நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்… October 17, 2020 ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்தை தனி்பட்டவகையில் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்…
-
- 0 replies
- 497 views
-
-
முத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி: விமர்சன சுழற்பந்துகளின் பிட்ச் ரிப்போர்ட்! மின்னம்பலம் சினிமாவிலோ, கிரிக்கெட்டிலோ, அரசியலிலோ தனித்தனியாக சர்ச்சை வந்தாலே அதன் வீச்சு அதிகமாக இருக்கும். இவை மூன்றும் மையம் கொள்ளும் சர்ச்சை மையமாக அதுவும் உலக அளவிலான சர்ச்சையாக வெடித்திருக்கிறது 800 என்ற திரைப்பட சர்ச்சை. தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் என்பதும், முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தமிழர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது அரசியல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் என்றும் கூறி... அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் எ…
-
- 0 replies
- 382 views
-
-
படம் எடுப்பது-எதிர்ப்பது: எது அரசியல்? மின்னம்பலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதைத் தொடர்ந்து எற்பட்டுள்ள எதிர்ப்புகளும், ஆதரவும் இரு தரப்பிலும் எதிர்பாராதவை. ஆனால், நடக்கும் விவாதங்களும் சம்பவங்களும், அரசியல்-கலை என்ற இரண்டு தண்டவாளங்களின் மீதே சென்றுகொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பயோபிக்காக உருவாகும் படத்தில் எதற்காக அரசியல் என்ற கேள்வியே இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது. படத்தை ஆதரிப்பவர்கள் ‘கலையில் ஏன் அரசியலை நுழைக்கிறீர்கள்? இது சாதாரண ஸ்போர்ட்ஸ் பயோபிக்’ என்கின்றனர். ‘ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை தமிழில் எடுக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் பேச ஸ்போர்ட்ஸ்மேன்களே இல்லையா? முரளிதரனே தான் வேண்டுமா” என்கின்றனர் எதிர்ப்பவர்கள்.…
-
- 0 replies
- 424 views
-
-
19 லிருந்து 20 வரை அமைதியிழக்கும் ஜே. ஆரின் சாணக்கியம்.? காரணம் அறிந்து காரியம் செய்யின் கை கூடும். எவ்வளவு காலத்துக்கு இது கை கூடும்? எப்போது இது கை நழுவும்? இந்த வரையறைகள், விதிமுறைகள் மீறப்பட்டுள்ள காலமிது. ஜே. ஆர் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பும் இவ்வாறு 19 தடவைகள் திருத்தப்பட்டதே.! காரணம் அறிந்துதானா.? அல்லது காலத் தேவைக்கு ஏற்பவா.? இல்லை யாரேனும் தேவைக்காகவா.? இது போதாதென்று இருபதாவது திருத்தமும் வரப்போகிறதே.! 19 ஆவது திருத்தம் பற்றிப் பேசப்பட்டளவுக்கு நம் நாட்டில் எதுவும் பேசப்படவில்லை. அந்தளவு அரசியலில் தாக்கம் செலுத்திய திருத்தமிது. 215 எம்.பிக்களின் ஆதரவுடன், 2015 ஆகஸ்டில் முன் வைக்கப்பட்ட இத்திருத்தம், இப்போது பலருக்கும் வேண்டா வெறுப்பாயிற…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா ? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது. …
-
- 0 replies
- 376 views
-
-
தமிழில் ஈழ தமிழர்களுக்காக தேரர் அதிரடியாக வெளியிட்ட காணொளி-குவியும் பாராட்டுக்கள்! நல்ல தமிழ் பேசும் இந்த தேரர், தமிழ் பகுதிகளில், மிகுந்த சிரமத்தில் உள்ள மக்களை சந்தித்து, அவர்கள் குறித்து, சிங்கள மக்களுக்கு தெரிய படுத்தி, உதவிகளை பெற்றுக் கொடுக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் உதவுமாறு கோரி பெற்றுக் கொடுக்கின்றார். இவர் நோக்கம் என்ன என்று சிலருக்கு சந்தேகம் வந்து அவரையே நேரடியாக கேட்டதால், இவர் இந்த விடீயோவினை வெளியிட்டுள்ளார். இவர் தான் உண்மையில் புத்தரின் சீடரோ.... காலம் பதில் சொல்லும்.
