நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்கை! by Dr. S. Jamunanantha - on December 10, 2014 படம் | The Associated Press Photo/Eranga Jayawardena, FOX NEWS இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், ஈழத்தமிழரின் அரசியல் தளத்தில் முக்கியமானது. இங்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் இனவாத சிங்கள மேலாதிக்கத்தினையே மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். எதிர்கட்சி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு விமோசனமான தீர்வினை முன்வைக்கவில்லை. மாறாக சிங்கள – பௌத்த தீவிரவாதத்துடன் அதாவது, ஜாதிக ஹெல உறுமய உடன் கூட்டு வைத்து உள்ளார். இது இலங்கை அரசியல் என்பது சிங்கள – பௌத்த தேசியவாதம் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது. இன்று பெரும்பான்மை வாக்குப்பலத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை பெற்று அதனைத் த…
-
- 1 reply
- 646 views
-
-
சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள் 07/09/2015 இனியொரு நாமல், டக்ளஸ், பசில், சிறீரங்கா இலங்கை அரசியலில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் முக்கிய நபர்களில் சிறீரங்கா ஜெயரட்ணம் என்பவர் பிரதானமானவர். தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி நடத்தும் இலங்கையின் ஒரே அரசியல்வாதி சிறீரங்கா ஜெயரட்ணம் மட்டுமே. நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றிபெற்ற சிறீரங்கா வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியாத தகவல். இன்று கொழும்பில் வாழும் சிறீரங்கா மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர். நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். சிறீரங்காவிற்கு மகிந்த…
-
- 0 replies
- 431 views
-
-
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம். 1991 மே 21: சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். 1991 ஜூன் 11: பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். 1991 ஜூன் 14: நளினி கைதுசெய்யப்பட்டார். ஸ்ரீகரன் என்ற முருகனும் கைதானார். 1991 ஜூலை 22: சுதேந்திரர…
-
- 0 replies
- 669 views
-
-
கொடுமையான முறையில் நடத்தப்பட்ட போர் ஏற்படுத்திய ஆறாதவடு நம்முடைய சமூகத்தை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பரவலாக தொடர்ந்து நடக்கின்றன. போரால் ஏற்பட்ட வறுமை மாத்திரம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணமா? என்பது முக்கிய கேள்வியாக இங்கு எழுகிறது. அதனைத் தாண்டியும் போர் ஏற்படுத்திய வடுக்கள் பல்வேறு நிலையில் தற்கொலை செய்யத் தூண்டுவதை கண்கூடாக காண முடிகின்றது. அண்மையில் வடமராட்சி கிழக்கில் சுகந்தி சிவலிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனைப்போலவே அண்மையில் யாழ் பல்லைக்கழக மாணவி பவுசியா என்பவர் தற்…
-
- 8 replies
- 1.7k views
-
-
அம்பாறை வீரமுனை சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் 22ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது. சித்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட ஆத்மசாந்தி பூசை நடத்தப்பட்டதுடன் வீரமுனை சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றது. வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் அகதிகளாக இந்த ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த போது சம்மாந்துறை பள்ளிவாசலில் யும்மா தொழுகையை நடத்திய முஸ்லீம்கள் அங்கிருந்து இந்த ஆலயத்திற்கு வந்து 55பொதுமக்களை வெட்டிப்படுகொலை செய்தனர். இவர்களுக்கு சிறிலங்கா படையினரும் துணையாக இருந்…
-
- 7 replies
- 720 views
-
-
விஜய் மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா? -சாவித்திரி கண்ணன் தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல் நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி? தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை. மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் சாரி,சாரியாக வருவது என்பதெல்லாம் இளைஞர்கள் ஒரு அரசியல் ம…
-
- 0 replies
- 151 views
-
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)
-
-
- 9 replies
- 745 views
-
-
பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுழைவாசல் 02/06/2021 இனியொரு... இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களோடு வட கிழக்குத் தமிழர்களும் இணைந்து நடத்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஒரு புதிய அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இப் பேரணியில் முன் வைக்கப்படும் முழக்கங்கள் வழமைக்கு மாறாக இனவாதத்தை நிராகரித்து, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக் கோருகிறது. ஆண்ட தமிழன் என்ற இனவெறி எல்லைகளைக் கடந்து மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான முழக்கங்களையும், முஸ்லீம் மக்களையும் இணைக்கும் இப் போராட்டம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையேயான …
-
- 0 replies
