அந்த நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ஆம் திகதியை உலகம் இத்தகைய இனப் படுகொலை உலகில் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தி ‘இனப் படுகொலை நாள்’ எனக் கொண்டாடி வருகிறது. இதேபோல 21ஆம் நூற்றாண்டில் சிறீலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் வகை தொகையின்றி இனப் படுகொலை செய்யப்பட்ட உலக வரலாற்றை முன்னிறுத்தி, மே-18ஐ …

  15. பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன. முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இரண்டுதான். முதலாவது, பரீட்சை எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் செய்யவேண்டியது. அது, ‘அடுத்தது என்ன?’ என்ற வினாவைத் தொடுப்பதாகும். இரண்டாவது, கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைகளும் செய்ய வேண்டியவை. இம்முறை முடிவுகளில் இருந்து கற்ற பாடங்கள் என்ன? செய்ய தவறுகள் என்ன? செய்ய வேண்டியது என்ன என்பதை, சுயவிமர்சன நோக்கில் ஆராய்வதும் ம…

  16. தனித் தேசமாக கருதப்படுவதற்கு தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு -விக்னேஸ்வரன் விளக்கம் 100 Views ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழர்கள் ஒரு பண்டைய இனத்தவர். தமிழ் பேசும் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். முதலில் சை…

  17. வடக்கின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைகிறதா? ந.லோகதயாளன். May 10, 2021 வடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் பெரும் இடர்கள், குழப்பத்தின் மத்தியில் செல்வதோடு க.பொ.த உயர்தர பெறுபேறும் தொடர் பின்னடைவாகவே காணப்பட்டாளும் கிராம்ப்புறங்கள் வளர்ச்சி காண்பது மட்டுமே மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாகவுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் கடந்த ஆண்டும் 6ஆம் இடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2020ஆம் ஆண்டிலும் 6ஆம் இடத்தினையே எட்டியுள்ளனர். இவ்வாறு எட்டியவற்றில் இம் முறை பல சாதணைகளும் வேதனைகளையும் கடந்து அதிர்ச்சிகளும் கூடவே உள்ளது. இலங்கையிலேயே முதலாவது மாகாணமாக வட மேல் மாகாணமும் முதலாவது மாவட்டமாக புத்தளம் மாவட்டமும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 702 மாணவர்க…

  18. பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்? சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார் என்பது பிழை கையை விரித்து பாபு செலவு செய்தார் காதலுக்கு உதவினார் பால்கடைக்கு கைகொடுத்தார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா, சகோதர பத்திரிகையான ‘லங்காதீப’விடம் பேசியுள்ளார். சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந…

  19. 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறு…

  20. ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் by vithaiMay 3, 2021068 அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர். அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும் அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனா காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன். தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சோ என்றேன். பேப்பர் பார்க்கேலேயோ, மோடி மகிந்தவுக்கு…

    • 1 reply
    • 629 views
  21. ‘ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்கு, சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு’ -சி.வி.விக்னேஸ்வரன் May 8, 2021 5 Views ‘ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு’ என நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘இடது குரல்’ சார்பில் சமந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்புகிறார். நேர்காணல் செய்யும் இவர் பாரிஸ், பிரான்சில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தின் (Sorbonne Université) சமூக மற்றும் தொழிற் சங்கச் செயற்பாட்டாளர் ஆவர். அவரது ஈடுபாடு பிரான்சில் உள்ள சி.ஜி.ரி.யின்(CGT) பொதுத்துறைக் கல்வித் தொழிற் சங்கத்தில் உள்ளது…

  22. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன் May 7, 2021 கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ஆம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது. மேற்குறித்த தாக்குதலில் தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்த…

  23. விகாஸ் பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி டெல்லியில் அல்லது நாட்டில் வேறு எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று திங்கட்கிழமை இந்திய அரசின் உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் தலைநகரில் எந்த இடத்தில் இருந்து கொண்டு இதைச்சொன்னாரோ, அங்கிருந்து சில மைல் தூரத்தில் இருக்கும் பல சிறிய மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆக்சிஜன் தீரப்போகும் நிலையில் இருப்பதான அவசரச்செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. "குழந்தைகள் இறக்கும் அபாயம் நிலவியதால் நாங்கள் பயத்தில் உறைந்து போனோம்," என்று குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவர் பிபிசியிடம் கூறினார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தலையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.