-
- 2 replies
- 465 views
-
-
சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்? பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை ‘அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள் நினைவுபடுத்தியதன் காரணத்தினாலேயே அவ்வாறு சுவிஸ் மக்கள் அக்காலப்பகுதியில் அழைக்கப்பட்டார்கள். கல்வி கற்ற ஐரோப்பியர்களைப் பொறுத்தமட்டில் சுவிஸ் மக்கள் கிட்டத்தட்ட பழங்குடி மக்களைப் போல் வாழ்ந்ததாகவே அவர்கள் கருதினார்கள். சுவிஸ் நாட்டவர்களோ, தங்களைப் பற்றிய இந்த உண்மைக்குப் புறம்பான சித்தரிப்பை தமக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று உணவுப் பொருட்களுக்கான விளம்பரமோ அல்லது உல்லாசப் பயணத்து…
-
- 0 replies
- 366 views
-
-
தமிழ் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ன? பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா? ஈழத் தமிழர் என்று தமிழர் தேசம் தன்னை அடையாளம் செய்வதில் என்ன தயக்கம்? புதுப்பிப்பு: ஒக். 13 01:32 தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய…
-
- 1 reply
- 667 views
-
-
ஆடை தொழிற்சாலைக்குள் எவ்வாறு கொரோனா பரவியது? - ரொபட் அன்டனி 1. வெளிநாடுகளைப்போன்று கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டுமா? 2. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 வைத்தியசாலைகளில் 2366 கட்டில்கள் உள்ளன. தொற்றாளர் அதிகரித்தால் கொரோனாவுக்கான தனித்த வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்படுவது அவசியமாகும்? 3. சனத்தொகையில் 18 வீதமானோர் வயது முதிர்ந்தோர். எனவே வயதானவர்கள் குறித்து அதிக கவனம் இன்றியமையாதது. 4. நூறு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின் இரண்டாவது அலையின்போதே மிக அதிகளவான உயிரிழப்புகள் உலகில் பதிவாகின. எனவே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை புறக்கணிக்கக்கூடாது. மக்கள் வைரஸ் தொற்றுநோய் நாட்டில் இருந்ததையே மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டிருந…
-
- 0 replies
- 285 views
-
-
தமிழ்த் தலைமைகள் புதிய அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் : கலாநிதி.சுரேன் ராகவன் நேர்காணல்:- ஆர்.ராம் • 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது • 20இல் உரிய திருத்தங்கள் செய்யப்படும் இனக்குழுமங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தலைமைகள் புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.சுரேன் ராகவன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- வட மாகாண ஆளுநராக கடமையாற்றிய நீங்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இதன் பின்னணி என்னவாக உள்ளது? …
-
- 3 replies
- 484 views
-
-
https://www.youtube.com/watch?v=7ZokBJZyVqk&ab_channel=DeclassifiedUK தமிழர் மீதான இனவழிப்புப் போரில் பிரித்தானிய விசேட படைகளின் பங்குபற்றி ஒரு புத்தகம் அண்மையில் வெளிவந்திருந்தது. கீனி மீனி எனும்பெயரில் சிங்கள பாஸிச அரச ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இங்கிலாந்தின் கூலிப்படையினர் தாம் தமிழர் தாயகத்தில் மேற்கொண்ட படுகொலைகள உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன என்று இறுமார்ந்திருந்த வேளையில் இயக்குநர் பில் மில்லர் இப்படுபாதகங்களை ஒரு விவரண வடிவில் வெளிக்கொணர்கிறார். முடிந்தவர்கள் பாருங்கள்.