- 342 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழகத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, தமிழ்நாட்டில் வெளிவரும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் செய்திகளைப் போலவெளிவந்த விளம்பரங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இது வாக்காளர்களை ஏமாற்றுமா, அவர்களது முடிவுகளைப் பாதிக்குமா, பத்திரிகைகள் இவ்வாறு செய்வது சரியா என்பதெல்லாம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் தி ஹிந்து குழுமத்தைச் சேர்ந்தவருமான என். ராம் பிபிசி தமிழிடம்பேசினார் . பேட்டியிலிருந்து: கே. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று பல நாளிதழ்களில் அ.தி.மு.க. அளித்திருக்கும் விளம்பரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விளம்பரம், செய்தியைப்போல இடம்பெற்றிருக்கிறது. இது சரியான ம…
-
- 1 reply
- 409 views
-
-
ஹிந்திய பயங்கவாதிகள் ஈழத்தில் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல பலகொடுமைகளை செய்தனர்.. தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய ஹிந்திய பயங்கவாதி.. எனக்கு அறிமுகமான ஒரு டெலோ முக்கியஸ்தர் தெரிவித்த கதை இது. அவரின் இயக்கப் பெயர் கிறிஸ்டி. இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் அந்த நபர் டெலோ அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் மிகவும் உக்கிரமான சண்டைகள் நடைபெற்று முடிந்து யாழ் குடாவினுள் இந்தியப் படையினர் நுழைந்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. பரவலாக நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப்…
-
- 0 replies
- 535 views
-
-
ஆட்டையப்போட்டவனும் தமிழன்.. அடிவாங்கியவனும் தமிழன்.. இது மாற்றுப்புரட்சி பாஸ்.. (இனி ஓவர் நைட்ல கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழின துரோகியாகிருவான்.. மராட்டியன் பாலா ஒழிக.. )
-
- 35 replies
- 3k views
-
-
இலங்கைக்கு எதிராக திரும்புமா இந்தியா? இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான நட்புறவை, தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இந்தியா கருதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயம், அந்த நெருக்கத்துக்கு சவாலாக உள்ளது. அதிகாரப் பகிர்வு இருதரப்பு இடைவெளியை இன்னமும் குறைக்க விடாமல், அமுக்கி வருகிறது. அதைவிட உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும், இந்தியாவை ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்கவே செய்கின்றன.என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........." அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்ப…
-
- 0 replies
- 650 views
-
-
தமிழீழ தனியரசு . கனவு- விருப்பம் - யதார்த்தம். பறிபோய்விட்ட தமிழர் தாயகம் - இரா.துரைரத்தினம்- வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர்கள் ஆண்டபூமி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் வடக்கு கிழக்கு இன்னமும் தமிழர் பிரதேசமாக இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கின்றனர். தமிழர் பிரதேசங்கள் தமிழர்களின் கையை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணராத நிலையில் தானே எங்களில் பலர் கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதந்து கொண்டிருக்கிறோம். கடந்த அதிபர் தேர்தல் முடிவுகளின் பின்னர் இலங்கை வரைபடத்தில் சரத் பொன்சேகா வெற்றிபெற்ற பிரதேசங்களை பச்சை நிறத்திலும், மகிந்த ராசபக்ச வெற்றிபெ…
-
- 1 reply
- 676 views
-
-
இலங்கை – கறுப்பு ஜூன் 2014 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !:எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே காலச்சுவடு ( இதழ் – 159, பக்கம் – 26) இதழில் ‘எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்’ எனும் தலைப்பிலும், உயிரோசை (இதழ் – 156, ஆகஸ்ட் 2011) இதழில் ‘ ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?’ எனும் தலைப்பிலும…
-
- 4 replies
- 637 views
-
-
மாயமான் யாழ். இந்துக்கல்லூரியில் இந்தி மொழியைக் கற்பிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கபப்டுவது தொடர்பாகப் பல வாத விவாதங்கள் ஆங்காங்கே குரல்களை எழுப்பின. இது குறித்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் தனது பழைய மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையையும் அநுப்பியிருந்தார். கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கனடா வந்துபோன யாழ் நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடனும் நான் இதுபற்றிப் பேசினேன். யாழ் மாணவர்கள் இந்தி கற்றிருந்தால் இந்தியாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு அவர்கள் தெரிவாவது இலகுவாக இருக்கும் என்பது அதிபரின் வாதங்களில் ஒன்று. சிங்களத்தை கட்டாய மொழியாக்குவதுபோலல்ல இது. மாலை வேளைகளிலும் மாணவர் விரும்பிய நேரங்களிலும் இந்தியைக் கற்றுக்கொள்ள வசதி செய்வதே இதன் நோக்கம். இதன் பின்…
-
- 3 replies
- 668 views
-
-
இலங்கையில் வெற்றிகரமாக செயற்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக பூகோளப் பங்காளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை ஜெனீவாவில் பிரதானமன்றத்துடனும் பக்க நிகழ்வுகளுடனும் நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய ஒரு மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. பிரதானமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் ஆரம்பத்தில் 1302 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்…
-
- 0 replies
- 543 views
-
-
சிந்து சமவெளி- 5000 ஆண்டு திராவிடப் பண்பாடு. : சூர்யா சேவியர் அக்டோபர் 2024 - Uyirmmai Media · சமூகம் 1922ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் ஜான்மார்ஷல் நடத்திய அகழ்வாய்வில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது இந்நகரங்கள் இரண்டும் நிலப்பரப்பின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ளன. உலக வரலாறு குறித்த சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை இக்கண்டுபிடிப்புகள் உருவாக்கியது. இவற்றின் கட்டமைப்புகள் கி.மு.2500 ல் நாகரிகத்தின் உச்சநிலையை அடைந்திருந்ததை உலகிற்கு உணர்த்தியது. இதில் ஆச்சரியமான ஒரு விசயம் யாதெனில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கலின் அளவு இன்று வரை மாறாமல் இருப்பது தான். அங்கிருந்த மிகப்பெரும் தானியக் களஞ்சியம் தனியுடமை இல்லாத கூ…
-
- 1 reply
- 469 views
-
-
குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி. " பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்" என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி. 8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? Johnsan Bastiampillai / 2020 ஜூன் 06 , அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செ…
-
- 1 reply
- 417 views
-
-
வவுனியாவில் அம்மாச்சி உணவகங்களை இலக்கு வைத்து அமைக்கப்படுகின்றதா மதுபானசாலைகள்? பழையன புகுதலும் புதியன புகுதலும் இயல்புதான். அந் நிலையில் இன்றைய பரபரப்பான சூழலிலே உணவிற்கும் அந்நிலை வரும்போது தான் நம் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினை, சாமை என சிறுசிறு தானியங்கள் ஆதிக்கம் செலுத்திய காலமும் உண்டு. இத் தானியங்கள் நம் நாட்டு நிலத்தில் எம் மக்களுக்காக விளைவிக்கப்பட்டவையாகும். பின்னர் அரிசியின் வருகை ஏற்பட்டது. இதனால் சிறுதானியங்கள் அழிவை நோக்கி மெல்ல நகர்ந்தது. இதனால் அசைவ உணவுகளில் ஆடு, நாட்டுக்கோழி ,மீன் என உண்டு கழித்த மக்கள் இன்று வெளிநாடுகளிலிருந்து வரும் இரசாயனங்கலந்த உணவுகளிற்கு அடிமையாகும் நிலை உருவாகியிருக்கின்றது. நூடில்ஸ் , பீ…
-
- 0 replies
- 337 views
-
-
‘மாற்றம் வேண்டும்’ - பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ‘எங்களுடைய மக்களுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக, அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நீண்ட காலத்துக்கு, இக்கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லதொரு சேவை செய்யமுடியும்’ என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கே: உங்களுடைய அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது? ஆரம்பத்தில் ஆங்கில ஆச…
-
- 0 replies
- 453 views
-
-
"மகிந்த தன்னை வடமாகாண சபையில் போட்டியிட வேண்டாமெனக் கோரினார்" என்ற விளக்கவுரையையும், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க சிங்களத்தின் முதன்மைத் தலையாரிக்கு விருப்பமில்லையென்ற பொழிப்புரையையும் தனது தரப்புக் காரணமாக அல்லது கரணமாக டக்ளஸ் தேவானந்தா இன்று கூறுகின்றார். மேலும்,, http://tamilworldtoday.com/?p=11831
-
- 0 replies
- 486 views
-
-
தெலுங்கன் கருணாநிதிக்கு, மீண்டும் ஒருமுறை நினைவூட்ட விரும்புகிறோம். நீ தெலுங்கன் தான் என்பதை. மானங்கெட்ட மலையாளியே வெளியே போ...என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்....... "நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன்-புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்" "நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: "இப்போதெல்லாம் கருணாநிதி என்…
-
- 0 replies
- 4k views
-
-
எங்களுக்கு எவரும் மீட்பர்கள் இல்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களை நாம் பாத்திருக்கின்றோம். ஏமாந்திருக்கின்றோம். எமது போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவோ அந்த நாட்டு அரசின் எந்தவொரு பிரதிநிதிகளோ எங்களுக்கு மீட்பர்களா இருப்பார்கள் என்று நாங்கள் துளிகூட நம்பவில்லை என்று யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே குடாநாட்டு மக்களில் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேனன் சிறிலங்காவிற்கு வந்ததை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை நாங்கள் நம்பிய காலம் இருந்தது. அது உலகத் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படுகின்ற பெரும் தலை…
-
- 2 replies
- 455 views
-
-
ஈழம்.. இனிச் செய்ய வேண்டியது என்ன? புலம்பெயர் ஈழத் தமிழர்கள் செயல்பாடு குறித்தும் குற்றத் திறனாய்வு உண்டு. போரின் உச்ச கட்டத்தில் போரை நிறுத்தக் கோரி உலகெங்கும் அவர்கள் கிளர்ந்தெழுந்து இரவும் பகலும் உண்ணாமலும் உறங்காமலும் போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகத்தை ஈழத்தின் பக்கம் திரும்பச் செய்தது. போராட்டக் குறிக்கோளில் அவர்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும், உலகத்தின் மனச்சான்றை (மனசாட்சியை) அசைக்கவே செய்தனர். ஆனால் இத்தகைய 'அரசியல் போராட்டங்களை' அவர்கள் தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு இருந்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கலாம். ஈழப்போராட்டத்தின் வரலாறும் அப்போராட்டத்தின் அரசியல் அறமும், ஈழ மக்களின் அரசியல் விருப்பமும் உலக மக்களிடையே உயிர்ப்போடு எடுத்து விளக்கப்…
-
- 0 replies
- 719 views
-