-
- 4 replies
- 1.6k views
-
-
விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை’ – இன்று ‘சே’-யின் நினைவு நாள் சே குவேரா…,பல பேர் இவர் யாருன்னே தெரியாம அவர் படம் போட்ட பனியனோடு சுத்துவதைக் காணமுடியும். சே வரலாறு என்பதைப் பார்ப்பதைவிட அவரது சொற்கள் துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்றவை என்பதைப் பார்க்க வேண்டும். சே -வின் குரல் – எல்லா மனிதருக்கும் மனிதம், அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும். நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைனன். நான் யாருக்கும் குறையாத லத்தீன் அமெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா.? இலங்கை -இந்தியப் பிரதமர்களுக்கிடையிலான உரையாடல் அதிக அரசியல் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. இன்றைய புவிசார் அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கும் பூகோள அரசியலில் முதன்மை அடைந்துவரும் இரு துருவ அரசியல் போக்குக்கும் மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களது பேச்சுவார்த்தை அரசியல் ரீதியில் மட்டுமன்றி பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் அதீத முக்கிய விடயமாக தென்படுகிறது. இதில் அதிக கவனமும் கரிசனையும் கொள்ள வேண்டியவர்களாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் காணப்படுகின்றனர். இக்கட்டுரையும் இரு நாட்டுத் தலைவர்களது உரையாடல் ஏற்படத்தியுள்ள அரசியல் மற்றும் இராஜதந்திரீதியான முக்கியத்துவத்த…
-
- 0 replies
- 521 views
-
-
குறுகிய இடைவேளையில் மீண்டும் தாக்கிய கொரோனா - அலட்சியம் ஆபத்தை தரும் இலங்கையில் ஏற்பட்ட 33 ஆவது கொத்தனி பரவல் தொற்று பரவல் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை முதலாவது தொற்று ஏற்பட்டவர் யார் என்பதில் சிக்கல் மக்கள் அறிவுறுத்தல்களை பேணாவிடின் நிலைமை மோசமடையும் உலகநிலை மாறும்வரை இலங்கை கவனமாக இருக்கவேண்டும் கொரோனாவை மறந்துவிட்ட மக்களின் செயற்பாடுகள் நாடு அபாயகரமான கட்டத்தை தாண்டவில்லை மறக்கப்பட்ட கை கழுவுதல் , சமூக இடைவெளி -ரொபட் அன்டனி குறுகியகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சமூக மட்டத்தில் கொத்தணி பரவல் கம்பஹா மாவட்டத்தின் …
-
- 0 replies
- 486 views
-
-
13-ஐ நீக்க முனைவதே முட்டாள் தனமானது - திஸ்ஸ விதாரண 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையில் சிறந்த கட்டமைப்பாகவே உள்ள நிலையில் புதிய அரசியலமைப்பில் அதனை மேலும் வலுவானதாக மாற்றுவதற்கு பதிலாக, முழுமையாக நீக்க வேண்டும் என்று கருதுவதோ, செயற்படுவதோ முட்டாள் தனமானதொரு நடவடிக்கையாகவே இருக்கும் என்று லங்கா சமசமாஜ…
-
- 0 replies
- 664 views
-
-
*அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை. -கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம- சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R உறுப்புரையை திருத்தும் ந…
-
- 4 replies
- 790 views
-
-
இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்; 6 வருடங்களில் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு துறைமுகநகரம் 2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும். ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு …
-
- 0 replies
- 297 views
-
-
ஹொஸ்பிற்றலடி காந்தி ஜெயந்தியும்!! வன்னி காடழிப்பு கவலையும்
-
- 0 replies
- 291 views
-
-
யாரு பார்த்த வேலைடா இது... குடிகார பெருமக்களின் சாபத்துக்கு உள்ளாகியுள்ள, இந்த வேலையை செய்த்து யாரு என்று இலங்கை குடிகாரர்கள் கத்தி கலங்கி நிக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கொள்கலனில் வந்த 1200 லிட்டர் மது, மினரல் தண்ணீர் போத்தல்களாக மாறி உள்ள அதிசயத்தினை நடத்திய மந்திர, தந்திர வாதிகளை தேடி போலீஸ் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. கொண்டு போனவர்கள் அப்படியே கறுப்பு சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தால் ஏன் குடிகாரர்கள் கலக்கம் அடைய போகின்றார்கள். அவர்கள் அதனை மெல்லிய ஊசி மூலம் அரைவாசியை வெளியே எடுத்து, லோக்கல் ஐட்டத்தினை உள்ள அதே ஊசியால் விட்டு கலந்து, ஒரிஜினல் போலவே விற்பது தானே இவர்களது கலக்கம், கவலை.
-
- 8 replies
- 1.6k views
-
-
இலங்கையிலும் விடுதலைப்புலிகளின் தடையை நீக்க முடியும் - சட்ட ஆலோசகர் காண்டீபன்
-
- 0 replies
- 404 views
-
-
திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை! 09/24/2020 இனியொரு... 26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்…
-
- 94 replies
- 9.6k views
- 1 follower
-
-
இந்திய இழுவைப் படகு பிரச்சினை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 செப்டெம்பர் 22 ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வடபுலத்து மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் ஏற்படும் சேதங்களையும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியையும் எதிர்த்து, அமைதி வழியாலான போராட்டமொன்றை இந்த வாரம் முன்னெடுத்திருந்தார்கள். நீண்டகாலமாக முடிவற்றுத் தொடர்கின்ற பிரச்சினை இது. இந்த நெருக்கடி, பல்பரிமாணங்களைக் கொண்டது. அரசியல் ரீதியாக இரு நாடுகளும் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினை. ஆனால், அதற்கு இரண்டு நாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் பேசித்தீர்க்கவேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அந்த வரிசையில், இந்திய மீனவர்களால் வடபுலத்து …
-
- 1 reply
- 469 views
-
-
மோடி - மகிந்தா சந்திப்பு. இலங்கை, இந்தியா சம்பந்தமான பல விடயங்களை செப்டெம்பர் 26ம் திகதி காலை 10:30 மணிக்கு, இலங்கை பிரதமர், இந்திய பிரதமருடன் நேரடியாக பேசவுள்ளார். இந்த சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது மகிந்தா, வடபகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவார். இதுகுறித்து செப்டம்பர் 25ம் திகதி வடபகுதி மீனவர் பிரதிநிதிகளை பிரதமர் மகிந்தா சந்திக்க உள்ளார். இவ்வாண்டு ஐநா பொது சபை சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. அதில் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னர், இலங்கை பிரதமருடனான சந்திப்பு நிகழ்கிறது. இலங்கைத்தமிழர் குறித்தோ, புதிய அரசியல் அமைப்பில் 13 வது திருத்தம் குறித்தோ பேசுவார்களா என்று அறிவ…
-
- 3 replies
- 515 views
-
-
ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர் சின்னக்கருப்பன் சென்ற கட்டுரையில் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டு தமிழில் மட்டுமே உயர்கல்வி என்று தமிழ்நாடு அரசும், பிராந்திய மொழியிலேயே மற்ற மாநிலங்களும் உயர்கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று நான் எழுதியதற்கு நண்பர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு என்னை விளாசி எடுத்தார்கள். இரண்டு மொழி கொள்கையால், ஆங்கிலம் தமிழை அழித்துவிட்டது என்று என்னிடம் முதலில் சொன்னவர் திண்ணை ஆசிரியர் கோ. ராஜாராம். இது மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுகொள்ளாததன் பின்னணியில் அதன் விமர்சனமாக அவர் வைத்த முக்கியமான பார்வை. மெல்லத்தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்த பேதை உரைத்தான் என்று பாரதியார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பி…
-
- 3 replies
- 1.3k views
-
-
2009 இலங்கை இறுதிப்போரையடுத்து, ஏற்கெனவே சி.பா.ஆதித்தனாரால் நடத்தப்பட்ட ‘நாம் தமிழர் கட்சி’ என்னும் பெயரைத் தூசுதட்டி எடுத்து 2010-ல் கட்சியைத் தொடங்கினார் சீமான். ``உறவுகளே’’ சீமான் தன் கட்சித் தொண்டர்களை இப்படித்தான் அழைப்பார். அந்த உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரிவும் பிரச்னைகளும்தான் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. என்ன ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு? கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ மேடைகளில் பகுத்தறிவு, தமிழின உணர்வு, ஈழ ஆதரவு, சாதி மறுப்பு ஆகியவற்றைப் பேசக்கூடிய பேச்சாளராக அரசியல் உலகத்துக்கு அறிமுகமானார் சீமான். …
-
- 29 replies
- 3.6k views
-